Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi `19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அட கழிசடைங்க :mad::mad::mad: நேரம் காலம் இல்லாமல் கூத்தடிச்சிருக்குங்க போல.......
கொஞ்சம் கூட செய்றது தப்புனு தெரியலை.....
என்ன பிறவிங்களோ.......

அப்பா எவ்ளோ எவிடென்ஸ் இந்த நாய்ங்க பண்ணின வேலைக்கு.......
இதுல மிரட்டல் வேற........
குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லாத அண்ணனுக்கு குழந்தை வேணும்னு அண்ணியோட போன.......
ஆனால் உன்னை நம்பி கல்யாணம் பண்ணின பொண்ணுக்கு மட்டும் வேண்டாமா......
எவ்ளோ கிரிமினல் மூளை உனக்கு......
எப்போ தெரிஞ்சாலும் பிள்ளைங்க இல்லைனா மிரட்டலாம் என்கிற தைரியம் தானே......

ஜெய் நாய்க்கு cut பண்ணி ஜெயில் ல போடுங்க..... அப்புறம் எவ கூட போறான்னு பார்க்கலாம்.......
பத்மப்ரியா கழிசடையையும் தான்...... நாளைக்கு உன் பிள்ளையும் அதை பார்க்காதுன்னு என்ன நிச்சயம்.......
அம்மா என்கிற வார்த்தைக்கே அசிங்கம் நீங்க எல்லாம்.......

எபி இழுக்க எல்லாம் இல்லை..... நல்ல பாயிண்ட் பாய்ண்டா பேசினான் குரு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
குருமூர்த்தியா கொக்கா?
அந்த பக்கம் இந்த பக்கம் ஆட முடியாமல் அசைய முடியாமல் எப்படி ஆப்பு வைச்சான் பாருங்க

இவன் செய்த, செஞ்சுக்கிட்டிருக்கிற கேடுகெட்ட வேலையை மறந்துட்டு கீதாவை எப்படி பேசுனான் ஜெய்?

ஆட்டோக்காரர் மற்றும் இரண்டு வேலைக்காரிகளின் சாட்சிகளை வைத்து குருமூர்த்தி சூப்பரா வாதாடினான்
கோர்ட் ஸீன்ஸ் இழுவையாக இல்லை, விஜி டியர்
ரசிக்கும்படி நல்லாத்தான் இருந்ததுப்பா
ஜெய் செய்த இந்த கேப்மாறி வேலையெல்லாம் கோர்ட் ஸீன்ஸாலேதானே தெரிய வந்திருக்கு

அடக் கண்ராவியே
ஜெய்யின் அசிங்கமான செயலைப் பார்த்துட்டுத்தான் அவனோட அம்மா தற்கொலை பண்ணி செத்துட்டாங்களா?
ஐயோ பாவம் அந்தம்மா

கீதாவுக்கு குழந்தை வந்து விடக் கூடாதுன்னா ஊருக்காக கீதா பொண்டாட்டியா?

வைட்டமின் குப்பியில் கருத்தடை மருந்து வைச்சுன்னு படுபாவிங்க ஜெய்யும் பத்மபிரியாவும் எவ்வளவு தைரியமா கிரிமினல் வேலை செஞ்சிருக்காங்க?

இதிலே எதுக்கு அந்த பத்மபிரியா மூதேவியை அண்ணி பன்னின்னு கூப்பிட்டு ஜெய் வேஷம் போடணும்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடேய் வெட்கம், மானம் இல்லாதவனுங்க இவனுங்களால தான் அம்மா செத்து போனாங்களா:eek::eek:அவங்க மானஸ்தி தொங்கிட்டாங்க,இங்கே ஒன்னு எதுவும் நடக்காதது போல உட்கார்ந்திருக்கு:mad::mad:

சின்ன மகன்,மருமகள் தப்பு பண்ணதை பார்த்து தற்கொலை பண்ணவங்க,பெரியவன் இதுங்களோட கூட்டு சேர்ந்திருக்கறது தெரிஞ்சிருந்தா சாப்பாட்டுலே விஷத்தை வச்சிருப்பாங்களோ:unsure::unsure::unsure:.

விஷயம் வெளியே தெரிஞ்சா பெண் குழந்தைகள் நல்லா இருக்காதுன்னு மிரட்டி இருக்கானுங்க:mad::mad::mad:.தான் உண்மைய வெளியே சொல்லாததால பெரியம்மா செத்ததுக்கு நியாயம் கிடைக்கலை, ஒரு பொண்ணு வாழ்க்கை வீணாகிடுச்சுன்னு சாந்தி கூறுவது கண்கலங்க வைக்குது:cry::cry::cry::cry:.

அம்மா இறந்த பிறகும் அவளோட தொடர்பை விட முடியலைன்னா எதுக்கு கல்யாணம் பண்ணனும்
அண்ணனுக்கு குழந்தை வேணும்னு நெனச்சவன்,தனக்கு குழந்தை வராம தடுக்க எதுக்கு மாத்திரை கொடுக்கனும்:unsure::unsure::unsure:.

குழந்தை இல்லாம இருந்தா விஷயம் தெரிஞ்சாலும் கீதா எதுவும் சொல்ல மாட்டா, வீட்டை விட்டு போக மாட்டான்னு நெனச்சானோ,இல்லை இது ப்ரியா வேலையா.எப்படி எல்லாம் கிரிமினலா மாத்திரைய மாத்தி இருக்கானுங்கo_Oo_Oo_O.குருமூர்த்தி கலக்கிட்டான்(y)(y)(y)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஜெய் & பத்மப்ரியா பத்தி ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை... தங்களோட சுகம் மட்டும் தான் பெரிசுன்னு நினைக்கிற கேடு கெட்ட கழிசடைங்க.... அவளும் ஒரு பொண்ணை பெத்து வச்சு இருக்கா...

கோர்ட் சீன் இழுக்க எல்லாம் இல்லை.. நல்லா interesting ஆதான் போச்சு.... நீதிபதி சாரே வக்கீல்களோட வாதம் எல்லாம் கேட்டு முடிச்சாச்சு... நல்ல தீர்ப்பா கீதாவுக்கு சாதகமா எழுதுங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top