Uyirin ularal - episode 25

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 25

" சின்னத்தான், சின்னத்தான் எழுந்திரு, எவ்வளவு நேரம் தூங்குவாய் ? எழுந்திரு " என்று ரிஷியை உலுக்கிக்கொண்டிருந்தாள் அபி.

" அம்மு ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை தூங்கவிட்டேன், அம்மா நாளையில் இருந்துதான் ஜாகிங் போக வேண்டும் என்றார்கள். " என்றான் உருண்டு படுத்துக்கொண்டு.

" ஜாகிங் போகவேண்டாம் என்று சொன்னது மட்டும் உனக்கு நல்லா நியாபகம் இருக்கு, ஆனால் இன்று கோவிலுக்கு போகவேண்டும் என்று சொன்னதுமட்டும் மறந்துபோச்சா ? இப்படி தூங்குற.

" ஆமாம் மறந்துட்டேன், நைட் எல்லாம் நீ என்னை தூங்கவா விட்ட, படம் பார்க்கிறேன் என்று டிவியை அலறவிட்டுட்டு காலையில் என் மேல் குற்ற பத்திரிகை வாசிக்கிற " என்று எழுந்து அமர்ந்தான்.

கண்ணை திறந்தவன் தன் முன் புத்தம் புது மலராய், காலை வேளையில் தலைக்கு குளித்து கண்ணுக்கு குளிர்ச்சியாக நின்ற அபியை பார்த்து அவனுடைய முகம் புன்னகையில் விரிந்தது.

" யூ ஆர் லுக்கிங் ஸோ பியூட்டிபுல் " என்றான் ரிஷி.

" தேங்க்ஸ் சின்னத்தான், வா எழுந்திரு 10 மணிக்குள் கிளம்ப வேண்டும், இன்று நாம் இருவரும் ஒன்றாக கீழே போகலாம், நேற்று நடந்த கலாட்டா போல இன்றும் நடக்காமல் இருக்க. " என்று தன் இரு கரத்தையும் நீட்டினாள்.

அவள் கையையே பார்த்தவன் தன் கையையும் அதே போல நீட்டினான். உடனே அவனை அருகில் வந்து அணைத்தவள் அவன் முகத்தை வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். அவன் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அப்படியே இருக்க

" என்னாச்சு நந்து, கிளம்ப வேண்டாமா ? செல்லம் இல்ல, இனி நைட் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன். சாரி நேற்று ஸ்விம்மிங் பூலிலும் உன்னை கஷ்டப்படுத்திவிட்டேன்." என்றவள் அவன் தலையை கோதிவிட்டாள். அவன் பிடி மேலும் இறுக அவள் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே நின்று அவனின் தலை, முகம் என்று தடவி விட்டவள் அவனை எழுப்பி
குளியல் அறைக்குள் அனுப்பிவைத்தாள். அதன்பிறகு அவனுக்கான உடையை எடுத்து தயாராக வைத்தாள்.

குளித்துமுடித்து வெளியே வந்தவன் அங்கே இரண்டு உடை இருக்கவும்

" என்ன அம்மு ? எதற்கு இரண்டு உடை ?" என்று கேட்டான்.

" சின்னத்தான் நாம் கிளம்பும் போது வேஷ்ட்டி சட்டை போட்டுக்கொள், இப்போது இது போதும் " என்று ட்ராக் சூட்டையும் டிஷர்ட்டையும் காட்டினாள்

" எதுக்கு அம்மு இரண்டு வேலை ?" என்றான் ரிஷி.

"நீ வேஷ்ட்டி கட்டிக்கொண்டு நான் புடவை கட்டவில்லை என்றால் அத்தை திட்டுவாங்க," என்றாள்.

" அப்படின்னா புடவை கட்டிக்கோ "

" இல்ல இப்ப வேண்டாம், புடவை கட்டினா உடனே கிளம்பனும், அதை கட்டிக்கொண்டு சாப்பிடலாம் உட்கார முடியாது, சும்மா ஆர்கியூ பண்ணாதே, ப்ளீஸ் இதை போட்டுக்க " என்றாள் அபி கெஞ்சலாக. அவளுடைய கெஞ்சலை ரசித்தவன் அவள் காட்டிய உடையை போட்டுக்கொண்டான்.

தலை வாரியவளிடம் " நான் ஹெல்ப் பண்ணவா" ? என்றான்.

" ஹெல்ப் பண்ணுவியா ? உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையா ?" என்று இவள் பதில் கேள்வி கேட்க

"ஏன் என்ன பிரச்சனை?" என்றான் ரிஷி அவள் முடியை பிரித்துவிட்டுக்கொண்டு.
" இல்லை, கணவன் மனைவிக்கு இப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணுவார்களா ? இல்லை நீ எனக்கு என்பதால் செய்ய ரெடியாக இருக்கிறாயா ? என்று கேட்டேன்" என்றாள்.

" எல்லா கணவனும் செய்வார்களா என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் என் மனைவிக்கு எல்லாம் செய்வேன், காலையில் என் மனைவி என்னை ஒரு குழந்தையை அணைப்பது போல வாரி அணைக்கும் போது நான் அவளுக்கு இதை செய்யாமல் யாருக்கு செய்வேன். அப்புறம் என் அம்மு எனக்கு ஸ்பெஷல் தான், ஆனால் அவளுக்கு நான் செய்வதில் ஒரு லிமிட் இருந்தது, ஆனால் என் மனைவிக்கு நோ லிமிட் " என்றான் ரிஷி.

" அப்படின்னா நான் உன்னை அடித்து எழுப்பியிருந்தால் ?" என்றாள் அபி.

" நான் எப்போதும் நானாகத்தான் இருப்பேன்" என்றான் ரிஷி.

" ஸோ ஸ்வீட் " என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள் " வா போகலாம், உனக்கு ஒரு போன் வந்தது, எடுக்கும் முன்பு கட் ஆகிவிட்டது " என்றவள் அறையை ஒதுக்கினாள்.

ரிஷி போனை பேசிக்கொண்டே முன்னே செல்ல, அவனை விட ஒரு பத்தடி பின்னே நடந்து வந்தாள் அபி. ரிஷி போனில் பேசிக்கொண்டே கீழே யாரையும் கவனிக்காமல் மாடியில் இருந்து இறங்கினான். கீழே இறங்க ஒரு ஐந்து படிகளே இருக்க அவன் பின்னே வந்த அபி அங்கே நிலவிய சூழ்நிலையை கவனித்தாள்.

அனைவரும் கீழே இருந்தார்கள், கற்பகம்மாள் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்க, ராம் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பானு ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருந்தாள், அவள் கண் நொடிக்கொரு முறை மாடிப்படியை தொட்டுசென்றது. எங்கேயோ இடிக்குதே என்று அபிக்கு ஏதோ பொறித்தட்ட ப்ரியா பக்கத்தில் இருந்த அறையில் இருந்து வெளியே வந்து மாடிப்படிக்கு குறுக்கே வந்துகொண்டிருந்தாள். அபி எதையோ யூகித்து " அம்மா " என்று காலை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ரிஷி திரும்பிவிட்டான்.

" அம்மு என்னடா " என்று அவன் கீழே இறங்குவதற்கு பதிலாக மேலே படியில் ஏறி அபியிடம் சென்றுவிட்டான். வெறும் மூன்று படி இடைவெளியில் இருந்த ரிஷி இப்போது தான் கீழே விழப்போனால் தன்னை தாங்கி கொள்வான், அவனை விடாமல் நெருக்கமாக பிடித்துக்கொண்டு, நடக்கவே முடியவில்லை என்று தன்னை தூக்கி செல்ல சொல்லி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள வேண்டும், அதை பார்த்து அபி வெந்து சாக வேண்டும் என்று ப்ரியா போட்டுவைத்திருந்த அத்தனை பிளானும் மண்ணை கவ்வ ப்ரியா பிடிக்க யாரும் இல்லாமல் கீழே விழுந்தாள்.

ப்ரியா சத்ததுடன் கீழே விழுந்தது எதுவும் ரிஷி காதில் விழவில்லை அவனோ " அம்மு என்னாச்சு ? அம்மு " என்று அபியின் காலை ஆராச்சி செய்தான் கவலையுடன்.

படியில் அபி வலியில் நெளிய, தரையில் ப்ரியா அலற என்று ஒரு நிமிடத்தில் வீடே களேபரம் ஆனது.

" என்னடா ராம் பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ, போய் உன் மச்சினிச்சியை தூக்கு, ரிஷி உனக்கு தனியாக சொல்ல வேண்டுமா? அபியை உங்கள் அறைக்கு தூக்கி சென்று அவளுக்கு என்னாகிவிட்டது என்று பார் " என்றார் கற்பகம்மாள்.

ரிஷி அபியை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் செல்ல

" இல்லை ப்ரியா தானாக எழுந்து கொள்வாள் அத்தை, சின்ன அடிதான் " என்று ப்ரியாவை தூக்க வந்த தன் கணவனை தடுத்தாள். நேற்றுதானே தங்கை கீழே விழுந்த தன்னை தூக்கும் ரிஷியிடம் தான் எப்படி நடந்துகொள்ளப்போகிறேன் என்று இஞ்ச் இஞ்ச்சாக விவரித்தாளே. ஆனால் இப்போது ஆள் மாறிப்போனதே, தூக்க போவது தன் கணவன் என்பதால் பானுவுக்கு உள்ளே அடித்துக்கொண்டது. ஆயிரம் தான் தங்கை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லாவா ?

" பானு என்ன பேசுகிறாய் ? அவளால் எழும்ப முடியவில்லை, ராம் நீ தூக்கப்பா" என்று கற்பகம்மாள் மகனை விரட்ட பானு வேறுவழியில்லாமல் அமைதியாக நின்றாள்.

மேலே அபியை தூக்கி சென்ற ரிஷி அவளை கட்டிலில் விட்டுட்டு காலை பரிசோதித்தான். அவனிடம் இருந்து காலை வெடுக்கென்று பிடிங்கிகொண்ட அபி

" எனக்கு ஒன்றும் இல்லை சின்னத்தான், ஆனாலும் அந்த ப்ரியாவை உன்னிடம் இருந்து விலக்க இன்னும் நான் எப்படியெல்லாம் நடிக்கவேண்டுமோ ? முடியல சாமி, நீயே ஏதாவது செய்ய மாட்டியா ? ஐயோ எனக்கு அவஸ்தையா இருக்கு. போயும் போயும் நீ கொடுத்த ஐடியாவை கேட்டு உன்னை திருமணம் செயதேன் பார் என்னை சொல்லணும், பழைய செருப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் செருப்பை எடுத்து தா. எனக்கு நானே நாலு போட்டுக்கொள்கிறேன் " என்றாள் அபி சலிப்பாக.

" அம்மு என்ன சொல்கிறாய் ? நடித்தாயா ? அப்படியென்றால் உனக்கு அடி எதுவும் படவில்லையே ? " என்று மறுபடியும் காலை பார்த்தவன் அவள் வலி இல்லாமல் இருக்க "நீ முட்டாளா ? என்ன காரியம் செய்தாய் ? உனக்கு ஏதாவது அடிபட்டிருந்தால் என்னாவது ? எல்லாம் என் தப்புதான், சரி இனி ப்ரியாவை நான் பார்த்துக்கொள்கிறேன், அவளை சமாளிக்கிறேன் என்று எதுவும் கிணற்றில் போய் விழுந்துவிடாதே " என்றவன் சாப்பாட்டை மேலே கொண்டும் வரும்படி வேலையாளிடம் கூறினான்.

இருவரும் சாப்பிட்டுமுடித்துவிட்டு " நேரம் ஆகிவிட்டது, கிளம்பலாம் " என்றான்.

அபி தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்துகொள்ள, இருவரும் ஒரே நேரத்தில் ரெடியாகினர். இருவரும் கற்பகம்மாளுடன் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

***********

" ப்ரியா நான் இந்த ஐடியா வேண்டாம் என்று கூறினேன் கேட்டாயா ? இதற்கு பதில் அந்த அபியின் காலை உண்மையாகவே உடைப்பதற்கு ஏதாவது ஐடியா போட்டிருக்கலாம், என்னமா நடித்து ரிஷியை உன்னிடம் நெருங்காமல் தடுத்துவிட்டாள். இப்போது பார் இரண்டுபேரும் ஜோடியாக கோவிலுக்கு கிளம்பி விட்டனர். இனி அவர்கள் வர இரவு ஆகிவிடும், நான் அப்பாவிற்கு போன் செய்துள்ளேன், அவர் உன்னை அழைத்துபோக வருவார். இனி இந்த ரிஷி பின்னே அலைந்து ஒரு பிரயோஜனம் இல்லை, அப்பாவிடம் கூறி உனக்கு வேறு மாப்பிளை பார்க்க சொல்கிறேன், இல்லையென்றால் உன் பழைய காதலை பற்றி அப்பாவிடம் கூறி மேலே பேசச்சொல்" என்றாள் பானு.

" அவ்வளவு சீக்கிரம் நான் இவர்களை விட்டுவிடுவேன்னா ? " என்றாள் பிரியா.

" விடாமல் என்ன செய்யப்போகிறாய் ? ஒரு வயசு பொண்ணு சதா அக்கா வீட்டில் வந்து இருந்தால் நாலு பேர் என்ன சொல்வார்கள், என் மாமியார் எதுவும் சொல்வதற்கு நான் இடம் கொடுக்கலாமா ?" என்றாள் பானு.

" சும்மா சாக்கு போக்கு சொல்லாதே, நீ சொல்லும் நாலு பெயரை பற்றி பயப்பட நான் அபி கிடையாது, அப்புறம் நீ ரொம்ப சுற்றிவளைக்காமல் நேரே பேசி பழகு. உன் கணவனை வளைக்கும் திட்டமெல்லாம் எனக்கு கிடையாது, உன் டேஸ்டுக்கும் என் டேஸ்டுக்கும் கிட்ட வராது. " என்றாள் ப்ரியா நேரடியாக.

பானு அதற்காகத்தான் தங்கையை இங்கே வராமல் தடுப்பதை பற்றி அவளிடம் சுற்றிவளைத்து பேசினாள், ஆனால் ப்ரியா புரிந்துகொண்டு நேரடியாக அதை சொல்ல

" ச்சி உன்னை போய் நான் அப்படி நினைப்பேனா "? என்று கேட்டு மழுப்பினாள் பானு.

ப்ரியா அதையெல்லாம் கவனிக்காமல் பலத்த யோசனையில் இருந்தாள்.

" என்ன யோசனை " என்ற பானுவிடம்
" அக்கா ரிஷி உண்மையிலேயே குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவர்தானா என்று எப்படி கண்டுபிடிக்க ?" என்றாள் ப்ரியா.

" இனி அதை தெரிந்துகொண்டு உனக்கு என்ன ஆகப்போகிறது ?" என்றாள் பானு.

" இல்ல, நான் அவசர பட்டுட்டேன்னோ என்று எனக்கு தோணுது, ஆனா அது உண்மை இல்லை என்று மட்டும் எனக்கு தெரிந்தால் அதன் பிறகு அந்த அபி சீக்கிரம் ஏதாவது விபத்தில் போய் சேர்ந்துவிடுவாள் " என்றாள் ப்ரியா கொலைவெறியுடன்.

" ஸ்ஸு சத்தமா பேசாதே, யாரும் கேட்டுவிட போகிறார்கள், கத்தரிக்காய் மலிந்தால் கடை தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும், பொறுமையாக இரு " என்ற பானுவை பார்த்து ப்ரியா கேட்டாள்

"எதுவரை ? என்று

" ரிஷிக்கு வாரிசு உருவாகும் வரை, அப்புறம் நீ இப்போது சொன்னதை பற்றி யோசிக்கலாம் " என்றாள் பானு.

************

சொந்த ஊர் சென்று அங்குள்ள கோவிலுக்கு பூஜை செய்துவிட்டு இரவு வந்து சேர்த்தனர் மூவரும்.

கற்பகம்மாள் ஓய்வு எடுக்க சென்றுவிட இருவரும் தங்கள் அறைக்குள் சென்றனர், இரவு உணவு எல்லாம் வரும் வழியிலேயே முடித்துக்கொண்டு வந்தனர்.

"சின்னத்தான் நாளைக்கு நான் ஆபீஸ் செல்ல வேண்டும் அதனால் நான் சீக்கிரம் தூங்க போகிறேன், நான் வருவதற்குள் நீங்கள் பிரெஷ் ஆகிவிடுங்கள் " என்று கீழே சென்றாள் அபி.

அவள் திரும்பி வருவதற்குள் ரிஷி இரவு உடைக்குள் புகுந்திருந்தான். அபி கையில் சில பைலுடன் வந்தாள். பிறகு அவளும் ப்ரஸாகிவிட்டு தன் லேப்டாப்பை ஆன் செய்தாள். கொஞ்ச நேரம் அதிலே மூழ்கியிருந்தவள் அதை அணைத்துவிட்டு
" குட் நைட் " என்று படுத்தாள்.

" என்ன இன்று மரியாதை எல்லாம் தூள் பறக்குது " என்றான் ரிஷி சேனலை மாற்றியபடி.

"அதுவா நான் எப்போதும் போல உங்களிடம் பேசியதை அத்தை கேட்டுவிட்டார்கள், அப்படியெல்லாம் பேச கூடாது என்று அட்வைஸ் செய்தார்கள் அதனால் தான் " என்றவள் அவன் மேல் கையை போட்டுகொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

ரிஷியின் கண் டிவியை பார்த்தாலும் அவனின் சிந்தனை முழுவதும் வேறெங்கோ இருந்தது, வெகு நேரம் கழித்து புரண்டு படுத்த அபி இன்னும் டிவி ஓடுவதை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

" என்ன ஆச்சு உங்களுக்கு, மணி என்ன தெரியுமா ? அப்படி என்ன பார்க்கிறீர்கள் " என்று கேட்டுவிட்டு டிவியை பார்த்தாள் அதில் பழைய படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. புரியாமல் அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து ரிமோட்டை வாங்கி டீவியை அணைத்தாள்.

அவனைபடுக்கவைத்தவள் அவனை ஒட்டி அணைத்துக்கொண்டாள்.

" அத்தான் நீங்கள் சரியான அழுத்தக்காரன், உனக்குள் நிறைய ரகசியம் புதைந்துகிடப்பதாகவே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. நீங்கள் எதையாவது என்னிடம் சொல்ல விரும்பிறிர்களா ?"என்று ஆழம் பார்த்தாள் அபி.

அவளை இழுத்து தன் மேல் போட்டவன் "ஆமாம் எனக்கு உன்னிடம் ஒன்று சொல்லவேண்டியது உள்ளது " என்று அவள் கண்ணை நேராக பார்த்தான்.

அபியும் என்ன என்பது போல பார்க்க
" இந்த வாங்க போங்க என்பது கேட்பதற்கு எரிச்சலா இருக்கு, ஏற்கனவே கணவன் மனைவியான நமக்குள் வானத்துக்கும், பூமிக்கும் ஆன தூரம் இருக்கு, இதில் இந்த அழைப்பு இன்னும் அதிக தூரத்தை ஏற்படுத்துகிறது, நீ எப்போதும் போல என்னை எருமை என்றே கூப்பிடு "என்றான் ரிஷி.

" உண்மையிலேயே நீ எருமை தான் " என்றவள் அவனிடமிருந்து விலகி முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

அவள் புறம் திரும்பி தன்னை விட்டு விலகி போனவளின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தான் ரிஷி. அப்போது அவள் போட்டிருந்த இரவு உடையின் டாப்ஸ் மேலேறி அவனது கை அவளில் வெற்று வயிற்றில்பட்டது.

ரிஷி அப்போது அபியின் முகத்தை பார்க்கவில்லை என்றாலும் அவளின் நிலையை உணர்ந்தான். அவன் கை பட்ட மாத்திரத்தில் அவளின் பட்டு தேகம் சிலிர்த்து இன்னும் பட்டாக மாறியது. அவள் அவன் தொடுகையில் ஏற்பட்ட உணர்வை மூச்சை உள்ளிழுத்து அடக்கிக்கொண்டிருந்தாள். அவளின் தேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த ரிஷி மீண்டும் அவள் வயிற்றில் தன் கையை படரவிட்டான். இப்போது அபி வெளிப்படையாகவே நெளிய ஆரம்பித்தாள், உடனே அவன் கை அங்கிருந்து அகன்று அவள் கையின் மேல் படிந்தது, அதன் பிறகு அவனிடம் எந்த அசைவும் இல்லை.

ரிஷியின் நடவடிக்கையை என்றுமே அபிக்கு குழப்பமாகத்தான் இருக்கும். இன்றோ இன்னும் அதிகமாக குழம்பினாள்.
" இவன் ஏன் என்னை விட்டு விலகுகிறான் " என்ற கேள்வியுடன் கண்ணயர்ந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்
 
Last edited:

Nasreen

Well-Known Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 25

" சின்னத்தான், சின்னத்தான் எழுந்திரு, எவ்வளவு நேரம் தூங்குவாய் ? எழுந்திரு " என்று ரிஷியை உலுக்கிக்கொண்டிருந்தாள் அபி.

" அம்மு ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை தூங்கவிட்டேன், அம்மா நாளையில் இருந்துதான் ஜாகிங் போக வேண்டும் என்றார்கள். " என்றான் உருண்டு படுத்துக்கொண்டு.

" ஜாகிங் போகவேண்டாம் என்று சொன்னது மட்டும் உனக்கு நல்லா நியாபகம் இருக்கு, ஆனால் இன்று கோவிலுக்கு போகவேண்டும் என்று சொன்னதுமட்டும் மறந்துபோச்சா ? இப்படி தூங்குற.

" ஆமாம் மறந்துட்டேன், நைட் எல்லாம் நீ என்னை தூங்கவா விட்ட, படம் பார்க்கிறேன் என்று டிவியை அலறவிட்டுட்டு காலையில் என் மேல் குற்ற பத்திரிகை வாசிக்கிற " என்று எழுந்து அமர்ந்தான்.

கண்ணை திறந்தவன் தன் முன் புத்தம் புது மலராய், காலை வேளையில் தலைக்கு குளித்து கண்ணுக்கு குளிர்ச்சியாக நின்ற அபியை பார்த்து அவனுடைய முகம் புன்னகையில் விரிந்தது.

" யூ ஆர் லுக்கிங் ஸோ பியூட்டிபுல் " என்றான் ரிஷி.

" தேங்க்ஸ் சின்னத்தான், வா எழுந்திரு 10 மணிக்குள் கிளம்ப வேண்டும், இன்று நாம் இருவரும் ஒன்றாக கீழே போகலாம், நேற்று நடந்த கலாட்டா போல இன்றும் நடக்காமல் இருக்க. " என்று தன் இரு கரத்தையும் நீட்டினாள்.

அவள் கையையே பார்த்தவன் தன் கையையும் அதே போல நீட்டினான். உடனே அவனை அருகில் வந்து அணைத்தவள் அவன் முகத்தை வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். அவன் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அப்படியே இருக்க

" என்னாச்சு நந்து, கிளம்ப வேண்டாமா ? செல்லம் இல்ல, இனி நைட் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன். சாரி நேற்று ஸ்விம்மிங் பூலிலும் உன்னை கஷ்டப்படுத்திவிட்டேன்." என்றவள் அவன் தலையை கோதிவிட்டாள். அவன் பிடி மேலும் இறுக அவள் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே நின்று அவனின் தலை, முகம் என்று தடவி விட்டவள் அவனை எழுப்பி
குளியல் அறைக்குள் அனுப்பிவைத்தாள். அதன்பிறகு அவனுக்கான உடையை எடுத்து தயாராக வைத்தாள்.

குளித்துமுடித்து வெளியே வந்தவன் அங்கே இரண்டு உடை இருக்கவும்

" என்ன அம்மு ? எதற்கு இரண்டு உடை ?" என்று கேட்டான்.

" சின்னத்தான் நாம் கிளம்பும் போது வேஷ்ட்டி சட்டை போட்டுக்கொள், இப்போது இது போதும் " என்று ட்ராக் சூட்டையும் டிஷர்ட்டையும் காட்டினாள்

" எதுக்கு அம்மு இரண்டு வேலை ?" என்றான் ரிஷி.

"நீ வேஷ்ட்டி கட்டிக்கொண்டு நான் புடவை கட்டவில்லை என்றால் அத்தை திட்டுவாங்க," என்றாள்.

" அப்படின்னா புடவை கட்டிக்கோ "

" இல்ல இப்ப வேண்டாம், புடவை கட்டினா உடனே கிளம்பனும், அதை கட்டிக்கொண்டு சாப்பிடலாம் உட்கார முடியாது, சும்மா ஆர்கியூ பண்ணாதே, ப்ளீஸ் இதை போட்டுக்க " என்றாள் அபி கெஞ்சலாக. அவளுடைய கெஞ்சலை ரசித்தவன் அவள் காட்டிய உடையை போட்டுக்கொண்டான்.

தலை வாரியவளிடம் " நான் ஹெல்ப் பண்ணவா" ? என்றான்.

" ஹெல்ப் பண்ணுவியா ? உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையா ?" என்று இவள் பதில் கேள்வி கேட்க

"ஏன் என்ன பிரச்சனை?" என்றான் ரிஷி அவள் முடியை பிரித்துவிட்டுக்கொண்டு.
" இல்லை, கணவன் மனைவிக்கு இப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணுவார்களா ? இல்லை நீ எனக்கு என்பதால் செய்ய ரெடியாக இருக்கிறாயா ? என்று கேட்டேன்" என்றாள்.

" எல்லா கணவனும் செய்வார்களா என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் என் மனைவிக்கு எல்லாம் செய்வேன், காலையில் என் மனைவி என்னை ஒரு குழந்தையை அணைப்பது போல வாரி அணைக்கும் போது நான் அவளுக்கு இதை செய்யாமல் யாருக்கு செய்வேன். அப்புறம் என் அம்மு எனக்கு ஸ்பெஷல் தான், ஆனால் அவளுக்கு நான் செய்வதில் ஒரு லிமிட் இருந்தது, ஆனால் என் மனைவிக்கு நோ லிமிட் " என்றான் ரிஷி.

" அப்படின்னா நான் உன்னை அடித்து எழுப்பியிருந்தால் ?" என்றாள் அபி.

" நான் எப்போதும் நானாகத்தான் இருப்பேன்" என்றான் ரிஷி.

" ஸோ ஸ்வீட் " என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள் " வா போகலாம், உனக்கு ஒரு போன் வந்தது, எடுக்கும் முன்பு கட் ஆகிவிட்டது " என்றவள் அறையை ஒதுக்கினாள்.

ரிஷி போனை பேசிக்கொண்டே முன்னே செல்ல, அவனை விட ஒரு பத்தடி பின்னே நடந்து வந்தாள் அபி. ரிஷி போனில் பேசிக்கொண்டே கீழே யாரையும் கவனிக்காமல் மாடியில் இருந்து இறங்கினான். கீழே இறங்க ஒரு ஐந்து படிகளே இருக்க அவன் பின்னே வந்த அபி அங்கே நிலவிய சூழ்நிலையை கவனித்தாள்.

அனைவரும் கீழே இருந்தார்கள், கற்பகம்மாள் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்க, ராம் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பானு ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருந்தாள், அவள் கண் நொடிக்கொரு முறை மாடிப்படியை தொட்டுசென்றது. எங்கேயோ இடிக்குதே என்று அபிக்கு ஏதோ பொறித்தட்ட ப்ரியா பக்கத்தில் இருந்த அறையில் இருந்து வெளியே வந்து மாடிப்படிக்கு குறுக்கே வந்துகொண்டிருந்தாள். அபி எதையோ யூகித்து " அம்மா " என்று காலை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ரிஷி திரும்பிவிட்டான்.

" அம்மு என்னடா " என்று அவன் கீழே இறங்குவதற்கு பதிலாக மேலே படியில் ஏறி அபியிடம் சென்றுவிட்டான். வெறும் மூன்று படி இடைவெளியில் இருந்த ரிஷி இப்போது தான் கீழே விழப்போனால் தன்னை தாங்கி கொள்வான், அவனை விடாமல் நெருக்கமாக பிடித்துக்கொண்டு, நடக்கவே முடியவில்லை என்று தன்னை தூக்கி செல்ல சொல்லி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள வேண்டும், அதை பார்த்து அபி வெந்து சாக வேண்டும் என்று ப்ரியா போட்டுவைத்திருந்த அத்தனை பிளானும் மண்ணை கவ்வ ப்ரியா பிடிக்க யாரும் இல்லாமல் கீழே விழுந்தாள்.

ப்ரியா சத்ததுடன் கீழே விழுந்தது எதுவும் ரிஷி காதில் விழவில்லை அவனோ " அம்மு என்னாச்சு ? அம்மு " என்று அபியின் காலை ஆராச்சி செய்தான் கவலையுடன்.

படியில் அபி வலியில் நெளிய, தரையில் ப்ரியா அலற என்று ஒரு நிமிடத்தில் வீடே களேபரம் ஆனது.

" என்னடா ராம் பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ, போய் உன் மச்சினிச்சியை தூக்கு, ரிஷி உனக்கு தனியாக சொல்ல வேண்டுமா? அபியை உங்கள் அறைக்கு தூக்கி சென்று அவளுக்கு என்னாகிவிட்டது என்று பார் " என்றார் கற்பகம்மாள்.

ரிஷி அபியை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் செல்ல

" இல்லை ப்ரியா தானாக எழுந்து கொள்வாள் அத்தை, சின்ன அடிதான் " என்று ப்ரியாவை தூக்க வந்த தன் கணவனை தடுத்தாள். நேற்றுதானே தங்கை கீழே விழுந்த தன்னை தூக்கும் ரிஷியிடம் தான் எப்படி நடந்துகொள்ளப்போகிறேன் என்று இஞ்ச் இஞ்ச்சாக விவரித்தாளே. ஆனால் இப்போது ஆள் மாறிப்போனதே, தூக்க போவது தன் கணவன் என்பதால் பானுவுக்கு உள்ளே அடித்துக்கொண்டது. ஆயிரம் தான் தங்கை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லாவா ?

" பானு என்ன பேசுகிறாய் ? அவளால் எழும்ப முடியவில்லை, ராம் நீ தூக்கப்பா" என்று கற்பகம்மாள் மகனை விரட்ட பானு வேறுவழியில்லாமல் அமைதியாக நின்றாள்.

மேலே அபியை தூக்கி சென்ற ரிஷி அவளை கட்டிலில் விட்டுட்டு காலை பரிசோதித்தான். அவனிடம் இருந்து காலை வெடுக்கென்று பிடிங்கிகொண்ட அபி

" எனக்கு ஒன்றும் இல்லை சின்னத்தான், ஆனாலும் அந்த ப்ரியாவை உன்னிடம் இருந்து விலக்க இன்னும் நான் எப்படியெல்லாம் நடிக்கவேண்டுமோ ? முடியல சாமி, நீயே ஏதாவது செய்ய மாட்டியா ? ஐயோ எனக்கு அவஸ்தையா இருக்கு. போயும் போயும் நீ கொடுத்த ஐடியாவை கேட்டு உன்னை திருமணம் செயதேன் பார் என்னை சொல்லணும், பழைய செருப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் செருப்பை எடுத்து தா. எனக்கு நானே நாலு போட்டுக்கொள்கிறேன் " என்றாள் அபி சலிப்பாக.

" அம்மு என்ன சொல்கிறாய் ? நடித்தாயா ? அப்படியென்றால் உனக்கு அடி எதுவும் படவில்லையே ? " என்று மறுபடியும் காலை பார்த்தவன் அவள் வலி இல்லாமல் இருக்க "நீ முட்டாளா ? என்ன காரியம் செய்தாய் ? உனக்கு ஏதாவது அடிபட்டிருந்தால் என்னாவது ? எல்லாம் என் தப்புதான், சரி இனி ப்ரியாவை நான் பார்த்துக்கொள்கிறேன், அவளை சமாளிக்கிறேன் என்று எதுவும் கிணற்றில் போய் விழுந்துவிடாதே " என்றவன் சாப்பாட்டை மேலே கொண்டும் வரும்படி வேலையாளிடம் கூறினான்.

இருவரும் சாப்பிட்டுமுடித்துவிட்டு " நேரம் ஆகிவிட்டது, கிளம்பலாம் " என்றான்.

அபி தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்துகொள்ள, இருவரும் ஒரே நேரத்தில் ரெடியாகினர். இருவரும் கற்பகம்மாளுடன் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

***********

" ப்ரியா நான் இந்த ஐடியா வேண்டாம் என்று கூறினேன் கேட்டாயா ? இதற்கு பதில் அந்த அபியின் காலை உண்மையாகவே உடைப்பதற்கு ஏதாவது ஐடியா போட்டிருக்கலாம், என்னமா நடித்து ரிஷியை உன்னிடம் நெருங்காமல் தடுத்துவிட்டாள். இப்போது பார் இரண்டுபேரும் ஜோடியாக கோவிலுக்கு கிளம்பி விட்டனர். இனி அவர்கள் வர இரவு ஆகிவிடும், நான் அப்பாவிற்கு போன் செய்துள்ளேன், அவர் உன்னை அழைத்துபோக வருவார். இனி இந்த ரிஷி பின்னே அலைந்து ஒரு பிரயோஜனம் இல்லை, அப்பாவிடம் கூறி உனக்கு வேறு மாப்பிளை பார்க்க சொல்கிறேன், இல்லையென்றால் உன் பழைய காதலை பற்றி அப்பாவிடம் கூறி மேலே பேசச்சொல்" என்றாள் பானு.

" அவ்வளவு சீக்கிரம் நான் இவர்களை விட்டுவிடுவேன்னா ? " என்றாள் பிரியா.

" விடாமல் என்ன செய்யப்போகிறாய் ? ஒரு வயசு பொண்ணு சதா அக்கா வீட்டில் வந்து இருந்தால் நாலு பேர் என்ன சொல்வார்கள், என் மாமியார் எதுவும் சொல்வதற்கு நான் இடம் கொடுக்கலாமா ?" என்றாள் பானு.

" சும்மா சாக்கு போக்கு சொல்லாதே, நீ சொல்லும் நாலு பெயரை பற்றி பயப்பட நான் அபி கிடையாது, அப்புறம் நீ ரொம்ப சுற்றிவளைக்காமல் நேரே பேசி பழகு. உன் கணவனை வளைக்கும் திட்டமெல்லாம் எனக்கு கிடையாது, உன் டேஸ்டுக்கும் என் டேஸ்டுக்கும் கிட்ட வராது. " என்றாள் ப்ரியா நேரடியாக.

பானு அதற்காகத்தான் தங்கையை இங்கே வராமல் தடுப்பதை பற்றி அவளிடம் சுற்றிவளைத்து பேசினாள், ஆனால் ப்ரியா புரிந்துகொண்டு நேரடியாக அதை சொல்ல

" ச்சி உன்னை போய் நான் அப்படி நினைப்பேனா "? என்று கேட்டு மழுப்பினாள் பானு.

ப்ரியா அதையெல்லாம் கவனிக்காமல் பலத்த யோசனையில் இருந்தாள்.

" என்ன யோசனை " என்ற பானுவிடம்
" அக்கா ரிஷி உண்மையிலேயே குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவர்தானா என்று எப்படி கண்டுபிடிக்க ?" என்றாள் ப்ரியா.

" இனி அதை தெரிந்துகொண்டு உனக்கு என்ன ஆகப்போகிறது ?" என்றாள் பானு.

" இல்ல, நான் அவசர பட்டுட்டேன்னோ என்று எனக்கு தோணுது, ஆனா அது உண்மை இல்லை என்று மட்டும் எனக்கு தெரிந்தால் அதன் பிறகு அந்த அபி சீக்கிரம் ஏதாவது விபத்தில் போய் சேர்ந்துவிடுவாள் " என்றாள் ப்ரியா கொலைவெறியுடன்.

" ஸ்ஸு சத்தமா பேசாதே, யாரும் கேட்டுவிட போகிறார்கள், கத்தரிக்காய் மலிந்தால் கடை தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும், பொறுமையாக இரு " என்ற பானுவை பார்த்து ப்ரியா கேட்டாள்

"எதுவரை ? என்று

" ரிஷிக்கு வாரிசு உருவாகும் வரை, அப்புறம் நீ இப்போது சொன்னதை பற்றி யோசிக்கலாம் " என்றாள் பானு.

************

சொந்த ஊர் சென்று அங்குள்ள கோவிலுக்கு பூஜை செய்துவிட்டு இரவு வந்து சேர்த்தனர் மூவரும்.

கற்பகம்மாள் ஓய்வு எடுக்க சென்றுவிட இருவரும் தங்கள் அறைக்குள் சென்றனர், இரவு உணவு எல்லாம் வரும் வழியிலேயே முடித்துக்கொண்டு வந்தனர்.

"சின்னத்தான் நாளைக்கு நான் ஆபீஸ் செல்ல வேண்டும் அதனால் நான் சீக்கிரம் தூங்க போகிறேன், நான் வருவதற்குள் நீங்கள் பிரெஷ் ஆகிவிடுங்கள் " என்று கீழே சென்றாள் அபி.

அவள் திரும்பி வருவதற்குள் ரிஷி இரவு உடைக்குள் புகுந்திருந்தான். அபி கையில் சில பைலுடன் வந்தாள். பிறகு அவளும் ப்ரஸாகிவிட்டு தன் லேப்டாப்பை ஆன் செய்தாள். கொஞ்ச நேரம் அதிலே மூழ்கியிருந்தவள் அதை அணைத்துவிட்டு
" குட் நைட் " என்று படுத்தாள்.

" என்ன இன்று மரியாதை எல்லாம் தூள் பறக்குது " என்றான் ரிஷி சேனலை மாற்றியபடி.

"அதுவா நான் எப்போதும் போல உங்களிடம் பேசியதை அத்தை கேட்டுவிட்டார்கள், அப்படியெல்லாம் பேச கூடாது என்று அட்வைஸ் செய்தார்கள் அதனால் தான் " என்றவள் அவன் மேல் கையை போட்டுகொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

ரிஷியின் கண் டிவியை பார்த்தாலும் அவனின் சிந்தனை முழுவதும் வேறெங்கோ இருந்தது, வெகு நேரம் கழித்து புரண்டு படுத்த அபி இன்னும் டிவி ஓடுவதை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

" என்ன ஆச்சு உங்களுக்கு, மணி என்ன தெரியுமா ? அப்படி என்ன பார்க்கிறீர்கள் " என்று கேட்டுவிட்டு டிவியை பார்த்தாள் அதில் பழைய படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. புரியாமல் அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து ரிமோட்டை வாங்கி டீவியை அணைத்தாள்.

அவனைபடுக்கவைத்தவள் அவனை ஒட்டி அணைத்துக்கொண்டாள்.

" அத்தான் நீங்கள் சரியான அழுத்தக்காரன், உனக்குள் நிறைய ரகசியம் புதைந்துகிடப்பதாகவே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. நீங்கள் எதையாவது என்னிடம் சொல்ல விரும்பிறிர்களா ?"என்று ஆழம் பார்த்தாள் அபி.

அவளை இழுத்து தன் மேல் போட்டவன் "ஆமாம் எனக்கு உன்னிடம் ஒன்று சொல்லவேண்டியது உள்ளது " என்று அவள் கண்ணை நேராக பார்த்தான்.

அபியும் என்ன என்பது போல பார்க்க
" இந்த வாங்க போங்க என்பது கேட்பதற்கு எரிச்சலா இருக்கு, ஏற்கனவே கணவன் மனைவியான நமக்குள் வானத்துக்கும், பூமிக்கும் ஆன தூரம் இருக்கு, இதில் இந்த அழைப்பு இன்னும் அதிக தூரத்தை ஏற்படுத்துகிறது, நீ எப்போதும் போல என்னை எருமை என்றே கூப்பிடு "என்றான் ரிஷி.

" உண்மையிலேயே நீ எருமை தான் " என்றவள் அவனிடமிருந்து விலகி முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

அவள் புறம் திரும்பி தன்னை விட்டு விலகி போனவளின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தான் ரிஷி. அப்போது அவள் போட்டிருந்த இரவு உடையின் டாப்ஸ் மேலேறி அவனது கை அவளில் வெற்று வயிற்றில்பட்டது.

ரிஷி அப்போது அபியின் முகத்தை பார்க்கவில்லை என்றாலும் அவளின் நிலையை உணர்ந்தான். அவன் கை பட்ட மாத்திரத்தில் அவளின் பட்டு தேகம் சிலிர்த்து இன்னும் பட்டாக மாறியது. அவள் அவன் தொடுகையில் ஏற்பட்ட உணர்வை மூச்சை உள்ளிழுத்து அடக்கிக்கொண்டிருந்தாள். அவளின் தேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த ரிஷி மீண்டும் அவள் வயிற்றில் தன் கையை படரவிட்டான். இப்போது அபி வெளிப்படையாகவே நெளிய ஆரம்பித்தாள், உடனே அவன் கை அங்கிருந்து அகன்று அவள் கையின் மேல் படிந்தது, அதன் பிறகு அவனிடம் எந்த அசைவும் இல்லை.

ரிஷியின் நடவடிக்கையை என்றுமே அபிக்கு குழப்பமாகத்தான் இருக்கும். இன்றோ இன்னும் அதிகமாக குழம்பினாள்.
" இவன் ஏன் என்னை விட்டு விலகுகிறான் " என்ற கேள்வியுடன் கண்ணயர்ந்தாள்.
Nice
Problem vendannu vilagi ponalum, vidamatanga polairrukku
Abi innum ushara irukkanum pola
Antha barath vantha priya silent avala??
3 akka thiruntha porathu illa
Innum abi , rishi kooda nalla understanding vantha
Yarslayum onnum pannamudiyadhu
Kathai interesting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top