uyirin ularal episode - 24

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
கடமை கடமை என்று உயிரை வாங்குகிறானே, அந்த ப்ரியா பேயை நான் தான் விரட்டவேண்டுமா ? இவனுக்கு வாய் இல்லையா ? இவனை சொல்லியும் குற்றமில்லை. இவன் அவளுக்கு சுடச்சுட பதில் சொன்னாலும் அவளுக்கோ உறைக்கவும் மாட்டேங்கிறது. என்று மனதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டு சென்றாள் அபி.
அவள் மனதில் ப்ரியாவை நினைத்துக்கொண்டே சென்றதாலோ என்னவோ அவளே நேரில் நிற்பது போல இருந்தது அபிக்கு. சட்டென்று ரிஷியின் கையை விட்டுவிட்டு கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தாள் அபி.
நிற்பது போல இல்லை, உண்மையிலேயே நிற்கிறாள். சாத்தானை நினை உடனே தெரியும் என்று சொல்வதுபோல இப்போதுதான் நினைத்தேன், ஏமாற்றாமல் கண் முன்னே நிற்கிறதே. குட்டிச்சாத்தானுடன் பெரிய சாத்தானும் நிற்கிறது. அருகில் இருப்பவனுக்கோ எப்போது? எதற்கு கோபம் வரும் என்றே தெரியாது. முடியல " என்று நினைத்தாள் அபி.
அவள் நின்றுவிட்டதை உணர்ந்த ரிஷி
" என்ன ?" என்று கேட்டான்.
" இல்லை, ஒன்றும் இல்லை " என்று சிரித்தவள் அவனுக்கு தெரியாமல் ஒரு பெரிய மூச்சை இழுத்துக்கொண்டு அவனின் கையோடு கை கோர்த்து மேலே முன்னேறினாள்.
அக்கா, தங்கை இருவரின் கண்ணும் கோர்த்திருந்த கைகளின் மேல் தான் இருந்தது. கற்பகம்மாளின் பார்வையோ அந்த இரு சகோதரிகளின் தீ பார்வையில் இருந்தது. பானு சுதாரித்துக்கொண்டு தங்கையை இடித்தாள். ப்ரியாவும் நார்மல் ஆக அவர்களோடு உணவு உண்ண அமர்ந்தனர் புதுமணதம்பதினர்.
" விட்டால் ஓடிவிடுவாள் என்றா பிடித்துக்கொண்டு வருகிறீர்கள் ரிஷி " என்றாள் நக்கலாக ப்ரியா.
" என்ன செய்வது தனியாக வந்தால்தான் எனக்கு இடமில்லாமல் போய்விடுகிறதே, சை ஒரே கொசுத்தொல்லை, அத்தை வீட்டிற்கு கொஞ்சம் கொசுமருந்து அடிக்க சொல்லவேண்டும் " என்றாள் அபி இருக்கையில் அமர்ந்தபடி.
ரிஷி ஒரு முடிவோடு வந்திருந்தான். என்ன ஆனாலும் சரி இன்று வாயை திறக்க கூடாது என்று. அதனால் அவன் அமைதியாக இருந்தான்.
" என்ன ஒரு நாளுக்குள் புழுவுக்கு முதுகெலும்பு வந்துவிட்டது போல " என்றாள் பானு ஓரக்கண்ணால் அபியை பார்த்தபடி.
" சாப்பிடும் இடத்தில் இது என்ன பேச்சு ?" என்றார் கற்பகம்மாள்.
அனைவரும் அமைதியானார்கள்.
சாப்பிட்டுமுடிக்கும் வரையில் அமைதியாக இருந்த பானு,
" ரிஷி இரவு ஆகிவிட்டது, ப்ரியாவை தனியாக ட்ரைவரை நம்பி அனுப்பமுடியாது. கண்டிப்பா போயே தீருவேன் என்று நிற்கிறாள். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அவளை வீட்டில் விட்டுவிடுங்கள். ப்ரியா சீக்கிரம் கிளம்பு " என்றாள் பானு.
அபிக்கு ரிஷி விட்ட டோஸில் வந்த கோபம் இல்லை, நிஜமாகவே அவளுக்கு கோபம் வந்தது.
" ஏன் அவர் போகவேண்டும் ?" என்றாள் வெடுக்கென்று.
" அபி அவர் போவதில் உனக்கென்ன ?" என்றாள் பானு.
" யாரை சொல்கிறீர்கள் சின்னத்தானை என்று நினைத்துவிட்டேன், சாரி நீங்கள் ராஜ் அத்தானை கூறினீர்களா ? " என்றாள் அபி கூலாக.
" ஏன் உனக்கு காது கேட்கவில்லையா ? நான் ரிஷி என்று கூறினேன் " என்றாள் பானு.
" ஓஒ அப்படியென்றால் உங்களுக்கு கண் தெரியவில்லை போல, நீங்கள் சொல்லும் ரிஷி நேற்றுதான் என் கழுத்தில் தாலி கட்டினார், இதோ இதுதான் அது. அதனால் தான் அவர் ஏன் போகவேண்டும் என்று நான் கேட்டேன் " என்றாள் அபி விடாமல்.
" அக்கா அவளிடம் என்ன சும்மா பேசிகிட்டு, ரிஷி அத்தான் வாங்க எனக்கு நேரமாகிறது" என்றாள் ப்ரியா.
ரிஷி கையை கட்டிக்கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
" என்ன சும்மா பேசுகிறேன்னா ? அதை உங்கள் அக்காவை பேச சொல்லுங்கள் பார்ப்போம். இதே ரிஷியைத்தான் பட்டப்பகலில் என்னை காரில் அழைத்துபோகக்கூடாது என்று கூறினார்கள் உங்கள் அக்கா. ஏன்னா உங்களுக்கு நிச்சயம் ஆனவர் என்று. இன்று அவருக்கும் எனக்கும் கல்யாணமே ஆகிவிட்டது. நான் எப்படி அனுமதிப்பேன் இந்த வேளையில் அவரை உங்களுடன், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன். அந்த அளவுக்கு நான் பத்தாம்பசிலி இல்லை. ஆனாலும் நந்து ஏற்கனவே ரொம்ப டயர்ட்டா இருக்கிறார். இப்போது அவரால் அவ்வளவு தூரம் ட்ரைவ் செய்துகொள்ளமாட்டார், ஸோ ப்ளீஸ் வேறு யாரையாவது பாருங்கள்." என்றாள் அபி ரிஷி பக்கம் திரும்பி.
" அபி திஸ் இஸ் டூ மச், அவர் எனக்கும் அத்தான்தான்" என்றாள் ப்ரியா கோபத்தில்.
" அப்கோர்ஸ் உனக்கும் அவர் அத்தான்தான், எனக்கு அத்தான் ப்ளஸ் கணவர். அதுமட்டும் இல்லாமல் இவரை விட ராஜ் அத்தான் தான் உனக்கு மிகவும் உரிமை உள்ள சொந்தம். அவரை அழைத்துப்போ இல்லையென்றால் இன்று இங்கேயே இருந்துவிட்டு காலையில் பயப்படாமல் கிளம்பி போ " என்றாள் அபி.
" அவர் குழந்தையை தூங்கவைத்துக்கொண்டிருக்கிறார், அவரால் இப்போது வரமுடியாது " என்றாள் பானு இடையில்.
" அதான் அடுத்த ஆப்சனையும் சொன்னேனே, இது இல்லையென்றால் அது. மூன்றாவது ஆப்சன் கிடையாது, நந்து போகலாம் " என்றாள் ரிஷியை பார்த்து.
அவன் எழும்ப ப்ரியா ஏதோ கூற வந்தாள்.
" அடடா எதுக்கு ஆளாளுக்கு பேசிக்கொண்டு, பானு அவன் புதிதாக திருமணமானவன், ஒரு 15 நாளாவது இரவு வெளியே சுத்தக்கூடாது என்று தெரியாதா ? எங்கள் காலத்தில் 40 நாட்கள் வெளியவே அனுப்பமாட்டார்கள். உங்கள் அவசர உலகில் இதையாவது கடைபிடிக்க கூடாதா ? " என்றார் கற்பகம்மாள் சலிப்பாக.
" தனக்கு நிச்சயமானவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்ற வேதனையே அவளால் தாங்க முடியவில்லை, அவர் இன்னொருபெண்ணுடன் தனி அறையில் இருப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். அதை பார்க்க முடியாமல் தான் இரவு இங்கே தங்க மறுக்கிறாள். அது புரியாமல் ஆளாளுக்கு இப்படி பேசினால் எப்படி ? என்றாள் பானு வேதனை குரலில்.
" வாஸ்தவம்தான் மருமகளே, இவ்வளவு வேதனை படுபவள் கொஞ்ச நாள் தள்ளி இருந்து எல்லாவற்றையும் மறக்க முயற்சி செய்யலாம் இல்லையா ?" என்றார் கற்பகம்மாள்.
அதன் பிறகு எதையும் கேட்கவோ, பார்க்கவோ அபி அங்கே நிற்கவில்லை, ரிஷியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அறைக்குள் சென்றவள் அவன் கையை விட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தாள், கோபத்தில் தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு தன் கோபத்தை அதனிடம் காட்டிக்கொண்டு இருந்தாள்.
எதிர்புறம் இருந்த சோபாவில் இருந்துகொண்டு ரிஷி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான். அவனை எரிப்பதுபோல பார்த்தவள், கையில் இருந்த தலையணை அவன் மேல் எறிந்துவிட்டு ஆத்திரத்துடன் அவனை நோக்கி போனாள்.
" என்ன இளிப்பு, பேசு பேசு என்று ஏத்திவிட்டியே ? கடைசியில் அந்த ப்ரியா போட்டாள் பார் ஒரு போடு, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறாளாம், அவளை அப்படி தவிக்கவிட்டுவிட்டு உனக்கு இங்கே கடமை கேட்கிறதா ?" என்றாள் அபி.
ரிஷி பதில் பேச முயற்சிக்கும் போது அவன் போன் அடித்தது, கற்பகம்மாள் அழைத்திருந்தார். உடனே அவனை தன் அறைக்கு வர சொன்னார்.
" இதோ வருகிறேன்" என்று அபியிடம் கூறிவிட்டு தன் தாயை பார்க்க சென்றான்.
அங்கே " ரிஷி என்ன வேலை பார்த்தாய், என்ன காரியம் செய்ய தூண்டினாய் அம்முவை . அம்மு மென்மையானவள், உன் அண்ணி பானு பேச்சிலே கத்தி வைப்பவள், அவளிடம் போய் அபியை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாய், அவளும் நீ இருக்கும் தைரியத்தில் வாயுக்கு வாய் கொடுக்கிறாள், நாம் அனைவரும் இருந்ததால் பானு இப்படி பேசினாள். என்றாவது அம்மு தனியே மாட்டினாள் பானு இன்று மாதிரி பேசமாட்டாள், ரொம்ப கீழ் இறங்கி பேசிவிடுவாள். அன்று அம்முவின் நிலைமையை யோசித்தாயா ? " என்றார் கற்பகம்மாள்.
"அதற்காக என்றுமே அம்மு இவர்களுக்கு பயந்து சாகவேண்டுமா ? வீரனுக்கு ஒருநாள் சாவு, கோழைக்கு தினம் தினம் சாவு. " என்றான் ரிஷி.
" ஏண்டா உனக்கு வேற பேச்சே தெரியாதா ? சாவு சாவுன்னு பேசிகிட்டு, கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அதிலும் உன் அண்ணிகளின் கண் சொல்லவே வேண்டாம். என்னமோ செய் ஆனால் அம்முவுக்கு இதனால் என்றாவது பிரச்சனை வந்தால் தொலைச்சிட்டேன் உன்னை." என்றார் அவர்.
" அதெல்லாம் ஒன்றும் ஆகாது, அவளால் சமாளிக்க முடியவில்லை என்று வரும்போது நான் இருக்கிறேன் அவளுக்கு. " என்றான் ரிஷி.
" நீ எட்டடி பாய்ந்தால் உன் அண்ணி 64 அடி பாய்வாள், கடைசியில் அவள் தங்கையின் வருத்தில் வந்து முடித்தாள் பார்த்தாயா ? இதற்காக கண்டிப்பாக அம்மு உன்னை வறுத்தெடுக்காமல் விடமாட்டாள், நீ எப்போதுதான் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறாயோ " என்றார் அவர்.
" சீக்கிரம் வைக்கிறேன் " என்று ரிஷி தாயிடம் கூறிவிட்டு கிளம்பும் போது நின்று திரும்பி
"இதெல்லாம் அநியாயம் அம்மா, அவளையே பற்றி நினைக்கிறீர்கள் ? என்னை பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா ? " என்றான் வருத்தம் போல.
" யாரை உன்னை பற்றியா கவலைப்படவேண்டும், போடா நீ சரியான ரவுடி பய, காணாத குறைக்கு உன் பொண்டாட்டியையும் ரவுடியாக மாற்றிக்கொண்டிருக்கிறாய் உனக்கு துணையாக. வேறன்ன? " என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
மகனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.
அங்கே அபி ரிஷியின் வரவுக்காக காத்திருந்து போரடித்து ஒரு படத்தை ஓடவிட்டு அதில் மூழ்கிவிட்டாள்.
ரிஷி உள்ளே சென்றவன் அபி எதையாவது கேட்பாள் என்று எண்ணி இருந்து பார்த்தான், அவள் படம் பார்ப்பதிலேயே கவனமாக இருக்க அவன் போய் கட்டிலில் படுத்தான்.
படத்தை பாஸ் செய்தவள் " ஹலோ என்ன ? இங்கே படுத்தமாதிரி இருக்கு? சார் என்னவோ கூறினீர்கள், பனிஷ்மென்ட் அது இது என்று. ஒழுங்கா மரியாதையா அங்கே எழுந்து போங்க " என்றாள் சோபாவை கைகாட்டியபடி.
" அதான் பனிஷ்மென்ட் எல்லாம் தேவைப்படாதபடிக்கு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினாயே! ஐ அம் ஹப்பி, ஸோ பனிஷ்மென்ட் கட் " என்றான் ரிஷி அமர்ந்திருக்கும் அவள் இடுப்பை சுற்றி கையை போட்டபடி.
" போதும் கையை எடு, எங்கேயும் படு, நான் படம் பார்க்க போகிறேன் தொந்திரவு செய்யாதே " என்று மறுபடியும் படத்தை ஓடவிட்டாள், அதன் மியூசிக் பயங்கரமாக இருக்க
" என்ன படம் ?" என்றான்.
" திகில் படம், இங்கிலிஷ் மூவி பயங்கரமா இருக்கும், பார்க்கிறியா ? " என்றாள் உற்சாகமாக.
" ஏன் தனியே பார்க்க பயமா இருக்கா ? " என்றான் அவள் மடியில் தலைவைத்துக்கொண்டு.
" யாருக்கு எனக்கு பயமா ? ஏஹே நானெல்லாம் தனியாக நாலு பேய்ப்படம் பார்ப்பேனாக்கும் " என்றாள் அவள்.
" நீ பார்ப்ப, உன் படத்தை நீயே பார்ப்பதற்கென்ன ?" என்றான் அவன் கிண்டலாக.
அவனை முறைத்தவள் அவனை தன் மடியில் இருந்து தள்ளிவிட்டாள்.
"போய் தொலை, என்னை பார்த்தால் உனக்கு பேயை பார்ப்பது போல இருக்கா ?" என்று படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் ரிஷி கண்ணயணர்ந்து விட்டான். அபி அவன் வயிற்றில் தலைவைத்து படுத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் " ஆஆ " என்று ஒரு அலறல் சத்தம் கேட்க ரிஷி தூக்கத்தில் பதறி விழித்தான்.
" அம்மு என்னாச்சு ? அம்மு " என்றான் அழுத்தமாக.
அபிதான் அலறிக்கொண்டு கட்டிலில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருந்தாள்.
" அம்மு " என்று அவன் அவளை உலுக்க
அசடு வழிய அபி சிரித்தாள்.." படத்தில் இப்போதுதான் பேயின் இன்றோடக்ஷன், பயங்கரமா இருந்ததா அதான் கத்திவிட்டேன்."என்றாள் அபி
தலையில் அடித்துக்கொண்டவன் குடிக்க தண்ணீரை எடுத்து கொடுத்தான். தண்ணீரை குடித்துவிட்டு அவனிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் ரெமோர்ட்டை கையில் எடுத்தாள்.
" போட்டேன்னா பாரு, கழுதை அடங்கிறியா ? இப்போதுதான் ஊரையே எழுப்புற மாதிரி கத்திட்டு இப்போ மறுபடியும் அதையே பார்க்கப்போறியா ? பேசாமல் தூங்கு " என்று அதட்டினான்.
" சின்னத்தான் படம் இனிதான் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும், பிளாஷ் பேக் எல்லாம் வரும், பார்க்கவிட்டேன்" என்றாள் கெஞ்சலாக.
" நீ திருந்தவே மாட்டியா ? உனக்கு எப்போதும் ராத்திரி படம் பார்ப்பது வேலையா போயிட்டு, என்னமோ செய் ஆனால் இனி ஒருமுறை அலறின கொன்னுட்டேன், ராத்திரி பார்க்கும் படத்தை பாரேன் " என்றவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தான்.
அபி மெதுவாக அவனின் தோளில் தட்டினாள்.
" என்னடி வேணும் உனக்கு, உன்னை தண்ணீரில் விரட்டின எனக்கே இவ்வளவு டயர்ட்டா இருக்கு. அவ்வளவு நேரம் தண்ணீரிலேயே மிதந்த, உனக்கு டயர்ட்டா இல்லையா ? " என்று திரும்பினான்.
" நல்ல அத்தான் இல்ல, என் செல்லம் இல்ல, கொஞ்ச நேரம் எனக்கு கம்பெனி தாயேன். " என்றாள் அவன் கன்னத்தை கிள்ளியபடி.
" இதுவேறையா, முடியாது என்றால் விடவா போற. சரி வா " என்றான் எழுந்து உட்கார்ந்து கட்டிலில் சாய்ந்துகொண்டு.
அவன் கையின் வளைவுக்குள் சென்றவள் அவன் தோளில் சாய்ந்துகொண்டு, அவனின் டீஷர்ட்டின் பிடித்துக்கொண்டு மறுபடியும் அதே காட்சியை ஓடவிட்டாள். பயங்கர உருவம் ஒன்று வர முகத்தை அவன் மார்பில் புதைத்தாள், ஆனாலும் விடாமல் படத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ரிஷியோ அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
" நேஹா " என்றான் அவன் குரல் மாறியிருந்தது ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
"ஏய் நேஹா" என்றான் மறுபடியும்.
" ச்சு என்ன ?" என்றாள் திரும்பாமல்.
" நேஹா " என்றான் மறுபடியும்.
அபி திரும்பாமலே அவன் வாயை தன் கையால் மூடினாள்.
" பேசாமல் இரு நந்து " என்று.
தன் வாயை மூடிய அவள் கையை பிடித்து மென்மையாக முத்தமிட்டான், அவளை தன்னோடு மென்மையாக அணைத்துக்கொண்டான். அபியோ எதையும் உணராமல் அந்த கதையின் வில்லன் யாராக இருக்கும் என்ற ஆராச்சியில் மூழ்கியிருந்தாள். அது ரிஷிக்கு இன்னும் சவுகரியமாக போனது.
மெதுவாக அவளின் இடையை தன் கையால் வளைத்தவன் அவளை அப்படியே தூக்கி தன் மடிமேல் வைத்தான். இப்போது அவள் அவனை கேள்வியாக நோக்கினாள்.
"அப்படி இருக்க கஷ்டமாக இருந்தது, கை வேறு வலித்தது அதான் " என்றான் ரிஷி. அபி நம்பினாலோ என்னவோ ஆனால் அவள் அவனை விலக்கவில்லை.
அபி படத்தில் மூழ்க, ரிஷி அவளின் கூந்தலின் வாசத்தில் மூழ்கினான். அவனுடைய அசைவு அவளை திரும்ப செய்தது.
" என்ன நந்து ? என்ன வேண்டும் உனக்கு. என் முடியை சிக்காக்கிவிடாதே, அப்புறம் எனக்கு அதை சரிசெய்ய போதும் போதும் என்று ஆகிவிடும். " என்றாள் அவனிடமிருந்து தன் கூந்தலை விலக்கியபடி.
அவன் அவளை இமைக்காமல் பார்க்க
" வாட் பேபி " என்றாள் அவன் கன்னத்தை தடவியபடி.
அவன் பதில் சொல்லாமல் கன்னத்தை காட்டினான்.
" ஓஒ படத்தில் வந்த கிஸ் ஸீனை பார்த்து உனக்கும் ஆசை வந்துவிட்டது போல, சின்னப்பையன் போல. ஸோ ஸ்விட். இந்தா" என்றவள் அவன் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள்.
" கொடுத்தாச்சு, இனி என்னை தொந்திரவு பண்ணக்கூடாது சரியா, ஏன்னா ஒரு த்ரில்லர் படத்தை பார்த்துவிட்டு அதன் முடிவு தெரியவில்லையென்றால் தலையே வெடித்துவிடும். இது இங்கிலிஷ் படம், கிஸ் ஸீன் அடிக்கடிவரும் அதற்காக சும்மா சும்மா என்னை தொந்திரவு பண்ணாதே " என்றாள்.
" ஓகே, அப்படின்னா எனக்கு நீயே ஷேகன் கொடு "என்றான் கள்ளச்சிரிப்புடன்.
" அவ்வளவுதானே இந்தா " என்று அவன் கையை குலுக்கினாள்.
" இல்ல பாரின் டைப்ல " என்றான் கையை இழுத்துக்கொண்டு.
" போடா எருமை " என்றாள் அவள்
" வாயிலேயே போடுவேன், ஒழுங்கா கேட்டதை நீயே தா, இல்ல நான் இந்த படத்தில் வருவது போல ஷேகன் கொடுத்துவிடுவேன் "என்று ரிஷி மிரட்ட.
" சை இந்த வீட்டில் எனக்கு பிடித்த ஒரு படத்தை நிம்மதியாக பார்க்கமுடிகிறதா ? என்று அவனை விட்டு விலகியவள் அவன் உதட்டில் தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்.
" போதுமா, போ போய் தூங்கு, உன் கம்பெனி எனக்கு வேண்டாம், நானே தனியாக பார்த்துக்கொள்வேன் " என்று தன் இடத்தில் வந்து தலையணையை மாற்றிப்போட்டுக்கொண்டு படத்தை பார்க்க தொடங்கினாள்.
" இருடி, படமா பார்க்கிற, நாளைக்கு இந்த டீவியை இங்கிருந்து எடுத்துவிடுகிறேன் " என்றான் ரிஷி
"அப்படியா?, அப்புறம் ஐயா எப்படி விடிய விடிய ஸ்போர்ட் டிவி பார்ப்பிங்க, கீழே ஹாலில் போயா?" என்றாள் அபி.
" கொழுப்பு பிடிச்சவளே " என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான்.
********
" நந்துவாம் நந்து, எவ்வளவு திமிர் அந்த அபிக்கு, நேற்றுவரை தரைக்குள் புகுந்துவிடுவாள் போல அமைதியாக இருந்தவள் இன்று சீறும் பெண் சிங்கமாக சிலிர்த்து நிற்கிறாள். அவளை பார்க்கும் போதேல்லாம் எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. ஒரு தாலி கழுத்தில் ஏறியதும் அவளின் வெளித்தோற்றம் அப்படியே மாறியதும் இல்லாமல், உன்னையே எதிர்த்து பேசும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதே அவளுக்கு " என்று பொரிந்தாள் ப்ரியா தன் அக்காவிடம்.
" என்ன செய்வது அவள் கழுத்தில் ஏறிய தாலியை கட்டியவன் அப்படி. பவர்புல் மேன். ஆனால் நீதான் அவன் ஆண்மை இல்லாதவன் அது இது என்று இருந்த கடைசி வாய்ப்பையும் விட்டுட்டு வந்துட்ட. அவனை பார்த்தால் நீ சொன்னது போல தெரியவில்லை " என்று தோளை குலுக்கினாள் பானு.
" ச்சு, அவனே அதை சொன்னான், பிறகு நம்பாமல் இருக்கமுடியுமா ? இல்லையென்றால் இதையெல்லாம் ப்ரக்டிகலா டெஸ்ட்டா பண்ணமுடியும். ஆனால் பண்ணியிருக்கணுமோ ?" என்றாள் ப்ரியா.
" ஏய் என்னடி பேசுற " என்றாள் பானு சிரித்துக்கொண்டே.
" நீ ட்ரை பண்ணினாலும் அது நடந்திருக்காது, அந்த கிழவியின் வளர்ப்பு அப்படி. அவன் என்ன துள்ளினாலும் கிழவியின் ஒரு பார்வையில் அடங்கிவிடுவான் " என்றாள் பானு.
" ஓகே விடு பாஸ்ட் இஸ் பாஸ்ட், இனி அடுத்ததை பார்ப்போம், எனக்கு அவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்க கூடாது அதற்காக நான் ஒரு ஐடியா பண்ணிருக்கிறேன் " என்று தனது மொக்க ஐடியாவை கூறினாள்.
பானுவும் அதேயேதான் கூறினாள் " உன் ஐடியா அதர பழசு, மொக்கையா இருக்கு "என்றாள்.
" அக்கா ஒரு கட்டிடத்தை இடிக்கனும் என்றால் jcb யை வைத்து இடித்து தள்ளிவிட்டு போயிட்டே இருக்கலாம், ஆனால் இங்கு நாம் நொறுக்க வேண்டியது ஒரு கணவன் மனைவி உறவை. அடியில் இருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு செங்கலாகத்தான் உருவ வேண்டும் " என்றாள் ப்ரியா.
தங்கையின் ஐடியா சக்ஸஸ் ஆக வேண்டிக்கொண்டாள் அக்கா.
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஏடாகூடமாக கேவலமான
திட்டம் போடுவாளுக
 

B.subhashini

New Member
கடமை கடமை என்று உயிரை வாங்குகிறானே, அந்த ப்ரியா பேயை நான் தான் விரட்டவேண்டுமா ? இவனுக்கு வாய் இல்லையா ? இவனை சொல்லியும் குற்றமில்லை. இவன் அவளுக்கு சுடச்சுட பதில் சொன்னாலும் அவளுக்கோ உறைக்கவும் மாட்டேங்கிறது. என்று மனதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டு சென்றாள் அபி.
அவள் மனதில் ப்ரியாவை நினைத்துக்கொண்டே சென்றதாலோ என்னவோ அவளே நேரில் நிற்பது போல இருந்தது அபிக்கு. சட்டென்று ரிஷியின் கையை விட்டுவிட்டு கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தாள் அபி.
நிற்பது போல இல்லை, உண்மையிலேயே நிற்கிறாள். சாத்தானை நினை உடனே தெரியும் என்று சொல்வதுபோல இப்போதுதான் நினைத்தேன், ஏமாற்றாமல் கண் முன்னே நிற்கிறதே. குட்டிச்சாத்தானுடன் பெரிய சாத்தானும் நிற்கிறது. அருகில் இருப்பவனுக்கோ எப்போது? எதற்கு கோபம் வரும் என்றே தெரியாது. முடியல " என்று நினைத்தாள் அபி.
அவள் நின்றுவிட்டதை உணர்ந்த ரிஷி
" என்ன ?" என்று கேட்டான்.
" இல்லை, ஒன்றும் இல்லை " என்று சிரித்தவள் அவனுக்கு தெரியாமல் ஒரு பெரிய மூச்சை இழுத்துக்கொண்டு அவனின் கையோடு கை கோர்த்து மேலே முன்னேறினாள்.
அக்கா, தங்கை இருவரின் கண்ணும் கோர்த்திருந்த கைகளின் மேல் தான் இருந்தது. கற்பகம்மாளின் பார்வையோ அந்த இரு சகோதரிகளின் தீ பார்வையில் இருந்தது. பானு சுதாரித்துக்கொண்டு தங்கையை இடித்தாள். ப்ரியாவும் நார்மல் ஆக அவர்களோடு உணவு உண்ண அமர்ந்தனர் புதுமணதம்பதினர்.
" விட்டால் ஓடிவிடுவாள் என்றா பிடித்துக்கொண்டு வருகிறீர்கள் ரிஷி " என்றாள் நக்கலாக ப்ரியா.
" என்ன செய்வது தனியாக வந்தால்தான் எனக்கு இடமில்லாமல் போய்விடுகிறதே, சை ஒரே கொசுத்தொல்லை, அத்தை வீட்டிற்கு கொஞ்சம் கொசுமருந்து அடிக்க சொல்லவேண்டும் " என்றாள் அபி இருக்கையில் அமர்ந்தபடி.
ரிஷி ஒரு முடிவோடு வந்திருந்தான். என்ன ஆனாலும் சரி இன்று வாயை திறக்க கூடாது என்று. அதனால் அவன் அமைதியாக இருந்தான்.
" என்ன ஒரு நாளுக்குள் புழுவுக்கு முதுகெலும்பு வந்துவிட்டது போல " என்றாள் பானு ஓரக்கண்ணால் அபியை பார்த்தபடி.
" சாப்பிடும் இடத்தில் இது என்ன பேச்சு ?" என்றார் கற்பகம்மாள்.
அனைவரும் அமைதியானார்கள்.
சாப்பிட்டுமுடிக்கும் வரையில் அமைதியாக இருந்த பானு,
" ரிஷி இரவு ஆகிவிட்டது, ப்ரியாவை தனியாக ட்ரைவரை நம்பி அனுப்பமுடியாது. கண்டிப்பா போயே தீருவேன் என்று நிற்கிறாள். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அவளை வீட்டில் விட்டுவிடுங்கள். ப்ரியா சீக்கிரம் கிளம்பு " என்றாள் பானு.
அபிக்கு ரிஷி விட்ட டோஸில் வந்த கோபம் இல்லை, நிஜமாகவே அவளுக்கு கோபம் வந்தது.
" ஏன் அவர் போகவேண்டும் ?" என்றாள் வெடுக்கென்று.
" அபி அவர் போவதில் உனக்கென்ன ?" என்றாள் பானு.
" யாரை சொல்கிறீர்கள் சின்னத்தானை என்று நினைத்துவிட்டேன், சாரி நீங்கள் ராஜ் அத்தானை கூறினீர்களா ? " என்றாள் அபி கூலாக.
" ஏன் உனக்கு காது கேட்கவில்லையா ? நான் ரிஷி என்று கூறினேன் " என்றாள் பானு.
" ஓஒ அப்படியென்றால் உங்களுக்கு கண் தெரியவில்லை போல, நீங்கள் சொல்லும் ரிஷி நேற்றுதான் என் கழுத்தில் தாலி கட்டினார், இதோ இதுதான் அது. அதனால் தான் அவர் ஏன் போகவேண்டும் என்று நான் கேட்டேன் " என்றாள் அபி விடாமல்.
" அக்கா அவளிடம் என்ன சும்மா பேசிகிட்டு, ரிஷி அத்தான் வாங்க எனக்கு நேரமாகிறது" என்றாள் ப்ரியா.
ரிஷி கையை கட்டிக்கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
" என்ன சும்மா பேசுகிறேன்னா ? அதை உங்கள் அக்காவை பேச சொல்லுங்கள் பார்ப்போம். இதே ரிஷியைத்தான் பட்டப்பகலில் என்னை காரில் அழைத்துபோகக்கூடாது என்று கூறினார்கள் உங்கள் அக்கா. ஏன்னா உங்களுக்கு நிச்சயம் ஆனவர் என்று. இன்று அவருக்கும் எனக்கும் கல்யாணமே ஆகிவிட்டது. நான் எப்படி அனுமதிப்பேன் இந்த வேளையில் அவரை உங்களுடன், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன். அந்த அளவுக்கு நான் பத்தாம்பசிலி இல்லை. ஆனாலும் நந்து ஏற்கனவே ரொம்ப டயர்ட்டா இருக்கிறார். இப்போது அவரால் அவ்வளவு தூரம் ட்ரைவ் செய்துகொள்ளமாட்டார், ஸோ ப்ளீஸ் வேறு யாரையாவது பாருங்கள்." என்றாள் அபி ரிஷி பக்கம் திரும்பி.
" அபி திஸ் இஸ் டூ மச், அவர் எனக்கும் அத்தான்தான்" என்றாள் ப்ரியா கோபத்தில்.
" அப்கோர்ஸ் உனக்கும் அவர் அத்தான்தான், எனக்கு அத்தான் ப்ளஸ் கணவர். அதுமட்டும் இல்லாமல் இவரை விட ராஜ் அத்தான் தான் உனக்கு மிகவும் உரிமை உள்ள சொந்தம். அவரை அழைத்துப்போ இல்லையென்றால் இன்று இங்கேயே இருந்துவிட்டு காலையில் பயப்படாமல் கிளம்பி போ " என்றாள் அபி.
" அவர் குழந்தையை தூங்கவைத்துக்கொண்டிருக்கிறார், அவரால் இப்போது வரமுடியாது " என்றாள் பானு இடையில்.
" அதான் அடுத்த ஆப்சனையும் சொன்னேனே, இது இல்லையென்றால் அது. மூன்றாவது ஆப்சன் கிடையாது, நந்து போகலாம் " என்றாள் ரிஷியை பார்த்து.
அவன் எழும்ப ப்ரியா ஏதோ கூற வந்தாள்.
" அடடா எதுக்கு ஆளாளுக்கு பேசிக்கொண்டு, பானு அவன் புதிதாக திருமணமானவன், ஒரு 15 நாளாவது இரவு வெளியே சுத்தக்கூடாது என்று தெரியாதா ? எங்கள் காலத்தில் 40 நாட்கள் வெளியவே அனுப்பமாட்டார்கள். உங்கள் அவசர உலகில் இதையாவது கடைபிடிக்க கூடாதா ? " என்றார் கற்பகம்மாள் சலிப்பாக.
" தனக்கு நிச்சயமானவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்ற வேதனையே அவளால் தாங்க முடியவில்லை, அவர் இன்னொருபெண்ணுடன் தனி அறையில் இருப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். அதை பார்க்க முடியாமல் தான் இரவு இங்கே தங்க மறுக்கிறாள். அது புரியாமல் ஆளாளுக்கு இப்படி பேசினால் எப்படி ? என்றாள் பானு வேதனை குரலில்.
" வாஸ்தவம்தான் மருமகளே, இவ்வளவு வேதனை படுபவள் கொஞ்ச நாள் தள்ளி இருந்து எல்லாவற்றையும் மறக்க முயற்சி செய்யலாம் இல்லையா ?" என்றார் கற்பகம்மாள்.
அதன் பிறகு எதையும் கேட்கவோ, பார்க்கவோ அபி அங்கே நிற்கவில்லை, ரிஷியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அறைக்குள் சென்றவள் அவன் கையை விட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தாள், கோபத்தில் தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு தன் கோபத்தை அதனிடம் காட்டிக்கொண்டு இருந்தாள்.
எதிர்புறம் இருந்த சோபாவில் இருந்துகொண்டு ரிஷி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான். அவனை எரிப்பதுபோல பார்த்தவள், கையில் இருந்த தலையணை அவன் மேல் எறிந்துவிட்டு ஆத்திரத்துடன் அவனை நோக்கி போனாள்.
" என்ன இளிப்பு, பேசு பேசு என்று ஏத்திவிட்டியே ? கடைசியில் அந்த ப்ரியா போட்டாள் பார் ஒரு போடு, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறாளாம், அவளை அப்படி தவிக்கவிட்டுவிட்டு உனக்கு இங்கே கடமை கேட்கிறதா ?" என்றாள் அபி.
ரிஷி பதில் பேச முயற்சிக்கும் போது அவன் போன் அடித்தது, கற்பகம்மாள் அழைத்திருந்தார். உடனே அவனை தன் அறைக்கு வர சொன்னார்.
" இதோ வருகிறேன்" என்று அபியிடம் கூறிவிட்டு தன் தாயை பார்க்க சென்றான்.
அங்கே " ரிஷி என்ன வேலை பார்த்தாய், என்ன காரியம் செய்ய தூண்டினாய் அம்முவை . அம்மு மென்மையானவள், உன் அண்ணி பானு பேச்சிலே கத்தி வைப்பவள், அவளிடம் போய் அபியை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாய், அவளும் நீ இருக்கும் தைரியத்தில் வாயுக்கு வாய் கொடுக்கிறாள், நாம் அனைவரும் இருந்ததால் பானு இப்படி பேசினாள். என்றாவது அம்மு தனியே மாட்டினாள் பானு இன்று மாதிரி பேசமாட்டாள், ரொம்ப கீழ் இறங்கி பேசிவிடுவாள். அன்று அம்முவின் நிலைமையை யோசித்தாயா ? " என்றார் கற்பகம்மாள்.
"அதற்காக என்றுமே அம்மு இவர்களுக்கு பயந்து சாகவேண்டுமா ? வீரனுக்கு ஒருநாள் சாவு, கோழைக்கு தினம் தினம் சாவு. " என்றான் ரிஷி.
" ஏண்டா உனக்கு வேற பேச்சே தெரியாதா ? சாவு சாவுன்னு பேசிகிட்டு, கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அதிலும் உன் அண்ணிகளின் கண் சொல்லவே வேண்டாம். என்னமோ செய் ஆனால் அம்முவுக்கு இதனால் என்றாவது பிரச்சனை வந்தால் தொலைச்சிட்டேன் உன்னை." என்றார் அவர்.
" அதெல்லாம் ஒன்றும் ஆகாது, அவளால் சமாளிக்க முடியவில்லை என்று வரும்போது நான் இருக்கிறேன் அவளுக்கு. " என்றான் ரிஷி.
" நீ எட்டடி பாய்ந்தால் உன் அண்ணி 64 அடி பாய்வாள், கடைசியில் அவள் தங்கையின் வருத்தில் வந்து முடித்தாள் பார்த்தாயா ? இதற்காக கண்டிப்பாக அம்மு உன்னை வறுத்தெடுக்காமல் விடமாட்டாள், நீ எப்போதுதான் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறாயோ " என்றார் அவர்.
" சீக்கிரம் வைக்கிறேன் " என்று ரிஷி தாயிடம் கூறிவிட்டு கிளம்பும் போது நின்று திரும்பி
"இதெல்லாம் அநியாயம் அம்மா, அவளையே பற்றி நினைக்கிறீர்கள் ? என்னை பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா ? " என்றான் வருத்தம் போல.
" யாரை உன்னை பற்றியா கவலைப்படவேண்டும், போடா நீ சரியான ரவுடி பய, காணாத குறைக்கு உன் பொண்டாட்டியையும் ரவுடியாக மாற்றிக்கொண்டிருக்கிறாய் உனக்கு துணையாக. வேறன்ன? " என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
மகனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.
அங்கே அபி ரிஷியின் வரவுக்காக காத்திருந்து போரடித்து ஒரு படத்தை ஓடவிட்டு அதில் மூழ்கிவிட்டாள்.
ரிஷி உள்ளே சென்றவன் அபி எதையாவது கேட்பாள் என்று எண்ணி இருந்து பார்த்தான், அவள் படம் பார்ப்பதிலேயே கவனமாக இருக்க அவன் போய் கட்டிலில் படுத்தான்.
படத்தை பாஸ் செய்தவள் " ஹலோ என்ன ? இங்கே படுத்தமாதிரி இருக்கு? சார் என்னவோ கூறினீர்கள், பனிஷ்மென்ட் அது இது என்று. ஒழுங்கா மரியாதையா அங்கே எழுந்து போங்க " என்றாள் சோபாவை கைகாட்டியபடி.
" அதான் பனிஷ்மென்ட் எல்லாம் தேவைப்படாதபடிக்கு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினாயே! ஐ அம் ஹப்பி, ஸோ பனிஷ்மென்ட் கட் " என்றான் ரிஷி அமர்ந்திருக்கும் அவள் இடுப்பை சுற்றி கையை போட்டபடி.
" போதும் கையை எடு, எங்கேயும் படு, நான் படம் பார்க்க போகிறேன் தொந்திரவு செய்யாதே " என்று மறுபடியும் படத்தை ஓடவிட்டாள், அதன் மியூசிக் பயங்கரமாக இருக்க
" என்ன படம் ?" என்றான்.
" திகில் படம், இங்கிலிஷ் மூவி பயங்கரமா இருக்கும், பார்க்கிறியா ? " என்றாள் உற்சாகமாக.
" ஏன் தனியே பார்க்க பயமா இருக்கா ? " என்றான் அவள் மடியில் தலைவைத்துக்கொண்டு.
" யாருக்கு எனக்கு பயமா ? ஏஹே நானெல்லாம் தனியாக நாலு பேய்ப்படம் பார்ப்பேனாக்கும் " என்றாள் அவள்.
" நீ பார்ப்ப, உன் படத்தை நீயே பார்ப்பதற்கென்ன ?" என்றான் அவன் கிண்டலாக.
அவனை முறைத்தவள் அவனை தன் மடியில் இருந்து தள்ளிவிட்டாள்.
"போய் தொலை, என்னை பார்த்தால் உனக்கு பேயை பார்ப்பது போல இருக்கா ?" என்று படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் ரிஷி கண்ணயணர்ந்து விட்டான். அபி அவன் வயிற்றில் தலைவைத்து படுத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் " ஆஆ " என்று ஒரு அலறல் சத்தம் கேட்க ரிஷி தூக்கத்தில் பதறி விழித்தான்.
" அம்மு என்னாச்சு ? அம்மு " என்றான் அழுத்தமாக.
அபிதான் அலறிக்கொண்டு கட்டிலில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருந்தாள்.
" அம்மு " என்று அவன் அவளை உலுக்க
அசடு வழிய அபி சிரித்தாள்.." படத்தில் இப்போதுதான் பேயின் இன்றோடக்ஷன், பயங்கரமா இருந்ததா அதான் கத்திவிட்டேன்."என்றாள் அபி
தலையில் அடித்துக்கொண்டவன் குடிக்க தண்ணீரை எடுத்து கொடுத்தான். தண்ணீரை குடித்துவிட்டு அவனிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் ரெமோர்ட்டை கையில் எடுத்தாள்.
" போட்டேன்னா பாரு, கழுதை அடங்கிறியா ? இப்போதுதான் ஊரையே எழுப்புற மாதிரி கத்திட்டு இப்போ மறுபடியும் அதையே பார்க்கப்போறியா ? பேசாமல் தூங்கு " என்று அதட்டினான்.
" சின்னத்தான் படம் இனிதான் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும், பிளாஷ் பேக் எல்லாம் வரும், பார்க்கவிட்டேன்" என்றாள் கெஞ்சலாக.
" நீ திருந்தவே மாட்டியா ? உனக்கு எப்போதும் ராத்திரி படம் பார்ப்பது வேலையா போயிட்டு, என்னமோ செய் ஆனால் இனி ஒருமுறை அலறின கொன்னுட்டேன், ராத்திரி பார்க்கும் படத்தை பாரேன் " என்றவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தான்.
அபி மெதுவாக அவனின் தோளில் தட்டினாள்.
" என்னடி வேணும் உனக்கு, உன்னை தண்ணீரில் விரட்டின எனக்கே இவ்வளவு டயர்ட்டா இருக்கு. அவ்வளவு நேரம் தண்ணீரிலேயே மிதந்த, உனக்கு டயர்ட்டா இல்லையா ? " என்று திரும்பினான்.
" நல்ல அத்தான் இல்ல, என் செல்லம் இல்ல, கொஞ்ச நேரம் எனக்கு கம்பெனி தாயேன். " என்றாள் அவன் கன்னத்தை கிள்ளியபடி.
" இதுவேறையா, முடியாது என்றால் விடவா போற. சரி வா " என்றான் எழுந்து உட்கார்ந்து கட்டிலில் சாய்ந்துகொண்டு.
அவன் கையின் வளைவுக்குள் சென்றவள் அவன் தோளில் சாய்ந்துகொண்டு, அவனின் டீஷர்ட்டின் பிடித்துக்கொண்டு மறுபடியும் அதே காட்சியை ஓடவிட்டாள். பயங்கர உருவம் ஒன்று வர முகத்தை அவன் மார்பில் புதைத்தாள், ஆனாலும் விடாமல் படத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ரிஷியோ அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
" நேஹா " என்றான் அவன் குரல் மாறியிருந்தது ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
"ஏய் நேஹா" என்றான் மறுபடியும்.
" ச்சு என்ன ?" என்றாள் திரும்பாமல்.
" நேஹா " என்றான் மறுபடியும்.
அபி திரும்பாமலே அவன் வாயை தன் கையால் மூடினாள்.
" பேசாமல் இரு நந்து " என்று.
தன் வாயை மூடிய அவள் கையை பிடித்து மென்மையாக முத்தமிட்டான், அவளை தன்னோடு மென்மையாக அணைத்துக்கொண்டான். அபியோ எதையும் உணராமல் அந்த கதையின் வில்லன் யாராக இருக்கும் என்ற ஆராச்சியில் மூழ்கியிருந்தாள். அது ரிஷிக்கு இன்னும் சவுகரியமாக போனது.
மெதுவாக அவளின் இடையை தன் கையால் வளைத்தவன் அவளை அப்படியே தூக்கி தன் மடிமேல் வைத்தான். இப்போது அவள் அவனை கேள்வியாக நோக்கினாள்.
"அப்படி இருக்க கஷ்டமாக இருந்தது, கை வேறு வலித்தது அதான் " என்றான் ரிஷி. அபி நம்பினாலோ என்னவோ ஆனால் அவள் அவனை விலக்கவில்லை.
அபி படத்தில் மூழ்க, ரிஷி அவளின் கூந்தலின் வாசத்தில் மூழ்கினான். அவனுடைய அசைவு அவளை திரும்ப செய்தது.
" என்ன நந்து ? என்ன வேண்டும் உனக்கு. என் முடியை சிக்காக்கிவிடாதே, அப்புறம் எனக்கு அதை சரிசெய்ய போதும் போதும் என்று ஆகிவிடும். " என்றாள் அவனிடமிருந்து தன் கூந்தலை விலக்கியபடி.
அவன் அவளை இமைக்காமல் பார்க்க
" வாட் பேபி " என்றாள் அவன் கன்னத்தை தடவியபடி.
அவன் பதில் சொல்லாமல் கன்னத்தை காட்டினான்.
" ஓஒ படத்தில் வந்த கிஸ் ஸீனை பார்த்து உனக்கும் ஆசை வந்துவிட்டது போல, சின்னப்பையன் போல. ஸோ ஸ்விட். இந்தா" என்றவள் அவன் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள்.
" கொடுத்தாச்சு, இனி என்னை தொந்திரவு பண்ணக்கூடாது சரியா, ஏன்னா ஒரு த்ரில்லர் படத்தை பார்த்துவிட்டு அதன் முடிவு தெரியவில்லையென்றால் தலையே வெடித்துவிடும். இது இங்கிலிஷ் படம், கிஸ் ஸீன் அடிக்கடிவரும் அதற்காக சும்மா சும்மா என்னை தொந்திரவு பண்ணாதே " என்றாள்.
" ஓகே, அப்படின்னா எனக்கு நீயே ஷேகன் கொடு "என்றான் கள்ளச்சிரிப்புடன்.
" அவ்வளவுதானே இந்தா " என்று அவன் கையை குலுக்கினாள்.
" இல்ல பாரின் டைப்ல " என்றான் கையை இழுத்துக்கொண்டு.
" போடா எருமை " என்றாள் அவள்
" வாயிலேயே போடுவேன், ஒழுங்கா கேட்டதை நீயே தா, இல்ல நான் இந்த படத்தில் வருவது போல ஷேகன் கொடுத்துவிடுவேன் "என்று ரிஷி மிரட்ட.
" சை இந்த வீட்டில் எனக்கு பிடித்த ஒரு படத்தை நிம்மதியாக பார்க்கமுடிகிறதா ? என்று அவனை விட்டு விலகியவள் அவன் உதட்டில் தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்.
" போதுமா, போ போய் தூங்கு, உன் கம்பெனி எனக்கு வேண்டாம், நானே தனியாக பார்த்துக்கொள்வேன் " என்று தன் இடத்தில் வந்து தலையணையை மாற்றிப்போட்டுக்கொண்டு படத்தை பார்க்க தொடங்கினாள்.
" இருடி, படமா பார்க்கிற, நாளைக்கு இந்த டீவியை இங்கிருந்து எடுத்துவிடுகிறேன் " என்றான் ரிஷி
"அப்படியா?, அப்புறம் ஐயா எப்படி விடிய விடிய ஸ்போர்ட் டிவி பார்ப்பிங்க, கீழே ஹாலில் போயா?" என்றாள் அபி.
" கொழுப்பு பிடிச்சவளே " என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான்.
********
" நந்துவாம் நந்து, எவ்வளவு திமிர் அந்த அபிக்கு, நேற்றுவரை தரைக்குள் புகுந்துவிடுவாள் போல அமைதியாக இருந்தவள் இன்று சீறும் பெண் சிங்கமாக சிலிர்த்து நிற்கிறாள். அவளை பார்க்கும் போதேல்லாம் எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. ஒரு தாலி கழுத்தில் ஏறியதும் அவளின் வெளித்தோற்றம் அப்படியே மாறியதும் இல்லாமல், உன்னையே எதிர்த்து பேசும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதே அவளுக்கு " என்று பொரிந்தாள் ப்ரியா தன் அக்காவிடம்.
" என்ன செய்வது அவள் கழுத்தில் ஏறிய தாலியை கட்டியவன் அப்படி. பவர்புல் மேன். ஆனால் நீதான் அவன் ஆண்மை இல்லாதவன் அது இது என்று இருந்த கடைசி வாய்ப்பையும் விட்டுட்டு வந்துட்ட. அவனை பார்த்தால் நீ சொன்னது போல தெரியவில்லை " என்று தோளை குலுக்கினாள் பானு.
" ச்சு, அவனே அதை சொன்னான், பிறகு நம்பாமல் இருக்கமுடியுமா ? இல்லையென்றால் இதையெல்லாம் ப்ரக்டிகலா டெஸ்ட்டா பண்ணமுடியும். ஆனால் பண்ணியிருக்கணுமோ ?" என்றாள் ப்ரியா.
" ஏய் என்னடி பேசுற " என்றாள் பானு சிரித்துக்கொண்டே.
" நீ ட்ரை பண்ணினாலும் அது நடந்திருக்காது, அந்த கிழவியின் வளர்ப்பு அப்படி. அவன் என்ன துள்ளினாலும் கிழவியின் ஒரு பார்வையில் அடங்கிவிடுவான் " என்றாள் பானு.
" ஓகே விடு பாஸ்ட் இஸ் பாஸ்ட், இனி அடுத்ததை பார்ப்போம், எனக்கு அவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்க கூடாது அதற்காக நான் ஒரு ஐடியா பண்ணிருக்கிறேன் " என்று தனது மொக்க ஐடியாவை கூறினாள்.
பானுவும் அதேயேதான் கூறினாள் " உன் ஐடியா அதர பழசு, மொக்கையா இருக்கு "என்றாள்.
" அக்கா ஒரு கட்டிடத்தை இடிக்கனும் என்றால் jcb யை வைத்து இடித்து தள்ளிவிட்டு போயிட்டே இருக்கலாம், ஆனால் இங்கு நாம் நொறுக்க வேண்டியது ஒரு கணவன் மனைவி உறவை. அடியில் இருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு செங்கலாகத்தான் உருவ வேண்டும் " என்றாள் ப்ரியா.
தங்கையின் ஐடியா சக்ஸஸ் ஆக வேண்டிக்கொண்டாள் அக்கா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top