Ullamutham Kannamma - 1

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே ,
கதையின் முதல் பதிவை போட்டு விட்டேன் படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.
 
Last edited:

Kundavi

Writers Team
Tamil Novel Writer
1526269320208.png1526269339305.png

UK - 1

1526269418893.png





பக்கத்துக்கு கோவிலில் ஒலித்த விநாயகர் வழிபாடு பாடலில் கண்
திறந்தாள் சுமி. ஏழுந்ததும் மனதின் ஒட்டத்தை கட்டுப்படுத்த
முடியவில்லைஅவளால், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து
இந்தவழிபாட்டை கேட்க முடியாது.அது மட்டுமா இந்த வீட்டையே மறக்க வேண்டுமாம் .... அப்படி அவன் சொல்லும் போது "முடியாது" என்று சொல்லிவிட்டு வெளியேர நினைத்தால்... அனால் நினைத்தது நடந்து விட்டால் கடவுளையே நாம் மறந்துவிடுவோமே. தன் விதியைநினைத்து பெருமூச்செறிந்தி காலை கடனை முடித்தவாறு வேலைக்கு சென்றாள்.
சுமி பக்கத்து மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்புக்கு இயற்பியல் ஏடுக்கும்ஆசிரியை.

"கண்டிப்பா நீ வேலைய விட்டு நீங்க போகிறாயா....."
தலைமை ஆசிரியர் கேட்டகேள்விக்கு "ஆம்" என்று மட்டும் சொல்லி கடிதத்தை நீட்டினாள்.

பின், அவரும் பார்த்துக்கொண்டு தான்இருக்கிறார், அவள் பாட்டிஇறந்த பின்னர் இந்த அமைதிமட்டும்தான் அவள் முகத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளன.


வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது தன் வீட்டு முன்னம் கார் நிற்பதே வைத்து அது யாரோடாது என்று தெரிந்துகோபத்தில் முகம் சிவக்க வீட்டுக்கு செல்ல முனைந்தால், அப்பொழுது காரில் இருந்துவந்த டிரைவர் "அம்மா சார் உங்களை உடனே அழைத்துவர சொன்னார்" என்றான். அதை கேட்டு முகம் சிவக்க"முடியாது" என்று உள்ளேசென்று கதவை சாதிவிட்டால். தன் பாட்டியின் படம் முன்னம்மண்டியிட்டு அழுது கொண்டு இருந்தாள்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு நேரம் அழுதாலோ களைப்பில் உறங்கியவள் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள். அவளுக்கு தெரிந்தது அது யாரு என்று அதனால் பதட்டம்படாமல் கதவை திறந்தவளின் கழுத்தை வலிய கரம் ஒன்று பிடித்து சுவச்சோடு பிடுத்து இறுகியது. அப்பொழுது அவன் கண்களை கண்ட பெண் அவள் நடுங்கி நின்றாள். அவள் கண்களில் இருந்து வந்த பயத்தில் தன் பிடியை தளரத்தினான் அக்காளையன்.
அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்து தன் தலை முடியை கோதி தன் கோபதை கட்டு படுத்தி கொண்டு அவளை பார்த்து
"நீ இப்பொழுது என்னுடன் கிளம்பி வர” என கட்டளையை இட்டான்.

அவனை சலனமே அல்லாது ஒரு பார்வை பார்த்து கொண்டு , "முடியாது" என்று கூறினாள். கோபதில் அவள் முகத்தை திருப்பி "இந்த முடியாது என்ற சொல்லை ஒரு வருடத்துக்கு உன் வாயில் இருந்து வரக்கூடாது" என்று சொல்லி அவள் முகத்தில் இருந்து கையே எடுத்து ஒரு புன்னகை முகம் கொண்டு தன் கையோடு கொண்டு வந்த பத்திரதை நீட்டினான். அதை கண்டு முகம் இறுக நின்றாள் சுமி.

"இந்த பத்திரத்தில் என்னுடன் ஒரு வருடம் மனைவியாக வாழ ஒத்துக்கொள்வதாக சம்மதம் என்று கையோப்பம் போட்டதாக நியாபகம்" என்றான்.

ஆம் , போட்டாள் அப்பொழுது அவளுக்கு அவள் பாட்டி உயிர் தான் முக்கியமாக தெரிந்தது. அவனையும் குறை சொல்ல முடியாது மருத்துவ தேவைக்கு அதிகமாகவே பணம் தந்தான், அது மட்டுமா இந்த பத்திரம் ஒன்று அவள் அப்போ யோசித்தது, இருந்தும் பாட்டி உயிர் கண்ணுக்கு தெரியவே அவள் அதில் கையெழுத்து போட்டாள்.


"என்ன உன் அத்தான் நினைவு வந்தது போல" என்று பாரதி சொல்லவும்

அப்பொழுதுதான் தனக்கு அப்படி ஒரு சொந்தம் இருப்பதும் அவள் நினைவுக்கு வந்தது போல் ஒரு விரக்தி புன்னகை முகத்தில் தோன்றி மறைந்தது. இந்த நிலையில் அவளுக்கு அவனுடன் திருமணம் வேறு பேசிய போது

"என் சுமி நான் அவளை வாழ வைப்பான்" என்று வசனம் பேசினான்.

அவளுக்கும் அவனை கட்டுவதில் எந்த விதமான குறையும் இல்லை, அது மட்டும்அல்லாது பாட்டியோட இருக்கலாம். அவனுக்கும் சொந்தம் யாரும் இல்லை, பாட்டியோட உறவு என்றதால் கட்டிக்க ஒத்துக்கொண்டாள். ஆனா நடந்தது வேறு துபாயில் வேலை வாய்ப்பு இருக்கிறது, என் நண்பனுடன் தொழில் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று அவன் சொல்லும் போது

"சுமிய கல்யாணம் செய்து கொண்டு போ"என பாட்டி சொன்னபோது, அவன் சரி என்று தலை ஆட்டவும் இவள்தான் வேண்டாம் வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள்.

பின், நிகழ் காலத்துக்கு வந்தவள் அவனிடம் திரும்பி "இன்று மாலை நான் வருகிறேன்" என்றாள். அவன் நம்பாத பார்வை பாக்கவும் " வீட்டை காலி செய்துவிட்டு வர வேண்டும்" என்றாள். அவன் கூர்மையான பார்வையை அவளிடம் செலுத்தி சென்றான். அவன் பார்வையில் நீ கண்டிப்பாக வர என்ற சேதி இருந்ததை அவள் அறியாமல் இல்லை.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
மாலை அவனே வந்தான் அவளை கூட்டி செல்ல. அவனிடம் எதுவும் பேசாது காரில் பின் இருக்கையில் அமர்ந்தாள், தன் பாட்டியோடு வாழ்ந்த வீட்டை பார்க்க அவளுக்கு தொண்டை அடைய்த்தது ,அவளுடைய இந்த நிலைய அவன் ஒருவாறு யூகிதிருந்தான் தன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம்நீட்டினான். அவனை ஒரு தீபார்வை பார்த்து கண்முடி சாய்ந்து கொண்டாள். அவன் ஒரு தோள் அசைப்போடு காரை ஓடினான்.

அவளுக்குதான் கோபம் அடங்காது இருந்தது. இவனால் தான் தன் வாழ்க்கை இப்படி ஆனது என்ற கோபம். அவள் பாட்டிக்கு இப்படி உடம்பு சரி இல்லாமல் போகும் என்று அவளும் எதிர்பாராத ஒன்று. அப்பொழுதுதான் பாட்டி வேலை பார்க்கும் வீட்டு முதலாளி வருவதாக தகவல் வந்தது. அன்று பள்ளிக்கு விடுப்பு சொல்லிட்டு பாட்டியோடு இருந்தாள். ஒரு வாரம் கழித்து முந்துன நாள்தான் வேலைக்கு போனாள், இன்று மறுபடியும் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். பாட்டி பள்ளிக்கு போய்வா என்றுதான் சொன்னார் ஆனால் இவள்தான் கேட்கவில்லை.

"இல்ல பாட்டி உங்க முதலாளி அம்மா ரொம்ப தங்கமானவுங்க அப்படினு சொன்ங்க நான் கண்டிப்பா அவர்களை பார்க்கணும்" என்று கூறி விட்டாள்.

தன் 16ம் வயதில் ஒரு கார் விபத்தில் தன் பெற்றோரை இழந்து நின்ற சுமியை பார்க்க பாவமாக இருக்க தன் கூட வருமாறு கூப்பிட்டார். அவளுக்கு இந்த பாட்டியை தன் அம்மாவோடு பார்த்த ஞாபகம் இருந்தும் போகவா வேண்டாமா என்று யோசித்தாள். அவர் தான்
"நான் உன் அம்மா வழி சொந்தம் என்னுடன் வருவதா இருந்தா வா
கண்ணு"என்றார். அவளுக்கும் அது சரி என்று பட பாட்டியோடு போனாள்.


படிப்புக்கு அவளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அவள் அப்பா அவள் பெயரில் ஒரு பெரிய தொகை போட்டு வச்சிருந்தார் அது அவளுடைய
படிப்புக்கு போதுமான அளவுக்கு அதிகமாகவே இருந்து.


படிப்பு முடிந்ததும் பள்ளியில் வேலை கிடையித்த போது பாட்டியிடம் " நீ இனி போக வேண்டாம் பாட்டி வேலைக்கு என்னுடன் இரு" என்று சொல்லி பார்த்தாள்.

ஆனால் பாட்டி தான் "இல்ல கண்ணு அங்கன அம்மா மட்டும் தனியே இருப்பாங்க, நா போனா கொஞ்சம் அவுங்களுக்கு நல்லாயிருக்கும், கவி தம்பி தொழிலை பார்க்க இங்கேயும், வெளிநாட்டுக்கும் அலையுது அதான்" அப்டினு சொல்லிரும். பிறகு அவளும் எதுவும் சொல்ல மாட்டாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு தன் சுயம் வந்தவள் யாரு என்று கேட்டாள், பதில் வராது போகவே கதவை திறந்து பார்த்தாள் அங்கே ஆறடிக்கு உயர்ந்த ஒரு ஆடவன் நிற்பதை அவள் ஏதிர்பார்க்கவிலை. "யாரு" என்று கண்களில் கேள்வியோடு அவனை பார்த்தாள், சத்தம் கேட்டு வந்த பாட்டி

"தம்பி நீங்களா வாங்க"என்று வரவேற்று சுமியிடம் திரும்பி "கவி தம்பி" என்றார். அவளும் வரவேற்புகாக ஒரு புன்னகை செலுத்தி அவனுக்கு காபி போட உள்ளே சென்று விட்டாள். அவன் வந்த இடத்தில் இப்படியொரு நங்கையை சற்றும் ஏதிர்பார்க்கவிலை. தன் சுயம் வர சிறுது நேரம் ஆனது.




உள்ளம் தொடரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top