Thangammai - Precap 9

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“நீ என்னவோ பண்ணு போ..” என்று தீனா சொல்ல,

“நான் தான் வர்றேன் சொல்றேனே..” என்று தங்கம்மையும் சொல்ல,

“நான் வர்றப்போ நீ இல்லைதானே..” என்றான் திரும்ப முதலில் இருந்து..

“ஷ்..!!!” என்றவள், பதிலே சொல்லாது அமைதியாய் இருக்க, “அப்போ பேசவும் மாட்டியா???!!” என்று தீனா கேட்கவும்,

“நீங்க வைங்க நான் வர்றேன்..” என்றுவிட்டாள்.

ஆனால் வந்ததுமே கிளம்புகிறேன் என்றால் அது நன்றாகவும் இருக்குமா என்ன??!! சொன்னால் புரிந்துகொள்வார்கள் தான்.. இருந்தாலும் தங்கம்மைக்கு சங்கடமாய் இருந்தது..

மற்ற கணவன் மனைவி போல் ஓர் இயல்பான வாழ்க்கை புரிதல் இருந்திருந்தால், “நீங்க இங்க வாங்க..” என்றோ, இல்லை “நாளைக்கு காலைல வர்றேன்..” என்று உரிமையாய் சொல்லியிருக்கலாம்..

----------------------------

“நீங்க பண்றது உங்களுக்கே நல்லாருக்கா??!!” என்று தங்கம்மை கேட்க,

“ஏன் இப்போ நல்லா இல்லாம என்ன பண்ணிட்டேன் நான்..” என்றான் இன்னும் முறைப்பு குறையாது.

“ஒன்னும் பண்ணலை தான் ஆனா.. இதெல்லாம் உங்களுக்கே ஒரு ரெஸ்ட்லெஸ்னஸ் கொடுக்குது தானே.. ஒன்னு இந்த எக்ஸ்ட்ரீம் இல்லை அந்த எக்ஸ்ட்ரீம்..” என,

“எது எது எந்த எக்ஸ்ட்ரீம்னு நீயே சொல்லிடு.. என்னால இப்போ ரொம்ப எல்லாம் யோசிக்க முடியலை..” என்றவன் அப்படியே படுத்தும்கொள்ள,

“கண்ணை தொறந்து என்னை பாருங்க..” என்றாள் தங்கம்மை..

“முடியாது போ.. எவ்வளோ ஆசையா வந்தேன் ..” என்று அவன் பிடிவாதம் செய்ய,



-------------------

இப்படியாகும் என்று யாரும் நினைக்கவில்லை..வீட்டினர் அனைவருக்குமே மனது சங்கடமாய் போய்விட்டது. இன்னமும் இரண்டு நாளில் தங்கம்மை சென்னை கிளம்புவதாய் இருக்க, செவ்வந்தி இப்படி கீழே விழுந்து காலை உடைப்பார் என்று யாரும் எண்ணவில்லை..

தீனா அமைதியாய் இருக்க, தங்கம்மையோ “ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க.. கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..” என,

“ம்ம்.. நீ எப்படி சமாளிப்ப??!!” என்றான்.

அப்போது தான் அவளுக்கு முழுதாய் விளங்கியது. சென்னை செல்ல முடியாது என்று.. ரோஜா கை குழந்தையை வைத்துக்கொண்டு அவளாய் எதுவும் செய்யவும் முடியாது.. செவ்வந்தியால் இப்போது எழுந்து நடக்கவும் முடியாது. ஆக தங்கம்மை இங்கே தான் இருக்கவேண்டும் என்று..

முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளாது “நான் பார்த்துப்பேன்..” என,

“ம்ம் கூட ஆள் போட்டுக்கலாம்.. நீ ரொம்ப எல்லாம் எதுவும் இழுத்துப் போட்டுக்காத..” என்றவன்,

பின் என்ன நினைத்தானோ “சாரி தங்கம்மை..” என்றான்..

-------
 

Joher

Well-Known Member
Tks சரயு........

என்னையா இப்படி பண்ணிட்டிங்க........ தங்கத்தை புடுச்சிவச்சுட்டீங்களே........
so sad........

அதானே வந்துட்டான்னு தெரிந்தால் வராமல் இருப்பாங்களா என்ன.......
வர்றப்போ இல்லையாம்..........
தீனாக்கு கோபமா...... அப்படியே விட்டுடு......... ரெண்டு நாளில் சரியா போயிடுவான் :p:p

போடா இப்போவும் தனியாத்தான் போகணும்........:p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
என்னப்பா தீனதயாளன்,
உன்னோட நிலைமை இப்படி
ஆகிடுச்சே?
உன் கூட தங்கம்மையைக்
கூட்டிட்டுப் போகலாமுன்னு
நினச்சா அது நடக்கலையே,
தீனாத் தம்பி?

இப்போத்தான் நீங்க கீழே
விழுந்து புதையல் எடுக்கணுமா,
செவ்வந்தியம்மா?
கல்யாணம் பண்ணி வைச்சால்
மட்டும் போதுமா?
பையனோடு மருமகளை
சேர்ந்து வாழ விடுங்கம்மா
செவ்வந்தியம்மா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top