SVS - 09

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
09


விக்ரமுடன் தன் மனம் குறித்து பேசியதில் சற்று ஆசுவாசப்பட்ட ஷிகா ஒரு நிறைவான மனதுடனே மருத்துவமனை வாயிலுக்கு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் அதில் ஏறி அமர்ந்துகொண்டு முறுக்கி விட்டாள்.

அவள் மனம் போலவே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த சிறுவர் பூங்காவினுள் நுழைந்தது தன் இயக்கத்தை நிறுத்தியது.

கைகள் அதன்பாட்டுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாலும் மனம் தன்னவனின் நினைவிலே மிதந்து கொண்டிருக்க அவன் நினைவு கொடுத்த சுகமான சுமையை மனதில் சுமந்துகொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள் தான் நின்ற இடத்தினை பார்த்து அதிசயித்து தான் போனாள்.

மனம் எப்போதெல்லாம் மிகையான சோகத்திலும் சந்தோஷத்திலும் இருக்கின்றதோ அப்போதெல்லாம் அவள் தஞ்சமடைவது இந்த சிறுவர் பூங்காவில் தான். மழலைகளின் மழலை மொழியில் தன் துக்கம் குறைவதையும் கண்டாள். அவர்களின் சந்தோஷ பீறிடலில் தன் இன்பம் பெருகுவதையும் கண்டாள்.

இன்று மனம் சற்று மகிழ்வில் திளைத்திருக்க தன் மனதின் எண்ணம் அறிந்து தன் கைகள் தன்னை சரியான இடம் நோக்கி கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்ற நினைவில் இதழ்களில் மெல்லிய புன்னகையை தவழ விட்டவள் வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டு சிறுவர்கள் கலகலப்பாய் சுற்றி திரிவதை வேடிக்கை பார்க்கலானாள்.


*****


“ஹர்ஷு கண்ணா சொன்னா கேட்கனும் பேபி...” மருமகனிடம் பொறுமையாய் கூறிக்கொண்டு இருந்தான் ஆர்யன்.

“முடிது மாமு... நான் போவேன்...” மூக்கை விடைக்க உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாரானான் சின்னவன்.

அதை பார்த்து தலையில் அடித்த ஆர்யன் தன் தமக்கையை பாவமாய் பார்த்து வைத்தான். தம்பியின் பார்வையில் நமுட்டு சிரிப்பு சிரித்த மீரா எனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.

அதில் பல்லை கடித்தவன் தன் மருமகன் புறம் திரும்பி அவனை பாவமாய் பார்த்து வைத்தான்.

“ஹர்ஷு கண்ணா மாமுக்கு நிறைய வேலையிருக்கு ஆபீஸ் போகணும்.. நாம வேணா நாளைக்கு போகலாம்... இன்னிக்கு நான் ஷாக்கி வாங்கி கொடுக்கட்டுமா...” ஆவலுடன் கேட்க,

மாமுவின் பதிலில் தலை சாய்த்து கன்னத்தில் கைவைத்து யோசித்த சின்னவன் என்ன நினைத்தானோ மாமவின் நெஞ்சத்தில் சப் சப்பென குத்த ஆரம்பித்தான். அது ஆறடி ஆண்மகனுக்கு தடவிக்கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தும் அழுவது போல் சின்னவன் முன்பு பாவ்லா காட்டிக்கொண்டு முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.

மாமுவின் செயலில் அடிப்பதை நிறுத்தியவன் அவன் உடல் அழுகையில் குலுங்கியது கண்டு என்ன நினைத்தானோ தன் பிஞ்சு கையால் அடித்த இடத்தை தடவிக்கொடுத்தான்.

“வலிக்குதா மாமு...” மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே...

மருமகனின் செயலில் அவன் நெஞ்சம் பாகாய் உருகித்தான் போனது. காயத்தை கொடுத்து அதற்கு மருந்தும் போட சிறு குழந்தைகளால் தான் முடியும் என்பதை உணர்ந்தவன் பாசத்துடன் அவனை இறுக தழுவிக்கொண்டான்.

“மாமுக்கு கொஞ்சம் தான் வலிச்சது....” அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“நானு...நானு...” தனக்கு முத்தமிட்ட மாமுனுக்கு தான் முத்தம் கொடுத்தவன் அவன் தோளில் சாய்ந்துகொண்டான்.

“ஹெனி... ஷாக்கி கொடுத்த டிஸ்யூம் கொடுக்க சொன்னா...” அழகாய் தன் அத்தையையும் போட்டுக்கொடுத்தான். அதை கேட்டு அப்பிடியா எனும் பாவனையில் தலையசைத்தவன் மருமகனின் முகத்தில் பரவிக்கிடக்கும் சந்தோஷத்தினை கண்டு தன் வேலையை கிடப்பில் போட்டவனாய் சின்னவனை அழைத்துக்கொண்டு அவன் செல்ல விரும்பிய பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.


****


ஸ்டாப் ரூமில் மேசையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஷாஷி. சின்ன சின்ன வேலைகள் இருப்பதால் காலையில் வீட்டில் இருந்தும் வரும்போது பெயருக்கு கொறித்து விட்டு வந்திருக்க அது இப்போது அதன் வேலையை காட்டியிருந்தது.

நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் உள்ளே சென்று நின்றுகொண்டவளுக்கு நேரம் செல்லச்செல்ல தள்ளாட்டமாய் இருந்தது. கைகால்கள் வலுவிழந்தது போல் இருக்க அதற்கு மேல் நின்றால் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் அவசரமாய் அங்கிருந்து வெளியேறியவள் வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை அழைத்து கான்டீனில் ஏதாவது வாங்கி வரும்படி கூறியவள் ஸ்டாப் ரூமிற்குள் தஞ்சமடைந்து கொண்டாள்.

அவர்களும் அவளின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து அவசரமாய் கான்டீனில் இருந்து உணவு எடுத்து வந்து கொடுக்க உண்ணமுடியாமல் சிறிது நேரம் உணவை வெறித்துப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மயக்கம் வரும் போல் இருக்கவும் உணவை உண்டு தண்ணீரை குடித்தவள் களைப்பில் கண்ணயர்ந்து விட்டாள்.

அதற்குள் சில மணித்துளிகள் கடந்திருக்க அப்போதுதான் மெதுவாய் கண்களை மலர்த்தினாள். முன்பைவிட இப்போது பரவாயில்லை என்றாலும் எழுந்தமற மனமில்லாமல் கண்களை மூடி இருந்தவாக்கிலே இருந்தாள்.

அதற்குள் அவளை தேடி வந்த அவள் வகுப்பு மாணவி ப்ரின்சி அழைப்பதாய் கூறவும் சில நொடி அசையாமல் இருந்தவள் பின் முகத்தை சீர் செய்து கொண்டு அவரை தேடிச்சென்றாள்.

மேடையில் தோரணனையாய் அமர்ந்திருந்த ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி ரோஹன் கிருஷ்ணா வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் இருக்கும் நிலையை தாண்டவும் முடியாமல் தாண்டிடாமலிருக்கவும் முடியாமல் அந்த நூலிடை இடைவெளியில் அல்லாடிக்கொண்டு இருந்தான்.

யாரை பார்க்கவே கூடாது என்று வெறுப்பை சுமந்துகொண்டு இருந்தானோ இன்று அவளே அவன் கண் முன். அவளை பார்ப்போம் என கனவிலும் நினைத்திறாதவன் அவள் எதிர்பாராமல் பார்த்ததில் திகைத்துத்தான் போனான்.

அதுவும் பெண்ணவள் தோற்றம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்தவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அதை தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் மேல் மலையளவு வெறுப்பு இருக்கின்றது தான் ஆனால் கடலளவு காதலும் இருக்கிறதல்லவா...

காதல் கொண்ட நெஞ்சம் அவளின் உருக்குலைந்த தோற்றத்தில் துடித்து தான் போனது. சிட்டுக்குருவி போல் சுற்றிதிரிந்தவளின் சிறகை தான் துடிக்க துடிக்க பிய்த்துவிட்டோமோ காலம் கடந்து தோன்றியது.

அதுவும் பெண்ணவளின் தள்ளாடல் கண்களில் இருந்த சோர்வு மெலிந்த தோற்றம் அத்தனையையும் ஒரு நொடியில் படம்பிடித்துக் கொண்டது அவன் விழிகள்.

அவள் சோர்ந்துபோய் அங்கிருந்து சென்றதை பார்த்து பின்னே செல்ல துடித்த கால்களை அடக்கமுடியாமல தவித்தவன் அவளை பார்த்ததும் எங்கோ ஓர் மூலையில் ஓடிச்சென்று மறைந்து கொண்ட வெறுப்பினை இழுத்துப்பிடித்து அவள் பின்னே செல்லாமல் தன்னை தானே தடுத்து நிறுத்திக் கொண்டான்.

காதல் மனமோ அவளை தாங்கிட துடித்தது. அவள் சோர்வு கண்டு தாயாய் மடிதாங்கிட ஏக்கம் கொண்டது. அவள் கரம்பிடித்து நான் இருக்கிறேன் என ஆறுதல் கூற விளைந்தது. அவளை தன் கரத்தில் அல்லாமல் நெஞ்சத்தினில் தாங்கிட துடித்தான் அந்த காதலன்.

ஆனால் அவன் நினைத்த எதையும் அவனால் செய்ய முடியவில்லை. வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் அவனின் காதல் தோற்ற வலி கோபமாய் உருமாறியது. அவள் தன்னை தன் காதலை அசிங்கப்படுத்தியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதை நினைக்கும் போதே அன்று தான் அடைந்த அவமானம் நினைவில் எழ அத்தனை நேரம் அவளை காதலுடன் தாலாட்டிக்கொண்டிருந்தவன் சடுதியில் கோபமும் வெறுப்பும் ஆக்கிரமிக்க வெறுப்புடன் அவள் நினைவுகளை தூக்கியெறிந்தான்.

இவள் இல்லை என்றால் ஊர் உலகத்தில் வேறு பெண்ணே இல்லையா என்ற அலட்சியத்துடன்... ஆனால் உள்ளுக்குள் சுருக்கென வலித்தது.

விடாப்பிடியாய் அதை மறைத்துக்கொண்டவன் கம்பீரமாய் கல் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

ஓய்வு எடுத்தினாலோ என்னவோ தெம்பு வந்தது போல் இருக்க ப்ரின்சியை தேடி சென்றவள் அவர் ஆடிடோரியத்தின் வழியால் வெளியில் வருவதை பார்த்து அவரருகில் விரைந்தாள்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
“மேம்...” தயக்கத்துடன் அழைத்தாள். அன்று ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் எம்.டியை நேரில் சென்று சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுவிக்கும்படி கூறியிருந்தார். அவளும் செல்வதாகத்தான் இருந்தாள்.

ஆனால் எதிர்பாராதவிதமாய் அன்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட அவளால் வெளியில் செல்ல முடியாது போய்விட்டது. ஆதலால் தன் சக ஆசிரியரை அழைத்து தன் நிலையை கூறி அவரை அனுப்பி வைத்திருந்தாள்.

அது அவருக்கும் தெரிந்து விட்டதில் அவள் சிறிது சங்கடப்பட்டாள். அவர் அத்தனை கூறியும் தன்னால் செல்ல முடியவில்லையே என்று. அதனாலே அவர் முன் தயக்கத்துடன் நின்றிருந்தாள் ஷாஷி.

அவரோ அவளை திரும்பி பார்த்தவர் ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு “இப்போ உடம்புக்கு பரவாயில்லன்னா ப்ரைஸ் கிவிங் நடக்க போகுது உள்ளே போய் இருக்கலாமே...” என்க, அவரின் கூற்றில் அவரை ஆச்சரியமாய் பார்த்தவள் சரி எனும் தலையாட்டளுடன் உள்ளே சென்றாள்.


****


தன் பாதத்தினை வருடிக்கொண்டிருந்தவனை பார்த்து என்னமாதிரி உணர்ந்தால் என்று கூட புரியாத மனநிலையில் இருந்தவளுக்கு உள்ளுக்குள் எதுவோ பலமாய் தாக்கியது.

அவனது செய்கையை அவளால் ஏற்கவும் முடியவில்லை அவனை விலக்கி விடவும் முடியவில்லை.. இருவிதமான மனநிலையில் தவித்தாள். உள்ளுக்குள் சொல்லமுடியா போராட்டம் நிகழ்ந்தது.

“இப்போ எப்பிடி இருக்கு...” மென்மையான குரலில் வினவியவனின் குரலில் தன்னுள் மூழ்கியிருந்த பாலா தன்னிலைக்கு திரும்பி தலையை உலுக்கிக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளையே தான் பார்த்திருந்தான் ஷக்தி.

அதை பார்த்து உள்ளுக்குள் எதுவோ செய்ய தன் முகத்தை திருப்பிக் கொண்டவள் “இப்போ பரவாயில்ல...” முணுமுணுத்தாள். அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவனுக்கெங்கே கேட்டிருக்கப்போகின்றது...

“ஏதாவது சொன்னிங்களா...” அவள் கூறியது தெளிவாக கேட்காததால் அவன் அவள் முகம் பார்த்து கேட்க, அதில் இல்லை எனும் விதமாய் தலையசைத்தவள் காலை மெதுவாய் அசைத்து கீழே வைக்க முயன்றாள்.

அவளின் முயற்சி புரிந்தவனாய் தானே அவள் பாதத்தை எடுத்து மெதுவாய் தரையில் வைத்தவன் அவள் எழுவதற்காய் கையை நீட்டினான்.

அதில் குறைந்திருந்த அவளின் கோபம் மீண்டும் சீறிக்கொண்டு வருவது போல் இருந்தது. இவன் எந்த உரிமையில் இதையெல்லாம் செய்கிறான் என்ற கோபமே அது. மிக முக்கியமாய் இவன் எதற்கு எனக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூட.

ஒருபக்க மனது அவன் செய்கையில் மகிழ இன்னொரு மனதோ அடியே வெட்கம் கெட்டவளே என கேவலமாய் அற்ப பதரை பார்ப்பது போல் பார்த்து வைத்தது.

‘முன்பு ஒருவனை காதலித்து ஏமாந்து தினம் தினம் அனுபவிக்கும் வலி போதாதா... இவனையும் இவன் அனுசரணையையும் ஆசையாய் பார்க்கிறாயே வெட்கம் கெட்டவள்...’ மனசாட்சியின் சாட்டையாய் சுழன்றடித்த கேள்வியில் மனதினுள் மரித்துப்போனாள் பெண்ணவள்.

தான் செய்து கொண்ட சத்தியம் என்னவானது என்ற எண்ணம் அவள் கோபத்தை அதிகப்படுத்தியது. இப்படித்தான் இன்னொருவனை கண்டால் மயங்கிவிடுவாயா கேவலமாய் தன்னை குறித்த பேசிய மனசாட்சியின் கேள்விக்கு பயந்து மீண்டும் கோபம் எனும் முகமூடியை எடுத்து அணிந்து கொண்டாள்.

“நோ தேங்க்ஸ்...” கடுகடுத்த முகத்துடன் கூறியவள் எழ முயன்றால், அடிப்பட்ட காலை பாலன்ஸ் செய்து எழ முடியாமல் போக கைகள் இரண்டையும் இருக்கையில் ஊன்றி எழ முயற்சித்தாள்.

காயம் பட்ட பாதம் நிலையாய் நிற்க முடியாமல் தடுமாற அதை பார்த்து பதறியவன் அவளருகில் வந்து ஆபத்தில் உதவி செய்யும் ஆபத்பாந்தவனாய் அவள் தோளில் கைகொடுத்து தாங்கிக் கொண்டான். அதில் பெண்ணவள் தான் விக்கித்துப் போனாள்.

இதுவரையிலும் யாரையும் இது போல் தொட்டுப்பேச கூட அனுமதித்திறாதவள் இன்று அவனின் தொடுகையில் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் சமைந்து போய் அவனை நோக்கி நின்றாள்.

“தூங்கி எழுந்தா கால் வலி சரியாகிடும்... இப்போ எப்பிடி வீட்டுக்கு போவிங்க... நான் வேணா உங்ககூட வீடு வரைக்கும் வரட்டுமா...” மீண்டும் தயக்கத்துடன் இழுத்தான்.

அதில் தன்னிலைக்கு திரும்பி அவனை வெறித்துப்பார்த்தவள் தான் இருக்கும் நிலையில் வீட்டுக்கு போவதென்பது இயலாத காரியம் என புரிந்ததில் சரி எனும் விதமாய் தலையசைத்தாள். தன் நிலையை எண்ணி தன்னையே நொந்தவளாய்.

அதை கேட்டு மென்னகை சிந்தி தலையசைத்தவன் “நீங்க இங்கயே இருங்க... நான் போய் உங்க ஸ்கூட்டியை எடுத்திட்டு வரேன்...” என்றவன் அடுத்த சில நொடிகளில் ஸ்கூட்டியுடன் வந்திருந்தான்.

அதை வாசலில் நிறுத்தியவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்து பின்னால் அமர வைத்து தான் முன்னால் அமர்ந்து கொண்டான்.

வளைவுப்பாதையை கவனத்தில்கொண்டு ஓரளவு மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டியவன் பெண்ணவளின் அருகாமையை மனதுக்குள் பொக்கிஷமாய் சேமிக்க ஆரம்பித்தான்.

ஏனோ அவனுக்கு அவளை பார்த்ததுமே உள்ளுக்குள் எதுவோ.. என்னமோ செய்தது. அதை என்னவென்று சொல்வது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அருகாமை அவனை தடுமாற செய்தது. அவளுடன் பேச வேண்டும்போல் தோன்றியது. ஆனால் தன் நிலை உணர்ந்து அதை அடக்கிக்கொண்டான்.

வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவன் மேல் எக்காரணம் கொண்டும் தன் உடல் படிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வெகுவாய் இடைவெளிவிட்டே அமர்ந்திருந்தாள் பாலா.

அதுவே அவளுள் பல எண்ணங்களை விதைக்க அதில் தடுமாறித்தான் போனாள். அவள் வாழ்க்கை எப்படியெல்லாமோ இருக்க கனா கண்டாலோ அது போலவே தன் முன் இருப்பவன் இருக்கக்கண்டு அவள் என்னமாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கு சரிவர புரியவில்லை.

ஆர்யனை காதலிக்கும் போதும் தினமும் கனவில் அவனுடன் தன் முழு ஜென்மத்துக்கான வாழ்க்கையையும் வாழ்வது போல் தான் கனா கண்டாள். அவன் வெகுவாய் அக்கறையுடன் தன்னை தாங்கிக்கொள்வதை போல் எல்லாம் கனவு கண்டிருந்தாள்.

ஆனால் அது வெறும் கனவாக போய்விட இன்று அந்த கனவு நிஜத்தில் நனவாய் அரங்கேறி இருந்தது. ஆனால் அது யாரென்றே அறியாத ஒருவனால்.

அவனுக்கு இந்த இடம் புதிது என்பதால் அவளிடம் வழி கேட்க அவளுமே இங்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்ததில் தட்டுதடுமாறி வழி கூறியவள் ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

அவளின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி அவள் இறங்குவதற்கு கை நீட்ட தடுமாற்றத்துடன் அவன் கரம் பற்றி கீழிறங்கியவள் உள்ளே செல்ல எத்தனிக்கும் போதே ஸ்கூட்டியின் ஓசையில் தோழி வந்துவிட்டாளென வெளியே வந்த ஆர்த்தி அவள் நின்ற கோலம் கண்டு சந்தேகப்படாமல் அவளுக்கு என்னவானதோ என்று பதறிப்போய் அவளை நோக்கி ஓடினாள்.

“என்னடி ஆச்சு... ஏன் இப்பிடி நிற்கிற உன்னைத்தான் கேட்கிறேன் வாயில என்ன கொள்ளுகட்டையா வச்சிருக்க வாய தொறந்து பதில் சொல்லேன்டி...” பதட்டத்தில் படபடக்க, அவளை முறைத்து பார்த்தாள் பாலா.

“ஒன்னுயில்லடி... கால்ல லேசான காயம் அவ்ளோ தான்...” என்றவள் அவன் கரத்தின் மேல் இருந்த தன் கரத்தை நாசுக்காய் உறுவி தன் தோழியை பிடிமானமாய் பற்றிக்கொண்டாள்.

அதில் அவனுக்குள் புசுபுசுவென எதுவோ பொங்கியது. அத்தனை நேரம் உணராத பெண்ணவளின் மென்மையை அவள் விலகலின் போது உணர்ந்தவன் மலரினுள் மென்மையான அவள் மென்மையில் சொக்கித்தான் போனான்.

அவளுக்கு அதுபோல் எதுவும் தோன்றவில்லை போலும் தோழியை பார்த்து உள்ளே போகலாம் எனும்படி தலையசைக்க அவளோ அதை கண்டுகொள்ளாமல ஷக்தியை கேள்வியாய் பார்த்திருந்தாள்.

“நீங்க...” யார் என தெரியாமல் இழுக்க,

அதை புரிந்து கொண்டவன் “ஷக்தி” அளவான புன்னகையுடன் கைகூப்பினான்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அதை ஆச்சரியத்துடன் ஆர்த்தி பார்த்தால் என்றால் பாலாவோ அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள். இவனிடத்தில் ஒருவிதமான அறியாமை தோன்றுகிறதோ என அவளின் கூர்மையான கண்கள் அவனை அளவிட்டது. அவளின் பார்வையை உணர்ந்தோ என்னவோ அவன் அவள் புறம் திரும்ப அவன் திரும்புவான் என்பதை அறிந்திறாதவளின் பார்வையை அவன் பார்வையுடன் சிக்குண்டது.


****


ரோஹன் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்நேரம் ஷாஷியின் வகுப்பு மாணவி பரிசு வாங்குவதற்காக மேடையேறினாள்.

ரோஹன் அவளுக்கான் பரிசினை வழங்க அவனை தயக்கத்துடன் பார்த்தவள் “நான் என்னோட க்ளாஸ் டீச்சர் கையாள இதை வாங்கனும்னு விரும்பிறேன்....” தயக்கத்துடன் எடுத்துரைத்தாள்.

அதை கேட்டு மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தவன் அங்கிருந்தவரை பார்த்து தலையசைக்க அடுத்த சில நொடிகளில் பெரும் தயக்கத்துடன் தலை குனிந்த வாக்கில் மேடையேறினாள் ஷாஷி.

தன் வகுப்பு மாணவியின் அருகில் வந்து பாசத்துடன் அவள் தலையை வருடிக்கொடுத்தவள் மறுபுறம் நின்ற சீப் கெஸ்ட்டை நோக்கி திரும்ப அதேநேரம் அவசரமாய் வந்த அழைப்பை வெளியில் இருப்பதாய் கூறி துண்டித்து விட்டு திரும்பினான் ரோஹன்.

அவனுக்கு பெரிதாய் அதிர்ச்சி இல்லாவிடினும் அவளை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் அவன் காதல் நெஞ்சம் தடுமாறித்தான் போனது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் அலட்சியமாய் அவளை பார்த்து வைத்தான்.

பெண்ணவளோ அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் சமைந்து திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லையே. கிட்டத்தட்ட மூன்று வருடம்.. இந்த மூன்று வருடத்திற்குள் தான் அவனில் எத்தனையெத்தனை மாற்றம்.

முன்பை விட அழகாய் கம்பீரமாய் ஒரு நிறுவனத்தின் முதலாளி எனும் தோரணையுடன் அலட்சியமாய் நிற்பவனை பார்த்தவள் உறை நிலையில் தான் இருந்தாள்.

பார்க்கவே மாட்டோமா என ஏங்கியவனை மீண்டும் பார்த்ததில் அவள் நெஞ்சத்தில் சாரலடித்தது. துள்ளிக்குதிக்க வேண்டும் போல் இருந்தது. சிறகில்லாமல் வானில் பறப்பது போல் இருந்தது. கண்களில் நேசம் பொங்கி வழிந்தது. பரவசத்துடன் தலை முதல் கால் வரை அவனை ஆராய்ந்தாள்.

அனைத்தும் சில நொடிகளே... தான் நிற்கும் இடம் கருதி அவனிடமிருந்து தன் பார்வையை அகற்றிக்கொண்டவள் அவன் கையிலிருந்த பரிசினை வாங்கிக்கொண்டாள். வாங்கும் போது இருவரின் விரல்களும் பட்டும்படாமலும் தொட்டுத்தழுவி முத்தமிட்டுக்கொண்டது. அதை ஒருவித வெறுப்புடன் பார்த்தான் அவன். பெண்ணவள் பல நாட்களின் பின்னான அவன் தொடுகையில் சிலிர்த்துப்போனாவளாய் அதை பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டாள்.

தன் வகுப்பு மாணவியின் கையில் பரிசினை திணித்தவள் அவனை ஏக்கத்துடன் பார்த்தவண்ணம் கீழிறங்கிச் சென்றாள். அவளின் ஏக்கப்பார்வை அவனையும் ஏக்கம் கொள்ள செய்தாலும் மனதின் கோபத்தினால் அவளை வெறுப்புடன் பார்த்தவன் அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து வெளியேறினான்.


*****

சிறுவர் பூங்காவில் அமர்ந்து சிறுவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஷிகாவினை தன் புறம் திரும்பச் செய்தது ஒரு சிறுவனின் மழலை சிரிப்பொலி. அதில் திரும்பிபார்த்தவள் அங்கிருந்த சிறுவனை கண்டு கண்களை விரித்தால் என்றால் அவன் சிரிப்பினில் சொக்கித்தான் போனாள்.

அத்தனை அழகாய் இருந்தான் அவன். வெள்ளைப்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவனை தூக்கி கொஞ்ச வேண்டும்போல் இருக்க தன்னையும் மீறி அவன் புறம் சென்றாள்.

அங்கு தன் வயதையொத்தவர்களுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது சாட்சாத் ஹர்ஷித்தே தான்.

அவனருகில் சென்றவள் அவன் உயரத்திற்கு மண்டியிட்டு “ஹாய் பேபி... உங்க பெயர் என்ன...” கொஞ்சும் குரலில் கேட்டவளுக்கு அவனை தூக்கி கொஞ்ச வேண்டும்போல் ஏக்கம் வந்தது.

தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த புதியவளை புரியாமல் பார்த்த ஹர்ஷித் அவளை அளவிடுவது போல் பார்த்து வைத்தான். தெரியாதவர்களுடன் அதிகம் பேசக்கூடாது என்பது அவனது ஹெனியின் கட்டளை அல்லவா... அதை அப்படியே பின்பற்றினான் அவளின் செல்ல மகன்.

அந்த வயதிலே அவனின் கணக்கிடும் பார்வையை கண்டு அவனை ஆச்சரியமாய் நோக்கியவள் “ஐயம் ஷிகாயா..” தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகளை அவன் முன் நீட்டினாள்.

அப்போதும் அவன் அவளை உற்றுபார்த்தானே தவிர பதில் பேசவில்லை. அதில் முகம்சோர அவனை பார்த்தவள் அவனை எப்படி பேச வைப்பது என புரியாமல் தவித்தாள்.

சிலரை பார்த்தவுடனே மனதிற்கு பிடித்துவிடும். அதுவும் குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்து விடும். அவளுக்குமே அப்படித்தான். அதுவும் அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியும் வெள்ளைக்கார குழந்தைகள் போல் இருந்த அவனின் அழகும் அவள் மனதை கொள்ளைகொண்டு விட்டது.

அவளின் முகத்தையே பார்த்திருந்தவன் அவள் முகம் சோர்வது கண்டு என்ன நினைத்தானோ அவள் கன்னத்தில் கை வைத்தவன் பின்பு தன் பிஞ்சு கையை அவள் புறமாய் நீட்டி அவள் கையுடன் இணைத்துக்கொண்டவன் “ஐயம் ஹைஷித்” ஆங்கில மொழி அவனது மழலை வார்த்தையில் தெறித்து விழுந்தது.

அதில் அவனை தன் நெஞ்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டவள் “சோ ஸ்வீட் நேம் பேபி...” கொஞ்சிக்கொண்டே அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“நானு நானு...” தன் ஹெனிக்கும் மாமுவுக்கும் கொடுப்பது போல் கூச்சலிட்டவன் அவள் கன்னத்தில் தன் குட்டி இதழ்களை ஒற்றியெடுத்தான்.

அதே நேரம் அவசர அழைப்பின் காரணமாக சற்று தள்ளி சென்று உரையாடிக் கொண்டிருந்த ஆர்யன் தன் கன் பார்வையில் இருந்த மருமகனை காணாது பதறிப்போய் அழைப்பை துண்டித்தவனாய் அவனை தேடி கண்களை நாலாபுறமும் திருப்பியவன் அவனின் கூச்சல் குரல் கேட்கவும் அதை கணக்கிட்டவனாய் அங்கு வர அவன் யாரோ ஒரு பெண்ணின் பிடியில் இருப்பதை கண்டு கோபம் கொண்டவனாய் அவனருகில் வந்தவன் எதிர்பாரா நேரத்தில் அவனை அவளிடமிருந்து பிடுங்கி இறுக அணைத்துக் கொண்டான்.

தன் பிடியில் இருந்த சின்னவனை திடீரென யாரோ பிடித்து இழுக்கவும் பதறிப்போய் நிமிர்ந்தவள் தன் முன் கோபம் பொங்க நின்றவனை பார்த்து அதிர்ந்து விழித்தாள்.

ஏழு வருடமாய் யாரை மனதினுள் சுமந்து கொண்டிருந்தாளோ அவன் தான் அவள் முன் நின்றிருந்தான். ஆனால் எதிர்பாராத தோற்றத்தில். கையில் குழந்தையுடன். அதை பார்த்து சொல்லொண்ணா வலி அவள் நெஞ்சத்தை பலமாய் தாக்கியது. ஒரு கணம் கூட அவனுக்கு தன் நினைவு வரவில்லையா.. மனம் ஏக்கத்துடன் முணுமுணுத்துக் கொண்டது.

மனசாட்சியோ அவன் யாரை காதலித்தானோ அவளுடன் சந்தோஷமாய் வாழ்ந்து குழந்தையும் பெற்றுவிட்டான் நீதான் தேவையில்லாத ஆசையை மனதில் வளர்த்து நொந்துகொண்டு இருக்கின்றாய்... பரிதாபத்துடன் சாடியது.

மனசாட்சியின் கூற்றில் இன்னும் உடைந்து போனவளின் கண்கள் காதல் தோற்றுப்போன வலியினை தாங்கமுடியாமல் வைரமாய் பளபளத்தது கண்ணீர் துளிகள் நிறைந்து போனதில்.

உடைந்து போன நெஞ்சத்துடன் பெண்ணவள் அவனை பார்க்க அவனோ சொல்லமுடியா உணர்வில் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

மூன்று தோழியர்களும் மூன்று விதமான மனநிலையில்....


“இதுவரை நான் கண்டுகொண்ட உறவு
நீ தந்தது..
இதுவரை நான் கண்டுகொண்ட கனவு
நீ தந்தது...
கண்ணை மூடி கண் மேலே முத்தம்
கொடுக்கலாம் நீ சொன்னது...
கையை பிடித்துக்கொண்டே நடந்து
போகலாம் நீ சொன்னது...
மனது..மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு
உணர்வு இன்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கி விடும்
வலியில் உயிரை போக்கி விடும்..”



சிதறும்...
 

Keerthi elango

Well-Known Member
Nice epi sis...moonu frnds ume moonu vithamana mana poratathula irukanga...knjm kastama than iruku...because kadhal aperpatathu....avanga avanga field la avanga best ah irunthalum... Love nu varumbothu vali matume minjuthu...intresting sis... Keep rockinggg dr...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top