Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

23ல் இன்னும் 2 பதிவு 23.2 23.4....... அப்போ இடையில 23.3 :unsure::unsure::unsure:

பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி...... அதான் வீட்டுலேயே தொடங்கிடுதே.....
அந்த காலம் தாலியை ஒரு செகண்ட் கூட கழற்றி வைக்க மாட்டாங்க....... ஆனால் இப்போ பல பெண்கள் போடுறதில்லை........
தன் வீட்டு மகளோ/மருமகளோ போட்டிருக்கமாட்டாங்க...... ஆனால் அடுத்த பொண்ணை பார்த்ததும் சாதாரணமா கேட்கிறாங்க எங்கே தாலி செயின் னு.....
பூவும் பொட்டும் பொறந்ததில் இருந்தே கூட வரும்...... வீட்டுக்காரன் இறந்தால் அதுவும் கூடாதாம்....... சென்னையில் கேட்டு ரொம்ப சிரிப்பா வந்தது 'வீட்டுக்காரன் இறந்தவங்க தான் கருப்பு பொட்டு வைப்பாங்க'னு கேட்டது தான்....... அடப்பாவிங்களா தான் :oops::oops::oops:
அப்புறம் இந்த பார்க்கிறது பேசுறது நடந்துக்கிறது னு விட்டுவைப்பாங்களா என்ன???
பெண்கள் தான் இந்த கேள்வி நிறைய கேக்குறவங்க...... தனி மனுஷங்களா பொண்ணுங்க தான் திருந்தனும்.......
இன்றைய மகள் நாளைய மருமகள் எதிர்கால மாமியார்.......
மாற்றம் மகள் கிட்ட இருந்தே வரட்டும்.......

ஜாமூன் சொல்றதெல்லாம் உண்மை தான்.......
பல பெண்களை முடக்குறதே பெண்கள் தான்.......
ரெண்டு பேர் மனவருத்தமும் கொட்டியாச்சு.....
சிக்கந்தரின் 'வாழ்க்கை வாழ' (y)(y)(y) நல்ல பாலிசி தான்......
ஆனால் உன் ஹார்மோன் இருக்குதே :p:p:p இன்னும் 26-லேயே இருக்குது.......
நல்ல வேலை கிளம்பிட்டான் :D:D:D

ஏன் இன்று, ஏன் இன்று, என் உதடுகள் என் மனம் உளறியது
ஏன் இன்று, ஏன் இன்று, உன் அழகுகள் இக்கணம் பதறியது
கவிதை இரவு, இரவு கவிதை எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு எது நீ, எது நான், என புரியவில்லை.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னாது கதை முடிய போகுதா??? :eek::eek:

பாவம் ஜாமூன், தனக்கு கல்யாணம் நடக்குறப்ப தன்னோட அம்மா தன் கூட இல்லையின்னு வருத்த படுறா... ஜாமுனுக்கு அம்மா இல்லாத நிலை... சிக்கந்தருக்கு அம்மா இருந்தும் இல்லாத நிலை..

ரெண்டு பேரும் உங்க கவலை எல்லாம் மறந்து நாளைக்கு நடக்க போற உங்க கல்யாணத்தை என்ஜாய் பண்ணுங்க...

டேய் சிக்கந்தர், உனக்கு ஹார்மோன் மட்டுமா கன்னா பின்னான்னு சுரக்குது... எல்லாமே தான்...:p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு சுசிலாஜீ:cry::cry::cry:.பொண்டாட்டி செத்தா புருசன் புது மாப்பிள்ளையா ஆயிடுறான்:oops::oops::oops:.

அதுவே பெண்களுக்கு என வரும் போது தினம் நரகம் தான்,ஆண்களின் தொந்தரவு ஒரு புறம், பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக மாறி விஷமாக பேசறது இன்னொரு புறம்:(:(:(.

கதவை தாழ்பாள் போட்டாளும் மறுபடியும் சந்தேகப்பட்டு பார்ப்பாங்கன்னு சொல்லும் போது
மனம் கனக்கிறது:cry::cry::cry:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இருபத்து மூன்று வயதில் விதவையாவது கொஞ்சம் கொடூரம்தான்
கூட இருக்கும் பெண்களே பொறணி பேசுவது அதை விட கொடூரம்

அன்றும் இன்றும் என்றும் எந்த காலத்திலும் பெண்ணுக்கு பெண்தான் எதிரி
அதுதான் உனக்கே தெரியுதே ஜாமூன்

அப்புறம் பெற்றோர் இல்லாமல் கல்யாணம் நடப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்
உனக்கு அம்மா இல்லவே இல்லை
ஆனால் உன்னோட சிக்கு பாவாவுக்கு அம்மா இருந்தும் இல்லாத நிலை
அதை நினைத்துப் பாரு, ஜாமூன்

தன் ஒரே பெண்ணின் வாழ்வு நல்லாயிருக்கணும்ன்னு உங்கம்மா மேலே இருந்து பார்த்து ஆசீர்வதிப்பாங்க
அதனால நாளைய கல்யாணத்துக்கு ஹேப்பியா ரெடியாகு, ஜமுனா பேபி

அரே சிக்கந்தர் பேட்டா
உங்கம்மா வேற அவளோட அம்மா வேறடா
ஜமுனாவின் அம்மா உயிரைக் கொடுத்து பெண்ணை வளர்த்தாங்க

ஆனால் உங்கம்மா பீத்த மூத்த பையன் பேச்சைக் கேட்டு சொத்துக்காகவும் பெருமைக்காகவும் உன் உயிரை எடுக்க கருணை மனு போட்டாங்க

அப்புறம் நான் நினைத்த மாதிரியே ஸ்டோரி முடியப் போகுதுன்னு சொல்லிட்டீங்க

23-1 அப்டேட் இப்போ கொடுத்துட்டீங்க
இன்னும் இரண்டு பதிவுகள் 23-2 and 23-4 வரும்ன்னா 23-3 என்ன ஆச்சு, விஜி டியர்? வருமா? வராதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top