Sooryodhayam

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே...
எனது ஐந்தவாது நாவலான ‘சூரியோதயம்’ அன்பு இல்லம் பதிப்பகம் மூலம் புத்தமாக வெளியாகி இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

இக்கதை உங்கள் மனதை மகிழ்விக்கும் வகையான கதைக் களமல்ல என்றாலும், இக்கதை மூலம் ஓர் ஊனமுற்ற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவளுக்காய் தாயுமானவனாய் மாறிய அவள் தந்தையின் அன்பையும், என்னதான் காதல் காதல், என்று சொல்லிக் கொண்டாலும், புரிதலும், விட்டுகொடுத்தலும் இல்லையென்றால் வாழ்க்கையின் முடிவு நரகம்தான் என்பதையும், அன்பு ஒரு சார்பிலிருந்து மட்டுமே கொடுக்கப்படும்போது அது அர்த்தமற்றதாகி விடும் என்பதையும், இதையெல்லாம் தாண்டி எத்தனை எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் அடித்து முன்னேறி ஜெயிக்க வேண்டும் என்பதையும் ஓர் பெண் உதயத்தின் மூலம் நீங்கள் அறியலாம்.

வாசகர்கள் உங்களுக்கே தெரியும், இது நாவலின் முதல் பகுதிதான் என்று. முதல் பகுதி முழுவதும் அழுகையிலும், கோபத்திலும் ஆழ்த்திய உங்களை, இப்போது இரண்டாவது பகுதியில் என்னால் இயன்றவரை உங்கள் சூர்யாவிற்கு நியாயம் செய்கிறேன் என்று நினைக்கிறேன். சொ இந்தக் கதையைப் படித்துவிட்டு தன்னொளியைப் படிங்க. அப்பதான் உங்களுக்கு முழுமையாக நாவலின் மேல் பிடிப்பு ஏற்படும்.

கனமான கதைக்களம் என்றாலும் அதைத் தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், தொடர்ந்து எனது புத்தகத்தை வெளியிட்டு வரும் அன்பு இல்லப் பதிப்பகத்தாருக்கும், என் அன்புத் தந்தைக்கும், என்னை நல்வழியில் நடத்தும் இறைவனுக்கும் என் பணிவும் அன்பும் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி....

19848949_2014990008729031_336549103_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சூப்பர்ப், கீத்து செல்லம்
''சூரியோதயம்'' நாவல், வெளியாகிவிட்டதா,
கீதாஞ்சலி டியர்?
என்னோட மனமார்ந்த, நல்வாழ்த்துக்கள்
கீதாஞ்சலி செல்லம்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
வாவ், சூப்பர்ப், கீத்து செல்லம்
''சூரியோதயம்'' நாவல், வெளியாகிவிட்டதா,
கீதாஞ்சலி டியர்?
என்னோட மனமார்ந்த, நல்வாழ்த்துக்கள்
கீதாஞ்சலி செல்லம்



Thank u thank u ma... this is bcoz of u all ma.... thanks a lot....:)
 

Sundaramuma

Well-Known Member
Ok ok sis... aamam muditha piragae padiyungal naan romba thaamadhithu anaivaraiyum rombavae sodhikkiren... thanks for ur lovely wishes sis...:)
என் நிலா தோழிக்கு ...உங்க கதைனு எனக்கு கொஞ்ச நாள் முன்னால தான் தெரியும் .....
போன வருடம் calameo -ல படிச்சேன்....அருமையா இருந்தது ...மனதில் நின்ற கதை .....
நீங்க இந்த சைட்-ல கொடுக்கறீங்கன்னு பார்க்கவே இல்லை ....சாரி....
உங்க ஒவ்வொரு கதையும் வித்தியாசமா இருக்குது .....நல்லா எழுதுறீங்க ....
என்னோட வாழ்த்துக்கள் ....:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
Thank u thank u ma... this is bcoz of u all ma.... thanks a lot....:)
Oh, No yaa,
அப்படிலாம் சொல்லக்கூடாது,
கீதாஞ்சலி டியர்
இது, முழுக்க, முழுக்க, உங்களோட
தனிப்பட்ட முயற்சி and திறமை, கீத்து செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
என் நிலா தோழிக்கு ...உங்க கதைனு எனக்கு கொஞ்ச நாள் முன்னால தான் தெரியும் .....
போன வருடம் calameo -ல படிச்சேன்....அருமையா இருந்தது ...மனதில் நின்ற கதை .....
நீங்க இந்த சைட்-ல கொடுக்கறீங்கன்னு பார்க்கவே இல்லை ....சாரி....
உங்க ஒவ்வொரு கதையும் வித்தியாசமா இருக்குது .....நல்லா எழுதுறீங்க ....
என்னோட வாழ்த்துக்கள் ....:):):)
''நிலாத் தோழிக்கு,'' மிக, மிக,
அருமையான நாவல்,
இல்லையா, சுந்தரம்உமா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top