Adhirith
Well-Known Member
ஹாய் மல்லி,
சந்தத்தில் பாடாத கவிதையும்
சொந்தத்தில் சேராத காரிகையும்
பந்தத்தில் சேர்ந்த அழகு,
பாசமும் நேசமும்
கோபத்தில் துரந்தாலும்,
சாபத்தில் மறந்தாலும்,
காலத்தின் மடியில்
காலாவதி ஆவதே
ஞாலத்தின் நீதி என்றால்,
வாய்மையும் பொய்மையும்
தூய்மையும் அழுக்கும்
சுகமும் சோகமும்,
சொர்க்கமும் நரகமும்,
மகிழ்ச்சியும் துக்கமும்,
வெற்றியும் தோல்வியும்
சூழ்ந்த வாழ்க்கை
இயற்கையின் வரமோ.....?
இறைவனின் வரமோ......?
என்ன கேள்வி வந்தால் என்ன?
காதல் காதல் தான்!
காதலுக்கு அழிவில்லை!
அன்புக்கு அளவில்லை!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
நன்றி. வாழ்த்துக்கள் மல்லி.
உங்கள் அரிய படைப்பு அழகாய் மிளிர்ந்த பதிப்புக்கு.
காவ்யாவிற்கு பொருத்தமான .......
முதல் இரண்டு வரிகள்.....