புல்வாமா தாக்குதலில் மறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம்...மறைந்த அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
வரலாற்றில் மறக்க முடியாத சோக நிகழ்ச்சிமனம் மிகவும் கனக்கிறது
தேவையற்ற வீணான இறப்புகள்
பொறுப்பில்லாத நிர்வாகம்
குறைவான வாகனங்களில்
அதிகப்படியான வீரர்களை
ஏற்றிச் செல்ல வேண்டிய
அவசியமென்ன?
அனைவர்க்கும் தேவையான
வண்டிகளை ஏற்பாடு
செய்திருக்கலாமே?
எதிரி எப்பொழுது எங்கிருந்து
வருவான்-னு தெரியாத சூழலில்
கொஞ்சம் அஜாக்கிரதைத்தனம்
எல்லாம் சேர்ந்து விலை மதிப்பில்லாத
40 உயிர்களை காவு வாங்கிவிட்டது
இறந்த எத்தனை பேருக்கு பால்
மணம் மாறாத பிள்ளைகள்?
எத்தனை பேரின் குழந்தைகள்
இன்னமும் வெளியுலகைப்
பார்க்காமல் தாயின் வயிற்றுக்குள்?
இறந்த வீர்ர்களின் மனைவிகளின்
நிலை?
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது
அவர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு நாடு பதில் சொல்லுமா?நடந்ததைக் கேட்டால் வரலாறு
காறித் துப்பும்
நாட்டைக் காக்கும் உன்னதமான
பணிக்கு வருபவர்களுக்குக் கூட
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய
படுகேவலமான நிலையில்
நாம் இருக்கிறோம்
தூங்கும் பொழுது கூட விழித்துக்
கொண்டே இருக்கும் எதிரி எங்கே?
உளவுத்துறை எச்சரிக்கை செஞ்சும் கூட
விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில்
கூட எவனோ ஒருவனின் உயிர்தானேங்கிற
மெத்தனத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்
நம்ம நிர்வாகம் எங்கே?
1000 வீரர்கள் போக வேண்டிய இடத்தில
ஒன்றரை மடங்கு அதிகமான வீரர்களை
ஏன் அழைத்து செல்ல வேண்டும்?
கொஞ்சம் பேர் அப்புறமாக சென்றிருக்கலாமே?
இங்கே பிரச்சனையில்லாத சாதாரண
ஊர்களில் கூட சாலையை பிரிக்கும்
டிவைடர்-ங்கிற சாதனம் பெரிதாக
இருக்கும் பொழுது விவகாரமான
அந்த காஷ்மீர் பூமியில் டிவைடர்
பெரிய அளவில் இருந்திருக்க
வேண்டும்
விளையாட்டுப் பொருள்களை
கொண்டு போறாங்கங்கிற
சப்பைக்கட்டுக்கள் இல்லாமல்
எதிரி வந்த வாகனத்தை சரியாக
பரிசோதனை செய்திருந்தால்
350 கிலோ எடையுள்ள ஆர் டி எக்ஸ்
வெடிமருந்தை முன்னாலேயே
கண்டுபிடித்திருக்கலாம்
இப்படி பல லாம்கள் இருந்தாலும்
போன 45 உயிர்கள் போனவைதானே?
இன்னும் எத்தனையோ?
ஊருக்கு போய் சேர்ந்துட்டேன்-ங்கிற
வேலைக்கு/பணியிடத்துக்கு
வந்து சேர்ந்துட்டேன்-ங்கிற தகவல்
விவரத்தைக் கூட மனைவி மக்களுக்கு
சொல்லும் அவகாசத்தைக் கூட, நம்
வீரர்களுக்கு எதிரி கொடுக்கவில்லையே?