Ramya Rajan's Kandukondaen Kaathalai 13

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அடிக்கடி திலீப் வீட்டுக்கள் செல்வதால் அவன் வசதிக்கா வருவதாக தெரியும் என சுமித்ரா சொல்வது சரி.நகை பத்திரம் என சொன்னவர், மகளுக்கு ஆசையா வீடு வாங்கி கொடுத்தால் நாத்தனார்கள் அடிக்கடி வந்து தொல்லை செய்வதாக சொல்வார்:rolleyes::rolleyes::rolleyes:.

சுபத்ரா,சுமி சிறுவயதிலேயே வேலைக்கு சென்று பொறுப்பாக தங்களை பார்த்துக் கொண்டதாக சொன்னதும்,திலீபிடம் சுமி பேசியதையும் கேட்டு மாமனார் பணத்தில் சாப்பிட சொன்னால் அவளுக்கு கோபம் தான் வரும் என தீனாவுக்கு இப்போதாவது புரிந்ததே:unsure::unsure::unsure:.

பணம் தான் வாங்கிட்டியே இனி பிள்ளை பெத்துப தானே என கேட்ட தீனாவுக்கு சாட்டையடியா பதில் கொடுப்பதும்,வீட்டை விட்டு தொறத்த எவ்வளவு நேரம் ஆகும் என கேட்பவனுக்கு பதிலடி கொடுத்து வாயை மூட வச்சு அசத்திட்டா(y)(y)(y).

திலகா வாடகை பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காது,தீனாவும் கொடுக்க மாட்டான்,சிதம்பரம் தன் பென்சன் காசு எல்லாம் செலவாகுதுன்னு அழுதுட்டே கொடுப்பார்:(:(.ஓசி காசுல இ்வ்வளவு தான் சமைக்க முடியும்னு தீனாவுக்கு ஒரு கொட்டு வச்சு பேசிய சுமி,கணவன் பணத்துல விருந்து வச்சு கலக்கிட்டா:giggle::giggle::giggle:.

சுமித்ரா சொன்னதை கேட்காதது போல இருந்தாலும் தீனா அவளை பீச்சுக்கு அழைத்து செல்வதும்,
குடியை மறந்து வீட்டில் இருக்க சுமியின் சந்தோஷ மனநிலையை கெடுக்க தீனாவோட ப்ரெண்ட் வந்து நிக்கறானே:mad::mad:.இவனுங்க தானும் திருந்த மாட்டாங்க,கல்யாணம் ஆன மனைவிக்கு பயந்து குடிக்காம இருக்கறதான்னு கேலி செஞ்சு உசுப்பேத்தி விட்டு குடிக்க வைப்பாங்க:devilish::devilish:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

யோவ் சிதம்பரம்
உம்ம பொண்டாட்டி பையனுக்கு சாப்பிட பொருள் வாங்குவதற்கு கணக்கு பார்ப்பியா?
அப்புறம் அது எப்படி உடம்பில் ஒட்டும்?
அப்படி பென்ஷனை வைச்சு நீ என்ன பண்ணப் போறே, சிதம்பரம்?
அடடா
இந்த சுமித்ரா பொண்ணு அவனை நல்லவழிக்கு கொண்டு வரப் பார்க்கும் பொழுது எவனோ ஒரு ப்ரெண்ட் குறுக்கே வந்துட்டானே
கொஞ்சம் மாறத் துவங்கியிருக்கும் தீனதயாளனின் மனசைக் கலைத்து விடுவானோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சுமித்ராவோட கிடுக்கி பிடியில இந்த தீனா, கொஞ்சம் கொஞ்சமா திருந்திட்டு வர்றான்னு நினைச்சா... அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே..... இந்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்களும் திருந்த மாட்டாங்க... நம்மளையும் திருந்த விட மாட்டாங்க... பாவம் சுமி... என்ன பண்ண போறாளோ???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பிரண்ட்ஸ் கூட குடிச்சு கும்மாளமிட்ட பழக்கம் போறது ரொம்ப கஷ்டம்...... பிரண்ட்ஸ் கூப்பிட்டாலும் வரமாட்டேன் னு அவனா ஸ்டராங்கா நிற்கணும்........ இங்கே தான் தண்ணீரில் எழுதினது போல ஆச்சே.......

இப்போ எல்லாம் பிரண்ட்ஸால நல்லவனாகுறதை விட கெட்டுப்போறது மிக அதிகம்.......
சொன்னாலும் புரியாது........

வசதியில்லைனாலும் இவ்ளோ ஸ்டராங்கா முகத்துக்கு நேரா டக்கு டக்குனு பதில் பேசுற ஹீரோயின்ஸ் அதிகமா வர்றதில்லை.......
அந்த வகையில் சுமி சூப்பர் :love::love::love:
அவனை வார்த்தைக்கு வார்த்தை பதில் தாக்குதல் போடுறா........
ஆனாலும் எங்கே...... கஷ்டம் தான் இவனோட......

இந்த மாதிரி மாமியார் மாமனார் இருந்தால் குடும்பம் எங்கே வெளங்குறது :mad::mad::mad:
ஒத்தை பையனையும் இழந்துட்டு நிற்கும் போது தான் செஞ்ச தப்பு புரியும்......
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,
தீனா திருந்தனுமுனு நினைச்சா கூட, இந்த மாதிரி இருக்குறவங்க திருந்த விட மாட்டாங்க...
சுமி நம்பிக்கையை காப்பாத்துவானா....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top