fathima.ar
Well-Known Member
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகரின் ஒதுக்குப்புறமாக சென்று கொண்டிருந்தார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணிய அவர்களது எதிரிகள் அவர்களை பயங்கர ஆயுதம் கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அந்நிலையில் புகலிடத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மரத்தினருகில் சென்று ‘ஓ மரமே! நான் ஒளிந்து கொள்ள எனக்குப் பாதுகாப்பை அளிப்பாயாக!’ என்று இறைஞ்சிக் கொண்டார்கள். உடனே அந்த மரம் இருகூறாகப் பிளந்தது. உடனே அந்தப் பிளந்த மரத்திற்குள் ஜகரிய்யா நபி அவர்கள் நுழைந்து கொண்டார்கள். உடனே அந்த மரம் ஒன்றாக இணைந்து விட்டது.
இதில் ஷைத்தான் ஒரு வேலையை கச்சிதமாக செய்தான். ஜகரிய்யா நபி அவர்கள் மரத்தில் உள்ளே நுழைந்தபோது அவர்களின் ஆடையின் ஒரு பகுதியை பிடித்து இழுத்துக் கொண்டான். மரம் மூடினாலும் அந்த ஆடை வெளியே தெரிந்து கொண்டிருந்தது.
அவர்களை விரட்டி வந்தவர்கள் அவர்களை காணாது திகைத்து அங்குமிங்கும் நோட்டமிட்டபோது, அவர்களில் ஒருவனின் பார்வைக்கு மரத்தின் வெளியே தெரிந்து கொண்டிருந்த ஆடையின் பகுதி தென்பட்டது. அனைவருக்கும் அதனை அடையாளம் காட்டினான் அவன். அனைவரும் ஆலோசனை செய்து அந்த மரத்தை எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் ஷெய்த்தான் மனித உருவில் வந்து, மரத்தை எரிப்பதை விட ரம்பத்தால் இருகூறாக அறுத்து விடுங்கள். அதற்குள் அவர் ஒளிந்திருந்தால் அவரும் மரத்தோடு இருகூறாகப் பிளந்து போவார் என்று யோசனை கூறினான்.
அவன் சொன்னபடியே அந்த மரத்தை இருகூறாக அறுக்க ஆரம்பித்தார்கள். அந்த ரம்பம் அவர்களின் தலையை உரச ஆரம்பித்ததும் அவர்கள் முனகினார்கள். உடனே அல்லாஹ் வஹீ அறிவித்தான். ‘ஓ ஜகரிய்யாவே! என்னிடம் பாதுகாப்பு கேட்காது இந்த மரத்திடம் பாதுகாப்பு கேட்டீரல்லவா? இப்பொழுது அதன் பலனையும் அனுபவியும்.
இதே நிலையில் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாகி விட்டார்கள். அப்பொழுது அவர்களது வயது 300. அன்னாரது பொன்னுடல் பைத்துல் முகத்தஸில் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் ஷைத்தான் ஒரு வேலையை கச்சிதமாக செய்தான். ஜகரிய்யா நபி அவர்கள் மரத்தில் உள்ளே நுழைந்தபோது அவர்களின் ஆடையின் ஒரு பகுதியை பிடித்து இழுத்துக் கொண்டான். மரம் மூடினாலும் அந்த ஆடை வெளியே தெரிந்து கொண்டிருந்தது.
அவர்களை விரட்டி வந்தவர்கள் அவர்களை காணாது திகைத்து அங்குமிங்கும் நோட்டமிட்டபோது, அவர்களில் ஒருவனின் பார்வைக்கு மரத்தின் வெளியே தெரிந்து கொண்டிருந்த ஆடையின் பகுதி தென்பட்டது. அனைவருக்கும் அதனை அடையாளம் காட்டினான் அவன். அனைவரும் ஆலோசனை செய்து அந்த மரத்தை எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் ஷெய்த்தான் மனித உருவில் வந்து, மரத்தை எரிப்பதை விட ரம்பத்தால் இருகூறாக அறுத்து விடுங்கள். அதற்குள் அவர் ஒளிந்திருந்தால் அவரும் மரத்தோடு இருகூறாகப் பிளந்து போவார் என்று யோசனை கூறினான்.
அவன் சொன்னபடியே அந்த மரத்தை இருகூறாக அறுக்க ஆரம்பித்தார்கள். அந்த ரம்பம் அவர்களின் தலையை உரச ஆரம்பித்ததும் அவர்கள் முனகினார்கள். உடனே அல்லாஹ் வஹீ அறிவித்தான். ‘ஓ ஜகரிய்யாவே! என்னிடம் பாதுகாப்பு கேட்காது இந்த மரத்திடம் பாதுகாப்பு கேட்டீரல்லவா? இப்பொழுது அதன் பலனையும் அனுபவியும்.
இதே நிலையில் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாகி விட்டார்கள். அப்பொழுது அவர்களது வயது 300. அன்னாரது பொன்னுடல் பைத்துல் முகத்தஸில் அடக்கம் செய்யப்பட்டது.