'புயலின் தென்றல் அவள்' கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நான் எழுதிய குடும்ப நாவல். இடையே ஓர் பெரிய இடைவேளை எடுத்துக்கொண்டேன். அதற்கு இரண்டு காரணம். ஒன்னு பர்சனல் இன்னுமொன்னு சரித்திர புதினம். அந்த இடைவேளையில் சரித்திர புதினம் 'சோழனின் சபதம்' வெளியானது. நான் எழுதிக்கொண்டுதான் இருந்தேன், ஆனாலும் வாசகர்களின் கமெண்ட்க்குள் அந்த நாளில் நான் பார்க்காதது பெரிய குறைதான் எனக்கு. அந்தக் குறை இப்ப இல்ல. ஏன்னா அதுக்கு நீங்கதான் காரணம்.
முழுதாக இரண்டு வருடங்கள் கழித்து, ஒவ்வொரு எபிசோடுக்கும் கம்மெண்ட்கள் வருவதைப் பார்க்க ரொம்ப ரொம்பச் சந்தோசமா இருந்தது. இந்தச் சந்தோசம் அனுபவிச்சாதான் புரியும். என்கூட இந்த இரண்டு மாதமா பயணிச்சு, கதையைப் படிச்சு லைக் அப்புறம் கம்மெண்ட் பண்ணின எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.
உங்க எல்லாரோட கம்மெண்ட்டும் தெரியும். உங்களோட பேரும் தெரியும். இன்னும் ஒரு சில தோழிகள் இப்படித்தான் கம்மெண்ட் செய்வீங்கன்னு கூட அத்துப்படி ஆகிடுச்சு.
நீங்க கதை படிக்க ஆர்வமா வாறீங்களோ இல்லையோ ஆனா உங்க கம்மெண்ட் படிக்க ஆர்வமா ஆஜர் ஆகிடுவேன். ஆனா ரிப்ளை தான் செய்யமுடியல. தப்பா எடுத்துக்காதீங்க. உங்க அன்புக்கு நன்றி. இந்தப் பதிவையும் படிச்சிட்டுக் கண்டிப்பா சொல்லிட்டு போங்க.
அடுத்தக் கதை நேரடியா புத்தகமா கேட்ருக்காங்க. மல்லி அக்கா தளத்தைத் தவிர நான் வேறு எங்கும் கதை எழுதல. நேரடி புத்தகமா அடுத்தக் கதை வந்ததும் உங்களுக்கு இங்கயே தகவல் சொல்லுறேன்.
இதுவரைக்கும் நீங்க படிச்ச மூணு சமூக நாவலும் ஒரு தேடலோடே இருக்கும். ஆனா அடுத்து வர போகிற கதை, கலகலப்பும், காதலும் மட்டுமே நிறைந்திருக்கும்.
கதையோடு சேர்த்து உங்கள சிரிக்கவைக்கவும் காதலை ரசிக்கவைக்கவும் மட்டுமே அந்தக் கதை. கதையின் தலைப்பை மட்டும் இப்பவே சொல்லிடறேன்.
நின் மேல் காதலாகி நின்றேன்!!!
Raasitha's Puyalin Thendral Aval Final
Not opening sis.
எங்கப்ப இருக்கு காணவில்லை
Where is d story sis??
Now its wrking dears...happy readingகதையே காணவில்லை?!?