Prasath Krishna's Adheera 2

Advertisement

Prashadi

Member
அத்தியாயம் 2



வீட்டிற்கு வந்த பின்னும் தீரா அமைதியாய் இருப்பதைப் பார்த்து "இன்னும் என்ன நினைச்சிட்டு இருக்க தீரா? உடல் மட்டும் தான் அழியுமே தவிர ஆத்மா இல்ல. இந்த உலகத்தில அவங்க இல்லாட்டியும் எண்ணங்கள் உன்னைச் சுற்றி தான் இருக்கும்"

மௌனத்தை தன் மொழியாக்கினாள் தீரா.

"நீ இப்படி இருக்கத பாத்து அவங்க ஆத்மா அமைதியில்லாம இருக்கும்
இது தான் உனக்கு வேணுமா தீரா?"

கண்களை அழுந்தத் துடைத்து விட்டு "நான் இனி இப்படி இருக்க மாட்டேன் ரக்ஷி. ஏதோ இன்னைக்கு மனசு பாரமாக இருந்தது"

"சரி இப்பொ எதையும் யோசிக்காம அமைதியா கண்ண மூடி தூங்கு"என கூறி அவளை கட்டிலில் படுக்க வைத்து தானும் அவள் அருகிலே படுத்துக்கொண்டாள்.

தீராவின் பெற்றோரின் இழப்புக்கு பின்னர் அவளுக்கு உற்ற துணையாய் இருப்பது ரக்ஷிதாவும் அவளின் குடும்பமும் தான். ரக்ஷிதாவின் அன்னை செல்லம்மாள் தீராவை தன் புதல்வியாகவே அரவணைத்து வருகின்றார்.




இருள் படர்ந்த வானத்தில் இனி ஒளியின் ஆட்சி தொடர வேண்டும் என ஒளிக்கதிர்களைப் பரப்பினான் கதிரவன். இவ் வெய்யோனின் விளையாட்டால் தன் சிப்பி இமைகளைத் திறந்தாள் தீரா.
உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கட்டிலை விட்டு எழுந்து கைகளை நெட்டி முறித்தாள்.

தன் அறையை சுற்றி நோட்டமிட்டு ஒரு சொடுக்கிட்டாள்.
கட்டிலின் அருகே இருந்த வானொலியில் தானாகவே பாடல் ஒலித்தது.

தீரா தன் வலது கையை கீழிருந்து மேலே அசைக்க கட்டிலில் இருந்த தலையணையும் போர்வையும் அந்தரத்தில் தொங்கியது.
தன் வலதுகை ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி மேலிருந்து கீழ் அசைக்க அந்தரத்தில் இருந்த போர்வை கீழிறங்கியது.

ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் வந்த வயலின் இசைக்கேற்ப தன் இருகைகளிலும் ஆள்காட்டி விரலை நீட்டி அசைக்க போர்வையும் அவ் அசைவுக்கேற்ப கட்டிலைத் தட்டி தூசியை அகற்றியது.

அதன் பின் தன் வலது கையை நெல் தூவுவதைப் போல அசைக்க
போர்வை அழகாக கட்டிலில் விரிக்கப்பட்டு தலையணையும் சரியாக வைக்கப்பட்டது.

தீரா பாடலை முணுமுணுத்துக் கொண்டே தன் வலது ஆள்காட்டி விரலை மட்டும் பூமியை நோக்கி நீட்டி சுழற்ற அறையின் ஓரத்தில் இருந்த துடைப்பம் தன்னாலே உயிர்ப்பெற்று அறையை முழுமையாக சுத்தம் செய்தது.
துடைப்பம் தன் வேலையை முடிக்கவும் ரக்ஷிதா ஒரு தேநீர் கோப்பையுடன் அறையின் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

"வேலை முடிஞ்சுதா?" என ரக்ஷி வினவ

"இப்பொ முடிஞ்சிடும் பாரு" என கூறி தீரா தன் கைகளைத் தட்டினாள். ஒரு நொடியில் அறை பளீரென்று மாறியது.

இதனைப் பார்த்து "ம்ஹூம்" என பெருமூச்சு விட்டாள் ரக்ஷி.

"ஏன் இப்ப இப்பிடி பெருமூச்சு விடுற?"

"உனக்கென்ன கையை இப்படியும் அப்படியும் அசைச்சா வேலை முடிஞ்சிடும் . எனக்கு அப்படியா? வீட்டை கூட்டி சுத்தம் செய்யனும் ,துணி எல்லாம் துவைக்கனும்,சமைக்கனும்
இப்படி எத்தனை வேலைகளை அசராம செய்யனும் ?"

"ஹா..ஹா.."என சிரித்து விட்டு "உன்னை நினைச்சா பாவமா தான் இருக்கு. ஆனா என்ன செய்றது நீ உன் வேலையை செய்யாட்டி உன் அம்மாவோட அன்பான, பாசமான, மிருதுவான அடிகளுக்கு ஆளாகனுமே என கேலியாக கூறினாள்.
(எல்லா வீட்லயும் இதே கதை தான்)

"என்ன சொல்றது எல்லாம் என் தலைவிதி"என சலித்துக் கொண்டாள்.
"சரி விடு. இப்பொ போய் குளிச்சிட்டு வந்து இந்த டீ ய குடி, நான் என் செல்லம்ஸ் கிட்ட சொல்லி சாப்பாடு எடுத்துட்டு வரேன் "

"நீ ஏன் அவங்கள கஷ்டப்படுத்துற? நான் சமைக்கிறேன்"என தீரா கூறிய ஒரு நொடி தான் தாமதம் ரக்ஷி
கோபமாக மூச்சிரைத்து தீராவின் முன்னாடி வந்து "நீ சமைக்கிறத சாப்பாடுனு மட்டும் சொல்லாத. எனக்கு வரும் கோவத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது"

தீரா ஏதோ பேச வாய் எடுக்க "உனக்கு நல்ல ('நல்ல' என்ற வார்த்தையை அழுத்தி) சாப்பாடு வேணுமா ? வேணாமா ?"எனக் கேட்டாள்.
கேட்டவுடனேயே வேகமாக தலையை ஆட்டினாள்.

"அப்போ ஒழுங்கு மரியாதையாக குளிச்சிட்டு வந்து இந்த டீ ய குடி"என அதட்டி விட்டுச் சென்றாள் ரக்ஷி.

இவளும் சிரித்துக் கொண்டே குளித்து விட்டு வந்து தேநீரை எடுத்துக் கொண்டு ஜன்னல் ஓரமாக நின்று கருமேகங்கள் தூவும் மழைச்சாரலை இரசித்தப்படி இருந்தாள்.
அமைதியாக சென்ற தன் வாழ்வில் வரப்போகும் திருப்புமுனையைப் பற்றி அறியாமல்.....

தொடர்வாள்...
-பிரசாத் கிருஷ்ணா-
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top