3 2 1
Episode venum
Episode venum
nyccமனதில் அரவிந்தனை நினைக்கத் தொடங்கி விட்டாலும், மேலே எப்படி அவனை அணுகுவது, அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றெல்லாம் திலோத்தமாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உதவுவது போல அர்ச்சனா வந்தாள்.
அர்ச்சனாவுக்குத் திலோவின் படிப்பு, வயது மற்றும் குடும்பத்தை வைத்து பார்த்தால், அவள் அரவிந்தனுக்குச் சரி வருவாள் என்றே தோன்றியது. அவளோடு பேசி அவளது விருப்பத்தையும் தெரிந்து கொள்வோம் என்றே வந்தாள்.
***********************************************************************************************************************
வைதேகியும் அர்ச்சனாவும் தான் பேசிக் கொண்டு இருந்தனர். பொதுவான பேச்சுவார்த்தை தான். அர்ச்சனா என்ன செய்கிறாள்? அவர்கள் குடும்பத்தில் யார்யார் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
சிறிது நேரம் சென்றுதான் திலோ வாய் திறந்தாள். “அரவிந்தன் சார், இன்னைக்கு இருக்க மாட்டாங்களே... நீங்க வந்திருக்கீங்க, லீவ் போட்டிருக்கங்களா?” என்றாள்.
“இல்லை அரவிந்தனுக்கு நான் வந்ததே தெரியாது. இந்தப் பசங்களை இங்க இருக்கப் பார்கல விளையாட வைப்போம்ன்னு வந்தேன்.”
**********************************************************************************************************************
பல நேரம் இவள் வீட்டில் தான். ஆனால் சில நேரம் அவர்கள் வீட்டிலும். மாலை வேளையில் அர்ச்சனாவும் மகனை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிடுவாள்.
அதுவம் அரவிந்தன் விடுமுறை நாள் அன்று கண்டிப்பாக அங்கேதான் இருப்பார்கள்.
“அன்னைக்கு ஒருதடவை பார்த்ததுக்கே இப்படியா?” அரவிந்தன் அர்ச்சனாவிடம் சந்தேகமாகக் கேட்க, அவளும் திலோவும் ஒருவரையொருவர் பார்த்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டனர்.
“ஹே என்ன நடக்குது இங்க? எனக்குத் தெரியாம ரெண்டு பேரும் எதுவும் பண்றீங்களா?”
*****************************************************************************************
மாலினி அரவிந்தனின் முதல் மனைவி. அரவிந்தனுக்கு வாழ்க்கையில் சொர்க்கத்தையும் காட்டி இருக்கிறாள், அதே போல நரகத்தையும் காட்டியவள்.
திலோத்தமாவுக்கு ஏனோ அவன் முதல் மனைவியைப் பற்றிப் பேசுவதில் விருப்பம் இல்லை. முதல் மனைவியோடு அவனது வாழ்க்கை முடிந்து விட்டது. இனி கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதால்... என்ன ஆகப் போகிறது? அதுவும் அவனின் கடந்த காலம் தனக்குத் தேவை இல்லை என நினைத்தாள். அதனால் பேச்சை மாற்றினாள்.