P4 - இதயக் கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

Wish you all a very happy New year. May this New year brings you long lasting happiness :love: Have a great year (y)

Will come with the epi tomorrow.

எழு மணிக்குத்தான் பஸ் தேனிக்கு சென்றது. பேருந்து நிலையத்தில் இவர்களுக்கான வண்டி காத்திருந்தது. அதில் ஏறி அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றி காலை உணவை முடித்துக் கொண்டு மூணாறு செல்லக் கிளம்பினர்.

மூணாறு செல்லும் வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே சென்றனர். ஜீப்பில் மலை பயணம் புது அனுபவமாக இருக்க, வண்டி ஓட்டுனருக்கு எல்லாம் இடங்களும் அதைப் பற்றி தகவல்களும் அத்துப்படி. அதனால் ஒரு இடம் விடாமல் பார்த்துக்கொண்டே சென்றனர்.

ஒரு இடத்தில் மதிய உணவையும் முடித்துக் கொண்டவர்கள், இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு நான்கு மணி போலத்தான் அவர்கள் தங்க இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.
***************************************************************************************************************

தனியாக அவர்கள் இருவரும் இருக்கும்போது, “மசாஜ் பண்ணி விடுறது பொண்ணுங்கலாம். தெரிஞ்சா நீ என்னைக் கொல்ல மாட்ட அதுதான் திரும்ப வந்திட்டேன்.” என்றான் வெற்றி.

“ஓ எனக்காக வந்துட்டீங்க இல்லைனா பண்ணி இருப்பீங்க.”

“உனக்கு பிடிக்காது அதுதான் வந்திட்டேன். இல்லைனா பண்ணி இருப்பேனே..” என்றான் வெற்றி. அவன் வீம்புக்கு பேசுகிறான் என புரிந்து ஆதிரை அமைதியாக இருந்தாள்.

“நீ உன் புருஷனுக்கு மசாஜ் பண்ணி விட மாட்ட...”

“குப்புற போட்டு ஏறி நின்னு நங்கு நங்குன்னு வேணா மிதிக்கிறேன்.”

“எதோ ஒன்னு பண்ணி விடு.” என்றான் வெற்றி சிரிப்பை வாயிக்குள் அடக்கியபடி.

விக்ரம் ஒரு மணி நேரம் சென்று வர, “பள பளன்னு இருக்கியே டா... நானும் பண்ணி இருக்கலாமோ...” என்றான் வெற்றி.

“எப்போவோ ஒரு தடவைதான் இது போல வரோம். வந்த இடத்தில காசுக்காக பார்த்திட்டு இருக்காம, நீங்களும் பண்ணி இருக்கலாம்.” என வனிதா சொல்ல,

“நாளைக்கு ஒருநாள் இருக்கு இல்ல. பார்க்கலாம்.” என்றான் வெற்றி. ஆதிரை அவனை முறைக்க, “மசாஜ் பண்ணி விட ஆம்பிளைங்களும் இருக்காங்க. இன்னைக்கு இல்லை அவ்வளவுதான். நாளைக்கு இருப்பாங்கன்னு சொன்னாங்க.” என்றான் வெற்றி ஆதிரைக்கு மட்டும் கேட்கும்படி.
*************************************************************************************************************

“ஆமாம் டி என்னைக்கோ ஒரு நாள் குடிக்கிற என்னை, எதோ மொடா குடிகாரன் ரேஞ்சுக்கு பேசுற. வந்த இடத்தில கொஞ்சம் என்ஜாய் பண்ண விடு.”

“நான் சொன்னா கேட்கவா போறீங்க. ஆனா நீங்க வர்றதுக்குள்ள நான் தூங்கிடுவேன்.” என் ஆதிரை தனது அடுத்த மிரட்டலை தொடங்க.

“அதெல்லாம் நீ தூங்க மாட்ட.”

“நான் தூங்கலைனாலும் நீங்க குடிச்சிட்டு வந்தா, நமக்குள்ள எதுவும் நடக்காது.”

“ஏன் டி இந்த கொலைவெறி உனக்கு.”

“எனக்கு அந்த வாசனை பிடிக்காது.” ஆதிரை சொல்ல, வெற்றி அவளை முறைக்க, அப்போது விக்ரம் வேறு கைப்பேசியில் அழைக்க...

“நான் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். நீ அதுக்குள்ளே அருணை தூங்க வை.” என்றவன், ஆதிரையை கதவை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு சென்றான்.
**********************************************************************************************************

அறைக்கு திரும்பிய வெற்றி பத்து நிமிடங்களாகியும் குளியல் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. இரண்டு முறை பல் தேய்த்து, வாயை நன்றாக கொப்பளித்துக் கொண்டிருந்தான். வெளியே மகனோடு கட்டிலில் படுத்திருந்த ஆதிரைக்கு நன்றாக கேட்டது.

“தேவையா இதெல்லாம்....” என நினைத்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.

ஒரு வழியாக குளியல் அறையில் இருந்து அவன் வரும் சத்தம் கேட்டு, அதிரை கண்களை மூடிக்கொள்ள, வெற்றி உடைமாற்றி வந்தவன், “ஆதி நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும். உன்னை தூக்கிட்டு போக எல்லாம் என்னால முடியாது, ஒழுங்கா எழுந்து வா...” என்றான்.

உடனே பட்டென்று கண் திறந்தவள், “இல்லை நீங்க தூக்கிட்டு போனாத்தான் வருவேன்.” என்றாள் வீம்புக்கு.

“சரி கட்டில்ல ஏறி நில்லு தூக்கிறேன்.”

“சினிமால ஹீரோ ஹீரோயின்ன தூக்கிற மாதிரி ரெண்டு கையில தூக்குங்க.”

“ம்ம்... அது சினிமா, அவனுங்க கோடி கோடியா பணம் வாங்கிட்டு, வேற வழியில்லாம தம் கட்டி தூக்கிறானுங்க. என்னால முடியாது.”

“அப்படியா?” என்ற ஆதிரை, கட்டிலில் ஏறி நிற்க, வெற்றி அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டு அங்கிருந்த இன்னொரு கட்டிலுக்கு சென்றான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top