P17 Sangeetha Swarangal

Advertisement

Suvitha

Well-Known Member
வாவ்! பாவனாவுக்கு தம்பியோ, தங்கையோ ரெடி போலயே...

தன்னோட கடந்த கால வாழ்க்கை திலோ விரும்பா விட்டாலும் அவளுக்கு தெரியணும்னு அரவிந்தன் நினைப்பது...திலோவுக்கு தெரியாதது தன் வாழ்வில் இல்லை என்ற நிலைக்கு வந்துட்டாரா டாக்டர்...
 

laksh14

Well-Known Member
“நிஜமாவே எனக்கு உங்களை நினைச்சா ஆச்சர்யம் தான் அரவிந்த். நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லும் போது கூட முழு மனசா சொல்லலை. ஆனா கல்யாணம் பண்ண பிறகு என்னோட முழு மனசோட தான் வாழ்ந்தீங்க.”
“உங்களுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான். ஆனா அதுக்காக என்னை எப்போதும் நீங்க அலட்ச்சியமா நடத்தினதே இல்லை.”
“நான் என் கூட வேலை பார்க்கிற லேடீஸ் சொல்லி கேட்டிருக்கேன். அவரைப் பத்தி தான் யோசிப்பார், என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டார். எனக்கும் ஒரு மனசு இருக்கு, ஆசை இருக்குன்னு எல்லாம் நினைக்கவே மாட்டாருன்னு சொல்லி புலம்புவாங்க.”
“நான் கூட நினைச்சு இருக்கேன். இது உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம். அதனால நாம நிறைய விஷயத்துல விட்டுக் கொடுக்க வேண்டியது வரும்ன்னு.”
“என் பிரண்ட்ஸ் கூட சொன்னாங்க. ஏன் நீ இப்படி கல்யாணம் பண்ற? என்ன இருந்தாலும் இது உனக்கு முதல் கல்யாணம் மாதிரி பீல் இருக்காதுன்னு சொன்னங்க. ஆனா நான் அப்படி எதையும் இழந்ததா நினைக்கவே இல்லை.”
“நீங்க ஒருநாளும் எனக்கு ரெண்டாவது கல்யாணம், எதோ கல்யாணம் பண்ணிக்கனுமேன்னு பண்ணிகிட்டேன், வாழனுமேன்னு வாழறேன், அந்த மாதிரி நீங்க இருந்ததே இல்லை.”


************************************************************************************************************

திலோ தன்னிடம் வெளிப்படையாக இருக்கிறாள். நாம் அப்படி இருக்கிறோமா... அவள் எதோ என்னை மனதில் பெரிய அளவில் வைத்துக் கொண்டாடுகிறாள். ஆனால் தான் அவளிடம் உண்மையாக இல்லையோ... என அரவிந்தன் மனதிற்குள் தன்னையே வருத்திக்கொள்ள அராம்பித்தான்.
ஒரு வேளை மாலினிக்கு அவனிடம் உண்மையான அன்பு இருந்து, அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து இருந்திருந்தால்....பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருந்தால்... ஒருவேளை அவனும் மற்றவர்கள் போலத்தான் இருந்திருப்பான்.
அவனோ அன்புக்காக ஏங்கி போய் இருந்தவன், திலோ மாதிரி அன்பு காட்டும் மனைவி கிடைத்தால்... அவளை கண்ணுக்குள் வைத்து தாங்க மாட்டானா என்ன?


*********************************************************************************************************************
அரவிந்தனின் நடவடிக்கையில், என்ன ஆச்சு இவங்களுக்கு என திலோ குழம்பிப் போனாள். இன்னும் பிரசவத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில்...
“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? எனக்கு கஷ்ட்டமா இருக்கு. என்னால நிம்மதியாவே இருக்க முடியலை.” திலோ சொல்ல...
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் என்னோட முதல் திருமணத்தில தோத்து போயிட்டேன் திலோ.” என்றவன், “மாலினி இறந்து போறதுக்கு முன்னாடியே என்னை வேண்டாம், டிவோர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி இருந்தா? நான்தான் டிவர்ஸ் கொடுக்க ஒத்துக்கலை... அதுக்குள்ள அவளுக்கு விபத்து நடந்து இந்த மாதிரி ஆகிடுச்சு.” என்றான்.
haha.. precap supr
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top