P16 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Will come with the epi tomorrow.


வீட்டை எல்லாம் முழுவதும் சுத்தம் செய்த பிறகு, அவனுடைய தோள்பையில் அவனுடைய உடைகளை எடுத்து வைத்தவன், தனது குடும்ப படம் மற்றும் இன்னும் சில படங்களை மட்டும் நினைவுக்கு எடுத்துக் கொண்டான்.
உடை மாற்றி கைப்பேசி மற்றும் பர்ஸ் எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, தனது தோள்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
பக்கத்தில் அவனின் சித்தப்பா வீடு இருளில் முழ்கி இருக்க... தானியங்கி கதவு என்பதால்... கதவை இழுத்து மட்டும் விட, கதவு பூட்டிக் கொண்டது. ஏற்கனவே சாவியை கொண்டு போய் அந்த வீட்டில் வைத்து இருந்தான். பக்கவாட்டில் இருந்த வாயில் கதவை மெதுவாக திறந்தவன், யாருமற்ற சாலையில் நிதானமாக நடந்தான்.
சாலையில் வந்த ஆட்டோவில் ஏறி கோயம்பேடு வந்தவன், கிடைத்த பாண்டிச்சேரி வண்டியில் ஏறினான். அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு பஸ் கிடைப்பது எளிது. ரோஜாவை அழைத்து தான் வந்து கொண்டிருப்பதாக சொல்ல... ரோஜாவுக்கு நம்பவே முடியவில்லை.


******************************************************************************************************************

“ஏன் மா உனக்கு கஷ்ட்டம்? நம்ம சரோஜா அக்காகிட்ட சொன்னா இட்லி கொண்டு வந்திருப்பாங்களே...”
“அந்த இட்லியைதான் உங்க ஆளு ஒரு மாசமா காலையும் மதியமும் சாப்பிட்டிருக்கா... அது தான் பூரி சுட்டுக் கொண்டு வந்தேன்.”
“அப்படியா உனக்கு இட்லி அவ்வளவு பிடிக்குமா...” என அருள் ரோஜாவை பார்த்து குறும்பாக கேட்க...
பக்கத்தில் இருந்த கரண்டியை எடுத்து ரோஜா அவனை அடிக்க வர.... “ஒழுங்கா சோறு ஆக்கி சாப்பிடாம... பாதி ஆளு தான் இருக்க...கரண்டியை தூக்க எல்லாம் தெம்பு இருக்காது வச்சிடு.” என்றான்.
ரோஜா அவனை முறைத்துக் கொண்டே, “தனியா எனக்கு மட்டும் சோறாக்க பிடிக்கலை...” என்றாள்.
“தெரியும் நீ இப்படித்தான் பண்ணுவேன்னு... அது தான் தினமும் இட்லி கொடுக்க சொன்னேன். சரோஜா அக்காவுக்கு பணம் கொடுக்கணும்.”
“அதெல்லாம் நான் கொடுத்திட்டேன்.”
அருள் சாப்பிட்டு கைகழுவியவன், “இப்பத்தான் நான் வந்திட்டேன் இல்ல... ஸ்டெல்லாவை வேலை வாங்காம.... நீ சோறாக்கி வை... நான் மதியம் வரேன்.” என சொல்லிவிட்டுசென்றான்.
*****************************************************************************************************


“இங்க ஊருக்கு வந்திருக்கேன்.”
“சொல்லிட்டு போகணும்ன்னு தெரியாதா?”
“சொன்னா போக விடுவீங்களா... ஆளுக்கு ஒரு காரணம் சொல்வீங்க.”
“எப்ப வருவா?”
“வரேன் இப்ப என்ன அவசரம். நீயே பாட்டி தாத்தாகிட்ட சொல்லிடு. நானே பிறகு போன் பண்றேன். எனக்கு யாரும் போன் பண்ண வேண்டாம்.”
“சீக்கிரம் வந்திடு அண்ணா.” என சொல்லிவிட்டு பவித்ரா மனமே இல்லாமல் வைக்க... அருளுக்கு தங்கையிடம் கூட உண்மை சொல்ல முடியாத நிலை. தன் விதியை நொந்தவன், செல்லை அனைத்து வைத்தான்.
பவித்ரா வீட்டினருக்கு அழைத்து சொல்லிவிட்டு, மாதவனிடம் புலம்ப... “அவன் என்ன சின்ன குழந்தையா? இத்தனை நாள் தனியா இருந்திருக்கான். அவன் இருந்த ஊருக்கு போயிட்டு வர்றதுக்கு என்ன?”
“அவனை ப்ரீயா விடுங்க. நீங்க எல்லாம் இப்படி பண்றதுனால தான் சொல்லாம போய் இருக்கான்.” என்றான்.

******************************************************************************************************************
 

Joher

Well-Known Member
:love::love::love:

அருள் வந்துட்டான் வந்துட்டான் :love::love::love:
அவ இட்லி னாலே ஓடிடுவா போல...... நீ என்னடான்னா இட்லி கொண்டுவர சொல்லிருக்கலாம்னு சொல்லுறியே.......
நல்ல சமைச்சு போடுமா........ நீயும் சாப்பிடு.....

மாதவா சூப்பர்டா நீ :love::love::love:
ஒரு ஆணின் மனசு ஆணுக்குத்தான் தெரியும் போல :p

உன் வீட்டுக்காரன் கண்டுபிடுச்சுட்டான் பாரு........ நீங்க பண்ணுற வேலையில் தான் சொல்லாமல் போயிருக்கான்னு......
ஏம்மா பவித்ரா இனியாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இரு.......
ரேஷ்மாவை தள்ளி நிறுத்திக்கோ.......

கல்யாணம் எப்போ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா அருள் ரோஜாவிடம் வந்துட்டான்
சூப்பர்
இந்த பவித்ரா லூசு எதுக்கு புலம்புறாள்?
மாதவன் ஒருத்தன்தான் அருளை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கான்
இனி அருள் ரோஜாவை கல்யாணம் செஞ்சுட்டு சென்னைக்கு போவானா?
இல்லை இங்கேயே இருந்துடுவானா,
ரம்யா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top