P16 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“திமிரு டி உனக்கு. உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.” என ஜெய்யும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை ஜெய் எழுந்த போது வெண்ணிலா அறையில் இல்லை. அவன் எதிர்பார்த்தது தான்.

சும்மாவே அப்பா தனியாப் போக சொன்னார், இப்ப இவளை அடிச்சது வேற தெரிஞ்சது, என்னை மட்டும் தனியா போக சொன்னாலும் சொல்லுவார். எல்லார் முன்னாடியும் இவ எப்படி இருப்பா தெரியலையே என நினைத்தபடி ஜெய் அலுவலகம் செல்ல கிளம்ப ஆரம்பித்தான்.

மாமாக்கள் இருவரின் முன்னிலையில் நைட்டியில் செல்லக் கூடாது என அவள் அம்மா சொல்லியிருப்பதால், வெண்ணிலா குளித்து சேலை அணிந்து கீழே செல்வது தான் வழக்கம்.

இன்று குளிக்காமல் சுடிதார் மாற்றிக் கொண்டு கீழே வந்துவிட்டாள். காலை சமையலில் நின்று உதவியவள், ஜெய் கீழே வந்ததும், “அத்தை, நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” என மாடிக்கு சென்று விட... பிறகே மகன் கீழே இருப்பதை அமுதா கவனித்தார்.

“அவ லேட்டா எழுந்தா அதுதான் குளிக்காம கீழே வந்திட்டா... குளிச்சிட்டு தான் அவ சாப்பிடுவா, நீங்க எனக்கு எடுத்து வைங்க.” என்றதும், அமுதா உணவு கொண்டு வந்து வைக்க, ஜெய் உண்ண ஆரம்பித்தான்.

அவன் மட்டும் தனியாக உட்கார்ந்து உண்ணுவதை காமாக்ஷி ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே மாடிக்கு சென்றார். கணவன் அலுவலகம் செல்லும் வரை வெண்ணிலா அவனுடன் தானே இருப்பாள்.

ஜெய்க்கு அந்தப் பார்வை புரியாமல் இல்லை. ஆனால் கைப்பேசியை பார்த்துக் கொண்டு உண்டு முடித்தவன், அப்படியே அலுவலகம் சென்றால் சந்தேகம் வரும் என மாடிக்கு செல்ல, வெண்ணிலா குளித்துக் கொண்டிருந்தாள்.

*******************************************************************************************

மற்றவர்கள் கூட அவளை அப்படி நினைக்கலாம். ஆனால் ஜெய் கேட்டது உண்மையாகவே வலித்தது. அவனுடன் எப்படி வாழ்கிறேன் என அவனுக்கு புரியாதா.. இப்படியே விட்டால் மீண்டும் இதையே கேட்டு வைப்பான். ஒரு தடவை இப்படி இருந்தால்தான் மீண்டும் இப்படி பேச மாட்டான் என நினைத்தாள்.

அன்று ஜெய் அலுவலகத்தில் இருந்து நேரமே வீட்டுக்கு வந்துவிட்டான். மனைவிக்கு பிடித்த நொறுக்கு தீனிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

வெண்ணிலா அன்றுதான் பூஜை அறையை தீவிரமாக சுத்தம் செய்து கொண்டிருந்தாள். “வந்து சாப்பிட்டு பண்ணு.” என்றால், வருகிறேன் என குரல் மட்டும் வரும். ஆனால் ஆள் வருவதாக காணோம். அமுதா காமாக்ஷி எல்லாம் சொல்லியும் கேட்கவில்லை.

வெண்ணிலா முழுவதும் ஒதுங்க வைத்து, பூஜை சாமான்கள் எல்லாம் விளக்கி விட்டு வரும் பொழுது, அவளுடைய பங்கு அப்படியே இருக்க... மற்றவர்களுக்காக அதை எடுத்து கொரித்தவள், கணவன் எங்கே என்று நோட்டம் விட, ஜெய் அங்கு இல்லை.

கணவன் அங்கு இல்லாதது ஏமாற்றமாக இருந்த போதிலும், மற்றவர்களுடன் பேசும் சாக்கில் அதை மறைத்துக் கொண்டாள்.

***********************************************************************************************

“நீங்க அப்ப ஒண்ணுமே பண்ணலை. நீங்க ரொம்ப நல்லவர். நான்தான் தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்கேன்.” வெண்ணிலா சொல்ல,

“நான் அப்படி சொல்லலை. என் மேலத்தானே கோபம் அது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் ஊருக்கே தெரிய வேண்டாம்.”

ஜெய் சொன்னதற்கு வெண்ணிலா பதில் சொல்லாமல் இருக்க, “நீ என்ன பண்ணாலும் நான் பொருத்து போவேன்னு நினைக்காத. காலையில நான் சாப்பிடாம கிளம்பிப் போக எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். என் கோபத்தை கிளறாதே சொல்லிட்டேன்.”

“கோபம் வந்தா என்ன என்னைத் திருப்பி அடிப்பீங்களா? அடிக்கிறதுன்னா அடிச்சுக்கோங்க எனக்கு ஒன்னும் கவலை இல்லை.”

“என்னை எதோ கொடுமைக்காரன் மாதிரி பேசுற, நான் அடிச்சது இல்லை, நான் அப்படி கேட்டது தான் உனக்கு கோபம்.”

“நீயே சொல்லு, கல்யாணத்துக்கு முன்னாடி நான் உனக்காகத்தான் வருவேன். ஆனா நீ என் கூட பேசக் கூட யோசிப்ப.”

“அதுல உன் தப்பு ஒன்னும் இல்லை. சின்ன வயசுலேயே உனக்கு கரண் தான்னு முடிவு பண்ணி வச்சிருந்தாங்க. நீ உன் வீட்ல சொல்றது தான் கேட்க முடியும்.”

“கரணோட கல்யாணம் நின்னதும், நீ சாகிற அளவுக்கு போனதா, கல்யாணத்துக்கு பிறகு உன் பாட்டி சொல்லி கேட்டிருக்கேன். அப்போ எல்லாம் என் மனசு என்ன பாடுபட்டுச்சு தெரியுமா?”

“இந்தப் பொண்ணு மனசுல என்ன இருந்துச்சுன்னு கேட்காம கல்யாணம் பண்ணிக்கிடோமேன்னு எவ்வளவு தவிச்சு போனேன் தெரியுமா? நான் இதைப் பத்தி வேற யார்கிட்டயும் பேச முடியுமா? உன்கிட்ட கூட பேச முடியலை.”
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இவன் பெரிய வில்லா இருப்பான் போல........
இப்படி பேசுறான்..... அடிக்க வேற செய்திருக்கான்.....
அப்பா மேலே எவ்ளோ பயம் அவனை மட்டும் தனியா போக சொல்லிடுவாருன்னு.....
நீ அடிச்சது தெரிஞ்சா உனக்கு அது தான்.......
அதென்ன பொண்டாட்டின்னா உடனே கையை நீட்டுறது???
இதுல காத்திருந்து கட்டிகிட்டானாம்.......
ரொம்ப தாப்போ பண்ணுற........
உனக்கேத்த வில்லு தான் அவா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top