P15 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

As per your wish, I'm extenting this story may be three or four more updates. Will come with the epi in the evening :):)



ஞாயிறு தான் விருந்து இவர்கள் சனிக்கிழமையே சென்றுவிட்டனர். இரயிலில் தான் கோயம்புத்தூர் வரை சென்றனர். உடன் வைதேகி, அர்ச்சனா முகிலன் மற்றும் புவன். எல்லோரும் சேர்ந்து ரயிலில் செல்வதே மகிழ்ச்சியாக இருந்தது.
விடியற்காலை கோயம்பத்தூரில் சென்று இறங்க.... அங்கே ரயில் நிலையத்தில் இவர்களுக்காக அரவிந்தனின் சித்தப்பா மகன் வீரா காத்திருந்தான்.
ரயிலில் இருந்து இறங்கியவர்களை அவன் வரவேற்க... “டேய் வீரா எப்படி இருக்க? நானே வரேன்னு தானே சொல்லி இருந்தேன். நீ ஏன் வீணா அலையற?” என்றான் அரவிந்தன்.
“நீங்க என்ன அண்ணா அடிக்கடியா வர்றீங்க. அதுவும் அண்ணி பாப்பா எல்லாம் வர்றாங்க. நம்ம வண்டியிலேயே ஊருக்கு போயிடலாம்ன்னு வந்தேன்.” என்றவன், “வாங்க அண்ணி நல்லா இருக்கீங்களா.” என்றான் திலோவிடம்.
வீரா சட்டென்று உறவு முறை சொல்லி அழைத்து விட... திலோத்தமா தான் திணறிப் போனாள்.
“நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?” என ஒருவழியாக கேட்டு விட்டாள்.
“நல்லா இருக்கேன் அண்ணி. எல்லோரும் வாங்க.” என அழைத்துக் கொண்டு அவனுடைய காருக்கு சென்றான். இன்னோவா தான் எடுத்து வந்திருந்தான். அதனால் எல்லோருக்கும் தாராளமாக இடம் இருந்தது.


***************************************************************************************************

“சாப்பிடு மா...” காமாட்சி சொல்ல... “இதோ வரேன் அத்தை.” என்ற திலோ பாவனாவை தேடி வெளியில் சென்றாள்.
தெருவில் தான் பாவனா விளையாடிக் கொண்டு இருந்தாள். திலோவைப் பார்த்ததும் விரைந்து வந்து அவள் இடையை சுற்றி அனைத்தபடி, “என்னோட அம்மா.” என்றாள் அவளின் தோழிகளிடம். திலோ பாவனாவின் தோழிகளைப் பார்த்து புன்னகைத்தவள், “நீ குளிச்சிட்டு சாப்பிட்டு வந்து விளையாடு.” என்றாள்.
“நான் விளையாடனும்.”பாவனா வர மறுக்க, திலோ விடவில்லை. வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.
கீழே இருந்த குளியல் அறையில் பாவனா குளித்துவிட்டு வர... திலோ அவளுக்கு உடை அணிவித்து தலை வாரி பொட்டு வைத்து விட்டாள்.

வீட்டினர் அவள் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

*******************************************************************************************************************

“வித்யா அக்கா வா...” என வீரா அழைக்க...
“நான் எதுக்கு, என்னைத் தான் கட்டி கொடுத்து அனுப்பிட்டீங்க இல்ல... வீட்டு மருமகள் தான் வேலைப் பார்க்கணும், அதோ உன்னோட புது அண்ணி இருக்காங்க பாரு. அவங்களை கூப்பிடு.” என்றாள் வித்யா திலோவை காட்டி,
“ஏன் என் பொண்டாட்டி பண்ண மாட்டாளா... வா திலோ...” என அரவிந்தன் அழைக்க... உள்ளுக்குள் கலக்கமாக இருந்தாலும், கணவன் மீது இருந்த நம்பிக்கையில் திலோ எழுந்து சென்றாள்.
மாட்டேன் என்று சொல்லாமல் அவள் எழுந்து செல்வதே எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்க... காய்ந்து கொண்டிருந்த எண்ணையில் வீரா ஒவ்வொன்றாக போட்டவன், கிண்டுங்க அண்ணி என்றான்.
திலோவினால் அந்தக் கரண்டியை தூக்க கூட முடியவில்லை. என்ன செய்வது என அவள் யோசிக்கும் போது, பின்னால் இருந்து கரண்டியோடு சேர்த்து அரவிந்தன் அவள் கையைப் பிடித்து கிளற ஆரம்பித்தான். திலோ லேசாக திரும்பி தன் கணவன் முகம் பார்க்க... அரவிந்தன் அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.
இன்னொரு பக்கம் கரண்டி எடுத்து வீராவும் கிண்ட ஆரம்பிக்க... இப்படின்னா நல்லாவே சமைக்கலாமே என திலோ மகிழ்ந்து போனாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top