P13 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“ஆமாம், அவங்க அப்பாவை பத்தி சொன்னா... இவகிட்ட ரொம்ப பாசமா இருப்பாராமே? இன்னொரு குழந்தை கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம்?” அரவிந்தன் சொல்ல,
“அப்படி சொன்னாளா இவ.” என்ற வைதேகி கொலை வெறியுடன் திலோத்தமாவை பார்த்தவர்,
“அவர் எங்க வேண்டாம்ன்னு சொன்னாரு. இவதான் சொல்ல வச்சா... இவளைத் தவிர வேற யாரையும் அவர் தூக்க கூடாது, கொஞ்சக் கூடாது. இன்னொரு குழந்தை வந்தா, மகள் மனசுல ஏங்கிப் போயிடுவான்னு, இவங்க அப்பா பழியை அவர் மேல போட்டுகிட்டார்.”
வைதேகி எல்லாவற்றையும் தன் மருமகனிடம் பிட்டுபிட்டு வைக்க....
“ஹே... நீ என்கிட்டே என்ன சொன்ன?” அரவிந்தன் சிரிப்பை அடக்கியபடி கேட்க,
“எங்க அப்பா என்கிட்டே அப்படித்தான் சொன்னார்.” என்றாள் திலோ அப்பாவியாக.

******************************************************************************************************************

அவனின் கன்னக் குழியும், பல்வரிசையும் தூரத்தில் இருக்கும் போதே திலோவை வசியம் செய்யும், இன்று இவ்வளவு அருகில் நிற்கும்போது கேட்கவும் வேண்டுமா... ஆர்வம் தாங்காமல், அவன் கன்னக் குழியை தனது சுட்டு விரலால் திலோ தொட்டுப் பார்க்க...அரவிந்தனின் நிலை சொல்லவும் வேண்டுமா?
அவள் விரலால் தான் தொட்டாள். இவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க... திலோ அவனுக்கு மறுபக்க கன்னத்தையும் காட்ட... அங்கேயும் அழுத்தமாக முத்தமிட்டான்.
நிமிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவன்,“பார்க்க அமுல் பேபி மாதிரி இருக்க. ஆனா ரொம்ப அட்டகாசம் பண்ணுவ போலையே...” என்றான் கண்களில் குறும்பு மின்ன.
“ம்ம்... ஆமாம் அப்படித்தான் இப்ப என்ன?” என திலோத்தமா அசராமல் கேட்க, அரவிந்தனின் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.


***********************************************************************************************************************

“அவங்க மட்டும் பேசலை, ஏன் உங்க தங்கை வித்யா கூடத்தான் பேசினாங்க. எனக்கு அது தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?”
அவள் சொன்னதை கேட்டு அரவிந்தன் திகைத்துத்தான் போனான். ஆனால் எப்படி தெரியும் என ஆச்சர்யப்படவில்லை. பாவனாதான் சொல்லி இருப்பாள் என தெரியும்.
“இப்படியே ஆளாளுக்கு எதாவது பேசி வைக்கட்டும். அவ என்கிட்டே இருந்து விலகி தான் போவா... அப்ப எல்லோருக்கும் சந்தோஷமா?”
 

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, திலோ?
நீயி இவ்வளவு பெரிய
தில்லாலங்கடியா?
அதான் உன்னை மாதிரியே
உன்னோட பொண்ணு
பாவனாவும் அப்பா மீது
ஓவர் பொஸஸிவ்வாக
இருக்காள்

சின்னப்பெண் பாவனாவின்
நெஞ்சிலே வித்யாவைப்
போல நஞ்சு கலந்த
இன்னொரு புண்ணியவதி
யாருப்பா, ரம்யா டியர்?

சொக்காரங்களைப் பார்க்கப்
போய் திலோவுக்கு சோதனை
வந்திடுச்சோ?
 
Last edited:

தரணி

Well-Known Member
ஐயோ திலோ நீ ரொம்ப நல்ல பொண்ணு ..... மாலினி பத்தி நீ பெருசா எதுவும் எடுத்துக்க மாட்டேன்னு நினச்சா நீ என்ன உங்க அப்பா வையே வேற குழந்தை வேண்டாம்னு சொல்லி வச்சி இருக்க.... அடேய் அரவிந்த் உன் நிலைமை பாவம் தான் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top