Nin mel Kaathalagi Nindraen P3

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"டேய் மகேஷு வாடா, இதோ பாரு உன்ன அடிச்சவ. என்ன பன்னலா சொல்லு ? இது நம்ம ஊரு. ரோடுல நடமாட்டமும் கம்மியா இருக்கு" என மகேஷின் மாமா மகன் வினவ,

மகேஷ் தயங்கிக்கொண்டே, "சுத்தி நிறையப் புள்ளைங்க இருக்கே. ஏதாது பிரச்சனை ஆகிடுச்சுனா ?" என வினவ,

அந்தக் கூட்டமோ சிரித்துக்கொண்டே, "இதுவரைக்கு இவளுங்கள எம்புட்டு இம்ச பண்ணிருப்போம். ஒருத்திக்கும் வாய் துறக்க தைரிய கிடையாது. நீ சொல்லு என்ன பன்னலா" என அவர்கள் கூற, மகேஷின் கண்ணில் பழிவாங்கும் எண்ணம் துளிர் விட்டது.

"நேத்து அவ ஓவரா படக் காட்டுனா இல்ல? அடிச்ச அவ கை என் கைய ஒருதடவை அன்பா பிடிச்சிட்டு அவ என்னோட ஆளுன்னு சொல்லனு. இத பண்ண வைக்க முடியுமா ?" என வினவ, "இதெல்லா தூசு. இப்ப பாரு" என அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன், கதிரவன் எங்கே என்று சுற்றி தேட கதிரவன் இல்லாததால், "அப்பாடா அந்த நல்லவே இங்க இல்ல. இனி ஆட்டத்த ஆரம்பிக்கலா" எனக் கூறி, வந்துகொண்டிருக்கும் பெண்கள்முன் சென்று ஒருவன் சட்டை காலரை மேல் தூக்கிவிட்டபடி பந்தாவாக நின்றான்.

-----------------------------------------------------------------------------------------------------------------

கதிரவன் இதில் வருவான் என்று எதிர்பார்க்காத சிலரும் ஓட்டம்பிடித்து ஊருக்குள்ளிருந்த ஒரு சிலரிடம் தெரிவிக்க, எத்தனை வேகத்தில் செய்தி பரவியதோ நிமிடத்தில் நான்கைந்து பெரியவர்களும் சில வீட்டு பெண்களும் வர, குழுமியிருந்த இளைஞர் கூட்டத்தை சற்று தள்ளி சென்றுக்கொண்டிருந்த வழிப்போக்கர்களும் பிரிக்கத் தொடங்கினர்.

வந்தவர்களுள் மகேஷின் மாமாவும் அடக்கம். வந்தவர் சிவந்திருந்த அவன் கைகளைப் பார்க்க குச்சியுடன் நின்றிருந்த கதிரவனே அவரின் கண்களுக்கு வில்லனாகத் தெரிந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top