"நீ என்பது யாதெனில்... "
பெண்ணின் மனம் அவள் கொண்ட மண்ணின் வரம்.
கல்யாணம் நிலைத்திருக்க காதல், அன்பு, பாசம், ஒற்றுமை, நம்பிக்கை எல்லாம் சேர்த்து சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும் என்பது இன்றியமையாது என்பதை கட்டியமை அருமை.
இருவர் குணமும் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள, புரிந்து அதற்கேட்ப நடந்துக்கொள்ள கட்டாயம் சகிப்புத்தண்மை வேண்டுமே தான்.
சுந்தரி, யார் பாசமும் கிடைக்காது வளர்ந்தவள். அதை கொடுக்கவோ பெறவோ தெரியாது இருந்தவள்...
கண்ணன்,படிப்பவனை திருமணம் செய்துவைத்தால் அதுவும் சுமாரான பெண்ணை... ஆண் என்பவன் முதலில் மயங்குவாதென்னவோ அழகுக்குத்தான்.அதை யாரும் மறுத்திட முடியாது. பார்க்க பார்க்க பிடித்தம் வந்து வாழும் அநேகர் இடையில் பலத்த மனதில் ஏற்பட்ட பிணைப்பு இருந்தால் வெற்றிதான்
இங்கு ரெண்டு பேருமே இருவரை பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் ஒன்றிணைந்து பிரிந்து மீண்டும் சேர்கின்றனர்...
மனைவியை தனக்கு பிடிக்காவிட்டாலும், மனைவியோடு தனக்கு பிணக்கு ஏற்பட்டாலும், அவளை மூன்றாமவனிடம் விட்டுக்கொடுக்காதவனே சிறந்தவன்
அதையே இங்கு கண்ணன் செய்ய அவள் உள்ளம் அவன் மேல் முற்றிலும் செல்கிறது.
கட்டிக்கொண்டு கொஞ்சிக்கொண்டு திரிபவனெல்லாம் மனைவியை விட்டுக்கொடுக்க இவன் அவளுக்கு ஒசத்தி தான்.
அவள் ஆளுமை கண்டு வியந்தவன் காதலில் விழ வில்லை எனினும் அவளின் உள்ளம் புரிந்து நடக்க அதுவே அவளுக்கு அவன் மேல் காதலாய்.
அவள் குணம் அதையே அவள் மறுபாடின்றி மருவிம்பமாய் வெளிப்படுத்த அது அவனுக்கு பிடிக்காது போகிறது. பிறகே உணர்கிறான் அவளின் அனைத்து வெளிப்பாடுகளும் அவனிடமே என்று.
அவன் மனதையும் படிக்க முனைந்தவள் வெற்றியும் காண்கிறாள்...
சுந்தரி அவள் கொண்ட காதலை திமிரோடு நிமிர்வாய் வெளிப்படுத்த, கண்ணன் அவன் பெயருக்கேட்ப அவள் நிஜக் காதலை கர்வமாய் ஏற்றுக் கொண்டான்...