Naan ini Nee - Precap 36

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“மிதுன்... நீ ரொம்ப பேசுறடா...” என்று சக்ரவர்த்தி குரலை உயர்த்த,

“நீங்க பண்ணது மட்டும் நியாயமா ப்பா...” என்றான் அவன்.

“டேய்..!!!” என்று சக்ரவர்த்தி கத்த,

“எப்பவும் உங்களோடவே தான் இருந்தேன். ஆனா என்னிக்குமே நான் உங்களுக்கு பெருசா தெரிஞ்சதே இல்லை. இதோ இவன்.. இவன் என்னிக்குமே அவனோட இஷ்டத்துக்கு தான் இருப்பான். ஆனா அவன் தான் எப்பவும் உங்களுக்கு பர்ஸ்ட்..” என்று தீபனைக் காட்டிக் கூற,

உஷா இதனை எல்லாம் வேதனையாய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

பிள்ளைகளுக்கும் அரசியல் வேண்டாம் என்று எத்தனையோ முறை சக்ரவர்த்தியிடம் சொல்லியிருப்பார் உஷா..

அப்போதெல்லாம் “அவனுங்களா விரும்பி செய்றானுங்க விடும்மா..” என்றிடுவார்.

ஆனால் இப்போது...!!

“புரிஞ்சுதான் பேசுறியா...” என்று சக்ரவர்த்தி அப்போதும் பெரிய மகனுக்கு புரிய வைக்கும் நோக்கில் பேச,

“எனக்கு எதுவுமே புரியவேணாம் ப்பா..” என்றான் மிதுனும் உறுதியாய்.

-----------------------------------------------

அனுராகாவும், தீபன் சக்ரவர்த்தியும் அலைபேசியில் பேசுவது என்பது கூட அரிதாகிப் போனது இந்த மூன்று தினங்களில். மறுநாள் விடிந்தால் தேர்தல். அதற்கு மறுநாள் அவர்களின் நிச்சயம்.

தாரா இதனை சொல்லவுமே அனுராகாவிற்கு அப்படியொரு எரிச்சல்.

“ஹவ் செல்பிஷ்...??” என்று கேட்க,

“இது ஃபுல் அண்ட் ஃபுல் மினிஸ்டரோட முடிவு...” என,

“மாம்.. அங்க சிச்சுவேஷன் எதுவுமே சரியில்லை.. அப்படியிருக்கப்போ..” என்று அனுராகா பேசவர, தாராவின் பார்வை கண்டு தீபனுக்கே அழைத்துவிட்டாள்.

அவளுக்குத் தெரியும் இப்படியான நேரங்களில் நாம் தோள் தான் கொடுக்க வேண்டுமே தவிர நெருக்கடி அல்ல.

சந்தோசமாய் நிச்சயம் செய்துகொள்ளும் தருணமா இது??!!

-------------------------------------------------------

‘கைதாகிறாரா தீபன் சக்ரவர்த்தி....’

கொட்டை எழுத்துக்களில் அனைத்து சானல்களிலும் செய்திகள் வந்தவன்னம் இருக்க, சக்ரவர்த்தி டெல்லியில் இருக்க, இங்கே சென்னையில் ஒரே பரபரப்பு.

சக்ரவர்த்தி இல்லத்தின் முன், மீடியா ஆட்கள் குவிந்து கிடக்க,

“இன்கம்டாக்ஸ் ரெய்ட்ல பல பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கு.. தேர்தலுக்கு முதல் நாள் இது நடந்தது அப்படின்னாலும், தேர்தல் முடிஞ்சு மூன்று நாட்கள் வரைக்கும் கூட இந்த பிரச்சனை முடியலை.. ஏகப்பட்ட வரி ஏய்ப்புகள் இருக்கிறதா செய்திகள் வெளி வருது..

அப்படியிருக்க, ‘அம்மாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பொறுப்பு எல்லாம் என்கிட்டே தான் இருக்கு.. நடந்தது எதுக்கும் அம்மாவிற்கு சம்பந்தம் இல்லைன்னு.. தீபன் சக்ரவர்த்தி சொல்லியிருக்கார்...’

இதுமட்டும் இல்லாம, பலநாட்களா அனைவரையும் யோசிக்க வைத்த பிரபல தென்னிந்திய மாடலின் மரணம்.. காவல்துறைக்கு வலுவான ஆதாரம் கிடைச்சிருக்கிறதா சொல்றாங்க.. கைதாவாரா இல்லை சரணடைவாரா??!!” என்று மைக் பிடித்து பேசிக்கொண்டு இருந்தாள்.

 

banumathi jayaraman

Well-Known Member
வீட்டிலிருக்கும் உஷா பொண்டாட்டி சொன்னாக் கொஞ்சம்
கேட்டுக்கணும், மினிஸ்டர் சக்ரவர்த்தி
இப்போ பாருங்க புலி வாலைப் பிடிச்ச கதையாயிடுச்சே

தீபன் கைது படலமும் ஒரு எலக்க்ஷன் ட்ரெண்ட் டிராமாவா, சரயு டியர்?

யாருய்யா அந்த மாடலைப் போட்டு தள்ளியது?
விடாது கறுப்பு மாதிரி மாடலின்
சாவு தீபனையே குறி வைச்சு
கட்டம் கட்டுதே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

election க்கு அடுத்த நாள் நிச்சயமா???

இப்போ தீபன் கைதாக போறானா???

சரயு டிவி பார்த்து பார்த்து இங்கேயும் மைக் பிடிச்சு கூவவுடுறீங்களே :p:p:p
எப்படியும் உண்மையை சொல்லப்போறதில்லை.......
ஆனாலும் மூச்சு பிடிச்சு கூவுவாங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top