Naan Ini Nee - Precap 32

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
“அப்படி செய்யவேண்டாம்.. ஆனா என்னோட வந்திருக்கலாம்...” என்றாள் பிடிவாதமாய்.

“உன்னோட எங்க??!! ம்ம் இப்படி நம்மோட அவங்களும் உக்காந்திருப்பாங்களா.. யோசிச்சு பேசு நீ..”

“ம்ம்ச் தீப்ஸ்.. நான் வந்து இத்தனை நாளாச்சு தானே.. இங்கதான் இருக்கேன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும் தானே.. வந்திருக்கலாம் தானே..” என, இதற்கு அவனால் பதில் சொல்லிட முடியவில்லை.

அவனிடம் கூட பேச்சு வாங்கினார் தானே தாரா..!!

ஆனால் தாராவும் சும்மா இருந்திடவில்லை. தினம் மகளுக்கு அழைத்தார். நீரஜாவை விட்டு பேச வைத்தார். எதற்கும் அனுராகா அசையவில்லை. இப்போதோ தொடர்ந்து விடாது அழைப்பு விடுக்க, தீபன் தான் எடுத்தான்.

மகளின் குரல் கேட்கும் என்று “அனு...” என்றழைக்க,

“நான் தீபன்..” என்ற அவனின் குரல் அவருக்கு திகைப்பத் தான் கொடுத்தது..

‘இருவரும் ஒன்றாகவா??!!!’

-----------------------------------

மிதுனுக்கு இது ஒருவகை மெண்டல் டார்ச்சராய் இருந்தது. அவனின் முயற்சிகள் எல்லாம் எதுவும் வெற்றியடையவில்லை. இப்போது முற்றிலும் புதிய ஆட்கள் அவனின் பாதுகாப்பிற்கு. அவர்கள் பேசுவது ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல, தமிழும் அல்ல..

என்னவோ ஒரு புதிய மொழி..!!

ஒருவேளை வந்தவர்களில் ஒருவனை இவன் தன் வசம் செய்ய நினைத்தது எதிராளிக்குத் தெரிந்துபோனதோ என்று யோசித்தான்..

இவன் என்ன சொன்னாலும் இப்போது இருப்பவர்களுக்கு அது புரியவே இல்லை. மூன்று வேலையும் உணவு வந்தது.. பின் அவ்வப்போது காபி, டீ, ஜூஸ் என அதுவும் நேரம் தவறாமல் வந்தது..

ஒவ்வொரு நாளும் கடந்து போவதற்குள் மிதுன் சக்ரவர்த்திக்கு அப்படியொரு மன அழுத்தம் கொடுத்தது..

இவன் எத்தனை பேருக்கு இப்படியானதொரு மன அழுத்தம் கொடுத்திருப்பான்..??!!

அதை தான் அனுபவிக்கையில், கொடூரமாய் இருந்தது..

-------------------------------
“ஆர் யூ மேட்...!!” என்று லோகேஸ்வரன் அதிர,

“எஸ்.. அப்படித்தான் வச்சிக்கோங்க.. பட் எனக்கு என் பொண்ணு இங்க வந்தாகணும்.. நம்ம போய் கூப்பிடாம அவ இங்க வரமாட்டா..” என்று சப்தமிட,

“வராம எங்க போயிடுவா??!!” என்றார் லோகேஸ்வரன் அசால்ட்டாய்.

“லோகேஸ்...!!!”

“ஷ்..!!! நீயும் அனு மாதிரி புரியாம பேசாத தாரா.. இதெல்லாம் வந்து பார்த்துக்கலாம்.. இப்போ என்னோட வா..” என,

“முடியாது...” என்றார் தாரா பிடிவாதமாய்..

“மினிஸ்டர் பெர்சனலா பேசணும்னு சொல்லி கூப்பிடும்போதே தெரியலையா.. கண்டிப்பா அனு விசயமாத்தான் இருக்கும்..” என,

“ம்ம்.. யாரோ ஒருத்தர்.. அவர் பேசறார்.. ஆனா அது உங்களுக்கு இப்போ வரைக்கும் தோணலை..” என்ற தாராவிற்கு, எப்படியோ அனுராகா வீடு வந்தால் போதும் என்று இருந்தது.
தீப்ஸ் ராகாவோட ஆதங்கம் சரி தானே... பெத்தவங்க அவ பாதுகாப்பா இருக்கான்னுலதெருஞ்சுகிட்டாலும் வந்து பார்த்திருக்கணுமில்ல.. தாரா கூட ஓகே லோகேஷ் பண்ணறது சரியே இல்ல.. மிதுன் திட்டம் கோகையாவா.... ஜூப்பர்.... ஹா...ஹா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top