Naan Ini Nee - Precap 27

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில் காரைக் கிளப்பிவிட்டான்.

அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!! இல்லை எதில் இருந்து தப்பிக்கவோ..??!!

இரண்டுமே தெரியவில்லை..

ஆனால் அப்படியொரு வேகம்..

‘என்ன பேச்சு பேசறா??!!!’ இது மட்டுமே அவனின் மனதில்... சிந்தையில்.. புத்தியில் எல்லாம்..

“என்ன பேச்சு டி உனக்கு...” என்று பல்லைக் கடித்தவன், ஸ்டியரிங்கை ஓங்கி ஒரு குத்து குத்த, என்ன செய்தும் அவனின் ஆத்திரம் மட்டும் அடங்குவதாய் இல்லை..

“ராட்சசி... எப்போ பாரு ஏதாவது பண்ணி ஹாஸ்பிட்டல் வந்து படுத்திடுறா.. ரத்தக் காயம் எல்லாம் இவளுக்கு பாடி மசாஜ் போல..” என்றெண்ணியபடி காரின் வேகத்தினை இன்னும் கூட்ட,

அவனின் பின்னேயே மற்றுமொரு கார் அப்போதிருந்து தொடர்ந்து வருவது நன்கு தெரிந்தது.. கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப்பார்த்தவனுக்கு புரிந்தும் போனது வருவது ஆர்த்தி என்று.

----------------------------------------------------------



காதருக்கு அதிர்ச்சியாய் இருந்தது சதீஸ் சொன்ன சங்கதிகள் எல்லாம் கேட்டு.. நம்புவதா வேண்டாமா என்ற எண்ணம் கூட.. ஏனெனில் அவருக்கு மிதுன், தீபன் இருவரும் ஒன்றுதான்.. இருவருமே அவர் தூக்கி வளர்த்த பிள்ளைகள் தான்.

ஆனால் இப்போது வந்து சதீஸ் சொல்வதை எல்லாம் கேட்டால் தலையே சுற்றுவதாய் இருந்தது..

தீபனை கண்காணிக்க சொன்னானா??! அதுவும் மிதுனா??!!

அப்பாவிற்கு தெரியவேண்டாம் என்றபோதே சுதாரித்து இருக்கவேண்டுமோ என்று எண்ணியவர், தீபனுக்கு அழைக்க அவனோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தெரியவர, யோசனைகளை எல்லாம் தாண்டி மனதினில் ஒரு பதற்றம் குடிகொண்டது அவருக்கு.

பேசாது அனைத்தையும் சக்ரவர்த்தியிடம் சொல்லிவிடலாமா என்று யோசிக்க,

“ச்சே வேணாம்.. இதுதான்னு முழுசா தெரியாம எதையாவது சொல்லி நம்ம குழப்பிட கூடாது..” என்று எண்ணியவர், தீபனுக்கு அழைத்துப் பார்த்து பார்த்து, பின் ஒன்றும் முடியாது போக, வேறு வழியே இல்லாது நாகாவிற்கும் தர்மாவிற்கும் அழைத்தார்.

-------------------------------------------------

மிதுன் முன் பல்ராம் சேட் அமர்ந்திருக்க, அவரின் முகத்தினில் அப்பட்டமாய் ஒரு பயம்.. மிதுன் சொன்னதை எல்லாம் செய்தார் தான். ஆனால் இப்போது தீபன் அவன் சொல்லாத ஒன்றை செய்திட பயந்துபோய் மிதுனை காண வந்திருந்தார்.

“இப்போ ஏன் இவ்வளோ டென்சன்...??!!”

“நம்ம மீடியாக்கு சொல்ல இருந்தது எப்படி பேட்டா தெரிஞ்சது??” என்று சேட் பதில் கேள்வி கேட்க,

“ம்ம்ச் அதை நான் உங்ககிட்ட கேட்கணும்.. சொல்லப்போனா இப்போ அவன் பண்ணதை நான் செஞ்சிருக்கணும்.. ஷர்மாவை உங்க கைல கொடுத்து இத்தனை நாள் ஆச்சு.. என்ன யூஸ்.. எதுவுமே இல்லை.. அங்க அவன் ஒவ்வொரு ஸ்டெப்பா முன்னாடி போயிட்டே இருக்கான்..” என்று மிதுனும் கத்த,

“பேட்டா.. எல்லாத்தையும் விட ஆர்த்தி எங்க வீட்டுப்பொண்ணு...” என்றார் இறங்கிய குரலில்..

--------------------------------------------------

அனுராகாவைக் காண நீரஜா வந்திருந்தாள். உடன் தேவ் மற்றும் புனீத்.. மருத்துவமனைக்கு வருகிறேன் என்றவளை அனுதான் வேண்டாம் என்றிருந்தாள். இப்போது அனுராகா வீட்டிற்கு வந்துவிட இவர்கள் எல்லாம் அங்கே வந்திருந்தனர்.

தாராவிற்கு நீரஜா வந்தது ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் தீபனின் நண்பர்கள் வந்தது நெற்றியை சுருங்க வைக்க,

“ஆன்ட்டி நாங்க அனுக்கும் பிரண்ட்ஸ் தான்...” என,

“ம்ம்...” என்றுவிட்டு போனார்.

நீரஜாவோ அப்படியொரு கோபம் அவளுக்கு.. அனுராகாவை திட்டித் தீர்க்க, அவளோ ஒன்றுமே சொல்லாது அமர்ந்திருக்க

“இதெல்லாம் உனக்கு தேவையா அனு??!! பாரு.. கை கால் எல்லா இடத்துலயும் காயம்.. தழும்பு.. உன்னோட ஸ்கின் நீ எப்படி மெய்ண்டைன் பண்ணுவ?? லாஸ்ட்ல உன்னை புரிஞ்சுக்காத ஒருத்தனுக்காக இவ்வளோ நீ பண்ணிக்கனுமா??” என்று கத்த,

தேவ் மற்றும் புனீத் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

Joher

Well-Known Member
:love::love::love:

security இந்த friends எல்லாம் ஏன்யா உள்ளவிட்ட........
சீண்டிவிடுதுங்க.........

ஆர்த்திக்கு தெரியுமா இந்த விஷயம்?
தீபன் மிதுன் மோதல் நெருங்குதா??????

ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க:p:p:p
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அ(பிராமி)னுராகா அ(பிராமி)னுராகா அ(பிராமி)னுராகா:cry::cry::cry:

அதையும் எழுதணுமா?

இது காதல்! என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ்டா, ராஜா தீபன் சக்ரவர்த்தி சிங்கக்குட்டியில்லே?
தீபனின் ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு
ஆர்த்தி இதில் எந்த விதத்தில்
involve ஆகிறாள்?
மீடியாவுக்கு தீபனே சொல்லிட்டானா?

அவளே குழம்பிக் கிடக்கிறாள்
இதிலே நீரஜா தேவையில்லாமல்
interfere ஆகி அனுராகாவைத்
திட்டுறாளே
இவளைக் கேட்டுத்தான் அனு
லவ் பண்ணணுமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top