Naan Ini Nee - Precap 18

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“ராகா... சாரி இதெல்லாம் உன்னை டிஸ்டர்ப் பண்ணிருக்கும் ரொம்ப..” என்று தீபன் சொல்ல,
“நோ நோ..” என்று மறுத்தாள் அனுராகா..

“நிஜமாவா..!! பட் உன்னோட முகத்துல கொஞ்சம் கூட பயம் தெரியலை..”

“ஏன் பயப்படனும்??!!”

“இல்லை இது ஒரு எதிர்பார்க்காத சிச்சுவேசன் தானே..” என்றவனுக்கு
‘ச்சே உருப்படியா ஒரு ப்ரொபோஸ் பண்ண விட்டீங்களா டா..’ என்று அதற்கும் சேர்த்து அவனின் கோபம் ஏறியது அந்த சேட் மீதும் ஷர்மா மீதும்..

“பயம் எல்லாம் இல்லை.. என்னவோ தெரியலை.. பட் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது.. என்ன உன்னோட சண்டை மிஸ்ஸிங்..” என்று அனுராகா சொல்ல,

“சண்டை போடுறது பெருசில்ல.. எப்போ போடறோம்.. யாரோட போடறோம்னு தான் பாக்கணும்.. வந்தவனுங்க எல்லாம் என் முன்னாடி நிக்க கூட ஒர்த் இல்லை..”

------------------------------------

உஷா என்ன சொன்னாரோ தெரியாது தீபன் சக்ரவர்த்திக்கு மனது ஒருநிலையில் இல்லை..

“ம்மா ஏன் ம்மா இப்படி..” என்று கேட்க,

“நான் என்னடா செஞ்சேன்... எப்பவும் போல சூட்கேஸ் வந்தது.. அப்பாதான் கொடுத்து அனுப்பினார்னு நினைச்சு வாங்கி வச்சிருக்கேன்..“ என,

“ம்மா.. நான் வர வரைக்கும் நீங்க அந்த சூட் கேஸ் ஒப்பன் செய்யவேண்டாம்..” என்று தீபன் சொல்லும்போதே,

“ஏன் டா... ??!!” என்று உஷா கேட்க,

“சொன்னா கேட்கறீங்களா??!!!” என்று கத்தினான்..

------------------------------------------

ஆனாலும் மனதினில் ஒரு உத்வேகம், இங்கே நானே தலைமை.. இவன் வேலை செய்யும் ஒருவனே.. அவ்வளவே.. அந்த எண்ணம் வரவுமே நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் நோக்கியவள் “சொல்லுங்க மிஸ்டர் பிரஷாந்த்..” என,

அவளின் தடுமாற்றத்தையும், பின் அவள் அதை மாற்றி இப்போது பேசுவதையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் பிரஷாந்த்.. அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது

“எப்படியிருக்க அனு..” என,

“இதை கேட்கத்தான் வந்தீங்கன்னா??!! ஐம் சோ சாரி.. ஆபிஸ் டைம்ல நான் தேவையில்லாதது எதுவும் பேசுறது இல்லை..” என்று அனு சொல்ல,

“அப்போ நம்ம கண்டிப்பா மீட் பண்ணித்தான் ஆகணும் அனு.. பேசித்தான் ஆகனும்..” என்று அவனும் சொல்ல,

“அப்படி எதுவும் இருக்கிறதா எனக்குத் தெரியலை..” என்றாள் அனுராகா தெள்ளத் தெளிவாய்..

இன்னொருமுறை இவன் விசயத்தில் மனதை குழப்பிக்கொள்ள தயாராக அவள் இல்லை
------------------------------------------------

“ஏன் தீப்ஸ்.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்றதுக்கு என்னடா??!!” என்று மிதுன் கேட்க,

“நீ டெல்லில இருக்க.. சும்மா ஒன்னும் நீ அங்க இல்லையே..” என்று தீபனும் சொல்ல,

“அதுக்காக எல்லாத்தையும் நீ இழுத்துப் போட்டுட்டா எல்லாம் சரியாகுமா டா.. ஏதாவது ஒன்னு ஆகிருந்தா??!! கூட எதோ பொண்ணு வேற இருந்ததுன்னு சொல்றாங்க..” என்று மிதுன் சொல்லும்போதே,

“மிதுன்...” என்றான் அதட்டலாய் தீபன் சக்ரவர்த்தி..

“ஹேய் தீப்ஸ்.. நான் தப்பா சொல்லலைடா.. பட் நீ இப்படி தனியா எல்லாம் யாரையும் கூட்டிட்டு வர மாட்டியே..” என்று மிதுனும் கேட்க,
 

Joher

Well-Known Member
TKs சரயு.....

வந்தவனுங்க எல்லாம் என் முன்னாடி நிற்க கூட worth இல்லை......
அப்போ யாரு கூடடா சண்டை போடுவ?
ராகா கூடவா?

பின்னாடி பிரஷாந்த் வேற வர்றானே......
ராகா கிட்ட அடிவாங்க போறானா?

மிதுனுக்கும் தெரிஞ்சுடுச்சா கூட பொண்ணு இருந்தது......
யாருன்னு தெரியுமா?
எரிஞ்சி எரிஞ்சி விழுறானே......
 
Last edited:

தரணி

Well-Known Member
பிரசாத் திரும்பி வந்து எதுக்கு டா பேசுற நீ.....
 

Ambika

Well-Known Member
பிரசாந்த் இப்ப எதுக்கு வந்து இருக்கடா.தீபன்கிட்ட அடி கன்பாம்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
தீபன் கெத்து எப்பவும் தனி தான்.... மறுபடியும் குழப்ப வந்தாச்சா பிரஷாந்த், மிதுன் தீபன பத்தி தெருஞ்சே கேட்கலாமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top