Naan Enathu Manathu 29 1

Advertisement

mallika

Administrator
நன்றி நன்றி நன்றி தோழமைகளே

எப்போதும் போல உங்களின் ஏகோபித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்

இன்னும் ஒன்று அல்லது இரண்டு எபிக்களில் கதை முடியலாம் அல்லது முடியாமலும் போகலாம் என்று சொல்லிக் கொண்டு

இதோ எபி யின் ஒரு பாகம் இப்பொழுது , மற்றொன்று அனேகமாய், நாளை இரவு!


Naan Enathu Manathu 29 1



:):):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹ் இந்த இந்திரனுக்கு ஹனி மூன் போக சான்ஸ் இல்லையாமா :eek::eek::eek:

என்னடா ரவி கோவில் effect ஷர்மி கிட்டேயும் தெரியுதே :p:p:p
அவளுக்கும் கோபம் வரக்கூடாதுன்னு மனசுக்குளே வேண்டிகிட்டாயோ.......

பொண்ணுக்கு விருப்பமே இல்லைனா எங்கிருந்தாலும் வாழ்க பாடினாத்தான் என்ன :p:p:p
ஆனால் இந்த ஷர்மி இப்போ ரொம்ப ரசிக்குறாளே உன்னை.......
அது உனக்கு தெரியலையா.......

பொண்டாட்டி தாசன்னு சொல்லுவாங்கனு சொல்லிட்ட........ அப்புறம் என்னதாம்மா பண்ணுவான் :p:p:p
அதான் உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து பண்ணுறான்.....
நீயும் தான் ஒரு பேச்சுக்காவது நான் பண்ணுறேன்னு சொல்லு பார்க்கலாம்........
அப்போ சொல்லுவாங்க பாரு பணக்கார பொண்ணுனாலும் எப்படி அவனுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யுதுன்னு........
இதெல்லாம் பார்த்தால் வேலைக்காகுமா....... ரெண்டு பேர் இருக்கிறப்போ யார் யாருக்கு செய்தால் என்ன.......
 
Last edited:

Hema27

Well-Known Member
Hi
இவன் பார்த்து பார்த்து எல்லாம் செய்ய...
அதை பார்த்து பார்த்து இவளுக்கு அவனை பார்க்காமல் இருக்க முடியாத நிலை ஆகிவிட்டது
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.இப்படி எல்லாம் பண்ணா பொண்டாட்டி தாசன்னு இனிமே தான் சொல்லனுமா;),பணக்கார பொண்ண கட்டுனதால தாங்கறான்னு சீதா சொல்லிருச்சே:D:D:D

கல்யாணம் முடியும் வரை ரவிய நல்ல விதமா பார்க்காதவ,கல்யாணத்துக்கு பிறகு அவனை,அவன் குணத்தை,செயல்களை இவனை பிடிக்குமா என பல விதமாக ஷர்மி பார்த்ததை ரவி
சொல்வதும்;);), அதை ஷர்மி ரசிப்பதும் மனதை கவர்கிறது:giggle::giggle::giggle:.

எந்த வேலையும் நீ செய்யறதில்லைனு சொல்றதைவிட,உனக்கு எந்த வேலையும் செய்ய தெரியாது வேலைகாரங்க தான் செய்வாங்கன்னு கூடவே இருந்த ரவிக்கு தெரியும்:):).

நீங்க எல்லா வேலையும் எனக்கு பார்த்து பார்த்து செய்யறீங்கன்னா,மாசமா இருக்கற பொண்டாட்டிய ஆசையா உட்கார வச்சு வேலை பார்த்தா அனுபவிக்கனும் கேள்வி கேட்ககூடாது...

ரவி என் பொண்டாட்டி,பிள்ளை நான் பார்த்துக்குவேன்னு உரிமையா செய்யறதை,வேலை செய்யற
ஃபீலான்னு கேட்டா,லூசு போல கேட்கறான்னு நெனச்சு சிரிக்காம என்ன செய்வான்:LOL::LOL::LOL:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சசசப்ப்ப்ப்பா
வடிவேலு பாணியில் கண்ணைக் கட்டுதே
என்ன இந்த ஷர்மிளா சரியான லூசு பெண்ணாய் இருக்கிறாள்?

நாம்தான் எல்லாம் பண்ண வேண்டியிருக்கு புருஷன்காரன் தனக்கு ஒண்ணும் பண்ண மாட்டேங்கிறானேன்னு அவ அவ நொந்து புலம்பிக்கிட்டு இருக்கிறாள்

இவ என்னடான்னா புள்ளைத்தாய்ச்சி மட்டுமில்லாமல் தன் மனைவின்னு பாசத்துடன் ரவீந்திரன் இவளுக்கு செய்வதையெல்லாம் அனுபவித்து விட்டு போகாமல் எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கிறாள்
கூறுகெட்ட குப்பாயி

சும்மா இருக்கும் மனசு சாத்தானின் வேதம் ஓதும்என்பது சரியாய்த்தான் இருக்கு

இவளுக்கெல்லாம் மாமியார் மாமனார் நாத்தனார் கொழுந்தன் இன்னும் பிற சொந்தங்களுக்கு வடிச்சுக் கொட்டி ஓயாமல் வேலை செஞ்சு இடுப்பு கழண்டு போக விட்டிருக்கணும்

இவ பெரிய இவள்ன்னு இவளை ரவி தாங்குகிறானில்லே
அந்த கொலஸ்ட்ரால் எக்கச்சக்கமாய் ஏறிக்கிடக்கு ஷர்மிளாவுக்கு

பார்த்துப்பா தம்பி ரவீந்திரன்
டெலிவரிக்கு முன்னாடி இந்த கொலஸ்ட்ரால் கம்மி பண்ணப் பாரு
இல்லாட்டி டெலிவரி சிக்கல்தான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top