கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்துல எல்லாரும் இருக்க,சீதா பேசிய பேச்சாலே கல்யாணம் வேண்டாம்னு சந்தோஷ் சொல்லிட்டான்
.அப்பாட்ட கூட சொல்லாம ரவி மேல உள்ள மரியாதையில அவன் கிட்ட சொன்னா என்ன ஏதுன்னு விசாரிக்காம அடிக்கறான்
.
இவ்வளவு பணம் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மகனையே இறக்கி மட்டம் தட்டி பேசற சீதா,கல்யாணத்துக்கு அப்புறம் எங்களை அப்படி பேசுனா பொறுத்துக்க முடியுமா,இல்லை அவங்க கூட பேசகூடாது,வரக்கூடாதுன்னு சொல்ல முடியுமான்னு சரியா கேட்டான்
.
ஷர்மி நடுவுல வராம இருந்தா அந்த அடி சந்தோஷ்க்கு தானே விழுந்திருக்கும் தன் கண் முன்னே மகனை அடிக்க நினைத்ததை கேசவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
.
ஷர்மி திருமணம் நடக்க விடாமல் பிரச்சனை செய்தது,ஷர்மி,ரவி வீட்டை விட்டு போக சொன்னால் எங்கே போவேன் என வீடு கேட்டது,என்ன நடந்தது என்று கேட்காமல் கோபத்தில் சந்தோஷிடம் நடந்து கொண்ட விதம் கேசவனுக்கு மனவருத்தத்தை கொடுத்ததுடன், நான் ஒரு கையாலாகாத அப்பான்னு பலமுறை எனக்கு உணர்வை கொடுத்துட்டே ரவி என சொல்லி விட்டார்
.
இவ்வளவு பிரச்சனையிலும் சந்தோஷ்,ரவியை பற்றி நல்லபடியாகவே பேசினான்,ஷர்மியும், ரவிய விட்டு கொடுக்கவில்லை,தன் கோபத்தால் ரவி, கேசவன் முன் குற்றவாளியாகி விட்டான்
.
தன்னால் தான் பிரச்சனை என தெரிந்தும் முறைத்துக் கொண்டிருக்கும் சீதாவின் வாயை எப்படி அடக்குவாங்க
.மிகவும் அருமையான பதிவு மல்லி
.