ஆரம்பமே அருமையான ஆலாபனையுடன் தொடங்கிய கச்சேரி களை கட்டுகிறதே, ஆதி டியர்
தாத்தா சுந்தர்ராமனும் அப்பா விஸ்வநாதனும் அம்மா ராஜலக்ஷ்மியும் இப்போ உயிருடன் இல்லை
அம்மாவின் தங்கை விஜயலக்ஷ்மிதான் இப்போதைக்கு தேஜஸ்வினிக்கு ஒரே ஆதரவு
காசிக்கு போக விருப்பப்படும் சித்திக்கு குழந்தை இல்லையா?
திருச்சியிலிருந்து வரும் பொழுது ஏற்பட்ட விபத்து தற்செயல்தானா?
இல்லை திட்டமிட்டதா?
பட்டயக் கணக்காளர்களுக்குக் கூடவா எதிரிகள் இருப்பாங்க?
ஒருவேளை நேர்மையாகக் கணக்கு எழுதி அரசாங்கத்துக்கு ஆதரவாகி எதிரியை சம்பாதித்து அப்பாவும் பிள்ளையும் மரணத்தை சந்திச்சாங்களா?
குட்டீஸுக்கு சாப்பிடக் கொடுத்து கதையும் சொல்லும் ராமய்யருக்கும் தேஜஸ்வினிக்கும் என்ன சம்பந்தம்?
கொடுமுடியில சொத்து இருப்பதால் இந்த கேள்வி வந்தது
செல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து சிம் கார்டு போட்டு வேட்டைக்கு காத்திருக்கும் அந்த வில்லன் யாரு?
இவன் or இவளுக்கும் தேஜஸ்வினிக்கும் என்ன சம்பந்தம்?
எல்லா ஊரிலும் ஊருப்பட்ட சொத்து வாங்கினால் இலவச இணைப்பாய் கூடவே எதிரியும் வருவானோ?