KUK - 13

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends sorry for the delay i am suffer fever so i could not able to give the update and i eagerly waiting for your comments and thank you for your previous update comments friends and read this update also and tell your comments paa............................ also i give a next update on wednesday




உள்ளம் – 13

அம்முவும்,அச்சுவும் அந்த வீட்டிற்கு வந்து ஒருவாரம் சென்றிருந்தது இந்த ஒரு வாரத்தில் அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை அம்முவும்,அச்சுவும் முடிவு செய்தனர் அதன் படி முதலில் வீட்டில் பிரச்சனையை உண்டு செய்ய தீர்மானித்தனர் அத்தோடு ரவியின் தொழிலையும் தங்கள் வசம் கொண்டுவர எண்ணினர்

அதற்க்கு முதல் வேலையாக வீட்டில் இரண்டு சமையல் அறையை உருவாக்க எண்ணி அம்மு அதை செயல் படுத்தவே கனகாவை வரவைத்தனர் அதோடு தினமும் காலையில் எதையாவது சொல்லி ஒரு பிரச்சனையை உருவாக்கினர் அதற்கு அவர்கள் சிரம படவில்லை இவர்கள் செய்வது சுமலா,பாட்டி இருவருக்கும் பிடிக்காமல் இருக்க வீட்டில் பிரச்சனையை உண்டாக்குவது அவர்களுக்கு சுலபமாக இருந்தது என்றே கூறலாம்

இவர்கள் செய்யும் செயல்களால் ரவிக்கும் இவர்கள் மீது சந்தேகம் வர ஆரம்பித்தது தொழிலில் நடக்கும் பிரச்சனைக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று

அன்று எப்பொழுதும் போல் அம்மு தன்னுடைய கம்பனிக்கு கிளம்பி கொண்டிருக்க அவளிடம் வந்த அபை உனக்கு என்ன தான் வேண்டும் எதற்காக மாமாவையும் இந்த குடும்பத்தையும் இப்படி பாடாய் படுத்தி எடுக்கிற நீ இந்த வீட்டில் பிரச்சனை செய்ய வேண்டும் என்று வந்திருந்தாலும் என்னால் உன்னை எதுவும் செய்ய தோன்றவில்லை உன்னிடம் விளக்கம் வேண்டவே என்னுடைய மனம் விளைகிறது

கடந்த நாட்களில் அம்மு அந்த வீட்டில் அனைவரிடமும் பிரச்சனை செய்தாலும் வார்சா,அபை இருவரையும் அதில் இழுக்கவில்லை அவர்களும் நின்று வேடிக்கை பார்த்தனரே ஒழிய அதில் தலையிடவில்லை வார்சினிக்கு தன்னுடைய காதல் கிடைத்ததே பெரிதாக இருந்தது அதிலே அவள் உழன்று கொண்டிருந்ததால் அவளுக்கு வீட்டில் நடக்கும் பிரச்சனை பெரிதாக தெரியவில்லை அபைக்கு அவனுடைய அம்மா மற்றும் பாட்டி இவர்களிடம் மாட்டி கொண்டுபடும் பாடு அவனுக்கு சிறிது ஆறுதலை அளித்ததோ என்னவோ அவனும் வீட்டின் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை அம்முவிடம் அவள் ஏன் இப்படி செய்கிறாய் என காரணம் வேண்டவே எண்ணியது

முதலில் இருந்து அம்முவிடம் அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை அதற்கு காரணம் என்ன என்றே அவனுக்கே தெரியவில்லை எதோ ஒன்று அம்முவிடம் தன்னை இழுப்பதாக கருதினான் எனவே அவளிடம் காரணத்தை வேண்டி நின்றான்

அபை வினவியதற்கு அம்முவிடம் மவுனமே பதிலாக கிடைத்தது அபையும் அவள் இந்த வீட்டிற்கு வந்ததில் தினமும் இதே கேள்வியை கேட்கிறான் இருந்தும் அம்முவிடம் இருந்து மவுனமே பதிலாக கிடைத்தது இருத்தும் அபையும் தொடர்ந்து முயற்சிக்கிறான்

அம்மு தனது அலுவலக அறையில் இருக்க அவளை பார்க்க பயிற்சிக்கு வந்த மாணவர்கள் காத்திருப்பதாக இங்கு அவளுக்கு P.A வாக வேலை செய்யும் நபர் வந்து கூற அவர்களை கான்பரன்ஸ் அறைக்கு அவர்களை அனுப்புமாறும் தான் அங்கு வந்து சந்திப்பதாக கூறினாள்

பயிற்சிக்கு வந்த மாணவ மாணவிகள் அவள் கூறிய அறையில் காத்திருக்க அவர்களை சந்திக்க சென்றாள் அந்த மாணவர்களில் ஒருவனாக அபையின் தம்பி யாதவ் இருந்தான் அம்முவை அங்கு பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான் அவனுடைய அதிர்ச்சி அவனின் முகத்திலே தெரிந்தது அம்முவிர்க்கும் அவன் இங்கு பயிற்சிக்காக வந்தது சிறிது அதிர்ச்சி அளித்தாலும் தன்னுடைய இத்தனை வருட தொழில் அனுபவத்தில் முகத்தில் அதை காண்பிக்கிறது அவர்களுடன் உரையாடினாள்

இன்றோடு அவர்களின் பயிற்சி கடைசி நாள் என்பதால் அவர்களுக்கு அலுவலகத்தின் இன்று வரை கற்றுகொண்டது மற்றும் இது எவ்வாறு அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் என்றும் விலக்கபட்டது அதோடு இங்கு சிறப்பாக அனைத்தும் செய்த மாணவர்களுக்கு அங்கே பணி என்றும் கொள்கை உண்டு அதையும் அவர்களுக்கு விளக்கினாள் அம்மு

அவர்களிடம் உங்களின் படிப்பு முடியும் தருவாயில் எங்களது நிறுவனத்தில் இருந்து யார்,யார் இங்கே பணியாற்ற தேர்ந்தெடுத்து உள்ளனர் என நாங்களே உங்களை தொடர்பு கொண்டு கூறுவோம் என்றாள்

அவள் பேச்சின் ஆளுமையில் அனைவரும் கட்டுண்டு கிடந்தனர் யாதவிற்கு இது கனவு நிறுவனம் அதில் தன்னுடைய அண்ணி தலைமை வகிப்பது அவனுக்கு அம்முவின் மேல் இருந்த பழைய எண்ணங்கள் அழிந்து புதிதாக மதிப்பை உருவாக்கி இருந்தது

அன்று இரவு வீட்டில் எப்பொழுதும் போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உன்ன எப்பொழுதும் போல் அப்போது வீட்டில் நுழைந்த அம்மு அச்சுவை தேட அவன் அங்கே இல்லை முதன் முறையாக அம்மு அந்த வீட்டில் வார்சாவிடம் பேசினாள் அதும் அச்சு எங்கே என்பதை தெரிந்து கொள்ள

வர்சாவிடம் சென்ற அம்மு “இன்னும் அச்சு வரவில்லையா என வினவ வர்ஷா தன்னிடம் தான் கேட்டார்களா நினைக்க அதை அவள் உணரும் வகையில் உன்னிடம் தான் கேட்கிறேன் அச்சு இன்னும் வீடு வரவில்லையா என்றாள்

அம்மு சிறிது குரலை உயர்த்த வர்ஷா அவளின் குரல் உயர்ந்ததை கண்டு எப்பொழுதும் போல் இப்பொழுதும் அஞ்சி அவர் இன்னும் வரவில்லை என எழுபத்த குரலில் சொன்னாள்

அம்மு திரும்பவும் எப்பொழுது வருவேன் என்று உன்னிடம் எதாவது சொன்னனா வர்ஷா பயத்தினுடனே இல்லை என்று தலை அசைக்க அம்மு அவளை முறைத்தாள். அதோடு என்ன இவள் இப்படி மிரள்கிறாள் அச்சுவை பற்றி இன்னும் ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாள்

அபைக்கு அம்முவை பற்றி ஒரு அளவிற்கு தெரியும் அம்மு எங்கு என்ன படித்து இருக்கிறாள் இப்போது அவள் வேலைசெய்வதாக கூறிய இடம் அவளுடையது என்று தெரியாதே தவிர அவள் A.A கம்பனியில் முக்கிய பொறுப்பில் உள்ளாள் என்று தெரியும் அவனுக்கு

எனவே அம்மு இவ்வாறு நினைத்தாள். அவ்வாறு நினைத்ததோடு அதை வர்ஷாவிடமும் வினவினாள்

அம்மு “நீ அச்சுவின் மனைவி தானே அவன் எங்கு செல்கிறான் என்ன செய்கிறான் என்பதை தெரிந்து கொள்ள மாட்டாயா இல்லை அதில் உனக்கு விருப்பம் இல்லையா”

அம்மு கேட்ட கேள்வியில் வர்ஷா மீண்டும் பயப்பட அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது அவள் அழுவதை கண்ட அம்மு எரிச்சலாகி இப்போது எதற்கு சும்மா அழுது நடிக்கிற நீ நடிப்பதை பார்க்க எனக்கு நேரம் இல்லை

சுமலா “ஏய் என்ன எங்க வீட்டிலே இருந்து கொண்டு எங்க பெண்ணையே அதட்டுர”

அம்மு “எது உங்க வீடு இது ஒன்றும் உங்களுக்கு சொந்தமான வீடு கிடையாதே அதோடு இந்த வீடு யார் பெயரில் இருக்கு என்றும் எனக்கு தெரியும் அதனால் உங்கள் வேலையை என்னிடம் காட்டதிர்கள்”

யாதவ் “அம்மா நீங்க சும்மா இருங்க அண்ணி என்ன இப்ப கேட்டார்கள் எல்லோர் வீட்டிலும் கேட்பது தானே வர்ஷா தன்னுடைய கணவனை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் செய்யாதது அவளுடைய தவறு”

சுமலா “யாதவ் நீ என்ன புதுசா அவளுக்கு சப்போர்ட் பண்ற”

யாதவ் “அம்மா அண்ணி பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை அதனால் இப்படி பேசுகிறிர்கள் என்றுவிட்டு தனது தந்தை வெற்றியின் புறம் திரும்பி அப்பா நான் என்னுடைய கனவு நிறுவனம் என்று சொல்வேன் தானே அந்த A.A இண்டஸ்ட்ரீஸ் சென்னை அலுவலகத்தின் M.D வேற யாரும்இல்லை நம்ம அண்ணி தான்”

A.A இண்டஸ்ட்ரீஸ் என்றவுடன் அதுவரை அங்கே நடப்பதை ஒரு பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த ரவியின் புலன்கள் குர்மையுடன் நோக்க ஆரம்பித்தது. யாதவ் சொன்ன M.D என்னும் வார்த்தை ரவிக்கு பல சந்தேகங்களை தீர்ப்பது போல் இருந்தது எனவே அவர்களின் பேச்சை இன்னும் கவனுத்துடன் கேட்ட ஆரம்பித்தார்

வெற்றி “நீ சொல்வது உண்மையா யாதவ் அபிதா அங்குதான் வேலை செய்கிறாளா அதும் இந்த கிளையின் தலைமை பொறுப்பில் என்றார்”

யாதவ் “ஆமா பா நானே முதலில் எதிர்பார்க்க வில்லை இன்று எங்கள் பயிற்சியின் கடைசி நாள் அதனால் எங்களை தலைமை பொறுப்பில் இருப்பவரை பார்க்க அழைத்து சென்றனர் அங்கு பார்த்தால் அண்ணி வந்து நிற்கிறார்கள்”

ரவி “தலைமை பொறுப்பில் இருந்தால் மட்டும் பத்தாது அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவேண்டும் தன்னுடைய பதவியை பயன்படுத்தி ஒருவரை விழ்த்த கூடாது”

ரவிக்கு இப்போது அனைத்தும் விளங்க ஆரம்பித்தது தன்னுடைய தொழில் பிரச்சனைக்கு இவர்களே காரணம் என்றும் அதோடு பங்குகளை வாங்கியது இவர்கள் வேலையாக இருக்கும் என்றும் தோன்றியது

ரவி சொன்னதை கேட்டுகொண்டே உள்ளே வந்த அச்சு “தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது உங்களுக்கு வேண்டும் என்றால் வழக்கமாக இருக்கலாம் எங்களுக்கு கிடையாது”

அச்சு சொல்வதை கேட்ட ரவி கோவம் கொண்டு உங்களுக்கு பழக்கம் இல்லை எனில் என்னுடைய கம்பனியின் பங்குளை உங்கள் நிறுவனத்திற்காக வங்கியதை என்ன என்று சொல்வது என்று இதுவரை அந்த குடும்பத்தில் இதுவரை அபை மட்டுமே அறிந்த உண்மைகளை அனைவர் முன்பும் உடைத்தார்

அவரின் செயல் அம்முவிற்கு சிறிது புன்னகையை வரவைத்தது தன்னுடைய திட்டத்தின் அடுத்த கட்டத்தை எடுக்க ரவியே வழிவகுத்து கொடுத்ததற்கு அந்த புன்னகை

அவளின் உதட்டில் தோன்றிய புன்னயுடனே “விடு அபை அவருக்கு தன்னுடைய தொழிலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சரி செய்ய தெரியாமல் அந்த குழப்பத்தில் பேசுகிறார். அதோடு அவரின் நிறுவனம் வேலை நடந்து கொண்டிருந்த பெரிய ஐந்து சைட்டிலும் பிரச்சனை என்றால் என்னதான் செய்வார்.

அதோடு அவர் சொந்தமாக உழைத்து அல்லவே அவரின் இரண்டாம் மனைவியின் சொத்துக்கள் பாதி உள்ளது சொத்துக்காகவும், தொழிலுக்காகவும் முதல் மனைவியை விரட்டி விட்டு இரண்டாம் திருமணம் செய்த இவருக்கு அந்த தொழிலும் சொத்தும் பிரச்சனையில் இருந்தால் இப்படி தோன்றத்தான் செய்யும்”

அம்மு சொல்வதை கேட்ட வர்சனுக்கும்,வர்ஷாக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது அதுவும் தன்னுடைய அம்மாவை இரண்டாம் மனைவி என்றவுடன் வர்ஷன் “ஏய் யாரை பார்த்து இரண்டாம் மனைவி என்றாய் என்னுடைய அம்மா முறைப்படி என்னுடைய அப்பாவை திருமணம் செய்து அழைத்து வந்தார்”

இவளுக்கு எப்படி இது தெரியும் என்ற அதிர்ச்சியில் இருந்த மற்றவர்கள் வர்ஷன் அவளிடம் சண்டைக்கு சென்றதை பார்த்து மீண்டனர்

அச்சு “என்ன ரொம்ப பேசற அம்மு சொல்வது உண்மை வேண்டும் என்றால் நீயே உன்னுடைய வீட்டில் இருப்பவரிடம் கேட்டுகொள் சொத்துக்காக தாலிகட்டிய மனைவியை துரத்திவிட்டு இன்னொடு பெண்ணை மணந்தவர் உன் அப்பா எனில் வேறு ஒருவரின் கணவன் என தெரிந்தும் அவரின் மீது ஆசை கொண்டவர் உன் அம்மா”

இதை அனைத்தும் பேசி முடித்து அம்முவை பார்த்து நீ வா அம்மு நாம் நம்முடைய வேலையை பார்க்கலாம் என அழைத்து சென்றான்

அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் அந்த இரவு பலவித சிந்தனைகளை உருவாக்கியது.

எப்பொழுதும் நடப்பது போல் அம்முவும்,அச்சுவும் அன்று நடந்தவைகளை பற்றி பேசிகொண்டிருக்கும் போது வெற்றி அவர்களை தேடிக்கொண்டு அங்கே வந்தார்

அவரை பார்த்த உடன் அம்முவும், அச்சுவும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தினர்

அவர்களை நெருங்கி வந்த வெற்றி நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் இப்பொழுது பேசலாமா என்றார்

அச்சு “நான் உங்களை என்னுடைய தந்தைக்கு நிகராக பார்க்கிறேன் ஒருவகையில் நீங்களும் இவர்களால் வஞ்சிக்கபட்டவர் இப்போது நீங்கள் எதை பற்றி பேச வேண்டும்”

வெற்றி “உங்களுக்கு இங்கு நடந்தவை பற்றி தெரிந்து இருக்கிறது அதே போல் எதாவது ஒரு வகையில் என்னுடைய தங்கையை பற்றி அறிந்து இருப்பிர்கள் என்று எனக்கு தோன்றுகிறது”

அச்சு “இதை பற்றி இங்கு பேசுவது சரியாக இருக்காது நீங்கள் நாளை இந்த விலாசத்திற்கு வாருங்கள் அங்கு இதை பற்றி பேசிக்கொள்ளலாம்” என்று இதற்கு முன் அவர்கள் தங்கிருந்த வீட்டின் விலாசத்தை கொடுத்தான்

வெற்றியும் அதை பெற்றுக்கொண்டு சென்றார்

இரவு வெகு நேரமாகியும் தந்தை உறங்க செல்லாமல் அமர்ந்திருப்பதை கண்ட யாதவ் “அப்பா நீங்கள் இன்னும் தூங்க போகலையா”

இல்லை யாதவ் எனக்கு என்னமோ உங்க நந்தினி அத்தை பற்றி இவங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ஒருவேளை நந்தினி அவங்க கூட இருப்பாளோ என்று தோன்றுகிறது. நந்தினி பற்றி எதாவது தெரிந்தால் நன்றாக இருக்கும் என்னுடைய தங்கையை காணவே நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் இல்லை என்றால் என்னுடைய உயிர் என்றோ இந்த உடலை விட்டு சென்றிருக்கும்

யாதவ் “அப்பா என்ன பேசுறிங்க நீங்கள் எங்களுக்கு வேண்டும் அதும் எனக்கும் அண்ணாக்கும் நல்ல தந்தையாக சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் இனி இப்படி ஒருபோதும் பேசாதீர்கள். அண்ணியிடம் சென்று கேட்பது தானே அவர்களுக்கு அத்தையை பற்றி எதாவது தெரியுமா என்று”

கேட்டேன் யாதவ் அவர்கள் இது பற்றி இங்கு பேச வேண்டாம் நாளை இங்கு வாருங்கள் அங்கு பேசிகொள்ளலாம் என்று இந்த விலாசத்தை கொடுத்தார்கள்.

சரி பா நீங்க நாளைக்கு அங்கு செல்லுங்கள் நிச்சியம் அத்தையை பற்றி ஏதேனும் தெரியவரும் ஒருவேளை அவர்களுக்கு அத்தை எங்கு இருக்கிறார் என்றும் தெரிந்து இருக்கலாம் இப்போது நீங்கள் சென்று உறங்குகள் அப்போதுதான் காலையில் அவர்களை பார்க்க செல்ல முடியும்

அறைக்கு அம்மு வந்தவுடன் அபை “உனக்கு நந்தினி அத்தை பற்றி என்ன தெரியும் எப்படி தெரியும்” உனக்கு எதாவது தெரிந்து இருந்தால் எனக்கு சொல் என்ற பாவம் இருந்தது அபையின் கேள்வியில்

நிதானமாக அபையை பார்த்த அம்மு “எதுக்கு இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீங்க எனக்கு எதுவும் தெரியாது”

பொய் உனக்கு அத்தையை பற்றி தெரியும் அதனால் தான் மாமாவை பழி வாங்க வந்திருக்க உனக்கு அவங்களை எப்படி தெரியும் இப்ப அத்தை எங்கு இருக்காங்க நான் அவங்களை பார்க்கணும்

எனக்கு ஏதும் தெரியாது அப்படியே தெரிந்தாலும் உங்களுக்கு எதுக்கு நான் சொல்லணும் அவர்களை பற்றி நீங்கள் இதுவரை நினைத்து பார்த்து இருப்பீங்களா இல்லை அவர்களை தேடித்தான் இருப்பீங்களா

ப்ளீஸ் அபி “உனக்கு அத்தை பற்றி என்ன தெரியும் இப்போ அவங்க எப்படி இருக்காங்க என்னை இன்னும் நினைவு வைத்திருகாங்களா நான் ஒரே ஒருமுறை அவங்களை பார்த்தால் போதும்”

அம்மு திரும்பவும் எனக்கு தெரியாது தெரிந்தாலும் சொல்ல மாட்டேன் என்றுவிட்டு உறங்க சென்றுவிட்டாள் அபையோ உறங்கும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்

இங்கே அர்ஜுன் அறையின் உள்ளே நுழையும் போதே வர்ஷாவின் அழுகையே வரவேற்றது இப்பொழுதெல்லாம் வர்ஷாவின் அமைதி கலந்த முகம் யாரையும் அதிர்ந்து பேசாத தன்மை அச்சு மனதை வர்ஷாவின் புறம் சயதொடங்கியது

அவள் அழுவதை கண்ட அர்ஜுன் அவளின் அருகே சென்று “இப்போது எதற்கு அழுற நீ அழுவதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கு அழாதே”

வர்ஷா அழுகையுடனே நீங்கள் எடுத்து அப்படி சொன்னீர்கள் என்றாள்

முதலில் எதை என்று புரியாது அவளை பார்த்த அச்சு அவள் அவளுடைய பெற்றோரை பற்றி பேசியதை குறிப்பிடுகிறாள் என்றதும் அவனுக்கு கோவம் வந்தது இருந்தும் அதை அடைக்கி கொண்டு உன்னுடைய பெற்றோரை பற்றி சொன்னதை கேட்கிறாயா நீ என்ன நினைத்தாலும் சரி நான் சொன்னது அனைத்தும் உண்மை எனக்கு ஒன்றும் இல்லாததை சொல்லி பெற போவது ஒன்றும் இல்லை

வர்ஷா “அப்படி என்றால் என்னுடைய அம்மா அப்பாவிற்கு இரண்டாம் மனைவி தானா நீங்கள் சொன்னது போல் அப்பா சொத்திற்காக அம்மாவை திருமணம் செய்து கொண்டாரா”

அவர் எதற்காக திருமணம் செய்தாரோ ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை அழித்தவர் உன்னுடைய அப்பா அது மட்டும் எனக்கு தெரியும் என்றான்.

உள்ளம் கரையும்..........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top