EPI 2 – என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)

Advertisement

Thanu

Writers Team
Tamil Novel Writer
2 – என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)



இதோ காலை அழகாக விடிந்தது.. ஆனால் நமது அஸ்வினுக்கோ சோதனை ஆரம்பம் ஆகியது.. அதிகாலையில் எழுந்தவன், காலைகடன்களை முடித்துவிட்டு , வெளியே நடைபயிற்சிக்கு சென்றான்.. அதே நேரம் எழுந்த ஆராவும், அவன் வெளியே செல்வதை பார்த்துவிட்டு அவனது வீட்டிற்குள் சென்றாள்.. சோபாவில் இருந்த யோகா மேட்டை எடுத்தவள் , அதனுள்ளே அவள் கொண்டு வந்த சிட்டெறும்புகளை பரவவிட்டவள், அதன் மீது சிறிது சர்க்கரை தூவி, அவள் வீட்டிற்கு சென்றாள்.. திரும்பி வந்த அஸ்வின் தோட்டத்தில் நின்று ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன் உள்ளே சென்று யோகா செய்ய ஆரம்பித்தான்.. அவன் உள்ளே வருவதை பார்த்தவள், பொதுகதவின் வழியே வந்தவள் அவன் யோகா செய்யும் அழகை மறைந்து இருந்து பார்க்க தொடங்கினாள்.. அவனும் இதை எல்லாம் அறியாமல் , தனது உடையை கழற்றி விட்டு வெற்று மேலுடன் யோகாமேட்டில் படுத்து வழக்கமாக செய்யும் ஆசனங்களை செய்ய, அவனது உடம்பு அரிப்பு எடுக்க ஆரம்பித்தது.. அதாவது எறும்புகள் ஊர்வது தெரியாது ஆனால் கடிக்கும் போதுதான் தடிப்பு தடிப்பாக வர ஆரம்பிக்கும்.. அப்படி அவனது உடம்பிலும் கடிக்க ஆரம்பித்தது.. முதலில் ஏதோ என்று தட்டிவிட்டு யோகாவை தொடர, மீண்டும் எறும்புகள் கடிக்க ஆரம்பித்தது.. அவன் எழுந்து உடல் முழுவதும் தேய்த்துவிட, அப்போதும் அதன் எரிச்சலை உணர்ந்தான்.. பின்பு கூர்ந்து கவனிக்க அவை எல்லாம் எறும்புகள் என்று தெரிந்தது.. மீண்டும் மேட்டை உதறியவன், அதனை வைக்கும் இடம் ஆராய்ந்து, எப்படி எறும்புகள் வந்தது என்று தெரியாமல் முழித்தான்.



இதனை எல்லாம் ஒளிந்து இருந்து பார்த்த ஆராவிற்கு சிரிப்பு வர, அதனை அடக்கியவள் அவன் வருவதற்குள் அவளது வீட்டிற்குள் நுழைந்து , படுக்கையில் விழுந்து விழுந்து சிரித்தாள்.. அவளது அருகில் இருந்த தோழியோ, “ எதுக்குடி இப்படி சிரிக்குற?” ,

“ஒண்ணுமில்லை டி.. ஒருத்தருக்கு சின்னதா சிட்டெறும்பால் அபிஷேகம் செய்துவிட்டு வந்தேன்.. அவர் படும் அவஸ்தையை நினைத்து சிரித்துக்கொண்டு இருக்கிறேன்..” என்று கூற, அவளது தோழியோ, “ அவங்க மேல உனக்கு ஏன் டி இவ்வளோ கோவம்.. முன்ன பின்ன தெரியாதவங்களை எதுக்கு இந்த அளவுக்கு தொல்லை பண்ணுற.. இது நீ கிடையாது.. உன்னோட நண்பர்களை தவிர வேற யாரையும் உன்னோட கூட்டிற்குள்ள சேர்க்க மாட்ட.. எப்படி இவரை தொல்லை பண்ணுற?”

“தெரியலை.. அவரை தொல்லை செய்ய எனக்கு பிடிச்சு இருக்கு.. “

“அதுதான் ஏன்ன்னு கேக்குறேன்.. “

“சத்தியமா தெரியலை டி.. அவரோட கண்கள் .. அதில் இருந்த வெறுமை .. இங்கோ என்னை ஏதோ பண்ணிடுச்சு..” என்று தனது இதயத்தை சுட்டிக்காட்டி சொன்னவள் கண்களில் இருந்த சோகம், கவலை, அதையும் மீறி அவளது கண்கள் கலங்கி இருந்தது..

அவளது கலங்கிய முகத்தை பார்த்தவள் , “ஹேய் என்னடி..” என்று தனது தோழியை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.. அவளது அணைப்பில் , அவளது நெஞ்சில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.. ‘அதே வெறுமை , அதே வலி நிறைந்த கண்கள் அப்படியே என்னைப்போல’ என்று நினைத்தவள் தனது பழைய வாழ்க்கையை எண்ணி கலங்கினாள்,,

அவளை மாற்றும் பொருட்டு,” மச்சி... எனக்கு ஒரு டவுட்” என்று விஜி(தோழி) கேட்க, அவள் பதில் பேசாமல் விசும்பிக்கொண்டு இருந்தாள்..

“அதெப்படி டி தூங்குரமாறியே அழுகுற..”

மெதுவாக தலையை தூக்கி அவளை முறைத்தவள்,” பசிக்குது விஜி.. இன்னைக்கு நீ சமைடி..” என்று விஜியை தாஜா செய்ய, விஜியோ அவளை முறைத்தவள்,” இன்னைக்கு நீ தான் செய்யனும்..” என்று குளிக்க சென்றுவிட, மீண்டும் இயல்பாகி சமையல் அறைக்கு சென்றவள், அஸ்வினுக்கும் சேர்த்து நன்றாக சமைத்தாள்..

வெங்காயம், தக்காளி, சாட் மசாலா முட்டை வைத்து முட்டை மேகி செய்து வைத்தாள்.. நம்ம ஆராவிற்கு கொஞ்சமே கொஞ்சம் சமையல் தான் தெரியும்..

குளித்துவிட்டு வந்த விஜி, அவள் செய்ததை பார்த்துவிட்டு,” சூப்பர்.. இத தவிர வேற தெரியதாடி.. “

” ஏன் எனக்கு தெரியாது.. எனக்கு எக் மேகி, பாயாசம், சுடுதண்ணி,அப்பறம் தோசை , அதிலேயும் எக் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, இப்படி வெரைட்டி வெரைட்டியா செய்வேன்” என்று கூறியவளை முறைத்து பார்த்தவள், அவளுக்கு மிச்சம் வைக்காமல்அனைத்தையும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்..

ஏற்கனவே அஸ்வினிற்கு எடுத்து வைத்தவள், அதை அங்கே தர சென்றாள்..



எறும்புகடியால் அவதிப்பட்ட அஸ்வின் , குளியல் அறைக்கு சென்று ஷவருக்கு அடியில் நின்றான்.. அவனுக்கு மெதுவாக எரிய, பின் சரியாகியது..

குளித்துவிட்டு வந்தவன் வயிறு கபகபவென எரிந்தது.. மீண்டும் ஆராவை திட்டியவன், கண்ணாடி முன் நின்று, அவளது தைரியத்தையும் மெச்சினான்..

‘எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டேயே இப்படி பேசுற.. பட் உன்னோட தைரியமும் எனக்கு பிடிச்சு இருக்கு.. உன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு ’ என்று கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்திடம் பேசிக்கொண்டு இருந்தான்..

அவளை தொட போக, கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பம் , மறைந்தது.. அதை பார்த்து சிரித்தவன் , தீடீரென்று கேட்ட ‘அம்மா’ என்ற சத்தத்தில், இடுப்பில் இருந்த துண்டை நழுவ விட்டான்..

“கடவுளே ... கடவுளே கடவுளே .. “ என்று கண்களை இறுக்கி முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்..

“ஏய்.. அறிவில்லை.. இப்படி தான் ரூமிற்குள்ள வருவியா” என்று கட்டிவிட்டு உடையை மாற்றி வெளியே வந்தான்..

அவள் முணுமுணுப்பதை பார்த்த்வன் , அவளது கைகளை பிடித்து இழுக்க, அதில் அவன் மீது மோதி நின்றவளை ஆழ்ந்துபார்த்தான்..

அதில் அருகில் தெரிந்த அவளது முகத்தை பார்த்தான்.. அவனது கைகள் அவளது இடையை வளைத்து பிடித்து இருக்க , கண் சுருக்கி முணுமுணுத்தபடி நின்று இருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு அவளை எப்போதும் கை வளைவிலேயே வைத்து இருக்க வேண்டும் என்ற பேராவா எழுந்தது..



தனது நினைவை கலைத்தவன் , “எதுக்குஎன்னோட ரூமிற்கு வந்த ?” என்று கேட்க, கண்விழித்து பார்த்தவள் , அவனது நெருங்கிய தோற்றத்தை கண்டு “ அம்மா.. பேய்..” என்று பயந்து பின் வாங்கினாள் ..

“ஒய்.. என்ன பார்த்த பேய் மாறியா இருக்கு?” என்று கேட்க,

“மூஞ்சிய பக்கத்துல கொண்டுவந்து வச்ச அப்படி தான் இருக்கும்..” என்று நொடித்துக்கொண்டு கூற ,

“ இருக்கும் இருக்கும்.. உன்னோட மூஞ்சிய பக்கத்துல நான் பார்த்து இருந்தா அவ்வளோதான் .. அப்பவே மயக்கம் போட்டு விழுந்து இருப்பேன்.. மூஞ்சியா பாரு.. “ என்று அவனும் அதேபோல நொடித்துக்கொண்டு கூற, அதில் காண்டானவள் , அவனை முறைத்துவிட்டு ,தான் கொண்டு வந்த உணவை அவனிடம் தர , அதை வாங்கியவன் , அவளை ஏற இறங்க பார்த்தான்..

“எனக்கு வேண்டாம்” என்று கூற, “ நேற்று நீங்க சாப்பிடலை .. அதுனால தான் இதை குடுக்க வந்தேன் .. நெங்க டவ்லோட இருந்தீங்க..அதை நான் பார்த்துட்டேன்.. அதுக்கு கத்துனேன்.. சாப்பிடுங்க.. இது நானே செஞ்சேன் ..அண்ட் சாரி போர் எஸ்டர்டே.. நான் கொஞ்சம் குறும்பு செய்வேன்.. உங்ககிட்ட கொஞ்சமே கொஞ்சம் அதிகமா செஞ்சுட்டேன்.. பிளீஸ் சாப்பிடுங்க.. “ என்று கூறி அவனது கைகளில் அதை திணிக்க , அவனோ வேண்டாம் என்று மறுத்து கீழே தள்ளிவிட்டான்.. அவன் வேண்டும் என்றே தள்ளவில்லை.. மறுத்தபோது கை தவறி கீழே விழுந்து விட்டது..

அதற்கு கோவம் கொண்டவள் , “ சாரி ஃப்ரெண்ட்.. உங்களுக்கு கொண்டுவந்தது என்னோட தப்பு தான் “ என்று கீழே விழுந்த உணவை எடுக்க தொடங்கினாள்.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு விழுந்து விடுவேணா என்று நின்று கொண்டு இருந்தது..

“விடு.. நான் எடுத்துக்கறேன்.. தெரியாம தான்கீழே விழுந்திடுச்சு ..நீ போ இங்க இருந்து.. ஒரு பையன் தனியா இருக்க வீட்டில் இப்படி தான் நடந்துக்குவியா... அறிவில்லை.. நீ ஒண்ணும் குழந்தை இல்லை..இனிமேலாவது அடுத்தவங்களை தொல்லை செய்யாமல் நிம்மதியா இருக்க விடு ” என்று அவளை அகற்ற நினைக்க , அதையும் அவனது கோபமாக புரிந்து கொண்டவள் ,” போறேன் அஸ்வின்.. போறேன்.. இனி நீங்க நிம்மதியா இருங்க.. நான் இங்க இருக்கபோறது வெறும் ஆறு மாசம் தான் .. அதுவே அதிகம் தான் .. மேக்ஸிமம் ஆறு மாசம்.. இல்லேனே இன்னும் மூணே மாதத்தில் போய்டுவேன் ஒரே அடியா.. “ என்று வெறுமை நிறைந்த கலங்கிய கண்களோடு அவனிடம் சொல்லிவிட்டு விடுவிடுவேன அவளது வீட்டிற்கு சென்றாள்..



அவளது சொல்லின் சாராம்சம் புரியாமல் சில நிமிடங்கள் நின்றவன், அதை உணர்ந்தபோது ,” ஒரே அடியா போய்டுவாளா.. அதுவும் மூணு அல்லது ஆறு மாசத்திலா.. “ என்று அவனது இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது..



ஒருவேளை இதுவும் அவள் செய்யும் குறும்பாக இருக்குமோ என்று எண்ணியவன் , ‘கடவுளே, அவளுக்கு நிம்மதியை குடுங்கள்.. வாழ வேண்டிய பெண்..கொஞ்சம் நல்ல புத்தியை குடுங்கள் ’ என்று வேண்டி விட்டு,அவனது அலுவலகம் சென்றான்..
 

Thanu

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃபிரண்ட்ஸ்...

கதை எப்படி போகுது.. இதுவரை ரெண்டு எபி தான் குடுத்து இருக்கேன்.. இருந்தாலும் கேக்குறேன்.. இந்த எழுத்து நடை ஓகே வா?

அப்படியே உங்க கருத்துக்களை ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க..
அதுதான் எனக்கு எனர்ஜி டானிக்...

பை பை,, நெக்ஸ்ட் எபியுடன் வருகிறேன் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top