Epi-1A- என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)

Advertisement

Thanu

Writers Team
Tamil Novel Writer
என் உதிரத்தில் நிறைந்தவளே-1a
இளம்காலை பொழுதின் நேரத்தில் நடைப்பயிற்சிக்கு சென்ற அஸ்வின் வீடு வந்து சேர்ந்து மீண்டும் தனது காலை கடமையாக யோகாவை செய்துகொண்டு இருந்தான்.. வீடு அமைதியாக இருக்க, ஏனோ இன்று அவனுக்கு யோக செய்யும் மனநிலைமை இருந்தது.. யோகாவை செய்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த பக்கத்துவீட்டை நினைத்தவன், தான் வந்த இரண்டு மாதத்தில் இன்று மட்டுமே அமைதியை உணர்ந்தான்.. அதுவும் அவனுக்கு உவப்பனதாக இல்லை..
அஸ்வின் ஒரு தனிமை விரும்பி..அமைதியாக இருக்கும் இடம் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.. அவனுக்கு என்று நண்பர்கள் என்று குறிப்பாக யாரும் இல்லை.. சென்னை அலுவலகத்திற்கு மாற்றல் ஆகி இரு மாதங்களுக்கு முன்பு தான் வந்தான்.. அதிலும் அவனே ஹோட்டலில் தங்கிகொண்டு வீடு தேட, அவனது அலுவலகத்திற்கு அருகிலேயே இரண்டு ஒரே மாதிரியான வீடுகளாக ஒரே காம்ப்பவுண்ட் க்குள் இருக்க அவனுக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப் போயிற்று..
அந்த வீட்டின் அமைப்பும் முன்புறம் உள்ள சிறிய பூந்தோட்ட மும் அவனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அமைதியாக இருக்க, உடனே அட்வான்ஸ் குடுத்து வீட்டை தயார் செய்தான்..
அருகில் உள்ள பக்கத்து வீட்டினரை பற்றி அவன் யோசிக்கவே இல்லை.. அவனை பொறுத்தவரை அவன் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் .. வார நாட்களில் வெளியே செல்லுபவன் தனியாக இருக்க. விரும்புபவன்.. இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் பயணம் செய்வான்.. மீதி உள்ள நேரத்தை அவனது அலுவலகமும் வேலையும் விழுங்கி விடும்..
இதோ ஒரு வாரம் ஆகிவிட்டது.. அவன் குடி வந்து.. இப்போதுவரை  அவனது தனிமைக்கு எந்த இடையூறும் இல்லை.. ஒரு நாள் வேலை விட்டு வீட்டிற்கு வர, ஒரு பந்து அவனது நெற்றியை பதம் பார்த்தது..
"ஷ்ஷ்.. ஆ ஆ.. யாரது?" என்று தலையை தேய்த்த படி கேட்க, அங்கே வந்து எட்டி அவனை பார்த்தவள், "சாரி ப்ரெண்ட்" என்று பந்தை எடுத்துகொண்டு ஓடிவிட்டாள்..
"ஷிட்..இடியட் "என்று அவளை திட்டிவிட்டு அவனது வீட்டிற்கு சென்றான்.. காலையில் தான் வீட்டின் ஓனர் பக்கத்து வீட்டிற்கு புதியதாக குடி வந்திருப்பதை கூற, அதை காதில் எடுத்துகொள்ளாதது எவ்ளோ தப்பு என்று வீட்டினுள் காலை வைத்தும் புரிந்துகொண்டான்.. அவனது வீடு எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.. அதே சமயம் அவன் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும்.. ஹாஸ்டலில் அவனது குணத்திற்கு எதிராக இருப்பதால் அவன் தனியே வீடு எடுத்து தங்கி பழகிகொண்டான்..
படிக்கும் காலத்தில் இருந்து தனியே இருக்க பழகியவன் இப்போது அவனது வீட்டிலியே அவனது பொருட்கள் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டவன் மனது ஆத்திரத்தில் குதித்தது…
அதே சமயம் அங்கே கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன் ஒரு உருவம் பதுங்கியபடி சமையல் அறை நோக்கி செல்ல அந்த உருவத்தை பின் தொடர்ந்தான் அஸ்வின்..
அந்த உருவம் சமையலறை சென்று அங்கே உள்ள குளிர்சாதனப்பெட்டியில் உள்ள பலவகையான ஐஸ்கிரீம்களை பார்த்து சப்பு கொட்டிவிட்டு அதை எடுத்து தனது பையில் வைத்துகொண்டு கடைசியாக இருந்த சாக்லேட் ஐஸ்கிரீம் மற்றும் கேக்கை இரு கைகளில் எடுத்துகொண்டு வாயில் வைத்தபடி திரும்பிய அந்த உருவம் எதிரே கை கட்டி தன்னையே பார்த்தபடி நின்று இருந்த ஆறடி ஆண்மகனை பார்த்து அதிர்ச்சியில் வாய் விரிக்க அவளது வாயில் இருந்த கேக் துண்டுகள் கீழே விழுந்தது..
கண்களை சாசர் போல விரித்து வாய் பிளந்து நின்ற உருவத்தை பார்த்து சிரித்தான்..
அந்த உருவம் அப்படியே இருக்க ,கை மற்றும் பைகளில் வைத்த ஐஸ்கிரீம் உருகி வழிந்து கொண்டு இருந்தது..
அஸ்வின், அந்த உருவத்தின் தோள் பட்டையில் கைவைத்து சுவற்றோடு சாய்க்க , அதில் தனது இயல்புநிலை வந்த உருவம், அவனை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்து ," சாரி ப்ரெண்ட்"என்று ஓட முயற்சிக்க அவனோ இரும்பக தோள்பட்டையை பிடித்து இருக்க, "இடியட்.. திருடி.. இரு உன்னை போலீஸில் ஒப்படைக்கறேன்" என்று அவன் கை பிடித்தபடி நகர, கை விலக்க திமிறியவள், "ஹைய்யோ..யாராவது காப்பத்துங்களேன் .. ஒரு பொண்ணை கொடுமை படுத்துறானே.."என்று கத்தியவள், அவனது கையை கடிக்க அதில் கையை உதரியவன் அவளை பார்க்க , அவள் எப்போதோ பறந்து இருந்தாள்..
அவன் அந்த கதவருகே செல்ல, அவள் அதை மூடியவள், " ப்ரெண்ட்.. இன்னொரு நல்ல சந்திப்பில் நாம் அறிமுகம் ஆகிகொள்வோம்.. நீங்கள் என்னை அதுவரை இடியட் என்றே அழைக்கலாம்" என்று கத்தி கூறினாள்..
"நீ நிஜமாகவே இடியட் தான்.. அதுவும் சரியான இரிட்டேட்டிங் இடியட் " என்று கத்தி கூறினான்..
அதை கேட்டவள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு " ஹலோ ப்ரெண்ட்.. நெங்க எனக்கு எப்பவும் ப்ரெண்ட் தான்.. நான் இரிட்டேட்டிங் இடிய ட்டா.. அப்படியே வச்சுக்கோங்க.. இனிமேல் தான் நான் உங்களை எரிச்சல் படுத்தப் போறேன்..அதாவது இரிட்டேட் பண்ண போறேன்.. நீங்க எரிச்சலாக நாங்க ஹேப்பியா இருப்போம்… சமத்தா எல்லாத்தையும் ஒதுங்க வச்ட்டு போய் தூங்குங்க...
அண்ணாச்சி.. உங்க இடியட் ஹேப்பி அண்ணாச்சி…பை.." என்று கதவின் பின் இருந்து கத்தி விட்டு செல்ல , அஸ்வின் பற்களை நரணரவென்று கடித்தபடி கதவையே வெறித்துபார்த்தான்…
__________&________&&_____&&&&&&________
ஹாய் பிரெண்ட்ஸ்...
மொபைல் ல type panuren athunalathan கொஞ்சமா update poduren.. ithu okva.. intha அளவு kudukurathunna daily update kooda குடுத்துடுவேன்.. perusa venumna konjam late aagum frnds.. nengale solungha..
then update எப்படி இருக்கு.. உங்க comments sollunga.. just one word podhum..
vaa.. next update tmrw noon..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய
''என் உதிரத்தில்
உ(நி)றைந்தவளே(னே)''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், தனு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top