Hi mam
தன் காதலை உணர்ந்தும் ,அதன் சாதக பாதகங்களை கருத்தில்கொண்டு,தன் காதலன்மேல் வெறுப்புவண்ணம் பூசிக்கொண்டு,தன்காதலனை நீண்டநாட்களின் பின் பார்க்கும்போது தன் உணர்வுகளை சொல்லவும்முடியாமல் அதனை மறைக்கவும் முடியாமல் திண்டாடும் நம்ம நாயகி லக்ஷனா,தன் உறவினளின் நட்புவட்டத்தில் இருந்தபெண் ஊர்விட்டு ஊர்போகும்போது ஏன் தன்மேல் வெறுப்பாயிருக்கின்றார் என்று தெரியாமல்,ஆனால் அதே நேரம் அப்பெண்ணை ஐந்தாண்டுகளுக்கு மேல் மறக்காமலும் ,தன்சகோதரியின் திருமணத்தில் நேரில் பார்க்கும்போது ஏதோபுரிந்தும் புரியாமல் இருக்கும் நம்நாயகன் யதுவீர்,இவ்விருவரும் ரசிகர்களுடன் ஒரு நகைக்கடையில் எடுத்தபுகைப்படம் ,சமூகவலைத்தளங்களில் வெளியாகி உண்மைக்கு புறம்பான தகவலைவெளியிட்டு ,அது அவர்களின் குடும்பங்களை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியது,ஆனால் மிக நிதானமான அவர்களின் பெற்றோர்கள் அன்றய நிலமையையும் பிள்ளைகளையும் புரிந்துகொண்டு அப்பிரச்சனையை அழகான முறையில் கையாண்டு,அப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவைத்து,பிள்ளைகளின் விருப்பத்தையுணர்ந்து அவர்களை சேர்த்துவைத்தும்விட்டனர்,எல்லோருமே நேர்மறைக்குணம்கொண்ட கதாபாத்திரங்களாக இருந்தது இக்கதைக்கு மிகச்சிறப்பாக இருந்தது,எங்களுக்கு நல்ல கதை தந்தமைக்கு நன்றி mam.
நன்றி
தட்சாயணி