En kaathal kannalagi p3

Advertisement

uma deepak

Writers Team
Tamil Novel Writer
இவர் ஆள்ன்னு சொல்லி, இப்போ ஒருத்தனை உங்க கஸ்டடி ல எடுத்தது இவர் ஆள் இல்லையாம். இவரை பத்தி தப்பு தப்பா சொல்லிட்டு, ஒரு குரூப் இருக்காங்க, அவங்க ஆள் தான் அவனாம்”.
“சோ இவர் மேல நீங்க கேஸ் போட்டு, கொண்டு வந்த ஆதாரம் எல்லாம் கொடுத்துட்டு வேற கேஸ் பாருங்க. அந்த கைதியை இங்க மாத்த சொல்லிட்டேன், நீங்க போகலாம் மிஸ் சம்யுக்தா” என்று கூறியவரை பார்த்து பல்லை கடித்தாள்.
“சார்! நீங்க இப்போ இவர் கிட்ட பேசிகிட்டு இருந்தது எல்லாம், ஏற்கனவே ரெகார்டாகி இருக்கு சார் என் சிப் மூலமா. அது இப்போ என் கிட்ட தான் பத்திரமா இருக்கு, இதை வெளியே மீடியா கிட்ட கொடுத்திடவா சார்” என்று வெகு பவ்யமாக கேட்டவளை பார்த்து முறைத்தான் அந்த ரவுடி காசி.
அப்பொழுது கோர்ட் விட்டு வெளியே வந்தவள், அங்கே ராசப்பன் அவனின் ஜீப்பில் கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, அந்த வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனை பார்த்து உள்ளுக்குள் ரசித்தாள்.
அவனோ கோபமாக, அவள் அருகே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து, அவள் காதருகில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு முனுமுனுத்துவிட்டு சென்றான். அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தையில், அவளுக்கு பயம் இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவள் அங்கு இருந்து சென்றாள்.
அன்று ஏனோ, சம்யுக்தாவிற்கு அதன் பின் வேலை செய்யும் எண்ணமில்லை. இதை எல்லாம் முடித்துக் கொண்டு அவள் ஸ்டேஷன் வந்து, அங்கே அந்த ரவுடி பாலுவிற்கு பாதுகாப்பு கொடுக்க மேலும் இரண்டு பேரை நியமித்து விட்டு, அவள் வீடு வந்து சேர மறுநாள் ஆனது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top