En kaathal kannalagi p2

Advertisement

uma deepak

Writers Team
Tamil Novel Writer
“இவ ஒவ்வொரு நாளும், எப்போ வீட்டுக்கு வந்து சேருவான்னு நாம பயந்துகிட்டே இருக்கோம். இவ நம்ம பயத்தை புரிஞ்சிக்காம, இப்படி இருக்காளேங்க” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.

“சாலா! அவ என்ன சின்ன குழந்தையா? நல்லது, கெட்டது எல்லாம் அவளுக்கும் தெரியும் தானே! நம்ம பயமும் அவளுக்கு தெரியும், அதனால தான் அவ போன் பேசி வர இவ்வளவு நேரமாகும்ன்னு சொல்லிடுறா”.

“நம்ம வேலை அவளுக்கு பொருத்தமா, ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் இப்போ. நாமளும் தேடிகிட்டு தான் இருக்கோம், சீக்கிரமே ஒரு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடை அணிந்து கீழே இறங்கி வந்தாள் சம்யுக்தா.

“ஏன் சம்யு? நாங்க ஏதும், உன்னை கஷ்டப்படுத்துறோமா?எங்க கிட்ட சொல்லனும்ன்னு தோணலையா உனக்கு?” என்று அவள் இதைப் பற்றி சொல்லவில்லையே தங்களிடம் என்ற ஆதங்கத்தில் கேட்டார் விசாலாட்சி.

“அம்மா! சொல்லணும் தான் நினைச்சேன், பட் சொல்லனும்னா எல்லாமே சொல்லணும், இப்போ வரைக்கும் நான் ஏன் அவனை கல்யாணம் பண்ணேன்னு அவன் கிட்ட கூட சொல்லல”.

“ப்ளீஸ்! இப்போதைக்கு என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. நான் கண்டிப்பா எல்லா விஷயமும் சொல்லுறேன், ஆனா இப்போ இல்லை” என்று கூறிவிட்டு, மாடியில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.

“இந்தா பாரு தங்கச்சி! இது நல்லதுக்கு இல்லை ஆமா, பொம்பளை பிள்ளை எல்லாம் தம் அடிக்க கூடாது, அது நல்லதுக்கு இல்லை. ஆமா நீ யார் தங்கச்சி, உன்னை எதுக்கு இந்த போலீஸ் கைது பண்ணி இருக்காங்கோ?” என்று விசாரித்தான்.

“எனக்கு எது நல்லதுன்னு தெரியும், இருக்கா இல்லையா? அதை மட்டும் சொல்லு. இன்னொரு தபா என் கிட்ட இப்படி பேசாத, இப்போ தான் ஒருத்தனை போட்டு தள்ளிட்டு வந்து இருக்கேன் பார்த்துக்க” என்று அவள் கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்தான்.

“இன்னா இருக்கா, இல்லையா உன் கிட்ட?” என்று அவன் அதிர்ந்ததை கண்டு கொள்ளாமல் கேட்கவும், வேகமாக அவன் தலை இல்லை என்று ஆடியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top