fathima.ar
Well-Known Member
*பக்ரீத் - ஈகை(தியாக) திருநாள்*
இறைவனின் தூதரான இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
*நடந்தது என்ன ?*
இப்ராஹிம்(அலை) அவர்கள், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.
நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி சாரா(அலை) மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள்.
*இறைவன் செய்த சோதனை*
இப்ராஹிம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு இறைவன், இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.
*அல்லாஹ்வுக்காக தன்*
*மகனை தியாகம் செய்த நபி*
இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம்(அலை), அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரீல்(அலை) என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து, மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.
*பெருநாளில் நாம் செய்வது*
இப்ராஹிம்(அலை) அவர்கள் இறைவனுக்காக செய்ய துணிந்த இந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில், சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்களால் முடிந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு,
அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
யா அல்லாஹ், எங்கள் வணக்க வழிபாடுகளை உனக்காகவே மட்டும் செய்யும் மனதை (இஹ்லாஸ்-மனத்தூய்மை) தந்தருள்வாயாக... ஆமீன்
இறைவனின் தூதரான இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
*நடந்தது என்ன ?*
இப்ராஹிம்(அலை) அவர்கள், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.
நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி சாரா(அலை) மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள்.
*இறைவன் செய்த சோதனை*
இப்ராஹிம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு இறைவன், இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.
*அல்லாஹ்வுக்காக தன்*
*மகனை தியாகம் செய்த நபி*
இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம்(அலை), அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரீல்(அலை) என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து, மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.
*பெருநாளில் நாம் செய்வது*
இப்ராஹிம்(அலை) அவர்கள் இறைவனுக்காக செய்ய துணிந்த இந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில், சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்களால் முடிந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு,
அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
யா அல்லாஹ், எங்கள் வணக்க வழிபாடுகளை உனக்காகவே மட்டும் செய்யும் மனதை (இஹ்லாஸ்-மனத்தூய்மை) தந்தருள்வாயாக... ஆமீன்