Hi mam
என்ன mam இரண்டு பகுதியும் வாசிக்கும்போது ஒரே சோகமயமாய் இருக்கின்றது,இதில் காரணமேயில்லாமல் பாதிப்பை அனுபவிக்கும் ஒரே ஜீவன் வர்ஷிதான்,பாவம் பிறந்ததிலிருந்து இப்போவரைக்கும் தனிமை தனிமைதான்,முற்பகுதியில் ஈஸ்வருக்கு நினைவு முழுவதும் வர்ஷி அதற்கு பின்தான் தொழில்,இப்போது நினைவு முழுவதும் தொழில் அதற்கு பின்தான் வர்ஷி,இதனால்தான் சொல்வார்கள் எப்போதும் கையில் கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை,ஆனால் தொலைத்தபின் அதனை நினைத்து வருந்துவது,வர்ஷினிக்கு எப்போதும் தனிமை,ரஞ்சனிக்கு எப்போதும் அழுகை,இதற்கு எப்போதான் தீர்வு,ஈஸ்வர் காதலாகட்டும் தொழிலாகட்டும் எல்லாவற்றிலுமேஅளவுக்குமீறிய ஆர்வமும் செயலும்,ஆனால் இதில் ஏதாவது ஒன்றை செய்யும்போது மற்றொன்றையும் சேர்த்து செய்தால் அல்லது சமநிலையை பேணினால் எல்லோருக்கும் நல்லது,வர்ஷி பாதிப்படையமாட்டார்கள்,இப்போ ஈஸ்வரால் ஜகன் கூட வீட்டிற்கு போவது தாமதமாகின்றது,இதனால் ரூபாவிடமிருந்து ஏதாவது புதுப்பிரச்சனை வருமோ,எல்லாம் mam க்கே வெளிச்சம்.
நன்றி
Aravin22