Akila Mugilan's Oru Kural Polae Nee Enakullae 5

Advertisement

muthu pandi

Well-Known Member
காரிடாரில் நடந்து கொண்டு இருக்கும்போது முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ரெண்டு பேரும் எதுக்கு சென்னை வந்தீங்க அதும் என்கிட்ட கூடம் சொல்லல என்று மிதுன் கேட்டான்.

ஷ்ரத்தா அவனிடம் அவார்டு பத்திய விஷயங்களை சொல்லி கொண்டு இருந்தாள்..அதற்கு மிதுன் வாழ்த்திவிட்டு ...என்கிட்ட சொல்லியிருந்தா நானும் வந்து இருப்பேன்ல என்றதும் பேபி அது சர்ப்ரைஸ் என்றாள்.

இதுல எனக்கு என்ன சர்ப்ரைஸ் என்று மிதுன் கேட்டான் ..

அதுவா நாளைக்கு உன் காலேஜ் வந்து உன் லெக்சரர் லாம் மீட் பண்ணி உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம் என்று இருந்தோம் என்று அவனை கிண்டலாக பார்த்து சொன்னாள்..

அட பாவிங்களா அம்மாவும் பொண்ணும் இப்படி ஒரு திட்டம் வேற வச்சு இருந்தீங்களா ..நல்ல வேளை கடவுள் என்னை காப்பாதிட்டாரு.அப்படியே நடந்து கொண்டே ரோஹிணி இருக்கும் அறைக்குள் வந்தனர் ..

அங்கு மாது பாட்டியை பார்த்ததும்..பாத்தி என்று அழைத்தாள்..

அச்சோ என் தங்க பொண்ணு பாட்டி பார்க்க வந்து இருக்கீங்களா என்று அவளை வந்து தூக்க வந்தார் ஆனால் அவள் ஷ்ரத்தா பின்னாள் வந்து ஒழிந்து கொண்டாள்..

பேசுவா ஆன கிட்டலாம் உடனே வரமாட்ட ..கொஞ்சம் பழகின பிறகு வருவா என்று அவருக்கு சமாதானம் கூறினாள்..

ரோஹிணி அப்பொழுது தான் பேபியை பார்த்தாள் ..அவளின் அம்மா ரூம் வந்ததில் இருந்து பேத்தியை பத்தின பேச்சு தான் ..சோ இவள் அருந்ததியை சுவாரசியமாக பார்த்து கொண்டு இருந்தாள்..

அருந்ததியும் "ரோஹிணி அவளது கையில் இருந்த குழந்தை யை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தது"..

ரோஹிணி குழந்தையை கை நீட்டி அழைத்து இங்க கிட்ட வந்து தம்பி பாரு வா என கூப்பிட்டாள்.

அது அவங்க அம்மாவை பார்த்தது ..ஷ்ரத்தா கண்களால் போ என்று சொன்னதும் தளிர் நடை இட்டு குட்டி குழந்தையை போய் பார்த்தது ..

நான் யாருன்னு தெரியுமா அரு என்று ரோஹிணி கேட்டாள்..

அது தனது கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் செய்து .."ரோதி அத்தை" என்றது ..பெயர் சரியாக வாயில் வரவில்லை ..ஆனால் ரோஹிணி க்கு கண்கள் பனித்தன.

இந்த குட்டி தம்பி பேர் என்ன?,நான் தொடவா?,இவன் ஏன் தூங்குறான்?,என்கிட்ட பேசுவானா ?..இவன் விரல் ஏன் குட்டையாக இருக்கு?என்று வரிசையாக அவளின் மழலை மொழியில் கேள்வியாக கேட்டு கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு போய் விட்டு வந்த சரண்,கார்த்திக்,மிதுன்,ஷ்ரத்தா,மாதங்கி அனைவரும் ரோஹிணி அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் படும் பாட்டை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் ..

என் பொண்டாட்டி யையே பேச்சுல திணற வச்சிட்டா உன் பொண்ணு சூப்பர் தான் என்று கிண்டல் பண்ணான் கார்த்திக்..

கார்த்திக் மரியாதை யா போய்டு இல்லனா இந்த ஸ்டேண்டு எடுத்து அடிச்சுடுவேன் ..என்று ரோஹிணி கத்தினாள்..

ஷ்ரத்தா தான் அவளை கேள்வி கேட்க விடாமல் செய்து ரூமிற்கு செல்லலாம் என அழைத்தாள்..

ரூம் வாசல் வரை வந்து விட்டு " மம்மா குத்தி பையன் பேர் கேட்டுட்டு வரேன்" என்று மறுபடியும் ரோஹிணி அருகில் சென்று பெயர் என்ன என்றாள்..

நாங்க இன்னும் குட்டி தம்பிக்கு பேர் வைக்கலயே ..நீங்க ஒரு பேர் சொல்லுங்க அதையே நம்ப வச்சிடுவோம் என்று ரோஹிணி சொல்லி கொண்டிருந்தாள்..

அதற்கு அரு பேபி லைனாக ,"பீம், சின்சான்,டாம், சுக்கி,டோரா, காளியா "என்று கார்ட்டூன் பெயராக சொல்லி கொண்டிருந்தாள்..
ஷ்ரத்தா விர்க்கு சிரிப்பு வந்து விட்டது ..


கார்த்திக் தான்" எல்லா பெயரும் சூப்பரா இருக்கு இதுல எதாச்சும் ஒரு பெயரை வாச்சிடலாமா ரோஹி" என்று கேட்டு அவளின் முறைப்பை பெற்று கொண்டான்..

பேபி வா நாளைக்கு நேம் வைப்பியாம் என்று ஷ்ரத்தா கூட்டி கொண்டு சென்றாள்..

சரண் வந்த சிறிது நேரத்திலேயே மிதுன் வெளியே சென்று அவன் ஆளிடம் கடலை போட ஆரம்பித்து விட்டான் ..

இவர்களும் வெளியே வந்து போன் பேசி கொண்டிருந்த மிதுணின் தலையில் தட்டி அவனையும் அழைத்து கொண்டு ரூமிற்கு வந்து சேர்ந்தாள்.

மிதுனை ஒரு பெட்டில் படுக்க சொல்லி விட்டு இவள் பேபி இருந்த பெட்டில் படுத்தாள் ..அது கொஞ்சம் பெரிய பெட் தான் ..பக்கத்தில் படுத்த குழந்தையை தட்டி கொடுத்துக் கொண்டே அர்ஜுனை பற்றி யோசித்தாள்..

ஆம் அர்ஜுனை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள்..குடும்பம் முழுதும் இங்கே இருக்கும் போது அவன் மட்டும் எங்கே போனான்..அர்ஜுனின் குடும்பம் பற்றிய பாசம் இவளுக்கு தான் தெரியுமே,இவளின் இந்த நிலைமைக்கு காரணமும் அதான்.. அவன் ஒரு நாள் கூட வெளியே தங்க மாட்டான் .

கொஞ்சம் நேரம் கழித்து அரு வின் ஆப்ரேஷன் பற்றிய பயம் வந்து விட்டது ..சாதாரண லேசர் ஆபரேஷன் தான் என்றாலும் அவளின் குழந்தை எப்படி இந்த ஹாஸ்பிடல்,மருந்து இதை எல்லாம் தாங்குவாள் என்று கவலையாக இருந்தது .

அனைத்தும் யோசித்து கொண்டு அவள் தூங்கவே விடியற்காலை ஆனது நடுவில் கார்த்திக் ,சரண் இருவரும் அடிக்கடி பார்த்து விட்டு சென்றனர் ..மிதுன் அடிக்கடி எழுந்து பார்த்து கொண்டான்.

அனைவர் மனதிலும் இருந்து வந்த ஒரே கேள்வி இந்த அர்ஜுன் மனசுல என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறான் ..இன்னும் அவளை வந்து பார்க்கவில்லை என்று தான் .

மறுநாள் காலை அனைவரும் வந்து விட்டனர் ..எல்லோரிடமும் சொல்லி விட்டாள் யாரா இருந்தாலும் குழந்தையிடம் நார்மலாக பேசுங்க..அவ ஈஸியா கண்டு பிடிப்பா சோகமா இருக்காதிங்க என்று சொல்லி விட்டு இவளும் மிதுனும் எப்பொழுதும் போல் அவளிடம் விளையாடி கொண்டு இருந்தனர்.

குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்றதும் ..ஷ்ரத்தா அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்..சரண் அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும் ..,

அம்மு அழாதடா ஒன்னும் இல்லை இன்னைக்கு சாயந்திரம் பேபி நார்மல் ஆகிடுவா என்று அவளது தலையை தடவி கொண்டு இருந்தான் ..

அப்பொழுது தான் அர்ஜுன் அங்கு வந்தான் ..அவனின் அப்பா,கார்த்திக் ,சரண் மூவரும் அவனை முறைத்து கொண்டு இருந்தனர்..இவ்வளவு லேட்டாக வந்ததிற்கு ..

அர்ஜுன் க்கு சீக்கிரம் வர வேண்டும் என்று ஆசை தான் ஆனால் அவன் குழந்தை ஆபரேஷன் செய்ய போகும் போது எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று பார்க்கிங்கில் வெயிட் செய்துகொண்டு இருந்தான்.

அனைவருக்கும் என்ன ஆகும் என்ற பயம் வந்து ஒட்டி கொண்டது..."ஷ்ரத்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாள்" என்ற பயம் தான்..

அர்ஜுன் முகத்திலும் அப்படி ஒரு பதற்றம் ..அவன் மகளை இப்படி ஒரு நிலைமையிலா முதன் முதலில் பார்க்க வேண்டும் என்று உடனே அவன் மனைவியின் நினைத்து இன்னும் பதற்றம் வந்தது ..

மிதினுக்கு அர்ஜுனை பார்த்ததும் ஆச்சர்யம் இவர் ஃபேமஸ் டைரக்டர் ஆச்சே ,அதுமட்டும் இல்லாமல் நிறைய நல்லது செய்யும் ஒரு செலிபிரிட்டி என்று தெரியும் .

நேற்று இங்கு வந்ததில் இருந்து மிதுன் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டான் ஷ்ரத்தா சாதாரண வீட்டு
பெண் இல்லை என்று தெளிவாக புரிந்தது.அது போல் அர்ஜுனை யும் யாரோ சொந்தகாரர் போல் நினைத்து கொண்டான் .


அர்ஜுன் வந்தவன் ஷ்ரத்தா முன் மண்டியிட்டு "Mrs.ஷ்ரத்தா அர்ஜுன்" என்று கூப்பிட்டான் ..
ஷ்ரத்தா விற்கு அந்த குரலின் சொந்த காரனை தெரியாமல் இருக்குமா.


உடனே சரண் மடியில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள் .

இரண்டு அடி எடுத்து வைத்ததும் நின்ற இடத்தில் இருந்தே அர்ஜுன் அவளின் கையை பிடித்தான் .

ஷ்ரத்தா அவனின் முகத்தை இதுவரை நிமிர்ந்து கூடம் பார்க்கவில்லை.கையை விடுவிக்க போராடினால் முடியவில்லை .

அர்ஜுன் அவளின் முன் வந்து நின்று கையை விட்டான் .அவன் எதோ பேச ஆரம்பிக்கும் போது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்து "ஐ ஹேட் யூ" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டாள்.

அர்ஜுன் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விட்டான்.
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top