16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

Advertisement

Eswari kasi

Well-Known Member
மறைக்கப்பட்ட பழத்தின் அருமை…… சீத்தாப்பழம் (அன்னமுன்னா பழம்)

16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சர்வ ரோக நிவாரணி

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..


கிராமங்களில் வீடுதோறும் என் பாட்டனும் பூட்டனும் விதைத்த அருமருந்து..

சென்ற தலைமுறையால் புறக்கணிக்கப்பட்ட பழம்..

தமிழ் மண்ணில் விளையக்கூடிய பராம்பரியமிக்க பழம்..

வெளிநாட்டுகாரன் இந்த பழத்தின் அருமை உணர்ந்து எப்போதே பயிரிட ஆரம்பித்து ஒவ்வொரு கடையிலும் விற்க ஆரம்பித்துவிட்டான்..
வெளிநாடுகளில் இதன் விலை என்ன தெரியுமா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மரம் இருக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு செய்வது தான் நமக்கு தெரியுமா..?

இந்த பழத்தின் வெளி உருவம் பார்த்து குறைத்து மதிப்பிட்டு ஒதுக்கியதின் விளைவு இன்று வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் அமோக விற்பனை
தாய் மண்ணில் இந்த பழத்திற்கு அவமரியாதை மட்டும் தான்..

பலரால் விரும்ப படாத புறகணிக்கப்பட்ட பலரால் முகம் சுழிக்கப்பட்ட பழம் இது..

ஆனால் காலம் இன்று அத்தனை பழ கடையிலும் இந்த பழம் இல்லாமல் இல்லை..
அன்று சும்மா கொடுத்தால் கூட வாங்கி சாப்பிடாத சாப்பிட விழிப்புணர்வு இல்லாத பழம் இன்று அத்தணை கடைகளிலும் அதிக காசுக்கு விற்கப்படுகிறது என்றால் மக்களிடையே அடுத்த தலைமுறையிடையே விழிப்புணர்வு வந்துள்ளது..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இந்த பழங்கள் விவசாயிகளால் பயிரிட பட்டு விற்பனைக்கு வருகிறது..

தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் மிண்டு்ம் வளர்க்கப்பட்டு வருகிறது..
நகரங்களில் இல்லை நரகங்களில் தான் இன்னும் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பழத்தின் அருமை உணரவில்லை..

காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டு வளர்ந்த நாமல்லவா ?
எங்கேயோ வளர்ந்து வரும் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால் நமக்கு போலி கௌரம் அல்லவா?

ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்களை விட இந்த பழத்திற்கு அதிக மருத்துவ குணம் உண்டு..

ஆனால் இந்த பழம் வாங்கினால் கௌரவ குறைச்சல் அல்லவா..
ஆப்பிள் போன்ற அழகான பழம் தான் நமக்கு தேவை..

பராம்பரியம் மிக்க மருத்துவத்தன்மை நிறைந்த இது போன்ற அத்துனை பழங்களையும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு அத்தனை நோய்களையும் நம் மண்ணில் பரப்பிய அன்னிய நாட்டின் சூழ்ச்சி அறியா நோய்களில் சிக்கினோம்..

இதன் விளைவு இன்று பிறந்த குழந்தைக்கு இரத்த அழுத்தம்
20 வயதில் இரத்த அழுத்தம்
40 வயதில் இரத்த அழுத்தம்
60 வயதில் இரத்த அழுத்தம் .. மாத்திரை இல்லாத மனிதர்களே இல்லாத கேவலமான சூழல் நம் தேசத்தில் உருவாக்கிவிட்டார்கள்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்..

போலி கௌரவம் பார்க்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த மரத்தை உருவாக்குங்கள்..
விருத்தினர் விட்டுக்கு சென்றால் ஆப்பிள் தேவையி்ல்லை ஆரஞ்சு தேவையில்லை போலி கௌரவம் தேவையில்லை இந்த பழத்தை வாங்கி சென்று கொடுங்கள்..
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் எவரோ ஒருவர் இரத்த அழுத்தத்தில் தான் வாழ்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை சொல்கிறது

இவ்வுளவு பெரிய பதிவு எதற்கு அப்படி என்ன ஞானப்பழமா என்று கேட்காதிர்கள்..

சத்தியமா இல்லைங்கோ

சாதாரண மருத்துவ பழம் தான்கோ அதன் பெயர் சீத்தா பழம் கிராமங்களில் ஆத்தாபழம் என்பார்கள்..

ஏழை சொல் மேடை ஏறாது என்பது உண்மை ஆனால் ஏழை சொல்லில் தான் நியாயம் இருக்கும்..
அதுபாேல
இந்த சீத்தாபழம் கடைக்கு வர ஒரு நூறாண்டு தேவைப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையான மருத்துவ குணம் கொண்டது..

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிறது..சீத்தாபழம்.
IMG-20181127-WA0011.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top