தோழமைகளுக்கு,
ஆதி காவியமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், அதன் ஆழ அகலங்களுடன், எளிமையாய் அனைவருக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒரு முயற்சி.
பெரியோர் சிலரின் ராமாயண தமிழாக்கத்தை ஓரளவு படித்து, ஆன்றோர்களின் உபன்யாசங்களை கேட்ட தகுதிகளை மட்டும் கொண்டு, ஒரு பகீரத ப்ரயத்தனம்.
"அவனின்றி ஓரணுவும் அசையாது" என்ற அசாத்தியமான நம்பிக்கையுடன்.. ஒரு வேள்வியாக.. கூட்டுப் பிரார்த்தனையாக.. இறையை நாடும் செயலாக.. இந்த சிறியேனின் முயற்சி.
கற்றறிந்த பெரியவர்கள், என் முயற்சி வெற்றியடைய வாழ்த்துங்கள். தோழமைகள் ஆதரவு தர வேண்டுமாய், வேண்டி வணங்கி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று மாலை.. முதல் பதிவு.
நான்கு (அ) ஐந்து நாட்களுக்கு ஒரு பதிவு என்று முடிவு.
ஈசன் அருளால் நல்லபடி நடக்க ப்ரார்த்தனைகளுடன்
லக்ஷ்மி கணபதி.
****************************
எனக்கு உறுதுணையாய் நிற்கும் எனது குடும்பத்தினர் & நட்புக்கள்
ஸ்ரீவித்யாநாராயன் @Vidyanarayanan, பிழை திருத்தம் செய்து கொடுக்கும் தேன் குரல் @Suvitha
எது பண்ணினாலும், தட்டிக் கொடுத்து தோள் கொடுக்கும் @அழகி, @Pashy2k நித்யா, @Kodimani மணிக்கொடி
மற்றும்
தளத்தில் ராமாயணம் எழுதலாமா என்று கேட்ட உடன் 'சூப்பரா பண்ணுங்க', ன்னு என்கரேஜ் பண்ணி த்ரெட் குடுத்த MM நம்ம @mallika மேம்,
அனைவர்க்கும் நன்றி.