விவாகரத்து

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"விதவிதமான மலர்களுக்கு
நடுவே
திருவிழாவாய்
ஓர் திருமணம்"


"உறவுகளால்
ஒன்றான
உள்ளங்கள்
ஒற்றுமையாய்
உல்லாச உலகிலே"


"காலம் கடந்தது
குழந்தை தரித்திட
குற்றம் கண்டான்
கண்வன்
கட்டிய மனைவி மேலே"


"மகிழ்ச்சி பொழுதுகள்
மறைந்தன
காதல் பொழுதுகள்
கரைந்தன"


"ஆறுதல் கூற
வேண்டியவனோ
உன்
அன்னையிடம் செல்
என்றான்"


"அறியா பெண்
இவள்
அன்னை மடி அடையும்
முன்னே
இடியாய்
வந்தது
வக்கீல் வழியே
விவாகரத்து பத்திரம்"


"நம்பி வந்தவளை
நடுவிலே
விட்டவனே
நல்லவனோ நீ?
குழந்தைக்காக
குப்பையாய் தூக்கி
எறிந்தாயோ அவளை"


"மூன்று
முடிச்சில்
முடித்தாயே
அவள் வாழ்வை"


"மூடனே
முட்டியிட்டு
உன்னிடம் வாழ்க்கை
வேண்டிட
வஞ்சியவள்
நெஞ்சிலே தீயாய் கக்கினாயே
வார்த்தைகளை"


"கதறி அழுத
பெண்ணவள்
காட்டாற்று வெள்ளமாய்
கரை உடைத்தாள்
அவள்
உழைப்பால்
உயர்ந்தாள்"


"இன்று
அவள்
ஆதரவற்றோர் இல்லத்தின்
அன்னையடா
மடையா"


"பெற்றால் தான்
பிள்ளையோ
பிள்ளை பெற்று
தந்தால்
மட்டுமே
அவள் மனைவியோ"


"முட்டாள் மனிதனே
இழந்தாயே
இனிய வாழ்வையே"
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#மூன்று
முடிச்சில்
முடித்தாயே
அவள் வாழ்வை

Nice da
விவாகத்தை முடித்து வைத்த விவாகரத்து
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#மூன்று
முடிச்சில்
முடித்தாயே
அவள் வாழ்வை

Nice da
விவாகத்தை முடித்து வைத்த விவாகரத்து
நன்றி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top