ஆசையை விடனும்னு புத்தர் ஆசைப்பட்ட மாதிரியா??எனக்கு புத்தரை நினைவுபடுத்துது...
superb
எனக்கு என்னோட இன்னொரு கவிதை நினைவு வருது
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்...
மண்ணிலிருந்து அல்ல
என்னில் இருந்து....
என் எண்ணங்களில் இருந்து...
சில நேரங்களில்
உங்களுக்கும்
விடுதலை ஒன்று வேண்டியதாயிருக்கும்
அதிகாலையில் உறக்கத்தில் இருந்து
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
காற்றோடு உரசிசெல்லும்
பயணங்களில்
உறக்கக் கத்தும்
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
என் கோபங்களில் இருந்து
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
அலைக்கழிக்கும் சிந்தனைகளில் இருந்து
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
இரவில் விழிக்காமல்
இருக்கும்
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
சில சமயங்களில்
விடுதலை வேண்டும்
என்ற எண்ணத்தில் இருந்தே
விடுதலை ஒன்றை வேண்டுகிறேன்..
இப்படி வேண்டுவது
கூட தளைகளாகத்
தோன்றும் தருணங்களில்
விடுதலை கூட வேண்டாம்
என்றே வேண்டுகிறேன்
ஆனால்
"வேண்டாம்" என்பதும்
வேண்டுவது தானே.....?!!