விந்தை எதுவோ?

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


"உன்னை

கண்ட நொடி

முதலாய்

கலங்கியதே

என் நெஞ்சம்"



"கலங்கிய நெஞ்சமதில்

மஞ்சம் அமைத்து

மன்னன் போல்

நீ வீற்றிருக்கும்

விந்தை எதுவோ?"



"உன்னில்

தொலைந்தேனா

இல்லை

என்னை தொலைத்தேனா

தேடியும்

விடை கிடைக்காத

விந்தை எதுவோ?"



"நீ

உதிர்த்த

ஒரு சிரிப்பில்

உன்னிடத்தில்

என் இதயம்

வந்த வ்ந்தை எதுவோ?"



"நீ

மீசையை

முறுக்குகையில்

நான் மூச்சுவிட

மறந்திடும்

விந்தை எதுவோ?"



"கடந்து செல்லும்

உன்னை

என் கண்கள்

கைதுசெய்யும்

விந்தை எதுவோ?"



"உன்

கம்பீர முகமதை

காண்கையில்

கன்னியவள்

கண்ணிமைக்க

மறக்கும்

விந்தை எதுவோ?"



"உன்

திருவாய் வழி வரும்

வார்த்தை வரத்திற்கு

மங்கை நான்

தவமாய் தவம்

இருக்கும்

விந்தை எதுவோ?"



"விந்தையான

வினாக்களுக்கு

விடை தேடுகிறேன்

வில் புருவம்

கொண்டவனே

உன் விழியதில்"



"விந்தை எதுவென

அறிய

முற்படுகையில்

உன் கள்ளமற்ற

அளவற்ற காதல் தான்

காரணம் என

அறிந்தேனே"



"அறிந்த நொடி

ஆனந்தம் கொண்டேனே

இனியவேனே

உன்னை

என் இணையாய்

ஏற்பதில்

உலகை வெற்றிக்கொண்ட

ஒரு உணர்வு உள்ளத்தில்

ஔடதமாய் ஆனாயோ

என் ஆறாத காயங்களுக்கு

உன் அக்கறையினால்"



"விழியில் பட்ட

உன் பிம்பம்

விருட்சமாய்

என்னுள்ளே

வேரூன்றி நின்றது

என்

விழி மூடும் வரை

விந்தை தான்

எனக்கு"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top