வண்ணங்களின் வசந்தம் -25(b)

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_1367130390326538.jpeg
அத்தியாயம் -25(b)

காரில் இருந்து இறங்கியளை கண்டு அங்கு நின்றிருந்த ஐவருமே கண்கள் தெரித்துவிடும் அளவிற்கு அதிர்ந்து வாயில் கைவைத்து பார்த்திருந்தனர். ஏனென்றால் நம்ம பூஜா டிரஸ் அப்படி, முட்டி வரை இருக்க கூடிய ஸ்லீவ்லஸ் இரவு உடையை அணிந்திருந்தாள்.

முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட சூர்யா வேகமாக அர்ஜுன் அருகில் சென்று, அவன் கண்ணை மூடிவிட்டு அபியிடம் பூஜாவை கண் காட்டி “மூடுடி மூடுடி….”என்று சொல்ல, அவளோ “அதான் பார்த்தாச்சுல இனிமே எங்க மூடுறது”என்றாள்.
அர்ஜுன் வேகமாக சூர்யாவின் கையை எடுத்துவிட்டவன் அவளை முறைத்துவிட்டு பூஜாவிடம் திரும்பி கோபமாக “என்னடி டிரஸ் இது”என்று கேட்க அவளோ கிண்டலான குரலில் “ஏன் பார்த்தா தெரியல நைட் டிரஸ்”என்க, பிறந்தநாள் அதுவுமாக தன்னவளை திட்ட விரும்பாதவன் ப்ரீத்தி தோளில் போட்டிருந்த ஸ்டோலை பிடிங்கி பூஜாவின் தோளை சுற்றி போட்டவன் “இப்படியே இரு இனி வீட்டுக்குள்ள கூட இது மாதிரி குட்டி டிரஸ் போட்டு தூங்காத”என்றான்.
பூஜாவோ அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்னும் தோரணையில் நின்றாள்.அதன் பின் அனைவரும் பிறந்தநாள் பாடல் பாட பூஜா மனம் நிறைந்த காதலுடன் தன்னவனுடன் பிறந்தநாளை கொண்டாடினாள்.

பூஜா அர்ஜுனுக்கு கேக் ஊட்டும் போது அதை தனது போனில் போட்டோ எடுக்க வந்த ப்ரீத்தியிடம் “முழு பிக்சர் வேண்டாம் ஆப் எடு போதும்”என்று பூஜாவின் உடையை கருத்தில் கொண்டு அவன் சொல்ல, ஏற்கனவே தன்னுடைய ஸ்டோலை அர்ஜுன் பிடிங்கிவிட்டான் என்ற கடுப்பில் இருந்த ப்ரீத்தி“அதெல்லாம் முடியாது நான் புல்லா தான் எடுப்பேன்”என்றாள்.

பூஜாவும் “ஆமா ஆமா எனக்கு ஃபுல் போட்டோ தான் வேணும்” என்றாள். அதைக்கேட்டு கோபமான அர்ஜுன் ப்ரீத்தியின் பேண்ட்டை நக்கலாக பார்த்தான், அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் விழித்த ப்ரீத்தி பின் அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு அதிர்ந்து “நோ….நோ……. நோ…… இது தவறான விஷயம்” என்று சொல்லி ஆப் போட்டோவே எடுத்தாள்.

தோழிகள் அனைவரும் அவரவர் வைத்திருந்த கிப்டை எடுத்து பூஜாவிடம் கொடுக்க அவளும் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டாள்.அர்ஜுனும் தன்னவளுக்கு என்று தான் வாங்கிய கிப்டை கொடுக்க அதைப் பார்த்து பூஜா ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். ஏனென்றால் அது லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் ஐபோன்.அதை பார்த்த சந்தோஷத்தில் உடனே அவனை அணைத்து விடுவித்தவள் “தேங்க் யூ சோ மச் பேபி”என்றாள்.சிறு சிரிப்புடன் அவளை பார்த்த அஜூ இடை வரை குனிந்து “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் மேடம்”என்று கண்ணடித்து கூறியவன் தன்னவளையே விழி எடுக்காது ரசனையுடன் பார்த்திருந்தான். அப்போது அங்கு வந்த மது “கிளம்பலாம்டி பாட்டி ரூம்க்கு என்ன பார்க்கணும்னு வந்தாங்கன்னா பிரச்சனை ஆகிடும்” என்று சொல்ல பூஜாவும் சம்மதமாக தலையை அசைத்து கிளம்பினாள்.
அர்ஜுனிடம் கண்களாலேயே விடைபெற்று பூஜா தோழிகளோடு கார் வரை சென்றவள் திரும்பி ஓடிவந்து அவனை இறுக அணைத்து அவன் முரட்டு இதழில் மென்மையாக தன் இதழை பொருத்தி எடுத்தவள் “இந்த மாதிரி அமைதியான இடத்துல மனசுக்கு நெருக்கமான உங்ககூட இருக்கணும்னு நான் எப்பவோ சொன்னதை நியாபகம் வச்சு இப்போ அதை செஞ்சதுக்கு தேங்க்யூ அண்ட் ஐ லவ் யூ”என்றுவிட்டு அவள் தீண்டலில் திகைத்து நிற்பவனை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி சென்றுவிட்டாள்.

பூஜாவை முதலில் அவர்கள் வீட்டு வாசலில் இறக்கி விட்ட சூர்யா அவளிடம் “ஓகே பாய் மறுபடியும் நாளை மறுநாள் மீட்பண்ணலாம்” என்று சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.ஆனால் அவர்களை முறைத்த பூஜா“என்னடி விளையாடுறீங்களா ஒழுங்கா நாளைக்கு வீட்ல நடக்கப்போற பர்த்டே பார்ட்டிக்கு வாங்க”என்று சொல்ல, அபியோ “அம்மா தாயே ஆள விடு உங்க வீட்டு பங்ஷனுக்கு நிறைய விஐபிங்க வருவாங்க, நாங்க வரல நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட்பண்ணு” என்றாள்.

அவர்களை முறைத்த பூஜா அபியிடம்“நீ சாரி சொல்லனும்னு சொல்லுவியே ஆதித்யா அவரும் வருவாரு, வந்தன்னா சாரி கேட்டுரலாம்”என்று அவள் வீக் பாயிண்ட் தெரிந்து சொல்ல, சற்று நேரம் யோசித்தவள் “சரிடி நான் வரேன் முதல்ல அவருகிட்ட சாரி கேட்கணும், அவரால என் தூக்கமே போச்சு” என்றாள். மற்றவர்களும் “சரி நாங்களும் வரோம்” என்றனர்.

அடுத்தநாள் பூஜாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.தோழிகள் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர்.பூஜா அந்த உடையில் தேவதையாக கிளம்பியிருந்தாள்.

கீழே அனைவரும் அவள் வரவுக்காக காத்திருக்க அவளோ “பேபி இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன், ஜிவெல்ஸ் எல்லாம் ஓகேவா”என்று வீடியோ காலில் அர்ஜூனுடன் பேசி கொண்டு இருந்தாள்.

அவளுக்காக காத்திருந்து காத்திருந்து கடுப்பான அவள் பாட்டி தோழிகளிடம் “ஏன்டிமா உங்க சிநேகிதி இன்னைக்கு கேக் வெட்ட வருவாளா இல்ல நாளைக்குதான் பொறந்த நாள்னு நெனச்சுட்டு இருக்காளா”என்று கேட்க, அவர்களோ என்ன பதில் சொல்வது என்று விழித்து கொண்டிருந்தனர்.
ப்ரீத்தி, “அடியே மேல போய் அவ என்ன பண்றான்னு பாத்து கூட்டிட்டு வாங்கடி ஐபாகோ கேக் உருகிட போகுது நானும் எவளோ நேரம்தான் நல்லவ மாதிரியே நடிக்கறது” என்றாள்.

அபி ஆதியை தேடி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது என்றுவிட்டு மதுவிடம் திரும்ப அவளோ அங்கிருந்த சோபாவில் கால் நீட்டி அமர்ந்து “கால் பயங்கரமா வலிக்கிதுடி” என்க, அவளை முறைத்தவள் இப்போது சூர்யாவை பார்க்க அவளோ “என்ன இப்போ நான் போய் அவளை கூட்டி வரணும் அதானே போறேன்”என்றவள் வேகமாக பூஜா அறையை நோக்கி சென்றாள்.

ஆதி ஆபிசில் ஒரு முக்கியமான டீலை சைன் செய்ய வேண்டி இருந்ததால் பார்ட்டிக்கு லேட்டாக வந்தான்.

பூஜாவின் தந்தையும், ஆதியின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவர் வீட்டு விசேஷத்தில் அனைவருமே கலந்து கொள்வர்.

உள்ளே வேகமாக வந்தவனின் கண்ணில் முதலில் பட்டது அபிதான் கோல்டன் நிற லெஹங்காவில் இருந்தவளின் அழகு அவனை சுனாமியாய் சுருட்டியது.அப்படியே நின்றிருந்தவனின் அருகில் வந்த மற்றொரு நபர் அவனிடம் பேச்சு கொடுக்க அவனும் அவருடன் பேசி கொண்டு அங்கிருந்து சென்றான்.

மதுவிடம் அபி பேசி கொண்டிருந்த இடைவெளியில் இவன் வந்ததால் அவள் கவனிக்கவில்லை.

ஆதி ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசினாலும் பார்வை முழுவதும் அபியிடமே இருந்தது.அவள் கண்களில் இருந்த அலைப்புறுதலை கண்டவன் யாரையோ அவள் எதிர் பார்க்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டான்.ஆனால் இப்படி தேடும் அளவிற்கு யார் அவளுக்கு முக்கியமானவர்கள் என்று யோசித்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக எழுந்து வேண்டுமென்றே அவள் பார்வை படும் இடத்தில் நின்று, அவள் பார்வை தன்னில் நிலைப்பதை உணர்ந்த மறு நிமிடம் அருகில் இருந்த கும்பலில் கலந்து மறைந்து நின்று கொண்டான்.

ஆதியை பார்த்தவுடன் அபியின் கண்களில் அவளையும் அறியாமல் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அவனிடம் அவள் செல்வதற்குள் வேறு எங்கோ சென்றிருந்தான்.
அபி, “இப்பதானே இங்க பார்த்தோம் அதுக்குள்ள எங்க போனாரு”என்று தேட ஆரம்பித்தாள்.இவ்வளவு நேரம் தன்னைதான் அவள் தேடியிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவனின் மனதில் இதம் பரவியது.

அதன் பின் அங்கு மறைந்து நின்று கொண்டு,அபியின் ஒவ்வொரு செயல்களையும் அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்.

இங்கு மாடிக்கு வந்த சூர்யாவோ பூஜாவை பார்க்க அவள் அர்ஜுனுடன் பேசிக்கொண்டு இருந்தால் அதைப் பார்த்து கடுப்பானவள், போனை வாங்கி கட் செய்தாள், அவளை பார்க்க அவளோ “ஈஈஈ……” என்று இளித்து வைத்தாள்.” பிறந்த நாள் அதுவுமா திட்டக்கூடாதுங்கறத்துக்காக திட்டல, இல்ல நடக்கறதே வேற பாத்துக்கோ கீழே உனக்காக எல்லாரும் காத்திட்டிருக்காங்க, நீ என்னனா வெட்டியா பேசிட்டு இருக்க வா போலாம்”என்று சொல்ல, பூஜாவும் கீழே சென்றாள்.

அதன்பின் கேக் வெட்டும் நேரத்திலும், உணவு உண்ணும் நேரத்திலும் கூட அபி தோழியின் பிறந்த நாளில் கவனத்தை செலுத்தாமல் ஆதியையே தேடிக்கொண்டிருந்தாள்.அவளை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாதவன் அவள் கண்முன் அதிரடியாக ஆஜரானான்.

அவனது திடீர் வருகை எதிர்பாராத அபி அதிர்ந்து போய் நின்றாள். அவனைக் கண்டவுடன் அவள் மனதில் பலவித உணர்வுகள் போட்டிபோட ஆரம்பித்தது. எந்தக் காதல் உணர்வை அவனிடம் காட்டக்கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அது அவளையும் மீறி கண்கள் காட்டிவிட்டது, அதை புரிந்து கொண்டவன் மாய கண்ணனாக புன்னகைக்க,அந்த புன்னகையில் விரும்பியே வீழ்ந்து போனாள் அபி.

அப்பொழுது எதேர்ச்சியாக திரும்பிய சூர்யா அபியிடம் பேச வர, அவளின் கவனம் அங்கு இல்லாததை கண்டு கொண்டவள், “இவ எதுக்கு இப்படி நிக்கறா”என்று யோசித்து பார்வையை சுழல விட்டவளின் கண்ணில்பட்டான் ஆதி.உடனே “ஹேய் அபி அங்க பாரு அவர் நிற்கிறார் போ போய் பேசு”என்க, அவளோ ஆதியையே வைத்த விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அபி அப்படியே நிற்பதை பார்த்து குழம்பிய சூர்யா “என்ன இப்படி பார்த்துட்டு நிக்கிறா”என்று யோசித்து, அவள் தோளை பிடித்து ஆட்ட, அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்க, அதை கவனிக்காத சூர்யா “போய் சாரி கேளு” என்றாள்.

அவளும் “ஆமா வாங்க போலாம்” என்று அழைக்க ப்ரீத்தியோ “அதெல்லாம் முடியாது, திட்டுனது நீங்கதானே, நீங்களே போய் மன்னிப்பு கேட்டுட்டு வாங்க. நான் இங்க கேக்குக்கு பாதுகாப்பா நிக்கறேன்”. என்றாள்.

அதைக் கேட்ட மது “ஆமா கும்பலா இருக்கு கேக்க யாராவது எடுத்துக்கிட்டாங்கனா என்ன ஆகறது, ப்ரீத்தி நீ அந்தப் பக்கம் பாத்துக்கோ நான் இந்த பக்கம் பாத்துக்கறேன்” என்க மற்ற மூவரும் அவர்களை முறைத்தனர்.

மது, “உடனே பாசமா பார்க்க ஆரம்பிச்சுருங்களே, ஒரு கேக்க நிம்மதியா சாப்பிடவிடறாளுங்களா” என்று மனதில் புலம்பியவள் மற்றவர்களிடம்“சரி சரி பார்த்தது போதும் வாங்க போலாம்”என்று ப்ரீத்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.

தோழிகள் ஐந்து பேரும் அவன் முன்னே சென்று நிற்க அவனது பார்வையோ அபியை தவிர வேறு எங்கும் நகரவில்லை.அவளின் பார்வையும் அவன் மீதே நிலை குத்தி இருந்தது.

சூர்யா பக்கத்தில் இருந்த மதுவிடம் “நீ கேளு…” என்று கூற அவளோ பக்கத்திலிருந்த பூஜாவை இடித்து “நீ கேளு” என்று கூறினாள்.அவர்களின் செய்கையை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் “என்ன வேணும்” என்று கேட்டான்.

சூர்யா,”அது வந்து சார், அன்னைக்கு தெரியாம உங்க கிட்ட சண்டை போட்டுடோம்.அதன் சாரி கேட்கலாம்னு…..” என்று இழுக்க, அவளை பார்வையாலேயே தடுத்தவன் “அன்னைக்கு நீங்க மட்டுமா திட்டுனீங்க”என்று அபியின் மீது பார்வையை நிறுத்தி கேட்டான்.

சூர்யா அவனின் பார்வையை கவனித்தவள் பேச்சு நம்மகிட்ட இருக்கு, ஆனா பார்வை வேற பக்கம் இருக்கே என்று யோசித்தவள், பின் சொல்றவங்க சொன்னாதான் ஏத்துக்குவாங்க போல இருக்கு முடிவெடுத்து கொண்டு அபியை இடித்து “நீதான் சாரி கேக்கணுமாம் கேளு”என்றவள் மற்ற தோழிகளிடம் திரும்பி அவங்களா நம்ம தொரத்துரத்துக்குள்ள நாமே போய்டலாம்”என்றுவிட்டு கிளம்பினர்.

அபியோ அதன் பின்னும் அதே உறைந்த நிலையில் நின்றாள். அவள் அருகில் நெருங்கி வந்தவன் “உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா” என்று தன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை பார்த்து கேட்க,அவளோ சாவி கொடுத்த பொம்மை போல் “பிடிக்கும்” என்று தலை ஆட்டினாள்.

ஆதி, “குட்.. “என்று கூறியவன், ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை அதில் இருந்த செர்ரி பழத்தோடு எடுத்து வாயில் வைத்தபடி அவள் அருகில் வர, அவனது நெருக்கத்திலும் அவன் மேல் இருந்து வந்த பர்ப்யும் வாசனையிலும் கிறங்கிப் போய் நின்றவளின் காதருகே குனிந்தவன் “பேபி டால்.. ஐஸ்கிரீம் சாப்பிடுறியா” என்று கேட்க,அவனது கிசுகிசுப்பான குரலில் தன்னிலை இழந்தவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழி விரித்து நின்றாள். அவள் முகத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் “ஐ லவ் யூ மிஸஸ் ஆதித்யா….“என்று கூறியவன் அவள் இதழ்களில் தனது இதழ்களைப் பதித்து விட்டான்.

அவளோ அவனின் இந்த எதிர்பாராத செயலில் உறைந்து போய் நின்றுவிட்டாள்.அவள் இதழ் தேனை சுவைத்தவன் விருப்பமே இல்லாமல் விலகும் நேரம் அவன் வாயில் இருந்த செர்ரி அவள் வாய்க்கு கடத்தப்பட்டிருந்தது.

திகைப்பான அவள் பார்வையை பார்த்துக்கொண்டே “ஐ நோ யூ லவ் மீ.. சோ எந்த ரீசனும் சொல்லாம என்ன லவ் பண்ண ரெடியாயிரு” என்று சிறு புன்னகையோடு கூறி சென்றுவிட, அவளோ என்ன நடந்தது என்று புரியாத நிலையில் அப்படியே திகைப்புடன் நின்றிருந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top