வண்ணங்களின் வசந்தம்-24

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_899912924182067.jpeg
அத்தியாயம் -24

கிருஷ் ப்ரீத்தியை அழைத்து வந்துவிட்டானே ஒழிய எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற பதட்டத்தில் இருந்தான்.அவனை பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தியோ “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி ரெஸ்ட் லெஸ்ஸா இருக்காரு” என்று யோசித்து கொண்டிருந்தாள்.

அப்படி என்ன கேட்டிருப்பானு பாக்குறீங்களா அதையும் நாம தெரிஞ்சுப்போமே.பிரபாவின் அறையில் தோழிகள் பேச கிருஷ் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான் அதை பார்த்த ப்ரீத்தி “இருங்கடி நீங்க இவ்ளோ கேட்டும் அவர் அமைதியா இருக்காருன்னா என்ன அர்த்தம். அவருக்கு கண்ணு எல்லாம் நல்லாதான் தெரியுது, வாய்தான் பேச வராது போல சாரி சார் நீங்க ஊமைனு தெரியாம பேசிட்டாளுங்க” என்று சொல்ல அதை கேட்ட பிரபா அதிர்ந்தான் என்றால் கிருஷோ நொந்தே போய்விட்டான்.

கிருஷோ “என்ன எனக்கு வாய் பேச வராதா என்ன கொடும கடுவுளே இது இவளை லவ் பண்ணுன பாவத்துக்கு கண்ணு தெரியாதுனா சரி அறியா புள்ள தெரியாம பேசுதுன்னு நினச்சு விட்டுட்டேன், அடுத்து சர்வர்னு சொன்னாங்க சரி போனா போறாங்க தெரியாம சொல்லிடுச்சுங்க சின்ன புள்ளைங்கன்னு விட்டேன். இப்போ என்னனா கடைசி கடைசிக்கு ஊமையானு கேக்குறாளே இதுக்கு மேல முடியாது”என்று நினைத்தவன் அங்கிருந்த டேபிளிற்கு இழுத்து போய் அமர்ந்துவிட்டான்.

அறையில் அபியோ பிரபாவிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தாள்.”ஹல்லோ என்ன ப்ரோ இது உங்க பிரண்டு பாட்டுக்கு அவளை இழுத்துட்டு போறாரு உங்க பிரண்டுனா நீங்க என்ன வேணா பண்ணுவீங்களா என்று கத்தி கொண்டிருக்க, பிரபாவும் யோசனையான முகத்துடன் செல்லும் நண்பனைதான் பார்த்து கொண்டிருந்தான்.பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக மதுவிடம் பார்வையை திருப்பினான்.

பிரபாவின் பார்வை மறுபடியும் மதுவிடம் செல்வதை பார்த்து கோபமான அபி மேலும் திட்ட, பிரபாவோ “இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே” என்று நினைத்தவனாக கை நீட்டி அவள் பேச்சை தடுத்துவிட்டு கிருஷின் காதல் கதையை கூற ஆரம்பித்தான்.

ஆறு வருடத்திற்கு முன்பு கிருஷ், பிரபா இருவரும் ஊட்டி சென்றிருந்தனர்.அப்போது அங்கிருந்த ஒரு டீ பேக்டரியின் வெளியில் இரண்டு தோழிகள் ஸ்வீட் கார்ன்க்காக அடித்து கொண்டனர் அதில் ஒரு பெண்ணை அப்போதில் இருந்தே அவன் விரும்ப ஆரம்பித்துவிட்டான்.அண்ட் அந்த பெண்……….
“ப்ரீத்தி” என்றனர் தோழிகள் அனைவரும் ஒரே குரலில் திகைப்பாக.
“ஆம்” என்னும்விதமாக தலையாட்டியவன்.கொஞ்சம் உட்காருங்க அவன் பேசிட்டு வருவான்.என்ன மாதிரி அவனும் நல்லவன்தான் நீங்க நம்பலாம்.

அபியோ நக்கலான குரலில் !நல்லவன் சரி அது என்ன தொடுப்பு உங்கள மாதிரி” என்று கேட்டாலும் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

கிருஷ் தனது காதலை இன்றே சொல்லிவிடலாம் என்று எண்ணி அழைத்து வந்துவிட்டானே தவிர எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று திணறி போனான்.ப்ரீத்தியும் அவனை தடுமாற்றத்தை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள்.

“அ… …அது…… வந்து…. .வந்துங்க…… ஹம்….. முதல்ல ஸ்வீட் சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா” என்றான்.அவனின் தவிப்பை புரிந்து கொண்ட ப்ரீத்தி மர்மமான சிரிப்புடன் அவனையே பார்த்தவள் “சரி” என்னும் விதமாக தலையாட்டினாள்.

“ஹப்பாடா கேப் கிடைச்சுடுச்சு” என்று சந்தோஷப்பட்டவன் குலாப் ஜாமுன் ஆர்டர் பண்ணிவிட்டு அவளை எப்படி அணுகுவது என்ற யோசனையில் இருக்கும்போதே, ஆர்டர் செய்த குலாப் ஜாமுன் வந்தது ப்ரீத்தி சாப்பிட ஆரம்பிக்க மீண்டும் பேச முயச்சித்தான்.அவன் பேச ஆரம்பிக்கவும் ப்ரீத்தி அவனை விழி உயர்த்தி பார்க்க அந்த பார்வையில் தடுமாறியவன் வார்த்தை வெளி வராமல் இருக்கவும் தொண்டையை செருமி “அதுங்க ஜமுனோட ஐஸ் கிரீம் கலந்து சாப்பிடுங்க அது செம்ம டேஸ்டா இருக்கும் எங்க ஹோட்டல் ஸ்பெஷலே இதுதான்” என்று சமாளித்து பேசி வைத்தான்.

கிருஷ்ணா, “ஆறு வருட காதல் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தவளை அருகில் பார்த்து பேசலாம் என்றால் குரலே வெளி வரமாட்டிக்கிதே”என்று மனதுக்குள் புலம்பி கொண்டவன் செய்வதறியாது அமர்ந்திருக்க, அதற்குள் ஜாமுன் சாப்பிட்டு முடித்திருந்த ப்ரீத்தி “என்ன பேசணும் சீக்கிரம் சொல்லுங்க நான் போகணும்” என்றாள்.

கிருஷோ தன் இயலாமையை நொந்து கொண்டவனாக “சரி நீங்க கிளம்புங்க,நாம இன்னொரு நாள் பேசலாம்”என்றான்.அவளோ, “இதை சாப்பிடத்தான் கூட்டி வந்தீங்களா” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன். அவனும் பெரு மூச்சுடன் “ஆமாம்” என்று சொல்லி பார்வையை வேறு பக்கம் வைத்து கொண்டான்.
ப்ரீத்தி, “ஓகே பாய் நான் கிளம்பறேன்” என்று சொல்லி சென்றாள், அவள் தன்னை கடந்து செல்வதை உணர்ந்த கிருஷ் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

பிரபாவின் அறை வரை சென்ற ப்ரீத்தி திரும்பி ஓடி வந்து அவன் கன்னத்தில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்து “ஐ லவ் யூ டா பயந்தாங்கொள்ளி” என்று சொல்லி,அவன் அதிர்ந்து அமர்ந்திருப்பதை கண்டுகொள்ளாமல் “நீ சொல்ற வேகத்தை பார்த்து நான் வியக்கேன், லூசு பயலே இப்படியே திணறிக்கிட்டு இருந்தா, எப்ப ப்ரொபோஸ் பண்ணுவ, நானும் நீ சொல்லுவ சொல்லுவனு வெயிட் பண்ணி பார்த்தா சொல்ற மாதிரியே தெரியல இப்படியே போனா நமக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடக்குமம் அதான் நானே சொல்லிட்டேன்”என்றுவிட்டு ஓடிவிட்டாள்.
ப்ரீத்தி அங்கிருந்து சென்ற பின் தன் நிலை உணர்ந்த கிருஷ் “இவ இப்ப என்ன சொன்னா, நான் சரியாதான் கேட்டேனா இல்ல,என் காதுல தப்பா விழுந்துடுச்சா” என்று யோசித்தவன் கைகளால் காதை நன்றாக குடைந்து கொண்டே ப்ரீத்தியின் பின்னால் ஓடினான்.

ப்ரீத்தி சென்று வெகுநேரம் ஆகவும் அவளை காணாமல் தவித்த அபி மீண்டும் பிரபாவிடம் புலம்ப ஆரம்பித்தாள், “எங்க குரூப்லயே மெச்சுர் இல்லாம, சின்ன புள்ளைங்க மாதிரி இருக்கறது மதுவும், ப்ரீத்தியும்தான் அதனாலதான் இவங்கள நாங்க தனியாகூட விடமாட்டோம்.அவ கிட்ட போய் லவ் ஜவ்வுனு சொன்னாளே அழ ஆரம்பிச்சுடுவா.உங்க பிரண்டு என்னனா அவளையே லவ் பன்றாருனு சொல்லறீங்க, எப்படி அவளை சமாளிக்க போறேன்னு தெரியல” என்ற நேரம் சரியாக உள்ளே வந்தாள் ப்ரீத்தி.

ப்ரீத்தி உள்ளே வருவதை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்ட பிரபா “ஹப்பாடா வந்துட்டியா மா,என்றுவிட்டு அபியை பார்த்து மகராசி வாய தொறந்தா மூடவே மாட்டிக்கிது”என்று நினைத்து கொண்டிருக்க, அப்போது வேகமாக அறை கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான் கிருஷ்.

“இவன் எதுக்கு இப்புடி ஓடிவரான்” என்று அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்க, அவனோ மற்ற யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக ப்ரீத்தியிடம் சென்று “ஏங்க நீங்க இப்ப என்ன சொன்னீங்க ஐ லவ் யூவா சொன்னீங்க, இல்ல என் காதுலதான் தப்பா விழுந்துடுச்சா” என்று கேட்க, இப்போது தோழிகள் அனைவரும் ப்ரீத்தியை அதிர்ச்சியாக பார்த்தனர்.அவர்களை பார்த்து திரு திருவென விழித்த ப்ரீத்தி “அ….. அது…..வந்துடி இவரு அங்கங்க தூரத்துல நின்னே பார்ப்பாரு அப்போவே எனக்கு பிடிச்சிருந்துச்சு அவரா வந்து பேசுவாருனு பார்த்தேன் பேசவே இல்லை, அதான் நானே சொல்லிட்டேன்”என்று அசடுவழிய சொல்ல தோழிகள் நால்வரும் திகைத்து போயினர்.

பிரபாவோ “இவங்கதான் சின்ன புள்ளையா” என்பது போல் அபியை பார்க்க அவளோ “அடி பாவி உன்னை போய் நல்லவன்னு சொன்னேன் பாரு என்ன பழைய செருப்பாலையே அடிச்சுக்கணும்” என்றாள் கடுப்பாக.அதை கேட்ட பிரபா “சாரி ஸ்டாக் இல்ல” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன், அதில் இன்னும் கடுப்பான அபி “எது…” என்று கேட்க, அவனோ கப்பென்று வாயை மூடி கொண்டு ஒன்னும் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டிவிட்டான்.
சூர்யா,”இனிமே எவளையும் நம்ப கூடாதுடி” என்று சொல்ல அவளை ஏற இறங்க பார்த்தவள் “உன்னையும் நம்ப மாட்டேன் போடா” என்றாள் அதை கேட்ட சூர்யா பேந்த பேந்த விழிக்க ஆரம்பித்தாள்.அவளை சந்தேகமாக பார்த்தவள் “அடியே உன் பார்வையே சரி இல்லையே, எதையாவது என்கிட்ட மறைக்கிறியா உண்மைய சொல்லு” என்றாள்.
சூர்யாவோ முதலில் விழித்தவள் பின் “ச்ச லூசாடி நீ அதெல்லாம் ஒன்னும் இல்லை காலேஜ்க்கு லேட் ஆகுது வாங்க கிளம்பலாம்”என்று முன்னால் சென்றாள்.மற்றவர்களும் அவளை தொடர்ந்து வெளியே சென்றனர்.மது கிளம்பவும் பிரபாவும் பின்னாடியே சென்றுவிட கிருஷ் மட்டும் தன் காதல் கை கூடிய மகிழ்ச்சியில் அங்கிருந்த சேரில் அமர்ந்து கனவு காண ஆரம்பித்தான்.

ப்ரீத்தி திரும்பி வந்தவள் அவனிடம் “ஹலோ ஓகே சொல்லிட்டேன்னு அப்படியே கண்டுக்காம இருக்க கூடாது, நாம ரெண்டு பேரும் நல்லா ஊர் சுத்தனும், நிறைய லவ் பண்ணனும், முதல்ல பழகணும் ஓகேவா” என்க, அவனும் கண்ணில் மின்னலுடன் “ஹோ…….. பழகலாமே” என்றவன் “வா போலாம்” என்றான்.அவளோ “அட ஆர்வ கோளாறே”என்று தலையில் அடித்து கொண்டவள்,”இப்போ காலேஜ் போறேன், லீவு நாளுல பிளான் பண்ணு” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.

ஒரு வழியாக தோழிகள் நால்வரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்து சரியாக எதிரில் அர்ஜுன் வர அவனை பார்த்த பூஜா முகம் நிறைந்த சிரிப்புடன் “அஜூ பேபி” என்க. சூர்யாவோ அவளது சுடி ஷாலை பிடித்து இழுத்து “முதல்ல கிளாஸ்கு போ, படிப்புதான் பர்ஸ்ட்” என்றுவிட்டு அர்ஜுனின் கடுப்பான முகத்தை ஓர கண்ணால் பார்த்து சிரித்து கொண்டே சென்றுவிட்டாள்.

மாலை கல்லூரி முடிந்த பின் அனைவரும் கிளம்பும் சமயம் மதுவிற்கு அவர்களது வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.என்ன என்று கேட்டவளிடம் மாப்பிள்ளையோட பாட்டி அவளை பார்க்க வேண்டும் என்று சொன்னதாகவும் இன்னும் சற்று நேரத்தில் பிரபா அவளை அழைத்து செல்ல வருவதாகவும் அங்கேயே வெயிட்பண்ணுமாறும் கூற தோழிகள் அனைவரும் அவர்களது பேவரட்டான இடத்தில் அமர்ந்து பிரபாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அபியின் சீனியர்களான தருண், ஆகாஷ், சந்தோஷ் மூவரும் வந்து கொண்டிருந்தனர்.அதில் சந்தோஷின் கண்களில் அபியை பார்த்து ரசனை வழிந்தது.

அதே நேரம் அர்ஜுனும் திருனேஷுடன் பூஜாவை பார்க்க அங்கு வந்தான்.ஆனால் அங்கு நின்றிருந்த மூவரையும் கண்டு “இவர்களுடன் அவர்களுக்கு என்ன வேலை” என்ற யோசனையுடன் தூரத்தில் இருந்தே அவர்களை பார்க்க ஆரம்பித்தனர்.

இங்கு, ஆபிசில் ஆதி தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.எந்த வேலை செய்தாலும் அபியின் முகமே அவனுள் மின்னி மறைய செய்வதறியாது வெகுநேரமாக அமர்ந்திருந்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக “இன்னைக்கு அவளை பார்த்தே ஆகணும், இல்லைனா கண்டிப்பா முடியாது.ராட்சசி என்னை படுத்தி எடுக்கறா” என்று செல்லமாக வைத்தவன்.”வரேண்டி என் சண்டி ராணி, வந்து உன் கண்ணுலபட்டுட்டு வரேன், அப்போதானே என்னையே நினைச்சுட்டு இருப்ப” என்று நினைத்தவன் தன்னவளை பார்க்கும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்பினான்.

பிரபா மதுவுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பியவன் அவன் பாட்டியை தாஜா செய்து மதுவின் வீட்டில் பேச வைத்து இதோ அவளை சந்திக்க கிளம்பியவனுடன் கிரிஷும் தொத்தி கொண்டு வந்துவிட்டான்.
ஒரே நேரத்தில் கிரவுண்டில் ஐந்து நாயகர்களும் தன் இணையை பார்க்க ஆசையாக வர, ஆனால் அவர்களோ இது எதையும் உணராது சீனியர்களுடன் பேசி கொண்டிருந்தனர்.

சந்தோஷ் ரசனையான பார்வையுடன் அபியின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான். ஆகாஷும் அவன் கூடவே வந்தவன் சூர்யா அருகில் அமர்ந்து அவளை சைட் அடிக்க ஆரம்பிக்க, அவர்களுடன் இருக்கும் தருனை பார்த்து ஜொள்ளு விட்ட பூஜா, அவனிடம் சென்று “ஹாய் சீனியர்” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

மது சூர்யாவிடம் வந்தவள் அவள் தோளை இடித்து “அடியே சீனியர இன்னைக்கு இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன்னு சொன்னல்ல பண்ணி வை டி”என்று சொல்ல, சூர்யாவும் ஆகாஷ், சந்தோஷ் இருவருக்கும் மதுவை அறிமுகபடுத்தி வைத்தாள்.பின் மது அவர்களுடன் தோழமையாக பேச துவங்கினாள்.

மது சந்தோஷிடம் இருந்த ஸ்டெதஸ்க்கோப்பை எடுத்து “சீனியர் இதை எப்படி யூஸ் பண்றது” என்று கேட்க அவள் அருகில் வந்த தருண் “அதை நான் சொல்றேன்” என்றவன் ஸ்டெதஸ்க்கோப்பை எடுத்து தன் மார்பில் வைத்து அவன் இதய துடிப்பின் ஓசையை கேட்க வைக்க, அவளோ குழந்தையின் குதூகலத்துடன் கேட்டு சிரித்தாள்.பின் பூஜா “நானும் நானும்” என்று ஓடி வந்து ஸ்டெத்தை காதில் வைத்தாள்.

இதை கவனித்த 5 ஆண்களின் காதுகளிலும் புகை வர ஆரம்பித்தது. பூஜா அந்த சீனியரின் ஸ்டெதஸ்கோப்பை எடுப்பதை பார்த்த அர்ஜுன் கோபமாக “இவளை என்னத்தான் பண்றதோ தெரில, எவனையாவது பார்த்தா உடனே சைட் அடிக்க ஆரம்பிச்சிடறது,சுத்தி என்ன நடக்குதுன்னு கூட கவனிக்கறது இல்லை, இதை சொன்னா பெண் உரிமை அது இதுனு சம்பந்தமே இல்லாம சண்டை போட வேண்டியது” என்று திருனேஷுடம் புலம்ப, அவனோ எகத்தாளமான குரலில் “அதுக்குதான் லவ்வர எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணனும், அங்க பாரு என் ஆளை சமத்தா அபிக்கூட பேசிட்டு இருக்கா”என்றவனின் கண்கள் சூர்யாவில் நிலைத்தது.

நண்பன் சொல்வதை கேட்டு அவனை நக்கலாக பார்த்த அர்ஜுன் “எப்படி நீ லிப்ட்ல டீல் பண்ணுனியே அது மாதிரியா” என்று கேட்க, அவனை அதிர்ச்சியுடன் பார்த்த திருனேஷ் “உனக்கு தெரியுமா”என்க, அவனோ “தெரியும் தெரியும் அதுவும் தெரியும் அன்னைக்கு அந்த பார்க்கிங் ஏரியால ரெண்டு பேரும் அப்படியே பாத்துட்டு நின்னீங்களே அதுவும் தெரியும், உனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா அன்னைக்கு ஹார்ன் அடிச்சு உங்களை கலச்சுவிட்டதே,நான் தான்டா”என்று கண்ணடித்து கூறியவன், “நாம பேசிக்கலனாலும் ஒருத்தர ஒருத்தர் கவனிச்சுட்டுதானே இருந்தோம்” என்று சொல்ல அவனை அசடு வழிய பார்த்த திரு “சரி விடுடா விடுடா,நீ அபி முன்னாடியும் என் ஆளு முன்னாடியும் பண்ணாததா” என்று கேட்க, அர்ஜுன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று விழித்தவன் பின் வலிசலான சிரிப்புடன் “நாம ஒருத்தர ஒருத்தர் வாருனது போதும், அங்க என்ன நடக்குதுனு பார்க்கலாமா” என்று கேட்க, அவனும் “சரி” என்றான்.

அப்போது அங்கு ஓரமாக நின்றிருந்த பிரபாவையும் கிருஷ்ணாவையும் பார்த்த திரு “இவங்க ரெண்டு பேரும் யாரு”என்றான் யோசனையாக.
திரு பார்வை சென்ற இடத்திற்கே, தன் பார்வையையும் திருப்பிய அர்ஜுன் உடனே அவர்கள் யார் என்று புரிந்து கொண்டான்.

பூஜாதான் அனைத்தையும் அவனிடம் ஒப்பித்திருந்தாளே.”அது மதுவிற்கு பார்த்த மாப்பிள்ளை கூட இருப்பவர் ப்ரீத்தியின் ஆளாம்”என்று சொல்ல திருவோ “எது ப்ரீத்தி லவ் பண்ணுதா நான் நம்ப மாட்டேன் அது சின்ன புள்ளடா”என்க, அவனை நக்கலாக பார்த்த அஜூ “ஹோ மேடம் சின்ன புள்ளன்னா அவக்கூட படிக்கறவங்களும் சின்ன புள்ளைதான் அதனால சார் லவ் ட்ரோப் பண்ணிடறீங்களா”என்று கேட்க, அவனை முறைத்தவன் ”டேய்……. “என்று பல்லை கடிக்க, அவனை பார்த்து சிரித்த அஜூ காலையில் ஹோட்டலில் நடந்ததாக பூஜா சொன்னதை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்ல வாயில் கை வைத்து அதிர்ச்சியானவன் “இந்த திருஷ்டி பொம்மையாடா ப்ரொபோஸ் பண்ணுனது நம்ப முடியலையேடா” என்க,
அர்ஜுனோ ”ரொம்ப முக்கியம் அங்க பாரு அந்த உயர்ந்த மனிதன் காதுலையும் புகை வருது”என்றவன் “நம்மை போல் ஒரு அப்பாவி”என்றான்.

பிரபாவோ மதுவின் செயலில் கடுப்பாகி அவளை முறைத்து கொண்டிருந்தான், அதை பார்த்த கிருஷ்ணா வேண்டுமென்றே வெறுப்பேற்ற நினைத்து “அங்க பார்ரா என் ஆள எவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்கா” என்று சொல்லி வாய் மூடும் முன் “நானும் கேக்கறேன்” என்று குதித்த ப்ரீத்தி அபியின் ஸ்டெதஸ்கோப்பை வாங்கப்போக, அவளோ ப்ரீத்தியின் மீது கோபத்தில் இருந்ததால் “ஒழுங்கா ஓடி போய்டு ஏற்கனவே உன் மேல் கொல காண்டுல இருக்கேன்,பக்கத்துல வந்த கடிச்சு வச்சுடுவேன் ஸ்டெத் எல்லாம் தரமுடியாது போடி” என்றுவிட்டாள். உடனே ப்ரீத்தி முகம் வாடி நிற்க அவளை பார்த்து பாவப்பட்ட ஆகாஷ் சூர்யாவின் தோளில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை அவள் அனுமதி இல்லாமல் எடுத்து ப்ரீத்தியிடம் கொடுத்து தன்னில் வைத்து செக்பண்ணி பார்க்க சொல்ல, அதில் கிருஷ் கடுப்பானான் என்றால் பிரபா கிண்டலாக சிரிக்க ஆரம்பித்தான்.

ஆகாஷின் உரிமையான செயலில் சூர்யா அதிர்ந்து போக, திருவோ கோபமாக கைகளை முறுக்கினான். அதை பார்த்து சிரித்த அர்ஜுன் “எகத்தாளமாவா பேசற அனுபவி ராசா அனுபவி”என்றுவிட்டு திரும்பியவன் ஆச்சர்ய குரலில் “அங்க பாருடா புது என்ட்ரிய” என்றான்.

“என் ஆளு மேல எப்படி அவன் கை வைக்கலாம்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த திரு அங்கு வந்த ஆதித்யாவை கண்டு ஆச்சரியம் ஆனான்.”ஹே இவரு ஆதித்யாதானே லாஸ்ட் டைம் கூட சிறந்த தொழிலதிபருக்கான அவார்ட் வாங்கினாரே அதனாலதான் அப்பா இவரை காலேஜ் சீப் கெஸ்ட்டா வர வச்சாரு இப்போ இவரு எதுக்கு வந்துருக்காரு” என்று பார்க்க ஆதியின் பார்வையும் தோழிகள் இருக்கும் பக்கமே இருந்தது.
அவனையே கூர்ந்து பார்த்த திரு ஆதியின் கண்ணில் அப்பட்டமாக மின்னிய பொறாமையை கண்டு கொண்டவன் அது எதனால் என்று புரிந்து கொண்டு “ஹே…. “என்று குதித்தான்.

திரு “டேய் அஜூ அந்த குரூப்ல இன்னும் சிங்கிளா இருக்கிறது அபி மட்டும் தான்டா, அவளுக்கும் ஆளு வந்துருச்சு போல, அங்க பாரு ஆதி பார்வை அவ மேலதான் இருக்கு” என்று சொல்லி சிரிக்க அர்ஜுனும் அப்போதுதான் கவனித்தவன் “ஆமாடா”என்றான்.

இங்கு அபியை பார்க்க கல்லூரிக்கு வந்த ஆதி எப்படி உள்ளே போவது, எங்கு அவளை தேடுவது, காலேஜ் வேறு முடிந்துவிட்டதே வீட்டிற்கு கிளம்பியிருப்பாளோ” என்று பல கேள்விகள் தனக்குள் கேட்டு கொண்டவன்பின் ஒரு முடிவெடுத்தவனாக “சரி வந்தாச்சு அப்படியே கிரவுண்ட் பக்கம் போய் பாத்துட்டு வரலாம்”என்று சென்றவன் அங்கு நின்றிருந்த கிருஷ்ணாவை கண்டு அவனுடன் பேச சென்றான்.

கிருஷ்ணாவின் தந்தையும் ஐடி ஃபீல்டில் இருப்பதால் இருவருக்கும் தொழில்முறை நட்பு இருந்தது. அதனாலேயே அவனுடன் பேச வந்தான்.அவர்களின் அருகில் வரும்போதுதான் மதுவை பற்றியும் ப்ரீத்தியை பற்றியும் பிரபாவும், கிருஷ்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர்.அவர்கள் பின் நின்று தோழிகளின் செயலை பார்த்தவன் சிரித்துவிட்டு அபியை பார்க்க அவளோ சந்தோஷிடம் சிரித்து பேசி கொண்டிருந்தாள் அதை பார்த்தவன் “அடி பாவி மறக்க மாட்டன்னு நினச்சா மறந்துருப்பா போலயே.டேய் ஆதி இனிமே உனக்கு டைம் இல்ல, ஹெவி காம்பிடிசன் இருக்கும் போல, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உன் ஆளுக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடு” என்று முடிவெடுத்து கொண்டவன். கிருஷ்ணாவிடம் அவனைபற்றியும் அவனது தந்தையின் நலம் பற்றியும் விசாரித்துவிட்டு பின் மர்ம சிரிப்புடன் “சீக்கிரமே உங்களோட குரூப்ல நானும் சேர்ந்து விடுவேன்” என்று சொல்லி சென்றான்.

கிரிஷிடன் பேசிவிட்டு செல்லும்போது மீண்டும் ஒருமுறை ஆதி அபியை திரும்பி பார்க்க அவளோ சந்தோஷுடன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தாள் அதை பார்த்து மேலும் பொறாமைப்பட்டவன் வேகமாக காரை அறைந்து சாத்திவிட்டு “அடியே சண்டைக்காரி சீக்கிரமே உன்கிட்ட பேசறேன், என்னுடையவள ஆக்கறேன்” என்று சொல்லிக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆதியை அங்கு பார்த்தது கிரிஷிக்குமே ஆச்சர்யமாகதான் இருந்தது. அதுவும் இவன் ஆதியின் கேள்விக்கு பதில் சொல்வதற்கு கூட இடம் கொடுக்காமல் பேசிவிட்டு சென்றிருந்தான்.இதனால் தலையை பிடித்துக் கொண்டவன்,”என்னடா இவருபாட்டுக்கு வந்தாரு,பேசினாரு அது மட்டும் இல்லாம நம்ம குரூப்ல வேற சேர வாய்ப்பிருக்குனு சொல்லிட்டு போறாரு”என்க.
பிரபாவோ அவனை பார்த்து சிரித்து “டேய் அந்த குரூப்ல யாரோ ஒரு ஆள இவர் பிக்கப்பண்ண ட்ரை பண்றாரு போலடா அதனாலதான் அவரோட பார்வை அந்த குரூப் மேலயே இருந்தது” என்று சொல்ல, அவனை கேள்வியாக பார்த்த கிருஷ் “இருக்குமோ”என்று கேட்க, பிரபாவும் “இருக்கும் முதல்ல வாடா போலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு மதுவிடம் சென்றான்.

மது அவ்வளவு நேரம் தருணிடம் பேசி கொண்டிருந்தவள் பார்வை பிரபா வருவதை உணர்ந்து திரும்ப அவள் கண்களில் தன்னவனுக்கான காதல் வழிந்தது.

பிரபாவோ தூரத்தில் இருக்கும்போதே மதுவின் கண்களில் வழிந்த காதலை உணர்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் அவள் தருனிடம் பேசி சிரித்து கொண்டிருந்தாலும் கண்ணில் தோழமை உணர்வு மட்டுமே இருந்ததையும், இவனை பார்க்கும் போது மட்டும் காதல் இருந்ததையும் உணர்ந்தவன், அவளது வெள்ளந்தி சிரிப்பிலும் காதலிலும் முழுவதுமாக விழுந்தான்.

தோழிகளிடம் சென்ற பிரபா அவர்களிடம் பேசி, மதுவை அழைத்துக் கொண்டு செல்ல, கிருஷ்ணாவோ ப்ரீத்தியை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றான்.
காரில் மூவரும் எதுவும் பேசாமல் இருக்க, அவர்களின் மூச்சு சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது.

கிருஷ்ணா ப்ரீத்தியுடன் கனவில் மிதந்து கொண்டிருந்தான் என்றால், காரை ஓட்டி கொண்டிருந்த பிரபாவோ தன்னவள் தன் மீது கொண்ட காதலை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

வெகுநேரம் அமைதியாக இருந்து பழக்கம் இல்லாத மது என்ன செய்வது என்று தெரியாமல் தன் போனை நோண்ட ஆரம்பித்தாள். அப்போது யாரும் இல்லாத இடத்தில் ஓரமாக காரை நிறுத்தியவன் கிருஷ்ணாவிடம் திரும்பி “டேய் டயர்ல காத்திருக்கா பாரு”என்க, அவனை முறைத்த கிருஷ்ணா “இதுக்கு நீ வண்டில இருந்து இறங்கி போடானு சொல்லி இருக்கலாம், இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் காத்து இல்லாத வண்டிலயா இவ்ளோ நேரம் வந்தோம்” என்று கிண்டலாக கேட்டாலும் காரில் இருந்து இறங்கிக்கொண்டான்.
கிருஷ்ணா அந்த பக்கம் சென்றுவிட்டான் என்பதை தெளிவு செய்து கொண்ட பிரபா அருகில் இருந்த மதுவை பார்த்து “கல்யாணத்துக்கு முன்னாடி தப்புதான் இருந்தாலும் என்னோட சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு தெரில, இப்போ மட்டும்தான் இனி இப்படி பண்ண மாட்டேன் ஓகேவா”என்றவன் அவள் என்ன ஏது என்று உணரும் முன் அவள் இதழ்களை மென்மையாக தீண்டி விலகினான்.

மென்மையான தீண்டலாக இருந்தாலும் எதிர்ப்பாராத பிரபாவின் இந்த செயலில் திகைத்தவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

வெளியில் நின்ற கிருஷ் தன்னவளை எங்கு அழைத்து செல்லலாம் என்று யோசித்தவன் அதன் படி சில பல முடிவெடுத்துவிட்டு காரில் ஏற கார் மீண்டும் பிரபா வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

கிருஷ், “டேய் பிரபா போற வழில நம்ம ஹோட்டல என்னை இறக்கி விடு உங்க வீட்டுக்கு வந்த அந்த பாட்டி பேசறதை கேக்க முடியாது”என்க, பிரபாவும் “சரி”என்று தலையாட்டிவிட்டு காரை ஹோட்டல் பக்கம் செலுத்தினான்.
கிருஷின் பிளான் என்னவாக இருக்கும் அது சொதப்பலாகுமா இல்லை அவன் காதலை வளர்க்குமா என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
என்னப்பா இது?
போற போக்கைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே தாலியை வாங்கி ஆண்களின் கையில் கொடுத்து கட்ட சொல்லுவாங்க போலிருக்கே
இல்லை ஆண்களின் கழுத்தில் பெண்களே கட்டிடுவாங்களோ?

ஒருத்தன் கிருஷ்ணா என்னடான்னா லவ்வை சொல்லவே மீன மேஷம் பார்த்துட்டு குலோப்ஜாமூன் கூட திங்காமல் உட்கார்ந்திருந்த நேரத்தில் பபபபபபபச்சைப் புள்ளை ப்ரீத்தியே வந்து லவ்வையும் சொல்லி உம்மாவும் கொடுத்துட்டு போறாள்

இன்னொருத்தன் ஆதித்யா என்னடான்னா வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் மாதிரி காரிலிருந்து ஸ்டைலா இறங்கி வந்தான்

அபி பிள்ளையிடம் லவ்வை சொல்லுவான்னு பார்த்தால் பிரபாகரன் கிருஷ்ணாவிடம் பேசினான்

மேலே பார்த்தான்
கீழே பார்த்தான்
இருடி உன்னை பேசிக்கிறேன்னு காரில் ஏறி ஜிவ்வுன்னு போயிட்டான்

ஊஹூம்
இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்
அதனால ப்ரீத்தி மாதிரி நீயும் ஆதிக்கிட்டே லவ் சொல்லி உம்மா கொடுத்துட்டு ஓடி வந்துடு, அபி
 
Last edited:

Anupradeep

New Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
என்னப்பா இது?
போற போக்கைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே தாலியை வாங்கி ஆண்களின் கையில் கொடுத்து கட்ட சொல்லுவாங்க போலிருக்கே
இல்லை ஆண்களின் கழுத்தில் பெண்களே கட்டிடுவாங்களோ?

ஒருத்தன் கிருஷ்ணா என்னடான்னா லவ்வை சொல்லவே மீன மேஷம் பார்த்துட்டு குலோப்ஜாமூன் கூட திங்காமல் உட்கார்ந்திருந்த நேரத்தில் பபபபபபபச்சைப் புள்ளை ப்ரீத்தியே வந்து லவ்வையும் சொல்லி உம்மாவும் கொடுத்துட்டு போறாள்

இன்னொருத்தன் ஆதித்யா என்னடான்னா வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் மாதிரி காரிலிருந்து ஸ்டைலா இறங்கி வந்தான்

அபி பிள்ளையிடம் லவ்வை சொல்லுவான்னு பார்த்தால் பிரபாகரன் கிருஷ்ணாவிடம் பேசினான்

மேலே பார்த்தான்
கீழே பார்த்தான்
இருடி உன்னை பேசிக்கிறேன்னு காரில் ஏறி ஜிவ்வுன்னு போயிட்டான்

ஊஹூம்
இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்
அதனால ப்ரீத்தி மாதிரி நீயும் ஆதிக்கிட்டே லவ் சொல்லி உம்மா கொடுத்துட்டு ஓடி வந்துடு, அபி
Edhuku ellam kaaranam intha suthi thanga ji poraamai pudichava en alla koduma paduthuraa venumne
 

சுதிஷா

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஜ்வந்தி டியர்

ஹா ஹா ஹா
என்னப்பா இது?
போற போக்கைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே தாலியை வாங்கி ஆண்களின் கையில் கொடுத்து கட்ட சொல்லுவாங்க போலிருக்கே
இல்லை ஆண்களின் கழுத்தில் பெண்களே கட்டிடுவாங்களோ?

ஒருத்தன் கிருஷ்ணா என்னடான்னா லவ்வை சொல்லவே மீன மேஷம் பார்த்துட்டு குலோப்ஜாமூன் கூட திங்காமல் உட்கார்ந்திருந்த நேரத்தில் பபபபபபபச்சைப் புள்ளை ப்ரீத்தியே வந்து லவ்வையும் சொல்லி உம்மாவும் கொடுத்துட்டு போறாள்

இன்னொருத்தன் ஆதித்யா என்னடான்னா வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் மாதிரி காரிலிருந்து ஸ்டைலா இறங்கி வந்தான்

அபி பிள்ளையிடம் லவ்வை சொல்லுவான்னு பார்த்தால் பிரபாகரன் கிருஷ்ணாவிடம் பேசினான்

மேலே பார்த்தான்
கீழே பார்த்தான்
இருடி உன்னை பேசிக்கிறேன்னு காரில் ஏறி ஜிவ்வுன்னு போயிட்டான்

ஊஹூம்
இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்
அதனால ப்ரீத்தி மாதிரி நீயும் ஆதிக்கிட்டே லவ் சொல்லி உம்மா கொடுத்துட்டு ஓடி வந்துடு, அபி

ஆமா பானுமா அவன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். அபியா ஏதாவது பண்ணுனாதான் உண்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பானுமா அவன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். அபியா ஏதாவது பண்ணுனாதான் உண்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::p:p:p
ம்ம்ம்ம்...........எல்லாம் காலக் கொடுமை
என்ன செய்ய சர்வேஷா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top