வண்ணங்களின் வசந்தம் -23

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_255446146064117.jpeg


அத்தியாயம் -23

ஹோட்டலில் பிரபாவின் ஆபிஸ் அறையில் தோழிகள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.அபி மற்றும் சூர்யா இருவரும் பிரபாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையோடு இருக்க,ப்ரீத்தியோ யாரும் பேசாமல் அமைதியாக இருக்கவும் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். இவர்கள் மூவரும் இப்படி ஒரு பக்கம் இருக்க, மதுவோ தன்னவனுடன் கண்களாலேயே பேசி கொண்டு இருந்தாள்.
இதை எல்லாம் பார்த்து காண்டான பூஜா “ஹ்ம்ம் இதுங்க ஜொள்ளு விடறத பார்க்கவா இவளுங்க கூட்டிட்டு வந்தாளுங்க, அந்த மனுஷன் என்னடானா கண்ணால பேசறேன்னு என்ன கன்றாவியோ பண்ணிட்டு இருக்காரு, நீங்க ஓகே சொன்னாதாண்டி அவர்கூட பேசுவேன்னு சொன்னவ இப்போ கண்டுக்கவே மாட்டிக்கிறா, பேசாம நான் என்னோட அஜூ பேபிகூடவாவது லாங் டிரைவ் போய் இருப்பேன், இவளுங்க கூட வந்தேன் பாரு என்னைய பழைய செருப்பாலையே அடிச்சுக்கணும்” என்று சலித்து கொண்டவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சூர்யா காலை ஓங்கி மிதித்தாள்.


“அம்மா காலு” என்று சூர்யா அலற, அவளை கிண்டலாக பார்த்த பூஜா “அம்மா காலா,அப்போ உன் கால் இல்லையா” என்று கேட்டாள்.அவளை முறைத்த சூர்யா “பாவி…..கிராதகி நான் உனக்கு என்னடி கெடுதல் செஞ்சேன், எதுக்குடி என் காலை இப்படி மிதிச்ச”என்றாள்.

அவளை முறைத்த பூஜா “அதை நான் கேட்கணும்னுடி உனக்கு நான் என்ன கெடுதல்டி செஞ்சேன் இன்னைக்கு கிளாஸ் கட் அடிக்கலாம்னு நீங்க சொல்லவும் என் அஜூ பேபிகூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, மதுக்காக பேசணும் வாடினு இழுத்துட்டு வந்துட்டு பேசாம உட்கார்ந்து இருக்கீங்க ஒருத்தி என்னனா தூங்கி விழறா இன்னொருத்தி கண்டுக்கவே மாட்டிக்கிறா மரியாதையா வந்த வேலைய பாருங்க நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது” என்று வராத கண்ணீரை துடைத்தாள்.
பூஜா சொல்வது புரியாமல் சூர்யா விழிக்க அவளை நக்கலாக பார்த்தவள் “நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கு ஒருதரம் நிரூபிக்கிறாய்” என்றுவிட்டு அவள் தலையை பிரபாவை நோக்கி திரும்பி “அங்க பாரு வாட்டர் பால்ஸ” என்றாள்.

அப்போதுதான் மது, பிரபா இருவரையும் கவனித்த சூர்யா தலையில் அடித்து கொண்டவள் பூஜாவிடம் அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு “இப்போ பாரு என்னோட பர்பாமென்ஸ” என்றவள் அபியின் கையில் கிள்ளி வைத்தாள்.”ஆஆ…” என்று கத்திய அபி, “இதுதான் உன் பர்பாமென்ஸா” என்று பூஜா இருவரும் ஒரு சேர சூர்யாவை முறைத்தனர்.

சூர்யாவோ “என்னை பார்த்தது போதும் பேச ஆரம்பி” என்றாள், அபியோ “இவ ஒரு விஷ பூச்சி டைம் கிடைக்கும்போது எல்லாம் விஷ வேலை ஏதாவது செஞ்சு வச்சுர்றா” என்று புலம்பி கொண்டே பிரபாவிடம் திரும்பியவள் “இங்க பாருங்க ப்ரோ” என்க, அவனோ அவர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாதவனாக மதுவிடம் கண்களாலேயே பேசி கொண்டிருந்தான்.

இரண்டு மூன்று முறை “ஹலோ நாங்க உங்ககிட்ட பேசணும்னு சொன்னோம்” என்று சொல்ல அது அவன் காதில் விழவே இல்லை. “ஹலோ ஹலோ…..” என்று மேஜையில் அபி தட்ட அப்போதும் அவன் கண்டு கொள்ளவில்லை.

பொறுமை இழந்த அபி மதுவுக்கும் பிரபாவிற்கும் இடையில் வந்து நிற்க, “ம்ப்ச்…. “ என்ற சத்தத்துடன் அவளை முறைத்துக் கொண்டே “என்ன”என்று கேட்க, அவளோ “என்ன ப்ரோ கிண்டலா, நாங்க உங்ககிட்ட பேசணும் நாலு பேரும் வரோம் நீங்க எப்போ ப்ரீனு சொல்லுங்கன்னு கேட்டா, டைம் இல்லைங்கறீங்க, அஞ்சு பேரா வாரோம்னு சொன்னதுக்கு அப்புறம் தான், உடனே கிளம்பி வாங்கனு சொல்றீங்க, எங்கள பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்.

அபியின் பேச்சு அவனுக்கு சிரிப்பை உண்டாக்கினாலும் அவளை வேண்டுமென்றே சீண்ட நினைத்து முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு “உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பு வர வைக்கற காமெடி பீஸ்ங்கங்கற மாதிரி இருக்கு”என்று நினைத்து கொண்டவன், வெளியே “சரி என்ன பேசணுமோ பேசுங்க”என்றான்.

தோழிகளிடம் ‘பேசுங்கள்’ என்று சொல்லி விட்டானே ஒழிய பார்வை முழுவதும் மதுவிடமே இருந்தது. அவன் செயலில் கடுப்பான சூர்யா ப்ரீத்தி, மது இருவரையும் அறையின் வெளியே காத்திருக்க சொல்ல.அதில் தன் தோழிகளை அதிர்ச்சியாக பார்த்த மதுவை அவர்கள் முறைத்து கொண்டு அமர்ந்திருக்கவும் “ஹய்யயோ வழக்கம் போல ஜொள்ளு விட்டுகிட்டு இவளுங்கள கண்டுக்காம விட்டுட்டேனே, இப்போ பாசமா வேற பாக்குறாங்களே, அடியே மது இப்போவே வெளிய கிளம்பிடு அதுதான் உனக்கு சேப்”என்று தனக்குள் சொல்லி கொண்டவள்.மனமே இல்லாமல் பிரபாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

மது வெளியே சென்றவுடன் “இந்த விளையாட்டு பிள்ளைகள் அப்படி என்ன நம்மக்கிட்ட பேச போறாங்க” என்று அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

பூஜாவும் தன் தோழியை பற்றியும், அவளின் ஆசையைப் பற்றியும் கூறினாள்.

அபி,“பாசம்ங்கறது அளவோட இருக்கணும் ப்ரோ, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுனு சொல்லுவாங்க அப்படி இருக்கும் போது பாசம் எம்மாத்திரம், கல்யாணத்துக்கு அப்புறம் அவளை நீங்க ரொம்ப கண்ட்ரோல் பண்ண கூடாது.அவளோட ஆசைக்கும் முக்கியத்துவம் குடுக்கணும் அவளுக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை.வண்டி ஓட்ட கத்துக்கணும், யாருகிட்டயும் விளக்கம் சொல்லாம ஜாலியா தனியா கோவிலுக்காவது போகணும் இது மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்தான் அவளோட ஆசை அவளையும் அவளோட ஆசையையும் நீங்க மதிக்கணும்,அப்புறம் அவளை படிக்க வைக்க வேண்டும்” என்றாள்.

என்ன பேச போகிறார்கள் என்று அசால்ட்டாக அவர்களை பார்த்திருந்த பிரபாவிற்கு பின்புதான் தெரிந்தது. தோழிகள் மீது ஒருவருக்கு ஒருவர் வைத்திருக்கும் பாசம் அதை உணர்ந்து கொண்டவன் ஒரு மெச்சும் பார்வை பார்த்துவிட்டு திரும்ப அங்கு மது கண்ணாடி தடுப்பின் பின் ப்ரீத்தியுடன் பேசி சிரிக்க, அவனின் பார்வை அவளில் நிலைத்தது.
அதன் பின் பூஜா, அபி இருவரும் பேசியது எதுவும் அவன் காதில் ஏறவில்லை.வெகு நேரம் பேசியவர்கள் அவனிடம் பதில் இல்லை என்றவுடன் அவன் முகத்தை பார்க்க அவனோ வெளியில் பேசி சிரித்து கொண்டிருந்த மதுவை பார்த்து கொண்டிருந்தான்.அதில் கடுப்பான சூர்யா “ஹல்லோ ப்ரோ உங்ககிட்டதான் நாங்க பேசறோம் எதாவது புரிஞ்சுதா” என்றாள். அவனோ அப்போதும் அவர்களை பார்க்காமல் தலையை மட்டும் புரிந்தது என்பதை போல் ஆட்டி வைத்தான்.
அபி கோபமாக பேச போக அவளின் பேச்சை தடுக்கும் விதமாக பூஜா “விடுடி பிஸ்னஸ் மேன்னா அப்படிதான் இருப்பாங்க அவங்க கவனம் நாளா புறமும் இருக்கணும் இல்லைனா ஏமாத்திடுவாங்க”என்று சொல்ல அவளை முறைத்த மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் கண்களால் பேசி கொண்டவர்கள், அவளை பிடித்து இழுத்து பிரபாவின் முன் நிற்க வைத்தனர்.

பிரபா பூஜா இருவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் கையை எடுத்த அபி பூஜா தலையில் வைக்க, சூர்யாவோ “ஓகே ப்ரோ பூஜா மேல சத்தியம் பண்ணிட்டாரு மீறினா பூஜா பே…………. “ என்று கழுத்தை கை கொண்டு வெட்டுவது போல் சைகை செய்தாள்.

இருவரின் செயலில் அதிர்ந்த பிரபா “அட கேடிங்களா அசந்த நேரத்துல சத்தியம் வாங்கிடுச்சுங்களே”என்று அரண்டவன் “ஏம்மா அது என்ன சத்தியம் எதுக்கு சத்தியம்னு நீங்களே சொல்லிடுங்க”என்க, பூஜாவோ கையை நெஞ்சில் வைத்து கொண்டாள் “அட பாவி ப்ரோ அப்போ இவளுங்க பேசுனதை நீங்க கவனிக்கவே இல்லையா, உங்கள போய் ரொம்ப நல்லவருனு நெனச்சு சப்போர்ட் பண்ணுனேன் பாருங்க என்ன சொல்லணும், அடியே என்ன சாத்தியம்டி அது வில்லங்கமா ஒன்னும் இல்லையே பாத்து பதமா சொல்லுங்கடி நானே என் அஜூ பேபிக்கு ஒரே ஒரு லவ்வர்” என்றாள்.

அவளை கிண்டலாக பார்த்த சூர்யா “என்னோட கால மிதிச்சதும் இல்லாம அவருக்கு சப்போர்ட்டா பண்ற இப்போ பாரு”என்று நினைத்தவள் “அது ஒன்னும் இல்லை செல்லக்குட்டி மது படிப்ப முடிக்கற வரைக்கும் அவரு மதுவை டச் பண்ண கூடாதுனுதான் இந்த சத்தியம்” என்று சொல்லி அபியுடன் ஹைபை அடித்து கொண்டாள்.

சூர்யாவின் பேச்சை கேட்ட பிரபா பதறி பூஜாவின் தலையில் இருந்து கையை எடுக்க முயற்சிக்க ஆனால் அது முடிந்தால்தானே அபிதான் அவன் கையை எடுக்க முடியாத அளவிற்கு பிடித்திருக்கிறாளே.

அபி, “என்ன அவசரம் ப்ரோ நாங்க சொன்னதுக்கு ஓகேனு சொல்லி சத்தியம் அப்படிங்கற வார்த்தையையும் சொல்லிடுங்க உங்க கைய விடறேன்”.
பூஜா, “எது தொடக்கூடாதா…… அடி பாவிங்களா காலைல கேன்டீன்ல நீங்க கேட்டது எல்லாம் வாங்கி குடுத்து கூப்பிட்ட உடனே ஏன், எதுக்குன்னு கேட்காம உங்க கூட வந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிடீங்க” என்று புலம்பியவள் பிரபாவை பார்க்க அவனோ திரு திருவென விழித்து கொண்டு மதுவையும் பூஜாவையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.

அபி, “சீக்கிரம் சொல்லுங்க ப்ரோ அப்போதான் உங்களை நாங்க செலக்ட் பண்ணுவோம் நாங்க ஓகே சொன்னாதான் மது ஓகே சொல்லுவா”என்றவளை பிரபா நக்கலாக பார்க்க அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அபி சூர்யாவிற்கு கண் காட்ட அவள் மொபைலில் இருந்து மதுவை அழைத்தவள் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு “அடியே மது நீ கேட்டுட்டே இருப்பியே எங்க சீனியர இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்க சொல்லி, இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணும்போது இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கறோம் ஓகேவா” என்றாள்.

மது, “ஹே சூப்பர் டி எனக்கு ஓகே எனக்கு ஓகே” என்று குதித்து கொண்டு சொல்ல அதில் பயந்த பிரபா சூர்யா சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி சத்தியம்”என்க, பூஜா அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றாள்.

பூஜா, “அட பாவி பலி குடுத்துட்டாளுங்களே இந்த மனுஷன் இப்பவே அவளை திங்கற மாதிரி பாக்குறாரு இதுல லைசென்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் சும்மாவா இருக்க போறாரு, ஹையோ என் நிலைமை இப்படி ஆகி போய்டுச்சே” என்று அலறினாள் .

பிரபாவுமே அபியின் பேச்சில் மதுவின் நிலையை புரிந்து கொண்டவன் அவள் விருப்பப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் அந்த சத்தியத்தை முழு மனத்துடனேயே செய்தான்.

பிரபா, ஓகே உங்க விருப்பபடி சத்தியம் பண்ணிட்டேன்ல இப்போ மதுவை பாட்டி பாக்கணும்னு சொன்னாங்க அவளை விட்டுட்டு போங்க நானே காலேஜ்ல கொண்டு வந்து விட்டுட்டு போறேன்” என்றான்.உடனே அபி வேகமாக “நோ… நோ… பர்ஸ்ட் படிப்பு நாங்க இப்போ காலேஜ்கு போக போறோம் வேணும்னா அவங்க வீட்ல பேசிட்டு ஈவினிங் வந்து நீங்க உங்க பாட்டிய பார்க்க கூட்டி போங்க இப்போ நல்ல பையனா எங்களுக்கு டாடா பாய் பாய் சொல்றீங்க” என்றவள் மதுவை உள்ளே வர சொல்லி சைகை செய்தாள்.
அப்போது பூஜா “ப்ரோ பாட்டிய பாத்துட்டு உடனே கொண்டு போய் அவளை அவங்க வீட்ல விட்ருங்க நோ டச்சிங் டச்சிங் ஓகேவா” என்று அதிகாரமாக சொன்னவள் பின் பாவமான குரலில் “என் உயிரு எனக்கு முக்கியம் ப்ரோ கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே மதுவும் உள்ளே வந்தாள்.

சூர்யா, “ஓகே ப்ரோ நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல, சரியாக அப்போது பிரபாவின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் கிருஷ்ணா.
அபி அவனை பார்த்து “உங்களுக்கு கண்ணு தெரியாதுதானே, அன்னைக்கு ப்ரீத்திகூட ரோடு கிராஸ் பண்ணி விட்டாளே” என்க,சூர்யாவோ “என்னடி உளறுற நாம சாப்பிட வந்தப்ப இவர்தானே குலாப் ஜாமுன் செர்வ் பண்ணாரு இவரு சர்வர்டி” என்றாள்.

தோழிகள் இப்படி பேசியதை கேட்ட ப்ரீத்தி கிருஷை ஆராய்ச்சியாக பார்க்க, கிருஷோ “ஹையோ இவ ஒரு மார்க்கமா பாக்குறாளே சண்டை போடுவாளோ”என்று விழித்து கொண்டிருக்க, ப்ரீத்தியோ யாரும் எதிர் பார்க்காத ஒரு கேள்வியை கிருஷை பார்த்து கேட்டாள்.

அந்த கேள்வியில் திகைத்து நின்ற கிருஷ் பின் அவள் தோழிகளிடம் ரெண்டு நிமிஷம் என்பது போல் சைகை செய்தவன் ப்ரீத்தியின் கையை பற்றி அந்த ஹோட்டலில் இருந்த கார்னர் டேபிள் நோக்கி இழுத்து சென்றான்.

ப்ரீத்தி அப்படி என்ன கேள்வி கேட்டுருப்பா அதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top