வண்ணங்களின் வசந்தம்-18

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_1062115680957097.jpeg
அத்தியாயம் -18

அந்த இருட்டு அறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணியை கட்டி இருப்பதால்“இம்....இம்.... இம்....“ என்று அணத்திக்கொண்டு கொண்டும் “ச்ச எவன் பார்த்த வேலைடா இது டான்ஸ் பிரக்ட்டிஸ் முடிச்சுட்டு டயர்டா இருக்கேனு சேர்ல அப்புடியே தூங்குனா, இப்புடி கட்டி போட்டுட்டானுங்களே, அவன் மட்டும் என் கைல மாட்டுனான் கைமாதான்”என்று திட்டி கொண்டிருந்தாள் ராதா. அர்ஜுனுடன் ஜோடியாக ஆடும் பெண். அவள் புலம்பி கொண்டிருந்த அதே சமயம் அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தனர் நால்வரும்.

சேரில் அமர்ந்திருந்தவளை பார்த்து தங்களுக்குள் பார்வையை பரிமாறி கொண்டவர்கள் பின் ஒரு முடிவுக்கு வந்தனர் அதன்படி முதலில் அபி ராதாவிடம் சென்று அவள் கண் கட்டை அவிழ்த்து விட்டாள்.

வெகுநேரமாக கண் கட்டி இருந்ததால் தன் எதிரில் இருக்கும் நால்வரின் உருவமும் மங்களாக தெரிய, கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்களை இறுக மூடி திறந்து பார்வையை சுருக்கி பார்த்தாள் ராதா. அவள் எதிரில் கைகளை கட்டியபடி அவளையே தீர்க்கமாக பார்த்துக்கொண்டு இருந்தனர் சூர்யா,அபி,மது,ப்ரீத்தி.

ராதா அவர்களை புரியாமல் பார்க்க அவளிடம் வந்த மது “இங்க பாருங்க சீனியர் இந்த முறை ஆன்வல் டேல அர்ஜுன் கூட நீங்க டான்ஸ் ஆட கூடாது.பூஜா தான் ஆடனும்,நீங்க உங்களுக்கு உடம்பு சரி இல்ல அப்படின்னு சொல்லிடுங்க”என்று கெஞ்சலாக சொல்ல,ராதாவோ அப்பொழுதும் “ம்..... ம்....” என்று மறுப்பாக தலையாட்டிக் கொண்டே இருந்தாள்.

அதில் மற்ற நால்வரும் கடுப்பாகினர். முதலில் சூர்யாதான் அபியை பார்த்து “என்னடி வாய தொறந்து ஒன்னுமே பேச மாட்டேங்குறா”என்க, அவளை பார்த்து தலையில் அடித்து கொண்ட அபி “ஏன்டி வாயில இருக்க கட்டை அவுத்தாதானே அவளால பேச முடியும்”என்றாள் உடனே ப்ரீத்தி “மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டோமே” என்று சொல்ல சூர்யாவும் நாக்கை கடித்து கொண்டவள் அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு ராதாவின் வாயில் இருக்கும் கட்டை அகற்றினாள்.
கட்டை அகற்றிய பின்தான் அவளை கவனித்த மது “ஏய் என்னடி இது மண்ட மேலேதானே கொண்ட இருக்கும் இங்க இவ கன்னத்துல இருக்கு”என்று அலற, அவள் சொல்வதை கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போயினர் என்றால் ப்ரீத்தியோ திருதிருவென விழித்து கொண்டிருந்தாள்.

சூர்யா, “இவளை இங்க கொண்டு வரும்போது நல்லாதானே இருந்தா இப்போ என்ன ஆச்சு”என்று கேட்க, யோசனையுடன் திரும்பிய அபியின் பார்வையில் திருட்டு முழி முழித்து கொண்டு இருந்த ப்ரீத்தி பட உடனே அவளை சந்தேகமாக பார்த்தவள் கோபமாக “அவ வாயில என்னத்தடி வச்ச” என்றாள்.
அபியின் கேள்வியில் ஈஈஈஈ..... என்று இழித்த ப்ரீத்தி அசட்டு சிரிப்புடன் “அது ஒன்னும் இல்லடி நேத்து யூ டியூப்ல கோதுமை அல்வா பார்த்தேன். அதை ட்ரை பண்ணலாமேனு செஞ்சு உங்களுக்கு டேஸ்ட் பண்ண கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன். அப்போதான் இந்த பொண்ண தூக்கணும்னு சொன்னீங்களா, சரி ஒரு நல்ல விஷயம் முதல் முதல்ல பண்ணலாமேன்னு அந்த பொண்ணு வாயில ஸ்வீட் எடு கொண்டாடுனு கொஞ்சமா வச்சேன். ஆனாலும் அந்த பொண்ணு இவளோ நேரம் முழுங்காம வச்சு ரசிச்சு ருசிச்சுட்டு இருந்துருக்கு பாரேன் அப்படினா என்னோட அல்வா அவ்ளோ டேஸ்ட்டா இருக்குனுதானே அர்த்தம்” என்று பெருமை பேசிக் கொள்ள மற்ற மூவரும் அதிர்ந்து போயினர்.

முதலில் தன்னை சமாளித்து கொண்ட மது ராதாவின் காலைப் பிடித்துக்கொண்டு “எங்க உயிர காப்பாத்த வந்த காவல் தெய்வமே” என்று சொல்ல சூர்யாவோ அவளிடம் “அடியே இன்னும் கொஞ்ச நேரம் ஆனாலும் கொலை கேசுல நாம எல்லாம் உள்ள போயிடுவோம் முதல்ல அந்த கருமத்த வெளிய தள்ளனும்” என்றவள் அபியிடம் “நீ அந்த பக்க கன்னத்தை அழுத்து, நான் இந்த பக்கம் அழுத்தறேன்”என்றவள் “ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரி”என்று சொல்லி தங்கள் பலம் மொத்தத்தையும் திரட்டி அழுத்த ‘தொபுக்கடிரென்று’ வந்து விழுந்தது ப்ரீத்தியால் அல்வா என்று சொல்லப்பட்ட மாவு பசை.

ராதா இருமிக்கொண்டே நன்றாக மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தாள். அப்போது ப்ரீத்தி அவளின் செய்கை புரியாதவளாக “ஏன்டி அந்த பொண்ணு இப்படி மூச்சு வாங்குது, மூச்சு விட முடியாத அளவுக்கு நான் வாய அவளோ டைட்டா எல்லாம் கட்டலையே” என்று சொல்ல, மதுவோ “அடியே உனக்கு கொஞ்சமாவது மனசுல ஈரம் இருக்கா இப்படி சமையல்ங்கற பேர்ல கண்டதை குடுத்து அந்த பொண்ண போட்டு தள்ள பாத்துருக்க பக்கி, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தா நீ கம்பி எண்றது மட்டும் இல்லாம உன்கூட சேர்ந்த பாவத்துக்கு நாங்களும் கம்பி எண்ணனும்” என்று கத்தி கொண்டு இருக்க அதற்குள் தன்னை தேற்றி இருந்தாள் ராதா.

சூர்யா ராதாவை கவனித்து கொண்டு இருந்தவள் அபியிடம் சைகை காட்ட ராதாவிடம் திரும்பியவள் “இங்க பாருமா பொண்ணு இந்த டைம் அர்ஜுனுடன் நீ ஆடக்கூடாது.எங்க பிரண்டு பூஜாதான் ஆடுவா சோ நல்ல புள்ளையா நீ என்ன பண்ற நாளைக்கு காலுல கட்டு போட்டுட்டு வந்து என்னால ஆட முடில காலுல அடி பட்டுருச்சுனு சொல்ற” என்று கெத்தாக மிரட்ட, அதில் கோபமான ராதா அவர்களைப் பார்த்து “நீங்க சொன்னா நான் கேட்கணுமா முடியாது.வருஷ வருஷம் நான் தான் ஆடுவேன் அதனால இந்த வருஷமும் நான்தான் ஆடுவேன்.நீங்க பண்ணற இந்த விஷயம் மட்டும் வேற யருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா, ஒழுங்கா கட்டை அவிழ்த்து விடுங்க” என்றவள் பின் எடுக்கறது பிச்சை இதுல மிரட்டல் வேற” என்று முணுமுணுத்தாள்.அதைக் கேட்ட சூர்யா “ஹோய் யார பார்த்து பிச்சை எடுக்கறாங்கன்னு சொல்ற உன்னோட நல்லதுக்கும் இந்த காலேஜ்ல இருக்கவங்களோட நல்லதுக்குதான் நாங்க சொல்றோம் தேவை இல்லாம பேசாத”என்று சொல்ல, அப்போதும் ராதா அவர்களை அலட்சியமாக பார்த்திருந்தாள். அதில் கடுப்பான ப்ரீத்தி “இங்க பாரு சீனியர் இந்த வருஷம் நீ ஆடாம விட்டேனா இந்த காலேஜ்ல இருக்க நாம எல்லாருமே தப்பிக்கலாம் இல்லைன்னா எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து காதுக்கும் ஆபத்து. அந்த ஆபத்தான கழுதை நம்மை நோக்கி தான் வந்து கொண்டு இருக்கிறது” என்று சொல்ல அவளை புரியாமல் பார்த்திருந்தால் ராதா.
அவள் பார்வையில் சலிப்படைந்த மது “எம்மா பரதேவதை அர்ஜுன் கூட ஆடுறதுனா மட்டும்தான் ஆடுவேன் இல்லைனா பாட்டு பாட போறேனு அங்க ஒருத்தி ஒத்த காலுல நிக்குறா அவ பாட்டுல இருந்து தப்பிக்க எங்களுக்கு உதவி பண்ணுங்க எங்களால முடில” என்று சொல்ல, அப்போதும் ராதாவோ “முடியாது.நான்தான் ஆடுவேன் டாட். என் கட்டை அவிழ்த்துவிடுங்க ” என்றாள் திமிராகவே. .

அவளின் பேச்சில் நால்வருக்கும் கோபம் வர,கண்களாலேயே மதுவுக்கு சைகை செய்தனர்.உடனே அவளும் தன் போனில் ஹெட்செட்டை கனெக்ட் செய்தவள் அதை ராதாவின் காதில் வைத்தாள். மதுவின் செய்கையை பார்த்து குழம்பி “இவ என்ன செய்றா” என பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் பார்வையை புரிந்துகொண்ட நால்வரும் கிண்டலான சிரிப்புடன் “அது ஒன்னும் இல்ல நாட்டிய நங்கையே எங்களோட காது எங்களுக்கு முக்கியம் நீங்கதானே நாங்க சொல்றதை கேக்காம ஆடனும்னு சொன்னிங்க அப்போ நீங்க மட்டும் அவ பாட்டை கேளுங்க”என்று சொல்லிவிட்டு பாடலை ப்ளே செய்தனர்.

மது போனில் பாடல் பிளே செய்யப்பட்ட இரண்டு நிமிடத்திலேயே “ஸ்டாப் த சாங் நிப்பாட்டுங்க”என்று கத்த ஆரம்பித்தாள் ராதா.நக்கல் சிரிப்புடன் அவளை பார்த்த நால்வரும் கோரசாக “தெரியுதா இப்போ தெரியுதா இதுக்காகதான் நாங்க சொன்னோம் நீ கேட்கல, அவளை பாட விடாமபண்ண எங்களுக்கு இதைவிட்டா வேற வழி தெரியல பேபிமா அனுபவிங்க அனுபவிங்க நல்லா அனுபவிங்க” என்று சொல்ல, ராதாவோ பூஜா பாடிய பாடலை கேட்டு கதறித் துடித்து கை கால்களை உதறிக் கொண்டே இருந்தாள்.ஓரளவுக்கு மேல் முடியாமல் கண்ணில் கண்ணீர் பெருக நொந்து போய் நால்வரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முழு பாடலும் முடிந்த பிறகு அவள் காதில் இருந்த ஹெட்செட்டை எடுத்தாள் மது. அவர்களை பாவமாக பார்த்த ராதா “வை மேன் வை” என்க அபியோ கூலாக “நாங்கதான் எச்சரிக்கை செஞ்சோம் நீ கேக்கல, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.சரி விடு நாலு பேரு நல்லா இருக்கணும்னா நீங்க ஒருவாட்டி அழுவறதில் தப்பே இல்லை. இப்போ சொல்லு நாங்க சொன்ன டீலுக்கு ஓகேவா இல்லையா இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்லை மது அவ பாடுன அந்த தோசை அம்மா தோசை பாட்ட எடு இவளை கேட்க வைக்கலாம்” என்றாள்.
உடனே வேகமாக “வேண்டாம் வேண்டாம்”என்று அலறிய ராதா “நாளைக்கு நானே என்னோட காலுல பெரிய கட்டா கட்டிட்டு வந்து ஆட முடியாதுனு சொல்லிடறேன் போதுமா. நீங்களே உங்க பிரண்ட ஆட வையுங்கள் போதுமா. இன்னொரு டைம் அந்த பாட்ட மட்டும் என்னை கேட்க வச்சிராதீங்க மீ பாவம்”என்றாள் அப்பாவியாக.
அதை கேட்ட நால்வரும் சிறு சிரிப்புடன் “இது நல்ல பிள்ளைக்கு அழகு” என்றுவிட்டு கட்டை அவிழ்த்துவிட்டு கிளம்பிவிட்டனர். ராதாவும் அவர்களிடம் கையசைத்து விட்டு கிளம்பி விட, தோழிகள் நால்வரும் கடவுளுக்கு நன்றி சொல்லும் தொனியில் மேலே பார்த்து வணங்கினர். பின் ப்ரீத்தி மூவரையும் பார்த்து “அடியே அவ கால்ல விழுந்து சம்மதம் வாங்கிய விஷயம் பூஜாவுக்கு தெரியக்கூடாது கெத்து,கெத்து” என்று சொன்னாள்.

மூவரும் அவளை பார்த்து “சரி” என்று ஒப்புக்கொண்டானர். பின் பூஜாவிடம் வெற்றிகரமாக வேலையை முடித்து விட்டோம் என்று சொல்ல பூஜாவும் மகிழ்ச்சியுடன் அவர்களை “நண்பேன்டா” என்று சொல்லி அணைத்து கொண்டாள்.
அன்று மாலையே காலேஜிற்கு எதிரில் உள்ள பார்க்கில் அர்ஜுனையும் திருனேஷையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று நால்வரும் பிளான் செய்தனர்.எப்படியும் திருனேஷ்பற்றிய பேச்சு என்றால் சூர்யா கத்துவாள் என்று அதையும் இதையும் சொல்லி அவளை மட்டும் வீட்டிற்கு போக சொல்வதற்குள் தோழிகள் நால்வருக்கும் போதும் போதும் என்றானது.

முதலில் அர்ஜுனை பூஜா அந்த பார்க்கிற்கு வர சொன்னாள். அவளிடம் அபி “அடியே ஜொள்ளு நாங்க சொல்றதை நல்லா கேட்டுக்கோ அர்ஜுனும் திருனேஷும் பேசிக்கிட்டா மட்டும்தான் உன் ஆளு செலக்ட்டட் இல்லைனா ரிஜெக்ட்டெட்தான் பாத்துக்கோ. ஒழுங்கா கன்வின்ஸ்பண்ணி பேச வச்சுடு” என்று சொல்ல பூஜாவோ அதிர்ந்தவள் “அடி பாவிங்களா சுத்தி சுத்தி என் காதலுக்கு சூனியம் வைக்கறதுலையே இருக்காளுங்களே”என்று நொந்து கொண்டவள். அபியிடம் “ஏன் டி என்னைய மட்டும் சொல்லறீங்க திரு பேசலைனா என்ன பண்ணுவீங்க”என்று கேட்க மதுவோ “அதுக்கு வாய்ப்பே இல்லை சீனியர் சூர்யா மேல ரொம்ப லவ் வச்சுருக்காரு அவளுக்காக என்ன வேணா பண்ணுவேன்னு எங்ககிட்டையே சொன்னாரு சோ அவளுக்காக கண்டிப்பா அவரு பேசுவாரு. நீ உன் ஆள கரெக்ட் பண்ற வேலைய பாரு” என்றாள்.
அதே நேரம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.அவனிடம் பேச சொல்லி பூஜாவுக்கு அபி சைகை செய்ய பூஜாவும் அவனை இழுத்துக் கொண்டு சென்றவள் அங்கிருந்த ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து “இங்க பாரு அஜூ எங்க பிரண்ட்ஸ் அஞ்சு பேரும் எப்படி ஒன்னா இருக்கமோ அதே மாதிரி நீங்களும் ஒன்னா இருக்கணும்னு நாங்க ஆசைப்படறோம். இப்போ உங்க பிரண்டு திருனேஷ வர சொல்லி இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் நல்லா பேசி பிரண்டா இருக்கனும். அவரை சூர்யாக்கூட சேர்த்து வைக்கலாம்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். நீங்களும் பேசிக்கிட்டாதான் நாங்க பிரியாம இருப்போம். லவ் மாதிரி எங்களோட பிரண்ட்ஷிப்பும் வாழ்க்கை முழுக்க வரணும்னு நாங்க ஆசைப்படறோம். எங்களோட லைப் பட்டனரும் பிரண்டா இருந்தாதான் அது சாத்தியமுன்னு முடிவு எடுத்துருக்கோம். உங்க பிடிவாதத்த விட்டுட்டு வந்து திருக்கூட பேசுறீங்க இல்லைனா நமக்குள்ள பிரேக் அப்தான்” என்று சொல்லி தோழிகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள்.

பூஜா சென்ற பின்னும் வெகு நேரம் யோசித்த அர்ஜுன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைதியாக பூஜாவின் அருகில் வந்தான். அதே சமயம் திருனேஷும் வந்திருக்க அவனிடமும் அபி பூஜா சொன்ன அனைத்தையும் சொல்லியிருந்தாள்.

அர்ஜுன் திருனேஷ் இருவரும் எதிர் எதிராக நின்றிருக்க தோழிகள் நால்வரும் பேசுவார்களா மாட்டார்களா என்ற பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் இருவரும் ஒரே நேரத்தில் “மச்சான்” என்று கத்தி கட்டிபிடித்து கொண்டனர். அவர்கள் செயலில் தோழிகள் அதிர்ந்து விழித்து கொண்டிருக்க அவர்களை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாத நண்பர்கள் இருவரும் “என்னடா மச்சான் இளச்சுட்ட. சரி விடு இனி வார வாரம் நாம எப்பவும் போற பாய் கடை பிரியாணி சாப்பிட்டு தேத்திக்கலாம்”என்று அர்ஜுன் சொல்ல, ப்ரீத்தி மற்றும் மது இருவரும் “ஹை நம்ம மாதிரியே பிரியாணி வெறியன்ஸ்” என்றாள்.

அபியோ “என்னது பிரியாணியா என்னடி நமக்கு வர்றது எல்லாம் திங்கற டிக்கெட்டாவே வருது” என்று பூஜாவிடம் புலம்பினாள்.பூஜாவும் தலையை பாவமாக ஆட்டி கொண்டு இருந்தாள். திருவோ “நான் உன்கூட பேசலாம்னு நினைப்பேன்டா ஆனா என்னை சந்தேக பட்டுட்டியேனு கோபம் அதான் பேசல” என்று சொல்ல, அர்ஜுனும் நான்கூட உன்னோட பேசலாம்னுதான் உங்க காலேஜ்லையே சேர்ந்தேன் ஆனாலும் என்கிட்ட சொல்லாம போய்ட்டியேனு கோபம் அதன் பேசல ஆனா அங்க அங்க மறைஞ்சு நின்னு உன்னை பார்ப்பேன் தெரியுமா”என்று சொல்ல,இதை கேட்ட பூஜாவோ முகத்தை அஷ்ட கோணலாக மாற்றியவள் “ ஏது மறைஞ்சு நின்னு பார்ப்பாங்களா எல்லா இடத்துலயும் லவ்வர்ஸ்தானே மறைஞ்சு நின்னு பார்ப்பாங்க.அப்படி பார்த்தா அவன் என்னைதானே பார்க்கணும். இவனை எதுக்கு பார்க்கணும் உண்மையாவே இவங்க பிரண்ட்ஸ்தானா இல்லை.............” என்று இழுக்க, அவர்கள் இருவரும் ஒரே நேரம் பூஜாவை முறைத்தனர்.

அவர்களின் முறைப்பை பார்த்து பூஜா அசட்டு சிரிப்பு சிரிக்க அபியோ அவளிடம் “ஏன்டி உண்மையாலுமே இவங்களுக்குள்ள சண்டதானா இல்லை நம்மல வச்சு காமெடி பண்றாங்களா”என்று கேட்க, தோழர்கள் இருவரும் சிரித்து கொண்டே “சண்டதான் ஆனா சண்ட மாதிரி” என்றனர். தோழிகள் ஒன்றும் புரியாமல் நின்றிருக்க,ப்ரீத்தி, “சரி விடுங்க எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்க. நீங்க பேசலன உங்களை டிவெர்ஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணி வச்சிருந்தோம்” என்று சொல்ல, அவள் அருகில் வேகமாக சென்ற திரு நங்கென்று கொட்டிவிட்டு “ஆரம்பத்துல இருந்தே நீ ராங்கா போயிட்டிருக்க இப்படியே பேசுன அப்புறம் கொட்டுதான். இன்னும் சேரவே இல்லை அதுக்குள்ள டிவெர்ஸ்ங்கர. ஸ்கூல்ல இருந்தே எனக்கு வில்லி நீ மட்டும்தான்”என்று சொல்ல ப்ரீத்தியோ “போங்க சீனியர் நினைச்சோம்னுதானே சொன்னேன் அப்புறம் ஏன் என்னை மட்டும் கொட்டிட்டு அவங்கள எல்லாம் கொட்டலை” என்று கேட்க, அபியோ “கோத்து விட்டுட்டா வாங்கடி எஸ்கேப் ஆகிடலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்களின் குறும்புதனம்பற்றி தெரிந்த நண்பர்கள் இருவரும் சிரித்து கொண்டே அவர்களுக்கு “பாய்” சொல்லிவிட்டு நான்கு வருட கதையை பேசி கொண்டு இருந்தனர்.

அடுத்த நாள் காலை எப்போதும் போல் அனைவருக்கும் சிறப்பாக இருக்க பாவம் ராதாதான் தன் அடிப்படாத காலில் கட்டு கட்டி கொண்டு இருந்தாள். தோழிகள் ஐவரும் எப்போதும் போல் தங்களுடைய பேவரட்டான இடத்தில் அமர்ந்து ராதா இன்று எப்படி வருவாள் என்று பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது முகம் நிறைந்த புன்னகையுடன் அர்ஜுனும்,திருனேஷும் அவர்களிடம் வந்தனர். பூஜாவிடம் வந்த அஜூ அவளுடன் பேச ஆரம்பிக்க திருவோ சூர்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொண்டான்.
அபியிடம் திரும்பிய சூர்யா “இவன் எதுக்குடி இங்க வந்தான். அர்ஜுன்தான் பூஜாக்கூட பேச வந்துருக்கான், கூட ஒட்டு புல் மாதிரி இவன் எதுக்கு? போக சொல்லுடி”என்க.

அவளை முறைத்த அபி “அடியே எங்க கியூட் சார்மிங்கபத்தி ஏதாவது பேசுன கொலை பண்ணிடுவேன் ராஸ்கல். உன்னாலதான் ஸ்கூல்ல எங்களால அவன சைட் அடிக்க முடியாம போய்டுச்சு இப்போவும் ஏதாவது பண்ணுன எங்களுக்கு இப்படி ஒரு பிரண்டே தேவை இல்லனு உன்னை தல முழுகிடுவோம் பாத்துக்கோ, உனக்கு புடிக்கலன நீ பேசாத திரும்பிக்கோ ஆனா நாங்க பேசுவோம்” என்றுவிட்டு திருனேஷுடன் பேச ஆரம்பித்தாள்.

சூர்யாவோ முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கடந்து ஓர கண்ணால் திருவை பார்க்க அவனோ இவளை கண்டுகொள்ளாமல் அபி, மது, ப்ரீத்தியுடன் பேசி கொண்டிருந்தான். அவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு ஏமாற்றமாகத்தான இருந்தது. அப்பொழுது வந்து குதித்த அவளின் மனசாட்சி எகத்தாளமாக பார்த்து “நீதான் அவனை மதிக்கவே மாட்டியே அப்புறம் அவன் உன்னை கவனிச்சா என்ன கவனிக்காட்டி என்ன” என்று கேட்க, இவளோ பேந்த பேந்த விழித்தவள் “அது.......... அது........ ஹான் அவன் என்னை பாக்கலைனு நான் பீல் பண்ணலை என்னோட பிரண்டுங்க பாக்கலைன்னுதான்………..” என்று இழுக்கும்போதே அவளை மேலும் கீழுமாக பார்த்த மனசாட்சி “நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்று நக்கலாக சொல்லிவிட்டு சென்றது.

சூர்யா அங்கு தனக்குள் பேசி கொண்டிருந்த நேரம் அர்ஜுன் பூஜாவிடம் சிறிது நேரம் மட்டும் பேசிவிட்டு “சரி பேபி நான் கிளம்பறேன் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணனும் ராதா வந்திருப்பா”என்று சொல்ல, பூஜாவுக்கோ காதில் புகை வராத குறைதான். “பாவி பயலே என்னோட பேசும் போது மட்டும்தான் உனக்கு பொறுப்பு நியாபகம் வரும், உன்கூட சுத்துற அல்லக்கை எவனாவது வந்து டிஸ்டர்ப் பண்ணுவான்.அவக்கூட ஆட போகும்போது மட்டும் எவனும் வர மாட்டான்” என்று மனதில் பொருமி கொண்டு இருந்தாலும் வெளியில் சிரித்து அனுப்பி வைத்தாள். அர்ஜுன் கிளம்பவும் திருனேஷும் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு சூர்யாவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கிளம்விவிட்டான்.
அவன் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றது ஒரு பக்கம் மனதை உருத்தினாலும் அதை புறம் தள்ளியவள் பூஜாவிடம் “வாடி நாமும் ஆடிட்டோரியம் போலாம் அந்த ராதா வர்ராளா இல்லையானு பாக்கணும்” என்றாள்.

அபி , “இருங்கடி அர்ஜுன் இப்போதானே போனான் கொஞ்ச நேரம் கடந்து போலாம்”.

மது, “ஓகே சரி வாங்க அதுக்குள்ள கேன்டீன் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம்” என்று சொல்லி சென்றனர். ஒரு வழியாக அர்ஜுன் சென்று அரை மணி நேரம் கடந்து இவர்கள் ஆடிட்டோரியம் செல்ல அங்கு அனைவரும் கூடி இருக்க மிகவும் டென்சனாக அர்ஜுன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு யூகித்த தோழிகள் ஒன்றும் தெரியாதது போல் அங்கு நின்றிருந்தவர்களிடம் விசாரிக்க அவர்கள் சொன்ன தகவலில் நால்வரும் மனதில் துள்ளி குதித்தனர்.

துள்ளி குதிக்கும் அளவிற்கு அப்படி என்ன சொன்னார்கள் என்றால் “டான்ஸ் பிராக்டிஸ் செய்ய ராதா இன்னும் வரவில்லை”என்றுதான்.அர்ஜுன் செய்கையில் கடுப்பில் இருந்த பூஜா, அதே கடுப்புடன் மதுவிடம் திரும்பியவள் “இவனுக்கு எவளோ கொழுப்பு பாருடி நான் வரலைனாகூட இவன் இவ்ளோ டென்ஷன் ஆக மாட்டான் போல அவ வரலைன்னு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தறான்”என்க, அவளோ “உன் கவலை உனக்கு பேசாம இருடி என்ன ஆகுதுனு பார்க்கலாம்” என்றாள்.

அப்போது காலில் பெரிய கட்டுடன் கால்களை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள் ராதா. அவளை பார்த்து அனைவரும் அதிர்ந்து நிற்க, அர்ஜுனோ பதறியபடி வேகமாக அவளிடம் சென்று “ஐயயோ என்ன ஆச்சு ராதா”என்று கேட்க, அதற்கு ராதாவோ ஒன்னும் இல்லை ஒரு சின்ன அடி, பிராக்சர் ஆகிடுச்சு”என்றாள்.

உடனே அர்ஜுன் “பார்த்து கவனமா இருந்திருக்க வேண்டாமா” என்று சொல்ல, அதை பார்த்து பூஜாவோ வயிற்றெரிச்சலுடன் நின்றிருந்தாள். அப்போது அவள் அருகில் நின்ற ப்ரீத்தி அபியிடம் “ஏன்டி இங்க ஏதோ கருகுன வாசம் வரல”என்று கேட்க, பூஜா முறைத்த முறைப்பில் வாயை கப்பென்று மூடி கொண்டாள்.அப்போது அர்ஜுன் அருகில் வந்த கோகுல் “இப்போ என்னடா செய்றது, யாரு உன்கூட ஆடுவா,ப்ரோக்ராம்க்கு இன்னும் ஒரு வாரம்தானே இருக்கு” என்று கேட்க அதற்கு வழியும் ராதாவே சொன்னாள்.

ராதா “அர்ஜுன் கால் காயதோட என்னால ஆட முடியாது நீ ஏன் பூஜாக்கூட ஆடக்கூடாது”என்று கேட்க,அதில் கோபமான ஒருசிலர் என்ன ராதா உளறுற உங்க பேர்தான் சக்ஸஸான பேர். திடிர்னு வேற ஒருத்தர ஆட வைக்கலாம்னா எப்படி முடியும். அந்த பொண்ணு எப்படி ஆடும்னு நமக்கு தெரியாது. பிராக்டிஸ் வேற பண்ணல இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு அதுக்குள்ள எப்படி பிராக்டிஸ் பண்ணி ஆட முடியும்”என்று கேட்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் அந்த இடமே சந்தை கடை போல் ஆனது. பின் சூர்யாதான் அர்ஜுனை முறைத்தவாறே ஏககடுப்பில் “எனக்காக பேச மாட்டேன்னு சொன்ன இல்லை இருடா உனக்கு இருக்கு” என்று கறுவிவிட்டு சத்தமாக “ஹலோ யார பார்த்து ஆட தெரியுமான்னு கேக்குற எங்க ஸ்கூல்ல டான்ஸ் டாப்பர் எங்க பூஜாதான் உங்க ஹீரோக்கு தில் இருந்தா அவக்கூட ஆட சொல்லுங்க அப்புறம் தெரியும் யாரு கத்து குட்டின்னு” என்று சொல்ல அங்கிருந்த ஒரு சிலர் அதை ஆமோதித்தனர்.

ஆனாலும் அர்ஜுன் அருகில் இருப்பவர்களில் சிலர் அவனிடம் “நீ லவ் பண்ற பொண்ணுங்கரத்துக்காக அவக்கூட ஆடனும்னு நினைக்காத. நல்லா ஆடுனா மட்டும்தான் அந்த பொண்ணை ஆட அலோவ் பண்ணுவோம் இல்லைனா வேற பொண்ண செலக்ட் பண்ணி டே அண்ட் நைட் பிராக்டிஸ் குடுத்து ஆட வைப்போம்”என்றனர்.

தோழிகள் நால்வரும் பூஜாவை பார்க்க அவளோ கட்டை விரலை உயர்த்தி காட்டி கண்ணடித்து சிரித்தாள். அவளின் செயலை பார்த்த சூர்யாவோ தோழிகளிடம் “சரியா ஆடிருவாளாடி நான் வேற வாய விட்டுட்டேன்”என்று புலம்ப, ப்ரீத்தியோ அது எல்லாம் நல்லா ஆடிருவா பயப்படாதடி பாட்டு பிராக்டிஸ் பண்றேன்னு சொல்லி இங்க வந்து அர்ஜுன சைட் அடிச்சுட்டுதான் இருந்தா அதனால எல்லா ஸ்டெப்பும் மேடம்க்கு அத்துப்படி இப்போ பாரு அவ ஆட்டத்தை”என்றாள்.

பூஜா அர்ஜுன் இருவரும் மேடையில் நிற்க அவர்கள் ஆடுவதற்கான பாடல் பிளே செய்யப்பட்டது. இருவரும் தங்களை மறந்து அந்த பாடல் வரிகளுடன் இணைந்து “சல்சா”என்று சொல்லப்பட்ட நடனத்தை ஆட அந்த அரங்கமே நிசப்தத்தை தத்தெடுத்தது.

இருவரின் நடனம் எப்படி இருந்தது என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top