சுதிஷா
Well-Known Member
அத்தியாயம் -12
அர்ஜுன் அந்த மூவரையும் அடித்துக் கொண்டிருப்பதை கண்ட தோழிகள் அதிர்ந்து நின்றனர் என்றால், பூஜாவோ விழி விரித்து அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்கள் சண்டை போட்டு கொண்டிருந்த அதே நேரம் விரிவுரையாளர் ஒருவர் அங்கு வந்துவிட அவரை கண்டு அனைவரும் மரியாதை நிமித்தம் பிரிந்து நின்றனர்.
மாணவர்களுக்குள் அடித்து கொள்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துதான் அவர் வந்திருந்ததால் கோபமாக அனைவரையும் பார்த்து “இங்க என்ன நடக்குது” என்றவர் அர்ஜுனிடம் திரும்பி “எதுக்கு இவங்கள அடிச்ச” என்று கேட்க அவனோ இவங்க மூணு பேரும் அந்த பொண்ண அப்யூஸ் பண்ற மாதிரி பேசினாங்க அதனாலதான் அடிச்சேன் என்று நிமிர்வாகவே பதில் அளித்தான். அவரும் பூஜாவை திரும்பிப் பார்த்து “இவன் சொல்வது உண்மையா” என்று கேட்க,அவளோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சிலைபோல் நின்றிருந்தாள்.அதை கண்டு கோபம் கொண்ட அர்ஜுன் “அதுதான் கேட்கிறார் இல்ல பதில் சொல்லு” என்று அதட்ட அப்போதுதான் தன்னிலை மீண்டவள் “ஆமா சார் இவங்க மூணு பேரும் என்ன தப்பா பேசினாங்க” என்று கூற அவரோ “மூணு பேரும் பிரின்ஸ்பல் ரூமுக்கு வாங்க” என்றுவிட்டு,அர்ஜுனிடம் திரும்பியவர் “இந்த மாதிரி ஏதாவது பிரச்சனைனா ஸ்டாப் கிட்ட கொண்டு போகணும், நீங்களே அடிதடியில் இறங்க கூடாது புரிஞ்சுதா இதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்”என்று எச்சரித்துவிட்டு செல்ல அவனும் சரி என்பது போல் தலை அசைத்தாள்.
அவர் அந்த மாணவர்களுடன் அங்கிருந்து அகன்ற பின் பூஜாவும் அவளது தோழிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க, பூஜாவை முறைத்து பார்த்த அர்ஜுன் வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.அவன் சென்ற பின்தான் அவனிடம் ஒரு நன்றி கூட சொல்லவில்லை என்பது பூஜாவிற்கு உரைத்தது.உடனே சூர்யா, அபியிடம் சென்றவள் நான் அவர்கிட்ட போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன், நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க என்றவள் பாய்ந்து ஓட அபியும் சூர்யாவும் தாங்களும் வருவதாக கூறிய வார்த்தைகள் காற்றில் கலந்து போனது.
அர்ஜுன் நேராக கல்லூரியின் கிரவுண்டிற்கு வந்தவன் அங்கிருந்த மரத்தை உதைத்து தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவன் மனதில் .“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசி இருப்பாங்க அங்கேயே அவங்கள ஒரு அரை விடாம அழுதுட்டு போறா லூசு” என்று அவளையும் சேர்த்து திட்டிக்கொண்டிருந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் பூஜா.
மூச்சிரைக்க தன்முன் ஓடிவந்து நின்றவளை கண்டவன் முறைத்துப் பார்க்க அவளோ அதை சற்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.அவனோ “எதற்கு” என்பது போல் பார்க்க, “எனக்காக அவங்கள அடிச்சிங்க இல்லை அதான்” என்று சொல்ல அவனோ கோபமாக அவளை நெருங்கிய “என்னடி தேங்க்ஸ் இல்லை என்ன தேங்க்ஸ்னு கேட்கறேன், கொஞ்சமாவது புத்தி வேணா சைட் அடிக்கிறது எல்லாருக்கும் தெரியற மாதிரி தான் அடிப்பியா மத்தவங்க எல்லாம் உன்னை என்ன சொல்லுவாங்கனு கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா, ஆள் வளர்ந்த அளவுக்கு கொஞ்சம் கூட அறிவு வளரல, உனக்கு தான் அறிவு இல்லை உன் கூட இருக்க நாளுக்குமா இல்ல, இனிமேல் எவனையாவது நீ பார்த்து சைட் அடி அப்ப இருக்கு உனக்கு” என்று அதட்ட “என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க நீங்க சைட் அடிச்சது இல்லை” என்று அவளும் எகிறினாள்.
பூஜாவின் எதிர் கேள்வியில் கடுப்பானவன் “சைட் அடிக்கிறது தப்புனு சொல்லல, ஆனா பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பாக்கறது போல் பார்க்க கூடாது.இப்போ பிரச்சனை யாருக்கு உனக்குதானே, நான் அங்க இருந்ததுனாலஆச்சு இல்லைனா என்ன ஆகியிருக்கும்” என்று கோபமாக பேச அவளோ அலட்சியமாக “ஒன்னும் ஆகிருக்காது, இன்னும் அஞ்சு நிமிஷம் இருந்து இருந்தா அபி வந்துருப்பா அவளோதான்” என்று சொல்ல, அவனோ “இப்ப கூட தப்ப ஒத்துக்காம பேசிட்டு இருக்க பாத்தியா” என்று மேலும் கடிந்து கொள்ள அவளோ “போனா போயிட்டு போகுதுன்னு தேங்க்ஸ் சொல்ல வந்தால் ரொம்ப தான் பேசிகிட்டு இருக்கீங்க,என்ன கண்ட்ரோல் பண்ண நீங்கயாரு” என்று வீம்பாக கூறியபடி அங்கிருந்து நகர முனைய அவள் கைகளை பிடித்து தடுத்தான் அர்ஜுன்.
கைகளை பிடிப்பான் என்று எதிர் பார்க்காத பூஜா அவனை கேள்வியாக பார்க்க அவனோ அவளை நெருங்கி “நான் யாரா.. ஏன் நான் யாருனு உனக்கு தெரியாதா” என்று அவள் கண்களை தீர்க்கமாக பார்த்து கேட்க, அவளோ திணறியவாறே அவன் கண்களை சந்திக்க இயலாமல் பார்வையை அங்கும் இங்கும் திருப்பினாள்.அவளின் செயலை புரிந்து கொண்டவனோ அவள் கன்னங்களை பிடித்து நிமிர்த்தி தன் கண்களோடு அவள் கண்களை உறவாட விட்டு ஓகே லெட் மி கிளியர் இட். நானே இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு கட்டறேன். “ஐ லவ் யூ. யூ ஆர் மைன்” இப்ப உன்னை கண்ட்ரோல் பண்ணற முழு உரிமை எனக்கு இருக்கு தானே” என்று கேட்க அவளோ அவன் காதலிப்பதாக கூறியதிலேயே அதிர்ந்து நின்றவள் “என்னது லவ்வா” என்று வெளியில் கேட்டாலும் உள்ளுக்குள் தர லோக்கலாக இறங்கி குத்து பாட்டுக்கு ஆடி கொண்டு இருந்தாள்.அவனோ பூஜாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டு கொண்டாலும் “என்னதான் சொல்கிறாள் பார்ப்போமே” என்று நினைத்தவன் அவளது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக “லவ் தான் லவ்வே தான் ஏன் லவ் இல்லாமையா ஸ்கூல்ல இருந்து என் பின்னாடி சுத்தி சுத்தி வந்த, கண்ணடிச்ச ஃப்ளையிங் கிஸ் கொடுத்த, அப்புறம் என்றவன் ஓர கண்ணில் அவளது முகத்தில் வந்து போகும் பாவத்தை ரசித்தவாறே “என்ன வெறுப்பேத்த இன்னொருத்தன் கிட்ட ஐ லவ் யூ அண்ணானு சொல்லிட்டு நான் என்ன ரியாக்சன் குடுக்குறேன்னு பார்த்த” என்று கேட்க அவளோ திருதிருவென விழித்தவள் “பய புள்ள எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கு ஆனா வேணும்னே கண்டுக்காம விட்டுருக்கு இருந்தாலும் பூஜா உடனே ஒத்துக்கிட்டா நம்ம கெத்து என்னத்துக்கு ஆகறது கொஞ்சம் பில்டப் குடுப்போம்” என்று முடிவெடுத்தவள் அவனிடம் “அதெல்லாம் லவ்வா என்ன” என்று அவனையே திரும்பி கேட்க, அவனோ அவளின் நடிப்பில் அசந்து தான் போய் விட்டான்.
“அடிபாவி என்னா நடிப்பு” என்று நினைத்தவன் ஏனோ அதை ரசிக்கவே செய்தான். அவள் போக்கிலேயே பதிலளிக்க விரும்பி “அப்ப இன்னும் நீ லவ்வ ரியலைஸ் பண்ணவே இல்ல அப்படிதானே.ஓகே நோ ப்ராப்ளம் இல்லை இனிமேல் அதை லவ் ஆங்கில்ல பாரு” என்று கூற அவளோ “இல்ல எனக்கு கொஞ்சம் டைம் வேணும் உடனே எப்படி சொல்ல”என்று கேட்க அவனும் சற்று யோசித்தவன் “ஓகே டேக் யுவர் டைம்” என்றவன் பின் என்ன நினைத்தானோ “உன்ன நம்ப முடியாது வேற எவனாவது அழகா இருக்கான்னு அவன சைட் அடிச்சுட்டு சுத்திகிட்டு இருப்ப அதனால ‘டு மேக் மை லவ் ஸ்ட்ராங்’” என்று கூறி அவள் அருகில் அடி மேல் அடி வைத்து போக அவளோ “இவன் எதுக்கு இவ்வளவு பக்கத்துல வரான்” என்று யோசித்தபடி நின்றாள்.தன் மூச்சு காற்று அவள் முகத்தில் படும் அளவு நெருங்கியவன் பட படக்கும் அவளது கண்களை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் இதழை அவள் இதழோடு இணைத்தான். .
அர்ஜுன் இப்படி செய்வான் என்று எதிர்ப்பார்க்காதவளின் மூளையோ வேலை நிறுத்தம் செய்ய,அவனை தள்ளிவிடு கூட முடியாமல் நின்றிருந்தாள் பூஜா.தோழியை தேடி வந்த அபி, சூர்யாவின் கண்களிலும் இந்த காட்சி பட அவர்களும் திகைத்து போய் நின்றனர்.
அர்ஜுன் அவர்களை கடந்து செல்லும் முன் “டேக் கேர் ஆஃப் மை புரோபர்டி” என்று நகர அப்போதுதான் தன்னிலை அடைந்த சூர்யா நெஞ்சில் கை வைத்தவாறு “பெருமாளே” என்று கத்த அதே நேரம் அபி அவளை பார்த்து “இந்த சம்பவம் நம்ம வாழ்க்கைல எப்படா நடக்கும்” என்று ஏக்கமாக கேட்டாள். அதற்கு சூர்யாவோ “ரொம்ப முக்கியம் அங்க ஒருத்தி மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கா வா போய் அவளை பாக்கலாம்” என்று சொல்ல பாவமாக முகத்தை வைத்து கொண்ட அபி “உனக்கும் சேர்த்துதானே கேட்டேன்” என்று வெளியில் சொன்னாலும் மனதுக்குள் “இவ கூட கூட்டு சேர்ந்ததுக்கு பதிலா மூணு எருமையை மேச்சு இருக்கலாம்” என்று புலம்பி கொண்டே கொண்டே பூஜாவின் அருகில் சென்றாள்.
எதிர்பாராத நிகழ்வால் அதிர்ந்திருந்த தோழியின் அருகில் சென்ற அபி “அவளை பாத்தா மந்திருச்சுவிட்ட மாதிரி தெரியல என்ஜாய் பண்ற மாதிரிதான் தெரியுது” என்றவாறே அவளின் தோளை பிடித்து உலுக்கினாள்.
தோழியின் தொடுகையில் தன்னிலை அடைந்த பூஜா அபியை பார்த்து “நீ எப்போடி வந்த எல்லாத்தையும் பாத்துட்டியா” என்று திகைத்து கேட்க, மறு புறம் நின்றிருந்த சூர்யாவோ “ஏன்டி அவன் பண்ணிட்டு போன வேல உனக்கு அதிர்ச்சிய கொடுக்கல நாங்க பாத்ததுதான் அதிர்ச்சியா இருக்கா” என்று கேட்டு அவளது கையில் இருந்த புக்கால் அடி போட, பூஜாவோ அவள் அடித்ததால் ஏற்பட்ட வலியில் முகத்தை சுருக்கியவாறே “உங்களுக்கெல்லாம் கிடைக்கலன்னு பொறாமடி”,என்க, சூர்யாவோ “ஆமா இதுலதான் பொறாமை போடி” என, அபியோ “லைட்டா”என்றாள். அதற்கு பூஜாவோ “நான் என்னமோ வேணும்னே குடுத்த மாதிரி பேசுறீங்க. அவன்தானே குடுத்தான்” என்று அப்பாவியாக சொன்னவள் “நானே பாவம் கடல்ல இருக்கும் மீனு கண்ணீருல இருக்கேன் நானு” என்று சொல்ல அவள் முகத்தை தன்னை பார்த்து திருப்பிய அபி “ஏது இந்த மூஞ்சி கண்ணீருல மிதக்குதா தூஊஊஊ”என்று துப்பினாள்.
அப்போது சூர்யா “அடியே இது நமக்குள்ளேயே இருக்கட்டும் அவங்க ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்ல அபியோ “அது எப்படி அவங்களுக்கு சொல்லாம இருக்க முடியும். நான் சொல்லுவேன்” என்று பிடிவாதமாக சொல்ல அவளோ “டேய் வேணாண்டா, அவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ மெச்சுர் இல்ல ” என்று சொல்ல,சிறிது நேரம் யோசித்தவர்கள் பின் சம்மதமாக தலையசைத்தனர்.
“சரி வாங்க போலாம்” என்று மூவரும் கிளம்பும் சமையம் சூர்யாவின் மேல் விழுந்தது ஒரு பூ.அந்த பூவை கையில் எடுத்தவள் அதனை யோசனையோடு பார்த்து கொண்டிருக்க, அப்போது அவள் அருகில் வந்த அபி “என்னடி ஆச்சு” என்றாள்.சூர்யாவோ கையில் இருந்த பூவை காட்டி நடந்ததை சொல்ல, காதல் மயக்கத்தில் இருந்த பூஜாவோ “பூ தானேடி மரத்துல இருந்து விழுந்துருக்கும்” என்க, அவள் தலையில் கொட்டிய அபி “இந்த மரத்துல இருந்து ரோஸ் விழுதா, ஓவரா போரடி நீ, கனவு உலகத்துல இருந்து வெளிய வா” என்று கூறியவள், சூர்யா கையில் இருந்த பூவை பிடிங்கி தூக்கி போட்டுவிட்டு “வேற யாரு மேலையாவது போட்டு இருப்பாங்க அது உன் மேல தெரியாம விழுந்துருக்கும் இதுக்கு போய் இப்படி யோசிச்சுட்டு இருக்க வாடி போலாம்” என்று இழுத்து செல்ல,சூர்யாவும் ஒரு தோள் குலுக்கலில் பூ விஷயத்தை ஒதுக்கி தள்ளியவள் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
தோழிகள் மூவரும் அங்கிருந்து கிளம்பிய மறு நிமிடம் மரத்தின் பின் மறைந்து நின்றிருந்தவன் வெளியில் வந்து, அபியின் செயலில் உண்டான கோபத்தில் அவளை வெறுப்புடனும், சூர்யாவை காதலுடனும் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவ்வளவு நேரமும் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தான் திருனேஷ். இவன்தான் பள்ளியில் சூர்யாவிடம் காதலை சொன்னது, முதல் நாள் தங்களுடைய காலேஜிலேயே அவள் சேர்ந்திருப்பதை பார்த்து மகிழ்ந்து, அவளை பக்கத்தில் பார்க்கும் ஆவலில் வண்டி நிறுத்தும் இடத்தில் அருகில் சென்றது. பின் அவள் தோழிகளிடம் தன்னைப்பற்றி சொல்வதை கேட்டு சந்தோஷத்தில் வானத்தில் பறந்தது. இப்படி தன்னவளின் ஒவ்வொரு செயலையும் உடன் இருந்து பார்ப்பவனுக்கு தெரியாதா அந்த பூ எங்கிருந்து வந்தது என்று.அவன் மனதில் கோபம் எரிமலையின் சீற்றமென பொங்க அதை அடக்கும் வழி அறியாது கைகளை முறுக்கியவனின் முகம் சிவந்துதான் போனது.
செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தவன் மனதில் “இத்தனை வருஷமா என்னோட வாழ்க்கையே அவதானு நினச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். அவ நிழலை கூட யாரும் தொட கூடாதுனு யோசிக்கறவன் நான், உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவ மேல பூ போடுவ, யாருக்காகவும் அவள நான் விட்டு குடுக்க மாட்டேன் டா, அவ எனக்குதான் எனக்கு மட்டும்தான் இது அவளே நினைச்சாலும் மாத்த முடியாது. அவளுக்காக கூட என்னால அவளை விட்டுகொடுக்க முடியாது, இதை நான் ஸ்கூல்லயே முடிவு பண்ணிட்டேன்” என்றவனின் கால்களில் மிதி பட்டது அந்த பூ.
ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் அஜ்வந்தியின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Last edited: