மேவு கடல் நானுனக்கு..!!

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே!!!

“மேவு கடல் நானுனக்கு..!!” என்னை இரண்டு வாரமா படுத்திட்டிருக்கிற கதை. ஆரம்பித்து வைத்திருக்கும் கதைகளை முடித்துவிட்டுதான் இதை தொடரப் போகிறேன்:):):)அப்புறம் எதுக்கு இந்த டீசர்னு கேள்வி வரலாம்… எத்தனையோ கதை அப்புறமா எழுதலாம்னு தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு எழுத முடியாமலயே போச்சு எனக்குள்ள உதிச்ச கதை என்னோடேயே இருந்துறக்கூடாதுல. Life ல எப்பவுமே ஒரு goal இருக்கனும்ல…அதான் இங்க பகிர்ந்துக்கிட்டா கூடிய சீக்கிரம் கதைய கொண்டு வந்துருவேன்ற நம்பிக்கை:)
MKN லிருந்து ஒரு குட்டி டீசரும்… சின்ன கவிதையும்(?) உங்களுக்காக....






மேவு கடல் நானுனக்கு..!!


IMG_20190325_080537.jpg





புயலென அந்த வகுப்பறைக்குள் நுழைந்தவனின் கண்கள் ஒரு நொடி அலைபாய்ந்து பின் ஓரிடத்தில் நிலைக்க மறுநொடி அவன் கால்கள் அங்கே விரைந்திருந்தது.
அவன் நுழைந்த வேகத்திலும் அவனை அங்கு எதிர்ப் பார்த்திராத அதிர்ச்சியிலுமாக அங்கே அந்த வகுப்பறையே நிசப்தமாகியிருந்தது.
அந்த ப்ரொஃபஸர் உட்பட!

அவன் வந்த வேகமும் அவனிருந்த கோலத்தையும் பார்த்தவள் அவன் தன்னை நோக்கி வருவது புரிந்து அதிர்ச்சியில் தன்னையறியாமல் எழுந்துக் கொண்டாள் அவளது ஓர இருக்கையிலிருந்து.

அவளை நோக்கி வந்தவன் அவள் சற்றும் எதிர்ப்பார்க்காதபடி இறுக்கி அணைத்திருந்தான். அந்த அணைப்பில் காதல் இல்லை அது நிச்சயம் அவளுக்கு. அவன் உயரத்தினாலோ என்னவோ அவன் அணைப்பில் இருந்தவளுக்கு அவன் இதயத்துடிப்பு தாறுமாறாக ஓடுவதை உணர முடிந்தது.
ஒரு முழுநிமிடம் அவளை தன் அணைப்பில் வைத்தவன் அவளை சற்று விலக்கி அவளது கை…கால்…தலை என ஆரம்பித்தான் அதே மூச்சு வாங்கலுடன் அவள் கன்னத்தை இறுகப் பற்றி “ஆர் யூ ஃபைன் பேபி?” என்றவன் கேள்வியில் அத்தனை தவிப்பு...!

அவனது பதட்டத்தைப் பார்த்தவள் “விக்ரம்…விக்ரம்…”என்றழைக்க அது அவன் செவிப்பறையை தீண்டவில்லை போலும் அவன் அவளது நெற்றியில் ஒட்டப் பட்டிருந்த ப்ளாஸ்த்ரியைப் பார்த்துவிட்டு அவளையே ஆராய்ந்துக் கொண்டிருக்க
பொருமையிழந்தவளாக சற்று உரக்கவே “ஆதி!!!” என்றவள் அதட்ட சட்டென அமைதியாகியிருந்தான் அவன்.

சுற்றியிருந்தோர் அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். பின்னே…அத்தனை அதிகாரிகளையும் நட்பால் இனைத்து வைத்திருப்பவன்… அவனது கம்பீரமான தலையாட்டலுக்காகவே எத்தனை எத்தனை அதிபர்கள் காத்துக் கிடக்கிறார்கள்… அப்படிப்பட்டவன் இன்று இந்த சிறு பெண்ணின் அதட்டலில் மௌனமானான் என்றால்… அவர்களுக்கு அது அதிசயம்தானே…?

சிறு பெண்தான்… ஆனால் அவள்தான் அவனின் உலகமென்று அவர்களுக்கு தெரியாதல்லவா…!

சிலரின் சுவாரஸ்ய பார்வைகளும்… கேள்விப் பார்வைகளும் அவளை துளைக்க அதை தவிர்த்தவள் அவன் கையைப் பற்றிக் கொண்டு ஒரு “எக்ஸ்க்யூஸ் மீ மேம்” உடன் வெளியேறினாள்….


உதடுகள் உரசிக்கொள்ளாத
ஒரு முத்தம்..!!
அவள் தோள்களைத் தாண்டாத
கரங்கள்..!!
மென்மையாய் அவளை வருடிச் செல்லும் இரு விழிகள்..!!
அவள் மனதை தொட்டு விடும் முயற்சியில் விழியால்கூட தவறிழைக்காத ஒருவன்..!!
ஆழியைவிட ஆழமானவளின்

மனம்தனில் பதியுமோ இவனது காதலெனும் நங்கூரம்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மேவு
கடல் நானுனக்கு"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தா கௌரி டியர்
 
Last edited:

Preetz

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "மேவு
கடல் நானுனக்கு"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தா கௌரி டியர்
Thank you so much Mathi ma:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top